Jump to content

கடன் கொடுத்து நாறியவர்கள்


Recommended Posts

சுவிஸ் நாட்டில் பரவலாக சீட்டு மற்றும் கடன் பற்றியே பேச்சு. இருப்பினும் சில சுவாரசியங்கள் நடந்தவண்ணமே உள்ளன. அதில் ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காக.

பெயர் மல்லிகா என்று வைப்போம்.

மல்லிகா அக்கா ஒரு அவசர தேவைக்கு சிலரிடம் கடனாக பணம் வாங்கினார். ஒருவரிடம் 20,000, மற்றவரிடம் 10,000, வேறு ஒருவரிடம் 15‘000 என கிட்டத்தட்ட 60‘000 சேர்த்து விட்டார். வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டவில்லை, பணத்தை திரும்ப கேட்க இல்லை என்று கூறிவிட்டார். கடன்காரர் மிரட்ட அவர் தனக்கு 5,000 சம்பளம், அதில் எல்லா செலவும் போக மிஞ்சுவது 1,000. இந்த 1,000 கழித்து எடுக்க விரும்பினால் எடுக்கலாம், உங்களில் யார் அதியம் கழிக்கிறாரோ அவருக்கு தரப்படும். இதன் அர்த்தம்: மல்லிகா அக்கா செலுத்த வேண்டிய கடனில் யார் அதிகம் கழிக்கிறார்களோ அவருக்கு பணம். உதாரணம: எனக்கு தரவேண்டிய கடனில் 2,000 கழிக்கிறேன் எனக்கு இந்த 1,000 தா, நான் 3,000 கழிக்கிறேன் எனக்கு இந்த 1,000 தா, நான் 5,000 கழிகிறேன் இந்த 1,000 தா. அதிகமாக 5,000 கழித்தவருக்கு இந்த 1,000. தனது காசு 5,000 இழந்து இந்த 1,000 பெற்றது எந்த அழவுக்கு எமாற்றப்படுகிறார்கள் எண்டு தெரிகிறது.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டு.. கடன்.. நகை அடகு... வீட்டுக் கடன்.. என்று பல வகைகளில் பகற்கொள்ளையில் நம்மவர்கள் புலம்பெயர் நாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் உட்பட இதைச் செய்கிறார்கள்.tw_blush:

அண்ண நீங்க பாதிக்கப்பட்டவரோ..?!:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் குடுத்தவன் குடுத்த காசை திருப்பிக்கேட்டால்..........தரேலாது....விருப்பமெண்டால் பொலிசிலை போய் சொல்லும் எண்ட சண்டித்தன கதையளும் உங்கினேக்கை இங்கினேக்கை எக்கச்சக்கம் கண்டியளோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராவது..அதுவும் ஒரு பெண் கடன் கேட்கும்போது..இல்லை எண்டு சொல்ல மனசு வராது தான்!

கடன் வாங்குபவருக்குக் கடனைத் திருப்பிக் கட்டும் 'வலிமை' இருக்கின்றதா என்பதை அறிந்தே கடன் கொடுக்க வேண்டும்!

ஊரிலுள்ள கடைகளில் தொங்கும் பலகைகளில் எழுதியிருந்ததைக் கவனமாக வாசித்திருந்தால் இந்தப் பிரச்சனை வராது!

'உறவுக்குப் பகை கடன்'!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கடன் பட்டார்... நெஞ்சம் போல், கலங்கினான்... இலங்கை வேந்தன்."
அந்த ராவணனுக்கே... இந்த நிலைமை என்றால்,  நம் ஆக்கள்... கொடுத்த கடனை மறந்து விட்டு. இனி கடன் கொடுக்கக் கூ டாது என்று சபதம் எடுப்பது தான்... பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் போகமால் இருக்க உதவியாய் இருக்கும்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஞ்சிப் போனா ஆகக் கூடி ஒரு 10% தானே நம்மட ஆக்கள் அடிப்பினம்.

உங்க வெள்ளையளுக்க லோன் சார்க் (கடன் சுறாக்கள்) என்று அழைக்கப் படும் பல தனி நபர்களும் நிறுவனங்களும் உள்ளன.

வட்டி வீதம்  வெளில சொல்லி 6500% வரை கூட உண்டு. சொல்லாம அவயள் வைச்சசு தான். கீழ உள்ள கதப்படி ஏலே கால் இலட்சம்%

ஒரு பெண் நத்தார் பண்டிகைக்காக £500 பவுண்ட் வாங்கி இருக்கிறார்.

வட்டியும் முதலுமாக கிழமைக்கு £50 கொடுக்க வேண்டும். இரண்டு வருடமாக வாங்கிய சுறா (வெள்ளை) கடைசியில் அவரது கணக்குப் படி கடன் இன்னும் வரக் கிடக்கு என்று பயமுறுத்தி காசை வாங்க வரும் போது, பாலியல் தேவைகளையும் பார்த்துக் கொண்டார்.

பெண்ணின் நிலை மோசமாவதைக் கண்ட நண்பி ஒருவர், என்ன ஏது என்று விசாரித்து, தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அறிவித்து சுறா சிறையில்.

ஆகையால் மேற்கு நாடுகளில் சட்டம் முதலைகளுக்கு எதிரானது. ஆகவே கடனை கொடுத்து விட்டு, வர வில்லையே என்று மிரட்டமால், துளைந்தது போ, என்று என்னைய மாதிரி நல்லவர்களுக்கு பயப் படாமல் தாங்கோ.

https://www.gov.uk/report-loan-shark

Why loan sharks are bad

Warning!

Some loan sharks have attempted to charge interest rates as high as 719,000% Source: BBC news story

Loan sharks will start out being friendly. And if you keep up your repayments, they will stay that way. But the reality is, even if you do, any money you borrow will come at a high price.

There are many risks attached to borrowing from a loan shark.

  • You pay far more in interest than you would through any legal borrowing. One woman who borrowed £500 ended up repaying £88,000
  • You may be harassed if you get behind with your repayments
  • You are often pressured into borrowing more money to repay one debt with another

இப்படித்தான் லண்டன் ஈஸ்ட் ஹாமில் தமிழரிடம் கடன் வாங்கி, கொடுக்காமல் போலீசில் மாட்டி விட்டு, கொடுத்தவர், லைசென்ஸ் இல்லாமல் கொடுத்துப் போட்டார் என்று உள்ள போட்டு வந்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.