Jump to content

யாழ்ப்பாணமும் கூகிள் செய்மதியும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

j-1.jpg

விடியக்காலமையும் அதுவுமாய்...காகமொன்று மாறி மாறிக் கத்திக்கொண்டிருந்தது!

சனிக்கிழமையாவது கொஞ்சம் கண்ணயருவம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச காகம் விடுகுதில்லை என்று அலுத்துக் கொண்டார் அம்பலவாணர்! சனிக்கிழமை ஓய்வெடுக்கிற அளவுக்கு அம்பலத்தார் ஒண்டும் பெரிசா வெட்டிப் புடுங்கிறதில்லை எண்டாலும் மகளின்ர மூண்டு  பேரப்பெடியளும் அவரைப் போட்டுப் படுத்திற பாடு கொஞ்ச நஞ்சமில்லை! இண்டைக்கு மகள் லீவில நிப்பாள்! அதால அவருக்குக் கொஞ்சம்ஓய்வு கிடைக்கிற நாள் தான் இந்தச் சனிக்கிழமை! அம்பலத்தாரின்ர மனுசியும் மற்ற மகளின்ர பிள்ளைப்பெறு பாக்கவெண்டு அவுஸ்திரேலியாவுக்குப் போனது… போனது தான்! மருமகன் வலு கெட்டிக்காரன்! என்னவோ பூந்து விளையாடி மனுசியை டெம்பறரி  விசாவில அங்க நிக்க வைச்சிட்டான்! அம்பலத்தார் தான் தனிச்சுப் போனார்! ஆணாய்ப் பிறந்தால்.. இந்தப் பிள்ளைப் பேறு பாக்கிறதெண்டு சொல்லி விசா எடுத்துப் போகேலாது எண்டு தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டார்! எல்லா விசயத்திலும் ஈக்குவாலிட்டி பாக்கிற வெள்ளைக்காரன் இந்த விசயத்தில மட்டும் அசைய மாட்டதெண்டிறான் எண்டு நினைத்துக் கொண்டார்!

சரளமாக நகர்ந்து கொண்டிருந்த நினைவோட்டத்தைக் காகத்தின் சத்தம் மீண்டும் குழப்பியது! காகமும் வேண்டுமென்றே செய்வது போல… திறந்திருந்த ஜன்னல் அருகில் இருந்த வேலியிலிருந்து கத்தியது!

முருகா...இண்டைக்கு என்னவோ ஒரு அசமந்தம் நடக்கப்போகுது என்று நினைத்தவராக நல்லூர் முருகனை உதவிக்குக் கூப்பிட்டார்!

நல்லூர் மணி அடிக்கிற சத்தம் கேட்கத் தொடங்க...அவரது ரெலிபோன் மணியும் கிணுகிணுத்தது! முருகா...முருகா..என்ற படி  போனை எடுத்து ‘ஹலோ ஆர் பேசுறது?’ என்றார்!

அண்ணை சுகமாய் இருக்கிறீங்களே…? அவரது தங்கச்சி தான் லண்டனிலிருந்து அழைத்திருந்தாள்! கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவராக ...சுகத்திற்கு என்ன குறைச்சல்...நீ எப்படி என்று கேட்டார்! அண்ணை, நேரடியாக விசயத்துக்கு வாறன் அண்ணை! இப்ப எங்கட வளவையும் வீட்டையும் வானத்திலையிருந்து பாக்கிற மாதிரிப் பார்க்கலாம் அண்ணை! இண்டைக்குப் பார்த்தன்...வலு சந்தோசமாயிருக்கு!

சரி...சரி ...இப்ப சண்டையில்லாத படியால வடிவாத் தானே இருக்கும்! வேற மச்சான் எப்படி இருக்கிறார்? மருமக்கள்…. அம்பலத்தார் தொடர்ந்தார்!

அவர் தான் இப்ப எடுக்கச் சொன்னவர்! அவரும் வீட்டைப் பாத்தவர்! குண்டு விழுந்த வீடு மாதிரியே தெரியேல்லை! தென்னை மரங்களும் கொஞ்சம் உயர்ந்து போனாலும் கொத்துக் கொத்தாய் காய்ச்சிருக்கிறதைப் பாக்க ஆசையைக் கிடக்குது எண்டு சொல்லுறார்!

அது சரி… பெடியள் .. வீட்டுச் சொந்தக்காரர் வெளிநாட்டிலை எண்டு சொல்லி...வீட்டைத் தங்கட தேவைக்கு வேணுமெண்டு கேக்க/….நான் தானே எல்லா இடமும் திரிஞ்சு.. கடைசியாய்ப் பெரியவினின்ர மாமாவைப் பிடிச்சு ஒரு மாதிரி வீட்டை மீட்டனான்! உனக்கு நினைவிருக்கே தங்கச்சி!

ஓமண்ணை..நான் அதை எல்லாம் மறப்பனே …!

நீ மறக்க மாட்டாய் தானே தங்கச்சி… கூடப் பிறந்தனி எல்லே..! அதோட இந்த வீட்டைச் சீதனமாய் உனக்குத் தர முந்தி..இதைக் கட்ட எவ்வளவு காசை நான் கொட்டியிருப்பன் தங்கச்சி..!

உண்மை தானண்ணை! இண்டைக்கு இந்த வீட்டைக் கூகிள்ல பாத்த மனுசன் ..என்னப்பா.. எங்களுக்கும் வயது போகுது..பிள்ளையளும் வளந்திட்டுது தானே.. ஊரில இப்ப பிரச்சனைகள் இல்லாத படியால்.. ஓய்வெடுத்த பிறகு ஊரில போய் இருப்பமா எண்டு கேட்டிது !

சரி..சரி … வாங்கோவன் உங்கட வீடு தானே.. கொஞ்ச நாளைக்கு  வந்து நின்டிட்டுப் போறதில எங்களுக்குச் சந்தோசம் தானே!

கொஞ்ச நாளில்லை அண்ணை… இஞ்ச குளிருக்கை வயசு போகப் போக நிண்டு பிடிக்கேலாது போல கிடக்கண்ணை! அது தான் அங்க வந்து நிரந்தரமாய் இருக்கலாம் எண்டு யோசிக்கிறம்!

நீ தானே தங்கச்சி...சொன்னனி…! நாங்கள் எங்கை இனி அந்தப பக்கம் வரப்போறம்… பிள்ளையள் எல்லாம் இங்கத்தைப் பழக்க வழக்கத்தில வளந்ததுகள்.. அங்க வந்து இருக்க மாட்டுதுகள்..நீங்கள் தானே வீட்டை இவ்வளவு காலமும் பாத்தனீங்கள்..அப்படியே அங்கயே இருந்து உங்களுக்குப் பிறகு ..உங்கட மகளுக்கு எங்கட அன்பளிப்பாய் குடுத்து விடுங்கோ எண்டு சொன்னனீ...மறந்திட்டியா?

அமபல்த்தார் அழுது விடுவார் போல இருந்தார்!

உண்மை தான் அண்ணை… இப்ப நிலவரம் கொஞ்சம் மாறிப் போச்சு… அது தான்….!

சரி… சரி… பிறகு எடுக்கிறன்   என்று கூறிப் போனைத் துண்டித்து விட்டாள்  தங்கச்சி…!

இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.. அம்பலத்தார்!

இதுக்குத் தான் அந்தக் கண்டறியாத காகம் காதுக்குள்ளை வந்து கத்தினதாக்கும் என்று நினைத்த படி…. முருகா என்றார்!

இவள் சொன்னதை நம்பிக் கையில இருந்த காசையும் போட்டு...சுத்து மதில் எல்லாம் கட்டி… தென்னம் பிள்ளையளையும் வச்சு வளர்த்து விட்டது பிழையாய்ப் போச்சுது.. என்று தன்னைத் தானே நொந்து கொண்டார்!

சரி… கோயிலுக்காவது போயிற்று வருவம் எண்டு நினைச்சப் படி...மகளை எழுப்பாமல்.. ஒரு காக்காக் குளியலுடன்..நாலு முழமொன்றைச் சுத்தியபடி,,சைக்கிளில் ஏறிக் கோவிலை நோக்கி உழக்கினார்!

விதானையாரும் கிட்டத் தட்ட என்ர நிலை தான்…! அவரிட்டை...ஏதும் வெளி நாட்டுக்காரர் திரும்பவும் வந்து வீட்டைத் திரும்பிக் கேட்கிறதைத் தடுக்க ...ஏதாவது வழியிருக்கா எண்டு கேட்க வேண்டும் என்று நினைத்தார்!

கொஞ்ச நேரத்திலேயே..தங்கச்சி அந்நியமாகிப் போனது அவருக்கே ஆச்சரியாக இருந்தது! அவையிட்ட என்ன காசா இல்லை...வேணுமெண்டால் ஒரு வீட்டை வாங்கிறது தானே.. என்றும் மறுத்தான் போடிற தனது மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டார்!

கோவில் வாசலிலேயே விதானையைக் கண்டதும்...முருகா...நீ கண் கண்ட தெய்வம் தானப்பா...என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்!

இவரைக் கண்டதும் விதானையாரும் இவரிடம் ஓடி வந்தார்!

அம்பலம்..ஒரு பிரச்சனை..என்றவர் ...ராத்திரி ஒரு போன் கோல் வந்தது! அது தான் கொஞ்சம் குழப்பமாய்க் கிடக்கு என்றவரின் முகம் பேயறைந்தவரின் முகம் போலக் காணப்பட்டது!

நானிருக்கிற வீட்டுக்காரன் என்னிட்டை வாடகை வாங்கிறதில்லை எண்டு தெரியும் தானே! நல்ல மனுசன்! போன வருசம் கிணத்தையும் வடிவாய்க் கட்டித் தண்ணித் தாங்கியையும்  கட்டச்சொல்லி இரண்டு லட்சம் ரூபா அனுப்பியிருந்தவன் ! நானும் என்ர பெடிச்சியைக் கலியாணம் கட்டி வெளியால அனுப்பினனான் எல்லோ .! போய்ச் சேர்ந்த உடனை ..அவரிட்டைச் சொல்லி அனுப்பி விடுகிறன் எண்டு சொன்னவள்.. போன போக்குத் தான்.! ஒண்டையும் காணேல்லை! நான் எப்படிப் போய் மருமகனிட்டைக் காசை அனுப்பச் சொல்லிக் கேக்கிறது..அனுப்பிற நேரம் அனுப்பட்டும் எண்டு விட்டிட்டன்!

சரி ...அதுக்கு இப்ப என்ன..விதானை?

பிரச்சனை என்னவெண்டால்.. பெடியன் காசை அனுப்ப.. கிணத்தையும் ..ராங்கையும் கொஞ்ச நாளால கட்டுவம் எண்டு.. வீட்டுக்காரன் அனுப்பின காசில கையை வச்சிட்டன்!

வீட்டுக்காரன் இப்ப.. கூகிளிலை வீட்டைப் பாத்திட்டு… என்ன விதானை கட்டின கிணத்தையும்,,, ராங்கையும் காணேல்லை.. ஒரு வேளை மரங்கள் மறைக்குதோ...எண்டு கேக்கிறான்!

படிச்ச பெடியன் எல்லோ...கொஞ்சம் கௌரவமாய்க் கேட்கிறான் போல கிடக்கு!

எனக்கெண்டால் பகிடியும் விளங்கேல்லை….வெற்றியும் விளங்கேல்லை  என்று கூறியபடி...நீ என்னவோ கேக்க வேணுமெண்ட மாதிரிக் கிடந்தது..என்ன பிரச்சனை என்று  கேட்டார் விதானையார்!

அது கிடக்கட்டும்… கூகிள் பிரச்சனை தான் எனக்கும் என்ற படி… முருகா என்று கோவில் மூலஸ்தானத்தை நோக்கித் திரும்பினார்..அம்பலத்தார்!

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள்லில பார்த்துக் கதைவழிப் படுவினம் என்று காகத்துக்கு எப்படித் தெரிந்தது. நம்ம காகங்கள் இப்பவும் தமது வயர்லெஸ் பவரை தக்க வைச்சுக் கொண்டிருக்கு...! ம்... காகமா ,கொக்கா...!!

விதானைமார்தான் இன்னும் மாறவேயில்லை....!  tw_blush:

கதைக்கு நன்றி புங்கை...! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புங்கையூரன் said:

உண்மை தானண்ணை! இண்டைக்கு இந்த வீட்டைக் கூகிள்ல பாத்த மனுசன் ..என்னப்பா.. எங்களுக்கும் வயது போகுது..பிள்ளையளும் வளந்திட்டுது தானே.. ஊரில இப்ப பிரச்சனைகள் இல்லாத படியால்.. ஓய்வெடுத்த பிறகு ஊரில போய் இருப்பமா எண்டு கேட்டிது !

கொஞ்ச நாளில்லை அண்ணை… இஞ்ச குளிருக்கை வயசு போகப் போக நிண்டு பிடிக்கேலாது போல கிடக்கண்ணை! அது தான் அங்க வந்து நிரந்தரமாய் இருக்கலாம் எண்டு யோசிக்கிறம்!

உது இப்ப லண்டனில..  ஊரைவிட்டு போரைச் சாட்டி ஓடியாந்து.. அசைலம் அடிச்சு சிற்றிசன் சிப்பும் வைச்சிருக்கிறவை.. அவையை கலியாணம் முடிச்சு வந்தவையிட...  நவீன உளறல்களில்.. முதன்மையானது.

தமிழன் சமூகம் திருந்தாது.... ஆனால் எந்த சூழலிலும்.. தக்கன.. பிழைச்சுக்கும்.tw_blush:

கதை அல்ல.. காதுக்கெட்டியவரை இது நிஜம். பகிர்விற்கு நன்றி... புங்கை அண்ணா. உங்கட ஆக்கம் என்றால் வாழ்த்துக்கள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்காரர் கன பேர் இப்பிடி ஊரோட வரப்போறம் என்று  சொல்லி, வீட்டை, அங்க இருந்து பார்த்து, காபந்து பண்ணிண சொந்தக்கார இன சனங்களை கிளப்பி, காதும், காதும் வைச்சமாதிரி, வித்துப் போட்டு, விசா அலுவலா கொழும்பு போட்டோடி வாறம் என்று காசோட பறந்திடுகினம்.

தேசவழமை சட்டப்படி, முதலில் வாங்கக் கூடிய நிலையில் உள்ள உறவினருக்கு தான், முதலில் வாங்கும் உரிமை உள்ளது என்பதனையும், அவர்கள் தம்மால் வாங்க வசதி இல்லை என்று தெரிவித்தால் மட்டுமே, வெளியாருக்கு விக்க முடியும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

இல்லாவிடில் விற்பனை, ரத்தாகும். வாங்கியவர், காசு கேட்டு, போனைப் போடுவார். அலுப்பு.

வழக்கு வம்பு என்று உறவினர்கள் போகாவிடில் அல்லது அவர்களுக்கு கொஞ்சம் காசைக் காட்டினால், ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் புங்கையூரான். நல்லநகைச்சுவையாக ஆனால் உண்மையை எழுதியுள்ளீர்கள். 

கடந்தவாரம் எனது மனைவிக்கு விடயத்தைக் காட்டினேன். அப்போது அவ சொன்ன விடயம் இனிநம்பிப் பணமனுப்பலாம் ஏனென்றால் பேக்காட்டேலாது என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

நம்பலாமா தாத்தா நெறைய பூமிக்கு உறுதி போட்ட ஆட்கள் பழைய ஆட்கள் ??

கதை ம் நிஜத்தை கொண்டு வந்து சென்று விட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

-----

பிரச்சனை என்னவெண்டால்.. பெடியன் காசை அனுப்ப.. கிணத்தையும் ..ராங்கையும் கொஞ்ச நாளால கட்டுவம் எண்டு.. வீட்டுக்காரன் அனுப்பின காசில கையை வச்சிட்டன்!

வீட்டுக்காரன் இப்ப.. கூகிளிலை வீட்டைப் பாத்திட்டு… என்ன விதானை கட்டின கிணத்தையும்,,, ராங்கையும் காணேல்லை.. ஒரு வேளை மரங்கள் மறைக்குதோ...எண்டு கேக்கிறான்!

படிச்ச பெடியன் எல்லோ...கொஞ்சம் கௌரவமாய்க் கேட்கிறான் போல கிடக்கு!

------

நகைச்சுவை கலந்த, உண்மைக் கதை என்றாலும், போரின் போது... அந்தச் சொத்துக்களை பாதுகாத்தவர்களின் நிலைமை சோகமானது. அழகாக கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை  புங்கை.

15 hours ago, suvy said:

கூகிள்லில பார்த்துக் கதைவழிப் படுவினம் என்று காகத்துக்கு எப்படித் தெரிந்தது. நம்ம காகங்கள் இப்பவும் தமது வயர்லெஸ் பவரை தக்க வைச்சுக் கொண்டிருக்கு...! ம்... காகமா ,கொக்கா...!!

விதானைமார்தான் இன்னும் மாறவேயில்லை....!  tw_blush:

கதைக்கு நன்றி புங்கை...! 

காகம் கத்துவதை வைத்தே.... முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் ஆக்கள் எல்லோ நாங்கள். Bild in Originalgröße anzeigentw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

குசா வெளிநாட்டு சிற்றிசன் எடுக்க முதல் நீங்கள் வாங்கியிருந்தால் / உங்களது பெயருக்கு உறுதி எழுதப்பட்டிருந்தால் பிரச்சனை இல்லை. ( உபயம் - சும்) 

 

Link to comment
Share on other sites

புங்கை அண்ணா,

 

தொழிநுட்பத்தை, எங்கள் சமுதாயம் பயன்படுத்தும் முறையை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் அண்ணா. இந்த கதைக்குள் இரண்டு கதை இருக்கிறது. ஒன்று அம்பலவாணர் ஐயாவுடையது, மற்றையது விதானையாருடையது. இரண்டுக்கும் காரணம் ஒன்று தான்.  

இது இன்று அங்கு உருவாகி வரும் சமூக பிரச்சனையின் இரு வேறு முகங்கள். ஒன்றில்  ஏமாற்றப்பட்டவர் தாயகத்திலும் , மற்றதில் புலம்பெயர் தேசத்திலும் இருக்கிறார்கள். அங்கு தான் உங்கள் கதையின் நடுநிலைமை நிற்கிறது. ஆனால் "ஹேராம்" படம் போல 90 வீதமான கதை எதை சொல்லுதோ நாங்கள் அதை மட்டுமே உள்வாங்கி கொள்கிறோம். இதில் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர் மீது தான் எங்களுக்கு கோபம் வருகிறது, அது தான் இங்கு யதார்த்தமாகிறது.

மேலும் மேலும் நீங்கள் எழுத வேண்டும். உங்களுக்கு என்று ஒரு கதை சொல்லும் பாணியை வைத்திருக்கிறீங்கள். அதில் உங்கள் அனுபவம் 100 வீதம் இருக்கிறது . நாங்கள் பார்த்த இடத்தை கூட நீங்கள் வர்ணிக்கும் விதத்தில் தெரிகிறது நீங்கள் தாயகத்தை எவ்வளல்வு ஆத்மார்த்தமாக நேசிக்கிறீங்கள் என்பது. தாயகம் என்பது வெறும் மண் மட்டுமல்ல. அங்கு வாழும் குயில் கிளியில் இருந்து, தென்னை மரங்கள், கிளுவைகள், கிணத்தடி, "தாயக நிலவு" (நிலவு வெளிநாட்டில் இருந்தாலும்- எங்களூர் நிலவு ஒரு அழகு தான்) எல்லாமே சேர்ந்து தான் தாயகம். இது உங்கள் கதைகளில் "தெறி"க்கின்றன.   

உங்கள் எழுத்துகள் ஒரு நாள் எங்களை எல்லாம் "தாயகத்துக்கு புலம்பெயர" வைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குறிப்பு : இன்னும் கூகுள் வீதி பார்வை live ஆக விடவில்லை என்பது ஒரு ஆறுதல். ஆக குறைந்தது ஒரு வருடம் பின்னோக்கிய(பழைய) படங்களையே அது வெளியிட்டுள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பகலவன் said:

குறிப்பு : இன்னும் கூகுள் வீதி பார்வை live ஆக விடவில்லை என்பது ஒரு ஆறுதல். ஆக குறைந்தது ஒரு வருடம் பின்னோக்கிய(பழைய) படங்களையே அது வெளியிட்டுள்ளது. 

 

ஓம்........லைவ்விலை ஒண்டுமில்லை நல்ல காலம்.  அந்த வசதியுமிருந்திருந்தால் கிணறு,ராங்கியை கூகுள்ளை தேடின சனம்.........கிணத்தடியிலை இப்ப ஆர் குளிச்சுக்கொண்டு நிக்கினம் எண்டதையும் தேட வெளிக்கிடுவினம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர், 

பத்தாம் வட்டாரம் எல்லாம், கூகிள் கமரா சுழலுதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

புங்கையர், 

பத்தாம் வட்டாரம் எல்லாம், கூகிள் கமரா சுழலுதா?

யோவ்.... நாதமுனி,  வாயை.... வைச்சிட்டு சும்மாரும்யா....
வட்டாரக் கதை கிழப்பி, சிங்களவனை விட... தமிழனை பிரிக்கும் வேலை செய்யாதீர்.
நல்லவற்றை... நல்லவர்கள், அமைதியாக செய்து கொண்டு உள்ளார்கள்.  
(புங்குடு தீவு மக்கள்..... ஏன்? வட்டாரத்தில் பிரிந்து நிற்கிறார்கள், அது... புலம் பெயர் நாட்டிலும் தொடர்வது ஏன்? எனற ஆதங்கத்தில் எழுந்த கேள்வி.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

யோவ்.... நாதமுனி,  வாயை.... வைச்சிட்டு சும்மாரும்யா....
வட்டாரக் கதை கிழப்பி, சிங்களவனை விட... தமிழனை பிரிக்கும் வேலை செய்யாதீர்.
நல்லவற்றை... நல்லவர்கள், அமைதியாக செய்து கொண்டு உள்ளார்கள்.  
(புங்குடு தீவு மக்கள்..... ஏன்? வட்டாரத்தில் பிரிந்து நிற்கிறார்கள், அது... புலம் பெயர் நாட்டிலும் தொடர்வது ஏன்? எனற ஆதங்கத்தில் எழுந்த கேள்வி.)

ஒய் சிறியர்,

உது, நானும் புங்கையரும் வேற ஒரு திரியில தொடங்கி, இங்கின இழுக்கிற பகிடி...

ஐயோ, ஐயோ... பதற வேண்டாம் ஐயா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

ஒய் சிறியர்,

உது, நானும் புங்கையரும் வேற ஒரு திரியில தொடங்கி, இங்கின இழுக்கிற பகிடி...

ஐயோ, ஐயோ... பதற வேண்டாம் ஐயா. :grin:

மிகவும் வருத்தமாக இருக்குது, நாதமுனி. 
எல்லோரும், பயங்கர.... திறமை சாலிகள். 14.gif
விசுகருடன், அண்மையில் சந்தித்த போதும்.... 
எல்லோரிடனும் அந்த, ஏக்கம் இருந்தது. Smileys

இவங்கள்... கதிர்காமக் கந்தனுக்கு,  கோவணம்  கட்டி விட்டதை... 
அந்த, முருகன்... இன்னும் மறக்கவில்லைப் போல் உள்ளது. lol26.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஓம்........லைவ்விலை ஒண்டுமில்லை நல்ல காலம்.  அந்த வசதியுமிருந்திருந்தால் கிணறு,ராங்கியை கூகுள்ளை தேடின சனம்.........கிணத்தடியிலை இப்ப ஆர் குளிச்சுக்கொண்டு நிக்கினம் எண்டதையும் தேட வெளிக்கிடுவினம்.:cool:

'மாமியார் தலையில கையும், கூகிள் காமராவில கண்ணும்' எண்டு பிறகு பழமொழியும் மாறும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை புங்கையரின் கதையை விட மக்காள் எல்லாருக்குரும் கூகிள் வீதி பார்வை படம் தான் பிரச்சனை போல் தொியுது. :)அது நல்லாத்தானே இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை புங்கையரின் கதையை விட மக்காள் எல்லாருக்குரும் கூகிள் வீதி பார்வை படம் தான் பிரச்சனை போல் தொியுது. :)அது நல்லாத்தானே இருக்குது.

சத்தியமாய்.... இன்னும், யாழ் கூகிள் படத்தை இன்னும் பார்க்க... மனதில் தெம்பு வரவில்லை. 
பழைய நினைவுகளுடன்.... வாழ்க்கையை நகர்த்துவது, நல்லது என்றே கருதுகின்றேன். 11.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர் என்னோட பிரச்சனையை உங்களுக்கு சொல்லாமலேயே எப்படி உங்களால் முடிந்தது என்று எண்ணி தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

குசா வெளிநாட்டு சிற்றிசன் எடுக்க முதல் நீங்கள் வாங்கியிருந்தால் / உங்களது பெயருக்கு உறுதி எழுதப்பட்டிருந்தால் பிரச்சனை இல்லை. ( உபயம் - சும்) 

 

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை, விசாரித்து சொல்கிறேன்.

7 minutes ago, குமாரசாமி said:

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,நீங்கள் ஊரில போய் இருக்கப் போறீங்களா?...இல்லையென்டால் அங்கே இல்லாத ஆட்களுக்கு எழுதிக் கொடுக்கலாம் தானே!.இந்த தங்கச்சியையும் மனசில வையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

 

10 hours ago, ரதி said:

அண்ணா,நீங்கள் ஊரில போய் இருக்கப் போறீங்களா?...இல்லையென்டால் அங்கே இல்லாத ஆட்களுக்கு எழுதிக் கொடுக்கலாம் தானே!.இந்த தங்கச்சியையும் மனசில வையுங்கோ

பாதை இல்லாத காணிகள் இருந்தால் எழுதிக் குடுங்கோ, தங்கச்சி ஹெலில போய் இறங்கட்டும்.  வழக்குச் சிலவும் தலை இடியும் குறையும்....!  tw_blush:

எங்களிடம் அப்படி ஒரு  காணி இருந்து அறாவிலைக்கு முன் வீட்டுக் காறனுக்கே குடுக்க வேண்டியதாப் போட்டுது....!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் இந்த கோவில்காரனையும் ஒருக்கா பாருங்கோ.....உங்களது கதையை முதலே படித்துவிட்டேன் இன்றுதான் இந்த செல்பியை கண்டுபிடித்தேன்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நடைமுறை யதார்த்தத்தைச் சொல்கின்றது. 

பகலவன் சொன்னமாதிரி கூகிள் ஒரு வருடத்திற்கு முந்தைய பாதைப் படத்தைத்தான் காட்டுகின்றது. ஊரில் முன்னர் போய் வந்த ஒழுங்கைகளையெல்லாம் கூகிள் உதவியோடு நானும் போய்வந்தேன். இனி ஊருக்குப் போய்த்தான் பார்க்க என்ன இருக்கின்றது!

இதுதான் ஒழுங்கையெல்லாம் போயிருக்கின்றது!

Google%25252520Amazonia%252525201%252525

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.