Jump to content

யாழ்ப்பாணமும் கூகிள் செய்மதியும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

j-1.jpg

விடியக்காலமையும் அதுவுமாய்...காகமொன்று மாறி மாறிக் கத்திக்கொண்டிருந்தது!

சனிக்கிழமையாவது கொஞ்சம் கண்ணயருவம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச காகம் விடுகுதில்லை என்று அலுத்துக் கொண்டார் அம்பலவாணர்! சனிக்கிழமை ஓய்வெடுக்கிற அளவுக்கு அம்பலத்தார் ஒண்டும் பெரிசா வெட்டிப் புடுங்கிறதில்லை எண்டாலும் மகளின்ர மூண்டு  பேரப்பெடியளும் அவரைப் போட்டுப் படுத்திற பாடு கொஞ்ச நஞ்சமில்லை! இண்டைக்கு மகள் லீவில நிப்பாள்! அதால அவருக்குக் கொஞ்சம்ஓய்வு கிடைக்கிற நாள் தான் இந்தச் சனிக்கிழமை! அம்பலத்தாரின்ர மனுசியும் மற்ற மகளின்ர பிள்ளைப்பெறு பாக்கவெண்டு அவுஸ்திரேலியாவுக்குப் போனது… போனது தான்! மருமகன் வலு கெட்டிக்காரன்! என்னவோ பூந்து விளையாடி மனுசியை டெம்பறரி  விசாவில அங்க நிக்க வைச்சிட்டான்! அம்பலத்தார் தான் தனிச்சுப் போனார்! ஆணாய்ப் பிறந்தால்.. இந்தப் பிள்ளைப் பேறு பாக்கிறதெண்டு சொல்லி விசா எடுத்துப் போகேலாது எண்டு தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டார்! எல்லா விசயத்திலும் ஈக்குவாலிட்டி பாக்கிற வெள்ளைக்காரன் இந்த விசயத்தில மட்டும் அசைய மாட்டதெண்டிறான் எண்டு நினைத்துக் கொண்டார்!

சரளமாக நகர்ந்து கொண்டிருந்த நினைவோட்டத்தைக் காகத்தின் சத்தம் மீண்டும் குழப்பியது! காகமும் வேண்டுமென்றே செய்வது போல… திறந்திருந்த ஜன்னல் அருகில் இருந்த வேலியிலிருந்து கத்தியது!

முருகா...இண்டைக்கு என்னவோ ஒரு அசமந்தம் நடக்கப்போகுது என்று நினைத்தவராக நல்லூர் முருகனை உதவிக்குக் கூப்பிட்டார்!

நல்லூர் மணி அடிக்கிற சத்தம் கேட்கத் தொடங்க...அவரது ரெலிபோன் மணியும் கிணுகிணுத்தது! முருகா...முருகா..என்ற படி  போனை எடுத்து ‘ஹலோ ஆர் பேசுறது?’ என்றார்!

அண்ணை சுகமாய் இருக்கிறீங்களே…? அவரது தங்கச்சி தான் லண்டனிலிருந்து அழைத்திருந்தாள்! கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவராக ...சுகத்திற்கு என்ன குறைச்சல்...நீ எப்படி என்று கேட்டார்! அண்ணை, நேரடியாக விசயத்துக்கு வாறன் அண்ணை! இப்ப எங்கட வளவையும் வீட்டையும் வானத்திலையிருந்து பாக்கிற மாதிரிப் பார்க்கலாம் அண்ணை! இண்டைக்குப் பார்த்தன்...வலு சந்தோசமாயிருக்கு!

சரி...சரி ...இப்ப சண்டையில்லாத படியால வடிவாத் தானே இருக்கும்! வேற மச்சான் எப்படி இருக்கிறார்? மருமக்கள்…. அம்பலத்தார் தொடர்ந்தார்!

அவர் தான் இப்ப எடுக்கச் சொன்னவர்! அவரும் வீட்டைப் பாத்தவர்! குண்டு விழுந்த வீடு மாதிரியே தெரியேல்லை! தென்னை மரங்களும் கொஞ்சம் உயர்ந்து போனாலும் கொத்துக் கொத்தாய் காய்ச்சிருக்கிறதைப் பாக்க ஆசையைக் கிடக்குது எண்டு சொல்லுறார்!

அது சரி… பெடியள் .. வீட்டுச் சொந்தக்காரர் வெளிநாட்டிலை எண்டு சொல்லி...வீட்டைத் தங்கட தேவைக்கு வேணுமெண்டு கேக்க/….நான் தானே எல்லா இடமும் திரிஞ்சு.. கடைசியாய்ப் பெரியவினின்ர மாமாவைப் பிடிச்சு ஒரு மாதிரி வீட்டை மீட்டனான்! உனக்கு நினைவிருக்கே தங்கச்சி!

ஓமண்ணை..நான் அதை எல்லாம் மறப்பனே …!

நீ மறக்க மாட்டாய் தானே தங்கச்சி… கூடப் பிறந்தனி எல்லே..! அதோட இந்த வீட்டைச் சீதனமாய் உனக்குத் தர முந்தி..இதைக் கட்ட எவ்வளவு காசை நான் கொட்டியிருப்பன் தங்கச்சி..!

உண்மை தானண்ணை! இண்டைக்கு இந்த வீட்டைக் கூகிள்ல பாத்த மனுசன் ..என்னப்பா.. எங்களுக்கும் வயது போகுது..பிள்ளையளும் வளந்திட்டுது தானே.. ஊரில இப்ப பிரச்சனைகள் இல்லாத படியால்.. ஓய்வெடுத்த பிறகு ஊரில போய் இருப்பமா எண்டு கேட்டிது !

சரி..சரி … வாங்கோவன் உங்கட வீடு தானே.. கொஞ்ச நாளைக்கு  வந்து நின்டிட்டுப் போறதில எங்களுக்குச் சந்தோசம் தானே!

கொஞ்ச நாளில்லை அண்ணை… இஞ்ச குளிருக்கை வயசு போகப் போக நிண்டு பிடிக்கேலாது போல கிடக்கண்ணை! அது தான் அங்க வந்து நிரந்தரமாய் இருக்கலாம் எண்டு யோசிக்கிறம்!

நீ தானே தங்கச்சி...சொன்னனி…! நாங்கள் எங்கை இனி அந்தப பக்கம் வரப்போறம்… பிள்ளையள் எல்லாம் இங்கத்தைப் பழக்க வழக்கத்தில வளந்ததுகள்.. அங்க வந்து இருக்க மாட்டுதுகள்..நீங்கள் தானே வீட்டை இவ்வளவு காலமும் பாத்தனீங்கள்..அப்படியே அங்கயே இருந்து உங்களுக்குப் பிறகு ..உங்கட மகளுக்கு எங்கட அன்பளிப்பாய் குடுத்து விடுங்கோ எண்டு சொன்னனீ...மறந்திட்டியா?

அமபல்த்தார் அழுது விடுவார் போல இருந்தார்!

உண்மை தான் அண்ணை… இப்ப நிலவரம் கொஞ்சம் மாறிப் போச்சு… அது தான்….!

சரி… சரி… பிறகு எடுக்கிறன்   என்று கூறிப் போனைத் துண்டித்து விட்டாள்  தங்கச்சி…!

இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.. அம்பலத்தார்!

இதுக்குத் தான் அந்தக் கண்டறியாத காகம் காதுக்குள்ளை வந்து கத்தினதாக்கும் என்று நினைத்த படி…. முருகா என்றார்!

இவள் சொன்னதை நம்பிக் கையில இருந்த காசையும் போட்டு...சுத்து மதில் எல்லாம் கட்டி… தென்னம் பிள்ளையளையும் வச்சு வளர்த்து விட்டது பிழையாய்ப் போச்சுது.. என்று தன்னைத் தானே நொந்து கொண்டார்!

சரி… கோயிலுக்காவது போயிற்று வருவம் எண்டு நினைச்சப் படி...மகளை எழுப்பாமல்.. ஒரு காக்காக் குளியலுடன்..நாலு முழமொன்றைச் சுத்தியபடி,,சைக்கிளில் ஏறிக் கோவிலை நோக்கி உழக்கினார்!

விதானையாரும் கிட்டத் தட்ட என்ர நிலை தான்…! அவரிட்டை...ஏதும் வெளி நாட்டுக்காரர் திரும்பவும் வந்து வீட்டைத் திரும்பிக் கேட்கிறதைத் தடுக்க ...ஏதாவது வழியிருக்கா எண்டு கேட்க வேண்டும் என்று நினைத்தார்!

கொஞ்ச நேரத்திலேயே..தங்கச்சி அந்நியமாகிப் போனது அவருக்கே ஆச்சரியாக இருந்தது! அவையிட்ட என்ன காசா இல்லை...வேணுமெண்டால் ஒரு வீட்டை வாங்கிறது தானே.. என்றும் மறுத்தான் போடிற தனது மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டார்!

கோவில் வாசலிலேயே விதானையைக் கண்டதும்...முருகா...நீ கண் கண்ட தெய்வம் தானப்பா...என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்!

இவரைக் கண்டதும் விதானையாரும் இவரிடம் ஓடி வந்தார்!

அம்பலம்..ஒரு பிரச்சனை..என்றவர் ...ராத்திரி ஒரு போன் கோல் வந்தது! அது தான் கொஞ்சம் குழப்பமாய்க் கிடக்கு என்றவரின் முகம் பேயறைந்தவரின் முகம் போலக் காணப்பட்டது!

நானிருக்கிற வீட்டுக்காரன் என்னிட்டை வாடகை வாங்கிறதில்லை எண்டு தெரியும் தானே! நல்ல மனுசன்! போன வருசம் கிணத்தையும் வடிவாய்க் கட்டித் தண்ணித் தாங்கியையும்  கட்டச்சொல்லி இரண்டு லட்சம் ரூபா அனுப்பியிருந்தவன் ! நானும் என்ர பெடிச்சியைக் கலியாணம் கட்டி வெளியால அனுப்பினனான் எல்லோ .! போய்ச் சேர்ந்த உடனை ..அவரிட்டைச் சொல்லி அனுப்பி விடுகிறன் எண்டு சொன்னவள்.. போன போக்குத் தான்.! ஒண்டையும் காணேல்லை! நான் எப்படிப் போய் மருமகனிட்டைக் காசை அனுப்பச் சொல்லிக் கேக்கிறது..அனுப்பிற நேரம் அனுப்பட்டும் எண்டு விட்டிட்டன்!

சரி ...அதுக்கு இப்ப என்ன..விதானை?

பிரச்சனை என்னவெண்டால்.. பெடியன் காசை அனுப்ப.. கிணத்தையும் ..ராங்கையும் கொஞ்ச நாளால கட்டுவம் எண்டு.. வீட்டுக்காரன் அனுப்பின காசில கையை வச்சிட்டன்!

வீட்டுக்காரன் இப்ப.. கூகிளிலை வீட்டைப் பாத்திட்டு… என்ன விதானை கட்டின கிணத்தையும்,,, ராங்கையும் காணேல்லை.. ஒரு வேளை மரங்கள் மறைக்குதோ...எண்டு கேக்கிறான்!

படிச்ச பெடியன் எல்லோ...கொஞ்சம் கௌரவமாய்க் கேட்கிறான் போல கிடக்கு!

எனக்கெண்டால் பகிடியும் விளங்கேல்லை….வெற்றியும் விளங்கேல்லை  என்று கூறியபடி...நீ என்னவோ கேக்க வேணுமெண்ட மாதிரிக் கிடந்தது..என்ன பிரச்சனை என்று  கேட்டார் விதானையார்!

அது கிடக்கட்டும்… கூகிள் பிரச்சனை தான் எனக்கும் என்ற படி… முருகா என்று கோவில் மூலஸ்தானத்தை நோக்கித் திரும்பினார்..அம்பலத்தார்!

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள்லில பார்த்துக் கதைவழிப் படுவினம் என்று காகத்துக்கு எப்படித் தெரிந்தது. நம்ம காகங்கள் இப்பவும் தமது வயர்லெஸ் பவரை தக்க வைச்சுக் கொண்டிருக்கு...! ம்... காகமா ,கொக்கா...!!

விதானைமார்தான் இன்னும் மாறவேயில்லை....!  tw_blush:

கதைக்கு நன்றி புங்கை...! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புங்கையூரன் said:

உண்மை தானண்ணை! இண்டைக்கு இந்த வீட்டைக் கூகிள்ல பாத்த மனுசன் ..என்னப்பா.. எங்களுக்கும் வயது போகுது..பிள்ளையளும் வளந்திட்டுது தானே.. ஊரில இப்ப பிரச்சனைகள் இல்லாத படியால்.. ஓய்வெடுத்த பிறகு ஊரில போய் இருப்பமா எண்டு கேட்டிது !

கொஞ்ச நாளில்லை அண்ணை… இஞ்ச குளிருக்கை வயசு போகப் போக நிண்டு பிடிக்கேலாது போல கிடக்கண்ணை! அது தான் அங்க வந்து நிரந்தரமாய் இருக்கலாம் எண்டு யோசிக்கிறம்!

உது இப்ப லண்டனில..  ஊரைவிட்டு போரைச் சாட்டி ஓடியாந்து.. அசைலம் அடிச்சு சிற்றிசன் சிப்பும் வைச்சிருக்கிறவை.. அவையை கலியாணம் முடிச்சு வந்தவையிட...  நவீன உளறல்களில்.. முதன்மையானது.

தமிழன் சமூகம் திருந்தாது.... ஆனால் எந்த சூழலிலும்.. தக்கன.. பிழைச்சுக்கும்.tw_blush:

கதை அல்ல.. காதுக்கெட்டியவரை இது நிஜம். பகிர்விற்கு நன்றி... புங்கை அண்ணா. உங்கட ஆக்கம் என்றால் வாழ்த்துக்கள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்காரர் கன பேர் இப்பிடி ஊரோட வரப்போறம் என்று  சொல்லி, வீட்டை, அங்க இருந்து பார்த்து, காபந்து பண்ணிண சொந்தக்கார இன சனங்களை கிளப்பி, காதும், காதும் வைச்சமாதிரி, வித்துப் போட்டு, விசா அலுவலா கொழும்பு போட்டோடி வாறம் என்று காசோட பறந்திடுகினம்.

தேசவழமை சட்டப்படி, முதலில் வாங்கக் கூடிய நிலையில் உள்ள உறவினருக்கு தான், முதலில் வாங்கும் உரிமை உள்ளது என்பதனையும், அவர்கள் தம்மால் வாங்க வசதி இல்லை என்று தெரிவித்தால் மட்டுமே, வெளியாருக்கு விக்க முடியும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

இல்லாவிடில் விற்பனை, ரத்தாகும். வாங்கியவர், காசு கேட்டு, போனைப் போடுவார். அலுப்பு.

வழக்கு வம்பு என்று உறவினர்கள் போகாவிடில் அல்லது அவர்களுக்கு கொஞ்சம் காசைக் காட்டினால், ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் புங்கையூரான். நல்லநகைச்சுவையாக ஆனால் உண்மையை எழுதியுள்ளீர்கள். 

கடந்தவாரம் எனது மனைவிக்கு விடயத்தைக் காட்டினேன். அப்போது அவ சொன்ன விடயம் இனிநம்பிப் பணமனுப்பலாம் ஏனென்றால் பேக்காட்டேலாது என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

நம்பலாமா தாத்தா நெறைய பூமிக்கு உறுதி போட்ட ஆட்கள் பழைய ஆட்கள் ??

கதை ம் நிஜத்தை கொண்டு வந்து சென்று விட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

-----

பிரச்சனை என்னவெண்டால்.. பெடியன் காசை அனுப்ப.. கிணத்தையும் ..ராங்கையும் கொஞ்ச நாளால கட்டுவம் எண்டு.. வீட்டுக்காரன் அனுப்பின காசில கையை வச்சிட்டன்!

வீட்டுக்காரன் இப்ப.. கூகிளிலை வீட்டைப் பாத்திட்டு… என்ன விதானை கட்டின கிணத்தையும்,,, ராங்கையும் காணேல்லை.. ஒரு வேளை மரங்கள் மறைக்குதோ...எண்டு கேக்கிறான்!

படிச்ச பெடியன் எல்லோ...கொஞ்சம் கௌரவமாய்க் கேட்கிறான் போல கிடக்கு!

------

நகைச்சுவை கலந்த, உண்மைக் கதை என்றாலும், போரின் போது... அந்தச் சொத்துக்களை பாதுகாத்தவர்களின் நிலைமை சோகமானது. அழகாக கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை  புங்கை.

15 hours ago, suvy said:

கூகிள்லில பார்த்துக் கதைவழிப் படுவினம் என்று காகத்துக்கு எப்படித் தெரிந்தது. நம்ம காகங்கள் இப்பவும் தமது வயர்லெஸ் பவரை தக்க வைச்சுக் கொண்டிருக்கு...! ம்... காகமா ,கொக்கா...!!

விதானைமார்தான் இன்னும் மாறவேயில்லை....!  tw_blush:

கதைக்கு நன்றி புங்கை...! 

காகம் கத்துவதை வைத்தே.... முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் ஆக்கள் எல்லோ நாங்கள். Bild in Originalgröße anzeigentw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

குசா வெளிநாட்டு சிற்றிசன் எடுக்க முதல் நீங்கள் வாங்கியிருந்தால் / உங்களது பெயருக்கு உறுதி எழுதப்பட்டிருந்தால் பிரச்சனை இல்லை. ( உபயம் - சும்) 

 

Link to comment
Share on other sites

புங்கை அண்ணா,

 

தொழிநுட்பத்தை, எங்கள் சமுதாயம் பயன்படுத்தும் முறையை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் அண்ணா. இந்த கதைக்குள் இரண்டு கதை இருக்கிறது. ஒன்று அம்பலவாணர் ஐயாவுடையது, மற்றையது விதானையாருடையது. இரண்டுக்கும் காரணம் ஒன்று தான்.  

இது இன்று அங்கு உருவாகி வரும் சமூக பிரச்சனையின் இரு வேறு முகங்கள். ஒன்றில்  ஏமாற்றப்பட்டவர் தாயகத்திலும் , மற்றதில் புலம்பெயர் தேசத்திலும் இருக்கிறார்கள். அங்கு தான் உங்கள் கதையின் நடுநிலைமை நிற்கிறது. ஆனால் "ஹேராம்" படம் போல 90 வீதமான கதை எதை சொல்லுதோ நாங்கள் அதை மட்டுமே உள்வாங்கி கொள்கிறோம். இதில் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர் மீது தான் எங்களுக்கு கோபம் வருகிறது, அது தான் இங்கு யதார்த்தமாகிறது.

மேலும் மேலும் நீங்கள் எழுத வேண்டும். உங்களுக்கு என்று ஒரு கதை சொல்லும் பாணியை வைத்திருக்கிறீங்கள். அதில் உங்கள் அனுபவம் 100 வீதம் இருக்கிறது . நாங்கள் பார்த்த இடத்தை கூட நீங்கள் வர்ணிக்கும் விதத்தில் தெரிகிறது நீங்கள் தாயகத்தை எவ்வளல்வு ஆத்மார்த்தமாக நேசிக்கிறீங்கள் என்பது. தாயகம் என்பது வெறும் மண் மட்டுமல்ல. அங்கு வாழும் குயில் கிளியில் இருந்து, தென்னை மரங்கள், கிளுவைகள், கிணத்தடி, "தாயக நிலவு" (நிலவு வெளிநாட்டில் இருந்தாலும்- எங்களூர் நிலவு ஒரு அழகு தான்) எல்லாமே சேர்ந்து தான் தாயகம். இது உங்கள் கதைகளில் "தெறி"க்கின்றன.   

உங்கள் எழுத்துகள் ஒரு நாள் எங்களை எல்லாம் "தாயகத்துக்கு புலம்பெயர" வைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குறிப்பு : இன்னும் கூகுள் வீதி பார்வை live ஆக விடவில்லை என்பது ஒரு ஆறுதல். ஆக குறைந்தது ஒரு வருடம் பின்னோக்கிய(பழைய) படங்களையே அது வெளியிட்டுள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பகலவன் said:

குறிப்பு : இன்னும் கூகுள் வீதி பார்வை live ஆக விடவில்லை என்பது ஒரு ஆறுதல். ஆக குறைந்தது ஒரு வருடம் பின்னோக்கிய(பழைய) படங்களையே அது வெளியிட்டுள்ளது. 

 

ஓம்........லைவ்விலை ஒண்டுமில்லை நல்ல காலம்.  அந்த வசதியுமிருந்திருந்தால் கிணறு,ராங்கியை கூகுள்ளை தேடின சனம்.........கிணத்தடியிலை இப்ப ஆர் குளிச்சுக்கொண்டு நிக்கினம் எண்டதையும் தேட வெளிக்கிடுவினம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர், 

பத்தாம் வட்டாரம் எல்லாம், கூகிள் கமரா சுழலுதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

புங்கையர், 

பத்தாம் வட்டாரம் எல்லாம், கூகிள் கமரா சுழலுதா?

யோவ்.... நாதமுனி,  வாயை.... வைச்சிட்டு சும்மாரும்யா....
வட்டாரக் கதை கிழப்பி, சிங்களவனை விட... தமிழனை பிரிக்கும் வேலை செய்யாதீர்.
நல்லவற்றை... நல்லவர்கள், அமைதியாக செய்து கொண்டு உள்ளார்கள்.  
(புங்குடு தீவு மக்கள்..... ஏன்? வட்டாரத்தில் பிரிந்து நிற்கிறார்கள், அது... புலம் பெயர் நாட்டிலும் தொடர்வது ஏன்? எனற ஆதங்கத்தில் எழுந்த கேள்வி.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

யோவ்.... நாதமுனி,  வாயை.... வைச்சிட்டு சும்மாரும்யா....
வட்டாரக் கதை கிழப்பி, சிங்களவனை விட... தமிழனை பிரிக்கும் வேலை செய்யாதீர்.
நல்லவற்றை... நல்லவர்கள், அமைதியாக செய்து கொண்டு உள்ளார்கள்.  
(புங்குடு தீவு மக்கள்..... ஏன்? வட்டாரத்தில் பிரிந்து நிற்கிறார்கள், அது... புலம் பெயர் நாட்டிலும் தொடர்வது ஏன்? எனற ஆதங்கத்தில் எழுந்த கேள்வி.)

ஒய் சிறியர்,

உது, நானும் புங்கையரும் வேற ஒரு திரியில தொடங்கி, இங்கின இழுக்கிற பகிடி...

ஐயோ, ஐயோ... பதற வேண்டாம் ஐயா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

ஒய் சிறியர்,

உது, நானும் புங்கையரும் வேற ஒரு திரியில தொடங்கி, இங்கின இழுக்கிற பகிடி...

ஐயோ, ஐயோ... பதற வேண்டாம் ஐயா. :grin:

மிகவும் வருத்தமாக இருக்குது, நாதமுனி. 
எல்லோரும், பயங்கர.... திறமை சாலிகள். 14.gif
விசுகருடன், அண்மையில் சந்தித்த போதும்.... 
எல்லோரிடனும் அந்த, ஏக்கம் இருந்தது. Smileys

இவங்கள்... கதிர்காமக் கந்தனுக்கு,  கோவணம்  கட்டி விட்டதை... 
அந்த, முருகன்... இன்னும் மறக்கவில்லைப் போல் உள்ளது. lol26.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஓம்........லைவ்விலை ஒண்டுமில்லை நல்ல காலம்.  அந்த வசதியுமிருந்திருந்தால் கிணறு,ராங்கியை கூகுள்ளை தேடின சனம்.........கிணத்தடியிலை இப்ப ஆர் குளிச்சுக்கொண்டு நிக்கினம் எண்டதையும் தேட வெளிக்கிடுவினம்.:cool:

'மாமியார் தலையில கையும், கூகிள் காமராவில கண்ணும்' எண்டு பிறகு பழமொழியும் மாறும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை புங்கையரின் கதையை விட மக்காள் எல்லாருக்குரும் கூகிள் வீதி பார்வை படம் தான் பிரச்சனை போல் தொியுது. :)அது நல்லாத்தானே இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை புங்கையரின் கதையை விட மக்காள் எல்லாருக்குரும் கூகிள் வீதி பார்வை படம் தான் பிரச்சனை போல் தொியுது. :)அது நல்லாத்தானே இருக்குது.

சத்தியமாய்.... இன்னும், யாழ் கூகிள் படத்தை இன்னும் பார்க்க... மனதில் தெம்பு வரவில்லை. 
பழைய நினைவுகளுடன்.... வாழ்க்கையை நகர்த்துவது, நல்லது என்றே கருதுகின்றேன். 11.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர் என்னோட பிரச்சனையை உங்களுக்கு சொல்லாமலேயே எப்படி உங்களால் முடிந்தது என்று எண்ணி தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

குசா வெளிநாட்டு சிற்றிசன் எடுக்க முதல் நீங்கள் வாங்கியிருந்தால் / உங்களது பெயருக்கு உறுதி எழுதப்பட்டிருந்தால் பிரச்சனை இல்லை. ( உபயம் - சும்) 

 

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை, விசாரித்து சொல்கிறேன்.

7 minutes ago, குமாரசாமி said:

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,நீங்கள் ஊரில போய் இருக்கப் போறீங்களா?...இல்லையென்டால் அங்கே இல்லாத ஆட்களுக்கு எழுதிக் கொடுக்கலாம் தானே!.இந்த தங்கச்சியையும் மனசில வையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

 

10 hours ago, ரதி said:

அண்ணா,நீங்கள் ஊரில போய் இருக்கப் போறீங்களா?...இல்லையென்டால் அங்கே இல்லாத ஆட்களுக்கு எழுதிக் கொடுக்கலாம் தானே!.இந்த தங்கச்சியையும் மனசில வையுங்கோ

பாதை இல்லாத காணிகள் இருந்தால் எழுதிக் குடுங்கோ, தங்கச்சி ஹெலில போய் இறங்கட்டும்.  வழக்குச் சிலவும் தலை இடியும் குறையும்....!  tw_blush:

எங்களிடம் அப்படி ஒரு  காணி இருந்து அறாவிலைக்கு முன் வீட்டுக் காறனுக்கே குடுக்க வேண்டியதாப் போட்டுது....!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் இந்த கோவில்காரனையும் ஒருக்கா பாருங்கோ.....உங்களது கதையை முதலே படித்துவிட்டேன் இன்றுதான் இந்த செல்பியை கண்டுபிடித்தேன்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நடைமுறை யதார்த்தத்தைச் சொல்கின்றது. 

பகலவன் சொன்னமாதிரி கூகிள் ஒரு வருடத்திற்கு முந்தைய பாதைப் படத்தைத்தான் காட்டுகின்றது. ஊரில் முன்னர் போய் வந்த ஒழுங்கைகளையெல்லாம் கூகிள் உதவியோடு நானும் போய்வந்தேன். இனி ஊருக்குப் போய்த்தான் பார்க்க என்ன இருக்கின்றது!

இதுதான் ஒழுங்கையெல்லாம் போயிருக்கின்றது!

Google%25252520Amazonia%252525201%252525

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.