Jump to content

மீண்டும் தமிழ்வெப்றேடியோ 01.01.2007 முதல்


Recommended Posts

மீண்டும் தமிழ்வெப்றேடியோ 01.01.2007 முதல் ஆரம்பமாகிறது.

அடுத்துவரும் நாட்களில் பல புதிய நிகழ்ச்சிகள் செய்திகள் அரசியல் கட்டுரைகள் இலக்கியம் உள்ளிட்ட பல விடயங்களுடன் வரவிருக்கிறது.

www.tamilwebradio.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தியக்கா!

நீண்டகால ஓய்வின் பின்னர் மீண்டும் மிளிர இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதனைகள் தாண்டி..தொடரட்டும் பயணம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. வித்தியாசமான பார்வையில் செய்திகளும் அலசல்களும் இருந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

இலங்கைத் தீவில் நடக்கும் நிகழ்விற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் உண்டு, சிறீலங்காவிற்கு ஒண்டு, கூலிப்படைகளிற்கு ஒண்டு, இந்தியாவிற்கு ஒண்டு, அமெரிக்காவிற்கு ஒண்டு நோர்வோக்கு ஒண்டு கண்காணிப்புக் குழுவிற்கு ஒண்டு, ரணிலிற்கு ஒண்டு, அப்பட்டமான இனவாதிகளிற்கு ஒண்டு.

தமிழ்த் தேசியம் என்ற கொள்கையால் ஒன்றுபட்டுள்ள தாயகத்து தமிழருக்கும் புலம்பெயர்ந்துள்ள தமிழருக்கும் ஒற்றுமையான கண்ணோட்டமும் ஒன்று உண்டு. ஆனால் வேறுபட்ட களத்தில் இருப்பதால் இருவருக்கும் இருக்கிற கடமை வேறு. அவரவருக்கு உரிய கடமையை பொறுப்புகளை மைய்யப்படுத்தி பார்க்கும் கண்ணோட்டங்கள் நிச்சயமாக வேறு வேறு.

தமிழ்காடியன், தமிழ்நெற், தமிழ்பீனிக்ஸ் போன்ற ஊடகங்களைத் தவிர இன்று புலம்பெயர்ந்த சமூகத்தில் இயங்கும் எந்த ஊடகமும் இந்த வேறுபாட்டை தெளிவாக இனங்கண்டு இயங்குவதாக தெரியவில்லை. அதாவது தமிழ்மொழியில் இயங்கும் அனைத்து புலம்பெயர்ந்த ஊடகங்களும் கொள்கை அளவில் ஒற்றுமையாக செயற்பட்டாலும் அவர்கள் இயங்கும் சமூகத்திற்கு (அதாவது புலம்பெயர்ந்தவர்களிற்கு) ஏற்ற கண்ணோட்டத்தில் இயங்கவில்லை.

இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முற்பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும். அதை விட்டுட்டு கண்ணி வெடியில 2 இராணுவம் பலி 3 பேர் படுகாயம், டாங்கிக்கு காத்துப் போட்டுது, கட்டளைப் பீடம் மாற்றம், கோபுரம் சரிஞ்சு விழுந்தது, இது பாச்சலுக்கான ஆண்டு எண்டு மிச்ச தமிழ் ஊடகங்கள் பீச்சி அடிக்கிறமாதிரி அடிக்கிறதிலும் பார்க்க வாயிறு குலுங்க சிரிக்கிறதுக்கு ரிபிசியின் நகச்சுவை அரசியல் ஆய்வு எவ்வளவோ மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பெரும்பாலான ஊடகங்கள் குடிசை கைத்தொழில் மாதிரி வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மக்களுக்கு செய்தியை ஆய்வுரையாகாத்தானாம் கொடுக்கனும். அவை பெரிய ஆய்வில ஈடுபட்டுச் செயற்படுவதால அப்பதான் இவை பிரயோசனமா இருக்குமாம். ஆய்வு எழுதேக்க..தமிழிலும் எழுதி அடைப்புக் குறிக்குள்ள...( உதாரணத்துக்கு - இராணுவம் - Armed forces, Military, SLArmy, தாங்கி - Main Battle Tank - T56) இப்படி எல்லாம் ஆங்கிலம் போட்டு எழுதினாத்தான் அது புலம்பெயர் மக்கள் வைன் கிளாஸோட இருந்து ஆய்வுகளை வாசிக்க வாசிக்க அரசியல் மதி மப்பில மிதக்கும்..! :unsure::D

எனவே சாந்தி ரமேஷ் வவுனியன் செய்திகளைச் செய்திகளாகப் போடாமல் ஆய்வுரீதியா இப்படி இங்கிலிஸ் கலந்து கலவையா சும்மா நாலு வசனத்தை அடிக்கி அலங்கரிச்சு எழுதினீர்கள் என்றால் அது தான் புலம்பெயர்ந்த மக்களுக்கான சரியான ஊடகமாக இருக்க முடியும்..!

தமிழ் நெறி தினமும் செய்திகளை எழுதும் போது செய்தியாகத்தான் எழுதுகிறது. செய்திக்கும் ஆய்வுக்கும் வித்தியாசம் கண்டுக்க முடியாத ஜீவங்கள் எல்லாம் தமக்குத்தாமே அகதி மக்கள் என்றதை கொஞ்சம் ஸ்ரைலா புலம்பெயர்ந்த மக்கள் என்று அடுக்கிக் கொள்ளினம். ஏனாம் குடிபெயர்ந்த மக்கள் என்றால் இன்னும் லாவகமா இருக்கும்..!

உதுகளின்ர விசர்க்கதையை விட்டிட்டு செய்தியைச் செய்தியா ஆதாரங்கள் சகிதம் தாங்கோ..! ஆய்வை ஆய்வா எழூதுங்கோ. தமிழ் நெற்றும் அப்படித்தான் செய்யுது..! பல அழுத்தங்கள் மத்தியிலும் ஜேர்மனிய பொலிஸாரின் கொடுபிடிகள் கடந்து உங்கள் நேரத்தை வலுவை செலவு செய்து செய்திகளை தருவதில் நீங்கள் முன்னின்று உழைப்பதை உங்கள் ஊடகவியலாளர் பணிக்கான ஆர்வத்தைப் பாராட்டுகிறோம். விமர்சனங்களில் உள்ள விசர்த்தனங்களை தூக்கி குப்பையில் இட்டுவிட்டு ஊடக தர்மப்படி நடந்து மக்களின் தேவைகள் உணர்ந்து செய்திகளை வழங்குங்கள். ஆய்வுரைகளை சரியான முறையில் சரியான கண்ணோட்டத்தில் எளிமையான வடிவில் முன்வையுங்கள். பாலா அண்ணா மக்களோடு கதைக்கும் போது சாதாரணமாக முறையில் பல விடயங்களைச் சொல்லிவிடுவார். அரசியல் அரங்கில் அவர்களுக்குரிய முறையில் சொல்வார். அதையே மக்களிடமும் காட்டார். அவர் சமூகவியலாளன் என்ற வகையில் சமூகத்தைப் படித்துப் புகட்டி இருகிறார். அந்த வகையில் எங்கள் சமூகத்தின் தரம்..நிலை..தேவை என்பவை மத்தித்துச் செயற்படுங்கள். அது புலம்பெயர்ந்ததாக இருக்கட்டும்..பெயர இருப்பதாக இருக்கட்டும்..அல்லது தாயகத்தில் இருப்பவர்களாக இருக்கட்டும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்

இங்க சில விதண்டாவதத்துக்கென வரும் அரை லுசுகளின் [குருவி போன்றோர்]

கருத்தை புறந்தள்ளி விட்டு அருமையான படைப்புகளை தாருங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.