Jump to content

"சிஸ்டர் ஐ லவ் யூ"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஒரு பேஷண்ட் நர்ஸை லவ் பண்ணுறாரு. அவரு நர்ஸ் கிட்டே எப்படி ப்ரபோஸ் பண்ணுவாரு?"

"சிஸ்டர் ஐ லவ் யூ"

- இது எஸ்.எம்.எஸ்.களிலும், மேடை நாடகங்களிலும் பரிமாறிக் கொள்ளப்படும் ஒரு ஜோக். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு துரதிருஷ்டவசமான நிலை நான் பத்தாம் வகுப்பு படித்தபோது எனக்கு ஏற்பட்டது.

பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்த்தாலே போதும், பசங்களின் உள்ளங்கள் பற்றிக் கொள்ளும். கயல் விழியாள். கொடி இடையாள். தாவணித் தென்றல். என் வகுப்பில் இருந்த 48 பேரில் குறைந்தபட்சம் 48 பேராவது அவளைக் காதலித்திருப்பார்கள். செம காம்பெடிஷன். வேறு பிகரை டாவடித்துக் கொண்டிருந்தவர்கள் கூட ஒரு கவுரவத்துக்கு இவளை காதலித்தார்கள்.

என் நண்பன் செந்திலும் (இவனால் தான் நான் குட்டிச்சுவரானேன்) நானும் இவளை அசுரத்தனமாக காதலித்தோம். அவன் கொஞ்சம் வைல்டாகவும், நான் கொஞ்சம் மைல்டாகவும் மூவ் செய்துக் கொண்டிருந்தோம். செந்தில் அவளை வேகமாக சைக்கிளில் பாலோ செய்வது, அவள் எதிரில் பெரிய ரவுடி மாதிரி முரட்டுத் தனமாக நடந்துகொள்வது என்று ஒரு ரூட்டில் போய்க் கொண்டிருந்தான். நானோ அவள் ட்யூஷனுக்கு சேர்ந்த இடத்திலேயே நல்ல பையன் மாதிரி சேர்ந்து பட்டை எல்லாம் அடித்துக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கவர முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

இருந்தும் நாங்கள் இரண்டு பேருமே அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. அவளுடன் பேசினாலே போதும், மடக்கி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தோம். பேசுவதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். எங்களை மாதிரியே வகுப்பு நண்பர்களும் (எதிரிகளும்) ஒவ்வொரு ரூட்டில் அவரவர் மூளை அளவுக்கு ஏத்தமாதிரியான வழிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் ஆச்சாரமான அய்யங்காராத்துப் பொண்ணு என்பதால் அவளை நெருங்கவே எல்லோருக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது.

பாழாய்ப்போன ஒரு நாளில் கிளாஸ் முடிந்தது. சைக்கிள் ஸ்டேண்டில் சைக்கிள் எடுக்க நானும், செந்திலும் போனோம். செந்திலுக்கு சைக்கிள் இல்லை. என் சைக்கிளை ஓசி ரவுண்டு வாங்கி ஸ்டைலாக ஓட்டுவான். என் சைக்கிள் பானு சைக்கிளின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுவே எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சைக்கிளை எடுக்கும்போது செந்திலின் குரங்குமூளை உள்ளுக்குள் ஏதோ வேகமாக செயல்படத் தொடங்கியது. என் சைக்கிள் கீயை வாங்கியவன் சைக்கிளை எடுக்காமல் பக்கத்திலிருந்த பானுவின் சைக்கிள் கேரியர் மேல் உட்கார்ந்துக் கொண்டான்.

"மச்சான் கெளம்புடா. செயிண்ட் தாமஸ் ஸ்கூல் விட்டுட்டு இருப்பாங்க. பிகர்ங்க எல்லாம் நம்பளை பாக்காம ஏங்கிப் போயிருக்கும். டைம் ஆவுது" என்றேன்.

"இருடா மாமு. பானு வந்திருவா. வந்து சைக்கிளை எடுக்க முடியாம என் கிட்டே வந்து "எஸ்க்யூஸ் மீ. இது என் சைக்கிள்னு" சொல்வா. என்கிட்டே பேசிட்டாலே போதும். அவளை எப்படியாவது பிக்கப் பண்ணிடுவேன்" என்றான் செந்தில்.

எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. இவனுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி ஐடியா எல்லாம் தோன்றுகிறது? நாம வேஸ்ட்டு. எப்படியோ இவன் தான் பானுவை மடக்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நிமிடங்கள் கழிந்தது. செந்தில் மீதிருந்த கோபத்தால் எதுவும் பேசாமல் அமைதி காத்தேன். அவனும் ஏதோ திட்டத்தை யோசித்துக் கொண்டே (அல்லது யோசிப்பது மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டே) எதுவும் பேசாமல் இருந்தான்.

தூரத்தில் பானு. அன்ன நடை. மின்னல் இடை. மயில் மாதிரி ஒயிலாக வந்தாள். அவளை தூரத்தில் பார்க்கும்போது என் உள்ளத்தில் காதல் பொங்கும். ஏனோ தெரியவில்லை, அவள் அருகில் வந்தாலே "தட தட"வென்று சரக்கு ரயில் மாதிரி சத்தம் போட்டு கன்ப்யூஸ் ஆகிவிடும்.

பானு அருகில் வந்ததுமே சட்டென்று என் சைக்கிளில் செயினை மாட்டுவது போல நடித்து சட்டென்று குனிந்துக் கொண்டேன். செந்திலோ அவள் சைக்கிள் கேரியரில் வசதியாக அமர்ந்துக் கொண்டு கையிலிருந்த கைடை எடுத்து படிக்கிற பையன் மாதிரி ரொம்ப உன்னிப்பாக படிக்க ஆரம்பித்து விட்டான். பானு என் அருகில் வந்து நின்றாள். அவள் சைக்கிளைப் பார்த்தாள். சைக்கிளில் செந்தில் ஓரக்கண்ணால் அவளது "எக்ஸ்கியூஸ் மீ"க்காக காத்திருந்தான். மெதுவாக என்னைப் பார்த்தாள். அவள் கண்களை ஏறெடுத்துப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு (பயந்துக் கொண்டு) சைக்கிள் செயினை மாட்டி விடுவதில் மும்முரமாக இருந்தேன்.

30 நொடி கடந்தது. எதுவுமே நடக்கவில்லை. திரும்பிப் பார்த்தால் பானுவைக் காணோம். "மச்சான் என்னடா ஆச்சி?" என்றேன். "ஏதாவது கிளாஸ் ரூமிலே மறந்து வெச்சிட்டிருப்பா. போயி எடுத்துக்கிட்டு வருவா, டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு" என்றான். சொன்னவன் என் முகத்தைப் பார்க்கும் போது பீதி அடைந்துப் போயிருந்தேன். காரணம் தூரத்தில் பானு, அவளுடன் பெரிய குண்டாந்தடியுடன் டிரில் மாஸ்டர் நடராஜன். நடராஜன் அடித்தார் என்றால் ஒருவாரத்துக்கு அடிபட்ட இடத்தில் மரணவலி இருக்கும். பார்ப்பதற்கு சாமி விக்ரம் மாதிரி இருப்பார்.

"என்னலே... பொண்ணுங்க கிட்டே வம்பு செய்யறீளா?" என்று கேட்டுக் கொண்டே வந்தவர் எங்களது எந்த விளக்கத்தையும் கேட்க விரும்பாதவர் போல குண்டாந்தடியை எங்கள் மீது அதிரடியாக பிரயோகிக்கத் தொடங்கினார். "சார் சைக்கிள் செயின் கயட்டிக்கிச்சு" என்ற என் விளக்கம் அவரிடம் எடுபடவில்லை. என்னைவிட செந்திலுக்கு தான் செம அடி. எங்களை மாட்டி விட்டத் திருப்தியுடன் "களுக்"கென்று சிரித்துக் கொண்டே பானு சைக்கிளை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். நடராஜன் மாஸ்டரிடம் கடுமையான எச்சரிக்கையைப் பெற்றுக் கொண்டு அடிபட்ட இடத்தில் செம வலியுடன் (உள்ளத்தில் இருந்த வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது) நானும், செந்திலும் நொந்துப் போய் நடந்தோம்.

"சாரி மாமு. என்னால் நீயும் அசிங்கப் பட்டுட்டே. அவ இவ்ளோ பெரிய பஜாரியா இருப்பான்னு நான் நெனைக்கலே. சே அவளைப் போயி லவ் பண்ணோம் பாரு. இனிமே அவளை நெனைச்சிக்கூட பாக்கக் கூடாதுடா" என்றான் செந்தில்.

அடிபட்ட வலி மறைந்து உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கத் தொடங்கியது. அப்பாடா இனிமே இவன் நம்ம ரூட்டுக்கு வரமாட்டான். காம்பெடிஷன்லே ஒண்ணு குறைஞ்சது என்று நினைத்துக் கொண்டேன். வேகவேகமாக என் மூளை கணக்குப் போட்டது. இந்த சம்பவத்தையே காரணமாக வைத்துக் கொண்டு பானுவிட மன்னிப்பு கேட்கிற சாக்கில் அவளிடம் பேசிவிடலாம் என முடிவு செய்தேன். "பரவால்லடா மச்சான். ப்ரெண்டுக்காக தானே அடிவாங்கினேன். எனக்கு அவசர வேளை இருக்கு" என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டு செந்திலிடமிருந்து எஸ்கேப்பாகி வேகவேகமாக சைக்கிளை மிதித்தேன்.

நேராக என் சைக்கிள் சென்றது என்னுடைய இன்னொரு உயிர்த்தோழனான மா.ப.ஓ.ப சரவணன் வீட்டில். மா.ப.ஒ.ப என்பது மாட்டுப் பல்லா, ஓட்டைப் பல்லா என்பதின் சுருக்கம். ஒரு அடிதடியில் பல் ஓட்டை ஆகிவிட்டதால் சரவணனுக்கு இந்த செல்லப் பெயரைச் சூட்டியிருந்தோம். சரவணன் உஷா என்றொருப் பெண்ணை டாவடித்துக் கொண்டிருந்தான். உஷாவை போய் எப்படித்தான் காதலிக்கிறானோ என்று நான் பலமுறை அதிசயித்ததுண்டு. ம்ம்ம்... காதலுக்கு கண்ணில்லை. அவன் காதலுக்கு உதவுவதாக நான் வாக்களித்திருந்தேன். அதுமாதிரியே என் காதலுக்கு(?) உதவுவதாக அவனும் வாக்களித்திருந்தான்.

நடந்த விஷயங்களை அவனிடம் சுருக்கமாகத் தெரிவித்து என்னுடைய டெக்னிக்கைச் சொன்னேன். அதாவது ட்யூஷன் முடிந்து ஆறு மணிக்கு பானு வீட்டுக்குத் திரும்புவாள். வழியில் அவளை மடக்கி நடந்த சம்பவத்துக்காக செந்தில் சார்பில் மன்னிப்பு கேட்டு "சிம்பதி வேவ்" கிரியேட் செய்து அவளுடன் பழகும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்வதே என் திட்டம். துணைக்கு மா.ப.ஒ.ப வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவனும் அவன் வேலை வெட்டியை எல்லாம் விட்டு விட்டு என்னுடன் வர பெரிய மனசுடன் சம்மதித்தான்.

சுமார் 5.50 மணியளவில் மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு முன்னாலிருந்த ஒரு சின்னத் தெருவில் என் BSA SLR சைக்கிளுடன் நின்றுக் கொண்டிருந்தோம். அவள் வந்ததுமே என்ன பேச வேண்டும் என்று மா.ப.ஒ.ப.வுடன் ஒத்திகை செய்திருந்தேன். அதாவது பின்வருமாறு நடக்கும் என்று நாங்களே முடிவு செய்திருந்தோம்.

அவள் சைக்கிளில் வருவாள். வழியை மறித்து என் சைக்கிள் நிற்கும். சைக்கிளுக்கு முன்னால் சோகமாக நான் நிற்பேன். மா.ப.ஒ.ப. அவள் என் அருகில் வந்து சைக்கிளை நிறுத்தியவுடன் டீசண்டாக விலகிச் சென்று விடுவான்.

"ஹலோ ஒரு நிமிஷம் நான் உங்கிட்டே பேசணும்" - நான்

"என்ன சொல்லு?" - அவள்

"சாரி. என் நண்பன் அநாகரிகமாக நடந்துக் கொண்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" - நான்

"பரவாயில்லை. அவன் இன்டீசண்டா பிகேவ் பண்ணாலும் நீ இவ்வளோ டீசண்டா நடந்துக்கறியே. தேங்க்ஸ்" - அவள்

- இப்படியாக ஸ்டார்ட் செய்து டாப் கியரில் எங்கள் காதல் பறக்கும் என்பது எங்கள் ஏற்பாடு.

சுமார் 6.00 மணிக்கு தூரத்தில் சைக்கிள் தெரிகிறது. சைக்கிளில் என் பானு. பத்தாண்டுக்கு முன்னால் அந்தப் பகுதியில் ஜனநடமாட்டம் ரொம்பவும் அபூர்வம். எப்போதாவது யாராவது ஓரிருவர் சைக்கிளில் செல்வார்கள். மாலை நேரங்களில் அதுகூட இருக்காது.

என் சைக்கிளைப் பார்த்தவுடனேயே ஸ்லைட்டாக ஸ்லோ செய்தாள். தலையைக் குனிந்து கொண்டே அவளை நிறுத்துமாறு கையால் சைகை செய்தேன். ஒத்திகைப் பார்த்த மாதிரியாக இல்லாமல் "திடுக்"கென்று மா.ப.ஒ.ப. ஓட்டம் பிடித்தான். நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அய்யோ.. என் வாய் குழற ஆரம்பித்தது.

"ஓஓஒ....ரு..... நிம்மிஷம்..."

".......??????????????"

"சாரி சிஸ்டர்....... என் ப்ரெண்டுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்"

- சொல்லி முடித்தவுடன் தான் தெரிந்தது. பதட்டத்தில் அவளை சிஸ்டர் என்று சொல்லிவிட்டேன் என்பது. சே.... யானை தன் தலையில தானே மண்ணைப் போட்டுக் கொண்டது மாதிரி ஆகிவிட்டதே? தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த மா.ப.ஒ.ப. காதில் என்னுடைய "சிஸ்டர்" விளிப்பு கேட்டு விட்டது போல. ரிஸ்க் எதுவும் இல்லை என்று நினைத்தவன் திரும்பி வந்தான்.

"பரவாயில்லை கிச்சு. செந்தில் கூட சேராதே. உன்னை மாதிரி நல்ல பையனை கூட அவன் கெடுத்துடுவான்" - சொல்லி விட்டு பறந்து விட்டாள் என் திடீர் தங்கை. வேதனையுடன் மா.ப.ஒ.ப.வை பார்த்தேன். அவன் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

"மச்சான் தெரியாம சிஸ்டர்னு சொல்லிட்டேன். இனிமே அவளை என்னால லவ் பண்ண முடியாது. வெறும் ப்ரெண்ட்ஷிப் மட்டும் தான். இருந்தாலும் இங்கே நடந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேடா. மானம் போயிடும். பிராமிஸ் பண்ணு" என்றேன். ப்ராமிஸ் செய்தான்.

இருப்பினும் மறுநாள் வகுப்புக்குச் சென்றபோது எல்லா வகுப்புத் தோழர்களும் என்னை "மச்சான்... மச்சான்" என்று பாசமுடன் அழைத்தபோதே தெரிந்து விட்டது. மா.ப.ஓ.ப. மேட்டரை அவிழ்த்து விட்டு விட்டான் என்பது. அதுவரை என்னை "பிரதர்" என்று அழைத்த குள்ள சேகர் கூட "மச்சான்" என்று அழைத்தது தான் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

அட்டகாசமாக "ஓபனிங்" செய்தும் கூட இந்தக் காதலைப் பொறுத்தவரை "பினிஷிங்" சொதப்பி விட்டாலும் என்னுடைய எதிர்கால காதல்களுக்கும், பிகர்களை அணுகவேண்டிய முறைக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.

(http://vavaasangam2.blogspot.com/2007/01/blog-post.html)

Link to comment
Share on other sites

கனநாளைக்குப் பிறகு வாசிச்சு சிரிக்க வைச்ச கதை..நன்றி லக்கிலுக். நீங்கள் எழுதினதா? அறிவுமதியின் நட்புக்காலம் கவிதை ஒன்றுதான் ஞாபகத்துக்கு வந்தது :

" நண்பர்கள் என்றவர்கள் கூட காதலர்களாயிருக்கிறார்கள்

எனக்குத்தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்ளே

கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்

ஆனாலும் சொல்கிறேன்

நட்பு என்பது நம்மைப்போல என்றும்

நட்பாகவே இருப்பதுதான்"

Link to comment
Share on other sites

லக்கிலுக் உங்கள் சொந்த கதை சோகக்கதை நல்லா இருக்கு

நல்ல நகைச்சுவைபட எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சிநேகிதி, ரசிகை, கருப்பி.....

பெண்கள் மட்டும் தான் இந்தப் பதிவை படித்திருக்கிறீர்களா?

சிநேகிதி இது நமக்கு நேர்ந்த அனுபவம் தான்.... சீரியஸாக எழுதியிருக்கிறேன்.....

Link to comment
Share on other sites

லக்கி நல்ல விறுவிறுப்பாகா எழுதுகிறீர்கள், தமிழ் சினிமாவுக்கு திரைக்கதை எழுதலாமே?

உப்பிடி கனக்க பதின்ம வயதில எல்லாருக்கும் நடந்திருக்கு ஆனா இப்ப யாருக்கு இப்படி 'டிடேயிலா' எல்லாம் நாபகத்தில இருக்கு?

உந்த 'ஸிஸ்ட்டர்' மாரை காதலிக்கிறது கனக்க நான் பாத்திருக்கிறன்.அப்போது எனக்கு அது ஆச்சரியமன , ஏமாற்றும் விடயமாக இருந்தது, இப்போது இதுவும் ஒரு டெக்னிக் எண்டு விளங்குது.எப்படி உங்களுக்கு எல்லாம் நாபகத்தில இருக்கு? :icon_idea::D

Link to comment
Share on other sites

நன்னாயிருக்கு உந்த சோக கதை... இப்பிடி தோத்து கிட்டியே மச்சி..... சைட் அடிக்கிறது ..கலை மாதிரி மாமு.... உந்த பர்சனாலிட்டி எக்ஸ்ட்ரா எக்ஸ்டாரா விட .....சில பேர் பக்காவாக டெக்னிக்காவாக செய்வாங்க... மச்சக்கார ஆளுங்க

Link to comment
Share on other sites

இப்படி சோகம் நடந்ததா லக்கி உங்கள் வாழ்க்கையில் ???

நன்றாக இருந்தது உங்கள் சோகக்கதை வாழ்த்துக்கள்[சோகத்துக்கல்ல எழுதப்பட்ட முறைக்கு]

Link to comment
Share on other sites

அதுசரி லக்கி, பானுவை கடைசியில் கரெக்ட் பண்ணினது ஆராம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகவும் நகைச்சுவையாகவும் உங்களின் சோகக் காதல் கதையினை எழுதியுள்ளீர்கள் லக்கிலுக்கு. சிரிப்புத் தாங்க முடியவில்லை. பாராட்டுக்கள். இப்பொழுது பானு என்ன செய்து கொண்டிருக்கிறார்?. செந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? உங்களது மற்றைய காதல் அனுபவங்களைச் சொல்லுங்கள் லக்கிலுக்கு.

Link to comment
Share on other sites

நன்றாகவும் நகைச்சுவையாகவும் உங்களின் சோகக் காதல் கதையினை எழுதியுள்ளீர்கள் லக்கிலுக்கு. சிரிப்புத் தாங்க முடியவில்லை. பாராட்டுக்கள். இப்பொழுது பானு என்ன செய்து கொண்டிருக்கிறார்?. செந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? உங்களது மற்றைய காதல் அனுபவங்களைச் சொல்லுங்கள் லக்கிலுக்கு.
வணக்கம் லக்கி அவர்களே

அருமையிலும் அருமை.நிலவு தூங்கினாலும் அந்த நினைவுதூங்கிடாது தானே.ஆனால் இந்த மடிப்பாக்கம் என்னைபொறுத்தவரையில் மறக்கமுடியாதது.நியூ இந்தியாக்கொலனி,புழுதிவாக்கம

Link to comment
Share on other sites

இளமை கால அனுபவத்தை படிக்க சுவாரசியமாக எழுதியிருக்கிறீங்க. தொடர்ந்து எழுதுங்க.

Link to comment
Share on other sites

அடக்க முடியல சிரிப்பு..அவிழ்ந்து விழுந்துது...

என்னமா...கதை...யப்பா....எனக்கு..இப;

Link to comment
Share on other sites

vanni mainthan,

என்ன ஆச்சு? உங்க எழுத்துக்கள் பெட்டிகளாக தெரிகின்றதே? கீமான் உபயோகித்து தானே எழுதுறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி..இல்லாத ஆழா போயிட்டீங்களே...லக்கி....பாவம்ய

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நல்ல கதை, ஜமாய்ச்சிட்டிங்க போங்க.

வாய்விட்டுச் சிரிச்சேன் பழைய நினைவுகளை மீட்டேன்.

ஜெமக் கட்டை சார் நீங்க.

சிஸ்டர் பானுவுக்கும் உங்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

உங்கள் சொந்தக் கதை நன்றாக இருந்தது. உங்களுக்காக நானும் வருத்தப்படுகிறேன். ஆனால் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கதையைப் படித்தவுடன் நீங்கள் மென்மையான மனம் கொண்டவர் போல் தெரிகிறது.

சரியா??

Link to comment
Share on other sites

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சிரிப்பு தாங்க முடியவில்லை லக்கிலுக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.