Jump to content

விடுதலைப்புலிகளிடம் 3ஹெலிகொப்டர் இருப்பதாக கெகலிய அச்சம்.


Recommended Posts

விடுதலைப்புலிகளிடம் 3ஹெலிகொப்டர் இருப்பதாக கெகலிய அச்சம்.

விடுதலைப்புலிகளிடம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்ரர்கள் இருப்பதால் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்கல இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஊடகமத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரம்புக்கல இதனைத்தெரிவித்தார்

சண்டே லீடர் ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது அவதானமாக இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

பாராளுமன்றம் அலரிமாளிகை ஜனாதிபதி அலுவலகம் என்பன ஐம்பது வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்கட்டிடங்கள் மீது விடுதலைப்புலிகள் தங்களிடமிருக்கும் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்த கூடும். அதற்காக 50கிலோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துவந்து தாக்குதல்களை நடத்தலாம்.

நீங்கள் பங்கர்கள் அமைக்கப்படுவதாகவும் அதன் அளவுகளையும் வெளியிட்டால் புலிகள் 50கிலோவுக்கு பதிலாக 500கிலோ வெடிபொருட்களை நிரப்பி வந்து தாக்குதல்களை நடத்துவார்கள்

கொழும்பு நகரில் இராணுவ சோதனைகளை நடத்தும் போது அதை வானொலிகளில் உடனடியாக அறிவிப்பது பாதுகாப்புக்கு பங்கமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

www.tamilwebradio.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொன்னால் தானே இன்னும் கூடுதலாக வெளிநாட்டிலிருந்து தமிழரை அழிக்கிறதுக்கு ஆயுதங்களை வாங்க வசதியாயிருக்கும்.

Link to comment
Share on other sites

3 விமானங்கள் உள்ளன என்று சொன்னால் கௌரவப் பிரச்சனை. அதுதான் 3 ஹெலிகொப்ரர்கள் என்று கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்டர்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்டர்கள் இருப்பதனால் பாதுகாப்பு சம்மந்தமான செய்திகளை வெளியிடுகின்ற பொழுது தேசிய பாதுகாப்பு தொடார்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

-pathivu-

Link to comment
Share on other sites

புலிகள்வசம் ஹெலிகொப்டர்கள் இருப்பதனால் செய்திகளை வெளியிடும்போது கவனம் தேவை அரசாங்கம் அறிவிப்பு.

விடுதலைப்புலிகளின் வசம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்டர்கள் இருப்பதனால் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடுகின்ற பொழுது தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது:சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கைது செய்யப்படவில்லை. ஆனால் அரசாங்கம் எதற்கும் தயாராகவே இருக்கின்றது. செய்திகளை வெளியிடுகின்ற பொழுது ஊடகவியலாளர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஊடகவியலாளர்கள் இரண்டு பக்கங்களும் பதமாக இருக்கின்ற கத்திகளை போன்றவர்கள், நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகள் அதிகரித்துள்ள இந்தச் சூழ்நிலையில் செய்திகளை வெளியிடுவதில் அவதானம் தேவை.

உங்களுடைய செய்திகள் மூலம் புலிகள் பெற்றுக்கொள்கின்ற தகவல்களை விட அவர்களுக்கு கூடுதலான தகவல்கள் தெரியும். ஆனால் நீங்கள் வழங்குகின்ற செய்திகளின் மூலம் புலிகள் மேலும் தகவல்களை பெற்றுவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் அவதானமாக இருக்கின்றது.

பாராளுமன்றம், அலரிமாளிகை ஐம்பது வருடங்களுக்கு பழைமைவாய்ந்த கட்டிடங்கள் என்பதினால் புலிகள் தம்வசமுள்ள ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ளலாம். அதற்காக புலிகள் 50 கிலோ நிறையுடைய வெடிப்பொருட்களை எடுத்து வரலாம். ஆனால் நீங்கள் பங்கர் அமைப்பதாக செய்திகளை வெளியிட்டு பங்கரின் அளவுகளை வெளியிட்டால் புலிகள் 50 கிலோ வெடிப்பொருளுக்கு பதிலாக 500 கிலோ வெடிப்பொருட்களை கொண்டுவருவார்கள். உண்மையில் பங்கர் அமைப்பது தொடர்பாக வெளிவந்த செய்தி அரசியலுக்கு நல்லதாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பிற்கு அது பங்கத்தை ஏற்படுத்தும். அதனால் பாதுகாப்பு செய்தி விடயத்தில் கூடுதலான கவனம் தேவை.

இது எமது இதய பிரச்சினை. தலைவர் இல்லாத நாடொன்று உருவாக்கப்படவேண்டுமா? என்ற கேள்வியை நாமே எழுப்பிக்கொண்டு செய்தியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். கடந்த 25 வருடங்களில் பல தலைவர்களை இழந்துவிட்டோம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் கருஜெயசூரிய, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ஆகியோருக்கு கூடுதலான அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.

இராணுவத்தினர் வீதிச் சோதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பொழுது சில இலத்திரனியல் ஊடகங்கள் படையினர் குறித்த வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதினால் அவ்வீதியில் வாகனம் நெரிசல் காணப்படுவதாகவும் பொதுமக்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறும் செய்திகளை ஒலிபரப்புகின்றன. இது தேசிய பாதுகாப்பிற்கு பங்கத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

www.virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.