Jump to content

நண்பிக்கு ஒரு அட்வைஸ் .........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண்  பாசம் உள்ள யாழ்கள்  உறவுகளுக்கு நீண்ட நாட்களின்பின்  என் வணக்கம் . உறவுகளின் இன்ப துன்பங்களில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள்   சிறப்பு நிகழ்வுகள் பிறந்த நாள் மணிவிழா நாட்களில்   உங்கள்  ப வாழ்த்துக்கள்  பாராட்டுக்கள் மிகவும் சிறந்தவை . வேறு  எந்த இணைய  தளத்திலும் இல்லாத் ஒரு சிறந்த் பண்பு  நம் யாழ் களத்தில் உண்டு. என் தற்போதைய வாழ்வில் எழுத் நேரம் இல்லத நிலைமை உங்களுக்குபுரியும் ஆனாலும்  இடையில்  நேரம் கிடைத்தால் ஒருபத்து நிமிடமாவது  வாசிக்க ( சுவாசிக்க)   வருவதுண்டு...

 

என் நண்பி கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்ல  உள்ளார் ...அவரது தயார்  தனது நோய்  வாய்ப்பட்ட மூத்தத் சகோதரனை பார்க்க விரும்புகிறார் . தன்னையும் யும் அழைத்து செல்லும்படி மன்றாட்ட்மாக் கேட்கிறார். அவர் ஒரு நீரழிவு நோயாளி இரு  மணி  நேரத்துக்கு ஒருதடவை  கழிப்பிடம் தேவை உண்டு ...பயணம்  சமாளித்து  கொள்வார் .. விமான நிலையத்திலிருந்து தனியான ..தனியார் வாகன் வசதி உண்டு...தாயகத்திலும் கழிப்பிட வசதி ..சகோதரன் வீட்டிலமைத்து உள்ளார்கள்.  போகும் வழியில் ...உயர்த்த் பட்ட  கழிப்பிடம் (கொமேர்ட்  ) .. வசதி பிரபல் உணவகங்களில் உண்டா...?  விமான நிலையதிலிருந்து ஆறு எ...ழுமணி நேரம் எடுக்கும் யாழ் செல்ல முழங்காலில் ச்த்திரசிகிச்சை பெற்ற  இவரது தாயார்  சமாளிப்பாரா என்பது என்   நண்பியின் ...யோசினை ....

 

தாயகம் நோக்கி சென்ற யாழ் உறவுகள் ...அனுபவங்களை  பகிர் ந்து கொள்ளவும். நண்பியும் நீண்டகா லதுக்குமுன் சென்றவர். தற்  போதிய நிலைமை ..தெரியாது . வயதா ன தாயாருக்கு இதைவிட வேறு சந்தர்பம்  கிடைக்காது  சாகும் வரை .....இருபத்திந்து வருடங்களுக்குப்பின் கிடை க்க்போகும் சந்தர்பத்தை எண்ணி இரவில் நி த்தி ரையும் இல்லையாம்....என்  நண்பிக்கு  ஒரு முடிவு எடுக் க   உங்கள் அட்வைஸ் ......பிளீஸ் 

 

மாங்கிளியும்   மரங்  கொத்தியும் கூடு திரும்ப்  தடை இல்லை ....நாங்க ...மட்டும் உலகத்துல ....

Link to comment
Share on other sites

41 minutes ago, நிலாமதி said:

போகும் வழியில் ...உயர்த்த் பட்ட  கழிப்பிடம் (கொமேர்ட்  ) .. வசதி பிரபல் உணவகங்களில் உண்டா...?

சிலாபத்தில் ஒரு PS பேக்கரி இருக்குது, அப்புறம் அனுராதபுரத்தில் mango , முருகண்டியில் இராணுவம் நடத்தும் சிற்றுண்டிச்சாலை போன்றவற்றில் துப்பரவான மலசல கூடங்கள் உண்டு. அனுராதபுரத்தில் உள்ளே mango வில் மேற்கத்தைய தரத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான Foodcity களில் உள்ளது, 

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

சிலாபத்தில் ஒரு PS பேக்கரி இருக்குது, அப்புறம் அனுராதபுரத்தில் mango , முருகண்டியில் இராணுவம் நடத்தும் சிற்றுண்டிச்சாலை போன்றவற்றில் துப்பரவான மலசல கூடங்கள் உண்டு. அனுராதபுரத்தில் உள்ளே mango வில் மேற்கத்தைய தரத்தில் உள்ளது.

இவை செல்லும் பாதையிலேயே உள்ளது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவை, மீண்டும் கண்டது சந்தோசம்.
கடந்த பன்னிரண்டு  வருடங்களுக்கு மேல், ஊர் பக்கம் போகவில்லை என்பதால்... அங்குள்ள நிலைமை தெரியாது.

உங்களது... நண்பியின், ஆசை.... நியாயமானது என்றாலும், 
விமான நிலையத்திலிருந்து வீடு வரை போக.... உணவு பிரச்சினை இல்லை என்று,   ஜீவன் சிவாவும், மீராவும் கூறி விட்டார்கள்.
ஆனால்.... ஒரு நோயாளிக்கு, அதை விட... மருத்துவம், கால நிலை போன்ற புறக் காரணிகளும் நிச்சயம் கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.
உண்மையில்.... உங்கள் நண்பி, இக்கட்டான நிலைமையில் உள்ளார் என்பதை, நாம் புரிந்து கொள்கின்றோம்.
அவரின் பயணம், இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தங்கள் வரவுக்கு வாழ்த்தும் வரவேற்பும் நிலாமதி அக்கா.tw_blush:

என்னக்கா இப்படிக் கேட்டுப் புட்டுகள்.. கொமட் 1980 களிலேயே யாழ்ப்பாணம் வந்திட்டுது. இப்ப நாடு பூராவும் வந்திருக்கும். அந்த வகையில்.. நீங்கள் உங்கள் நண்பியிடம்.. உறுதியாகச் சொல்லலாம்.. கொமட் இருக்கு கொலிடே போகலாம் என்று. ஆனால்.. இத்தனை வருசம் போகாதவை.. ஏன் இப்ப போகினம் என்று சிங்களவன் இடையில மறிச்சுக் கேட்டால் அதற்கு நாம் எவரும் பொறுப்பல்ல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை யாழில் கேட்பதை விட கூட்டிக் கொண்டு போகும் சாரதியிடம் கேட்டால் கூடுதல் தகவல் பெறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா...நீண்ட நாட்களின் பின்னர் களத்தில் கண்டது மிகவும் மகிழ்ச்சி!

கொஞ்சம் பணத்தைப் பார்க்காமல்.. கொழும்பிலிருந்து செல்லும் விமானமொன்றில் சீட் ஒன்றைப் பெறமுடியுமா என்று பாருங்கள்!

அல்லது ஹெலிகள் மூலமும் செல்லலாம் என்று நினைக்கிறேன்!

பலருடன் பகிர்ந்து சென்றால் அதிகம செலவு ஏற்படாது என்பது எனது கணிப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு வரைக்கும் சீ பிளேன் வருகிறது பாலாலிக்கு உள்ளூர் விமான  சேவை வாரத்தில் ஒரு முறை வந்து போனது முதலில் ஆனால் இப்ப வந்து போகிறதா என்பது தெரியவில்லை  அறிந்தால் உங்களுக்கு இலகுவாக இருக்கும் அக்கா 

கொழும்பில்  நண்பர்கள் இருந்தால் கேட்டு பாருங்கள் நிலாமதி அக்கா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.