Jump to content

காதல் தோல்விக்கவிதைகள்


Recommended Posts

உன்னை மறப்பதும் ....
இறப்பதும் ஒன்றே ...!!!

தோப்பில் இருந்த ...
மரங்கள் வெட்டப்பட்டு ...
தனிமரம் நிற்பதுபோல் ....
உன்னை இழந்து தனியே ....
நிற்கிறேன் .....!!!

காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயம் 
தீயில் கருகிய இதயம் ...
மீண்டும் துடிக்க விரும்பாது .....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன் 
 

காதல் தோல்விக்கவிதைகள்

Link to comment
Share on other sites

ஜோடியாக நடந்து ....
திரிந்த செருப்பில் ஒன்று ....
அறுந்துவிட்டால் ....
மற்ற செருப்பு நிலை....?

என்னை பிரிந்த நீயும் 
சந்தோசமாய் இல்லை ...
உன்னை பிரிந்த நானும் ....
சந்தோசமாய் இல்லை ...!!!

இருட்டறைக்குள் ...
ஒரு சின்ன வெளிச்சம் ....
பெரும் வெளிச்சம் ....
உன் சின்ன திருப்பம் ...
பெரு வெளிச்சமாகும் .....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

தனிமையில் ...
இருக்கும் போது கூட ....
உன்னோடு தான் ...
பேசிக்கொண்டிருப்பேன் ...!!!

இதுவரை இன்பத்தில் ...
இருந்த இதயம் ...
இப்போ துன்பத்துக்கு ...
பயிற்சி எடுக்கிறது ....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

மூச்சை நிறுத்தினால்.... 
மட்டுமே மரணம் இல்லை... 
நீ பேச்சை நிறுத்தினாலும்... 
மரணம் தான்......! 

ஒரு 
மரதில் ஆயிரம்... 
பூக்கள் மலரும்.... 
மரத்துக்கு வலியில்லை... 
காம்பின் வலியை... 
உணர்வார் யாருமில்லை... 
உன்னை இழந்த வலி... 
உனக்கே புரியவில்லை...! 

இதயத்தில்... 
இருந்து வெளியேறிய நீ 
இதயத்தை நிறுத்திவிட்டு... 
போயிருக்கலாம்....! 

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

என் கவிதையை ....
பார்ப்பவர்கள் எல்லோரும் ...
உனக்கு காதல் தோல்வியா ....
என்கிறார்கள் ....?
இந்த கேள்விக்கு மட்டும் ....
நீ பதில் சொல் .....!!!

என்னை பிடிக்கவில்லை ...
சொல்லியிருந்தால் ....
விலகியிருப்பேன் ....
பிடித்திருக்கு என்றால் ....
காதலித்திருப்பேன் .....
மௌனமாய் இருந்து ...
நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

காதல் ......
கனவோடு ஆரம்பித்து .....
கண்ணீரால் கழுவப்பட்டு ....
நினைவுகளோடு போராடி ....
தூண்டில் மீன் போல் ....
துடித்துக்கொண்டு ......
இருக்கிறது ....!!!

ஒன்றை 
உனக்கு சொல்வேன் ....
நான் காயப்படலாம் .....
நீயும் காயப்படலாம் .....
காதல் காயப்படாது ....
காதல் காலத்தால் ....
அழிய முடியாதது ......!!! 

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

எதற்காக என்னை ....
காதல் செய்ய தூண்டினாய் ...?
எதற்காக என்னை உனக்காய் ...
எங்க வைத்தாய் .....?

எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?
எதற்காக என்னை பிரிந்தாய் ...?
எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?
இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

விழித்திருக்கும் போது....
அழுதால் பரவாயில்லை ....
உன் நினைவுகள் என்னை ....
வதைக்கலாம் ....!!!

தூக்கத்தில் கூட 
கண்ணில் ஓரமாய் சிறு ...
துளிகள் வழிகிறது ....
கனவில் கூடவா என்னை ....
வதைக்கிறாய்......?
^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

என்னை 
அவள் காயப்படுத்தி....
விட்டாள் என்று கவலை ...
படவில்லை .....!!!

என்னை 
அவளை தவிர யார் ....?
காயப்படுத்தமுடியும் ...?
அவளால் மட்டுமே நான் ...
காயப்படவேண்டும் ....
அதுவே இறுதியாகவும் ....
இருக்கவேண்டும் ....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்

bride%252520%2528123%2529.jpg

Link to comment
Share on other sites

  • 1 month later...

உனக்கு  தெரியாது
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை....!!!

சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
மௌனத்தின் வலியை 
துடித்தே இறந்துவிடுவாய்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

காதலிக்க உள்ளம் ...
இருப்பவர்கள் மட்டும் ....
காதலியுங்கள் .....!!!

ஆயிரம் காரணத்தை ....
காதலுக்கு ஆயுதமாய் ....
ரணகனமாக்கும் ....
காதலை செய்யாதீர் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

பேசாமல் விட்டு விடலாம் ...
பேசாமல் இருப்பதுபோல் ....
நடிப்பதுதான் கடினம் ....!!!

காதலிக்காமல் இருக்கலாம் ...
காதலிப்பதுபோல் நடிப்பது ....
காதலில் கொடுமை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

நீ 
புரிந்து கொள் ....
பிரிந்து செல் ....
இரண்டும் ....
கலந்த கலவை ....
காதலுக்கு .....
விஷம் .....!!!

நீ 
என்னை புரியும் ....
வரை நான் உனக்கு ....
பொய்யாகவே ....
இருக்கும் ....
புரிந்தபின் இழந்த ....
காலத்தை நினைத்து ....
கண்ணீர் விடுவாய் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

ஒருமுறை என்னை ...
காதலிப்பதாய் சொல்லு ....
அதற்கு அப்புறம் உன்னை ...
நான் காதலிக்க மாட்டேன் ....
உன்னை காதலிக்காமல் ....
என் மூசசு பிரிந்து விட ...
கூடாது என்பதற்காக ....
அவளிடம் கேட்டேன்....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசா , காதல் வியாதி பொல்லாதது...!

காதலின் வெற்றியைவிட காதலின் தோல்விக்  கவிதைகள்தான் அசத்தலாய் இருக்கு...! இந்தக் காதல் கவிதைகளுக்காகவே ஒருமுறை தோற்பதற்காகக் காதலிக்கலாம்.....!

நன்றி புயல்....!

Link to comment
Share on other sites

22 hours ago, suvy said:

ராசா , காதல் வியாதி பொல்லாதது...!

காதலின் வெற்றியைவிட காதலின் தோல்விக்  கவிதைகள்தான் அசத்தலாய் இருக்கு...! இந்தக் காதல் கவிதைகளுக்காகவே ஒருமுறை தோற்ப:unsure:தற்காகக் காதலிக்கலாம்.....!

நன்றி புயல்....!

:unsure: வேண்டாமுங்க அது பெரும் வலி 
ஹி ஹி ஹி 
நன்றி நன்றி 

வலிகள் தோன்ற தோன்ற .....
வரிகள் கண்ணீர் விடும் .....
கண்ணீர் விட விட....
காதல் கவிதைகள்
தோல்வியடையும்...!!!

வரிகள் இனிக்க இனிக்க
இதயம் துள்ளிக்குதிக்கும் ...
காதல் கவிதைகள்.....
இனிமையாகும் ...!!!

கண்கள் தான் இரண்டு ....
இதயம் ஒன்றுதானே ....
எதற்காக இரண்டையும் ....
தருகிறாய் .....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

பல சோதனைகள்...
சந்தித்து பல ...
வேதனையையும் ....
சந்தித்தேன் ....
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....
நீ காதல் செய்ததால் ....!!!

நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!

எல்லோரும் வெற்றி
பெற்றால் -காதலை ...
யார் காதலிப்பார்கள் ....
என்பதற்காக நீ ....
என்னை பிரிந்தாயோ ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

நாணயத்துக்கு 
இரு பக்கம் போல் 
நான் தலை , நீ  பூ.....!!!

புத்தகத்துக்கு பண்பு போல் 
நான் எழுத்து நீ வரிகள் ...!!!

இதயத்துக்கு இரு அறை
நான்வ லது நீ ,இடது....!!!

காதல் பிரிவுக்கு காரணம்
என் அதிக எதிர்பார்ப்பு ....
உன் அதிக நிராகரிப்பு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

உன்னை கடவுளாக ....
நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் -நீயோ ....
கடவுளை வணங்க ....
கோயில் போகணும் ....
என்கிறாய் ......!!!

நான் கவிதை ....
எழுதும்போது நீ ....
அருகில் இருக்கவேண்டும் ....
என்று ஆசைப்படுகிறேன் ....
நீயோ அக்கறையில்லாமல் ....
இருக்கிறாய் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!

நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!

Link to comment
Share on other sites

எவரோடும் வாழலாம் ....
என்றிருந்திருந்தால் ....
காதல் தேவையில்லை ....!!!

உன்னோடு மட்டுமே ....
நான் வாழவேண்டும் ....
உனக்காகவே நான் ....
வாழவேண்டும் .....
என்பதால்  உன்னை....
காதலித்தேன் .... !!!

இப்போ ....
உனக்காகவும் வாழ ....
முடியவில்லை .....
எனக்காக வாழவும் ....
முடியவில்லை ..........!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

பிரிவை விட கொடுமை .....
காதலில் மௌனம் ......
மௌனத்தை விட கொடுமை ....
காதலில் சந்தேகம் ....!!!

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
கலங்கியிருக்க மாட்டேன்....!!!

உன்னை உயிராய் 
காற்றாய் காதலித்து .....
அவஸ்தைப்படுகிறேன் .....!!!

 ^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

நீ 
என்ன இருதய மாற்று 
சிகிச்சையாசெய்து 
விட்டாய் ..?

இத்தனைகாலம் பழகி 
எத்தனையோ நினைவுகளை 
தந்துவிட்டு ..

எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ 
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று ....
சிகிச்சையா செய்து விட்டாய் ?

Link to comment
Share on other sites

ஏனடி 
பிரிந்த பின் இவ்வளவு 
அன்பு காட்டுகிறாய் .................?

 உன்னோடு 
இருந்தபோது இவ்வளவு 
அன்பை காட்டவிலையே .......?

இருந்த போது 
நான் பட்ட துன்பத்தை விட 
பிரிந்த பின் துன்பம் 
சுகமாக உள்ளது ....!!!

பிரிந்து 
இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!

நீ அருகில் 
இருந்து சண்டை போடு
அது போதும்!!!...

Link to comment
Share on other sites

காதலை 
சொல்லவேண்டிய ....
நேரத்தில் சொல்லி விடு ....
இல்லையேல் காலம் ....
முழுவதும் காதலால் ....
காயப்படுவாய் .....!!!

என்றோ ஒருநாள் ...
சொல்லாமல் விட்ட காதல் ....
இதயத்துக்குள் முள்ளாய் ....
குத்திக்கொண்டே இருக்கும் .....!!!

காதலை சொல்லி வேதனை ....
பட்டவர்களை விட  காதலை ....
சொல்லாமல் வேதனை ....
பட்டவர்களே அதிகம் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.