Jump to content

நாவல் பகுதி: பூதங்களின் புதைமேட்டில் வாழும் மனிதர்கள்


Recommended Posts

paavai_2845128f.jpg

மறுநாள் வழுக்குப் பனிபெய்யும் அபாயம் இருப்பதாக அன்றிரவு எச்சரிக்கை அறிவிப்பு தொலைக்காட்சியில் விட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு ரொறன்ரோ பகுதியில் அன்று மாலை ஏற்பட்ட ரொர்நாடோ எனப்படும் உறிஞ்சும் சுழற்காற்றின் உக்கிரம் குறித்த காட்சியும் விரிவான தகவலும் ஒளிபரப்பாயின. சுபத்திரா அப்போது கீழே இருந்துகொண்டிருந்தாள். உறிஞ்சு சுழற்காற்று பற்றிய செய்தி கண்டதும் திடுமென எழுந்து ஒரு விநாடி அப்படியே உறைந்து நின்றாள். மறுகணம் தும்தும்மெனப் படிகளதிர மேலே ஓடினாள்.

மையம் கொண்ட இடத்தில் அகப்பட்ட யாவற்றையுமே ஒரு பூதம்போல் உள்ளுறிஞ்சிக்கொண்டிருந்தது அது. கார்கள் மோதுண்டன, ஒன்றின் மேலொன்று எற்றுண்டன, சிலது பாலங்களுக்குள் கவிழ்ந்து விழுந்தன. அந்தச் சுழிக்குள் அகப்படாத தூரத்தில் காரிலிருந்து இறங்கியவர்கள் உறைந்தவர்களாய் அந்தக் காட்சியைக் கண்டுகொண்டிருந்தார்கள்.

அது யாருடைய கவனத்திலிருந்தும் தவறியிருக்க முடியாது. மாலினி, சிவகுமாரன், ஆனந்தி, அனந்தி, கனகராசனென எல்லோரும்தான் கண்டிருந்தார்கள். அவ்வகைக் காலநிலைச் சீர்கேடுகளும், இயற்கை அனர்த்தங்களும் சாதாரணமானவை. அவ்வறிவிப்புகளைக் கண்டு யாரும் வேலைகளுக்கோ, வேறு அவசர காரியங்களுக்கோ போகாது விட்டுவிடுவதில்லை; எச்சரிக்கையோடு போய்வருவார்கள். உறிஞ்சு சுழற்காற்றின் பயங்கரங்களும் எப்போதாவது நடப்பதுதான். யாரும் அதை அவ்வளவு கடுமையாக எடுத்துக்கொண்டு பேசுவதுமில்லை, நினைப்பதுமில்லை. ஆனால் சுபத்திராவுக்கு மட்டும் அத்தகைய காட்சிகளும் அறிவிப்புகளும் பேரார்வத்தைத் தந்துகொண்டிருந்தன. ஒரு சனலிலிருந்து இன்னொரு சனலுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு, கனடியச் செய்தியிலிருந்து ஐக்கிய அமெரிக்கச் செய்திகளுக்கு என மாற்றிமாற்றி நாளெல்லாம் தொலைக்காட்சியில் அதையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். அதை அவளே ஒரு பூதமென ஒருநாள் குறிப்பிட்டிருந்தாள். அப்போது அவளது முகம் அச்சத்தில் கருகிப்போயிருந்தது.

கனடா தமிழ்ச் சமூகத்தில் ஒரு பழைய கதை மிகுந்த பேச்சாயிருந்தது ஒருகாலத்தில். வீரகத்தி ஆச்சியென்ற ஒரு மனுசி சொன்ன ஆயிரம் பூதங்கள் ஸ்கார்பரோ பகுதி மண்ணுக்குள் அமுங்கியிருப்பதான கதைதான் அது. அதுபற்றி முதன்முதலாகக் கேட்ட நாள்முதலே அந்தக் கதையைச் சொல்லும்படி மாலினியை நச்சரிக்கத் தொடங்கிவிட்டாள் சுபத்திரா.

மாலினி அந்தக் கதையை அறிந்தது சுபத்திரா கனடா வருவதற்கும் நான்கு வருஷங்கள் முன்பாக. அவளே திரும்ப நினைத்துப் பார்க்கவும் விரும்பாத கதையாக இருந்தது. சுபத்திராவின் விருப்பத்திலும்கூட அக்கதை பற்றி சுபத்திரா அறிய முயல்கிற ஒவ்வொரு சமயமும் மாலினி அநாயாசமாக விலக்கியே வந்திருந்தாள்.

வனமும் நதியும் புல்வெளியும் நிறைந்த இந்த மண்ணின் வரலாறு தோலாடை நாகரிகத்துடன் தொடங்குகிறது. பருந்தும் கழுகும் காகமும் எங்கெங்கும் நிறைந்து அப்போது தென்பட்டன. காட்டெருமையும் மானும் - மயிர் சடைத்த பீவரும் ஒரு அபரிமிதத்தில் கானகமெங்கும் திரிந்தன. அந்த மண்ணுள் கரியும் காரீயமும் வைரமும் பொன்னும் நிறைந்திருப்பதான ஒரு கதை பரவும்வரை, தோலுடைக் கலாச்சாரமே மண்ணில் நின்றிருந்தது. அது மாற ஆரம்பித்த முதல் தருணம்தான் ஆவிகள் வெகுத்துத் திரிந்த காலமென எப்போதும் ஒரு பூர்வ குடியினன் கதை சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.

வீரகத்தி ஆச்சி சொன்னது, அந்தப் பதினேழாம் நூற்றாண்டுக் கதையல்ல. ஆனாலும் அக்கதைகளிடையே ஓர் அபூர்வமான தொடர்ச்சியிருந்தது. மக்கள் செறிவடையாத ஸ்கார்பரோ பகுதியில் ஒரு பூர்வ குடியின் மயானமும், அதையொட்டியிருந்த நீர்நிலையும் மண்ணாலும் கல்லாலும் பிற பிரதேசங்களின் திடக்கழிவுகளாலும் மூடப்பட்டுக் கட்டிடங்களால் நகர்மயப்படுத்தப் படுகையில் மயானத்துள்ளிருந்த ஆயிரம் பூதங்கள் அப்படியே அமுங்கிப்போன கதையது. பூர்வ குடியின் சவக்காலையில் அமுங்கிப்போன ஆயிரம் ஆவிகளும் முனங்குவதும் அனுங்குவதும் குழறுவதும் கூப்பாடிடுவதாயும் இருந்தன. குடியிருப்பாளரின் கனவுகளிலே தோன்றி தம் நிலைமையைக் கூறிக் கெஞ்சின, மன்றாடின. நாளாக ஆக எச்சரிக்கவும் அச்சுறுத்தவும்கூடச் செய்தன. இது இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தில் நடந்தது.

இலங்கையின் பருத்தித்துறைப் பகுதியிலிருந்து வின்சென்ற் வீரகத்தி, மனைவி ராசம்மாவுடன் கனடாவின் ஒட்டோவாவுக்கு வேலைநிமித்தம் வந்துசேர்ந்த காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் முற்பகுதி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு இனக்கலவரத்துக்குப் பின்னால் இலங்கை திரும்புகிற எண்ணத்தைக் கைவிட்ட வீரகத்தி, மேலும் சிலகாலப் பணியின் பின் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று தொடர்ந்து அங்கேயே தங்கிவிட்டார். கனடாவை இலங்கைத் தமிழனின் அகதித் தளமாக்கிய முதல் மனிதனாகக்கூட வீரகத்தி இருக்கலாம். வீரகத்தியின் மரணம் எண்பதில் நிகழ, மனைவி ராசம்மா, வீரகத்தி ஆச்சியாகி ஒன்ராறியோவில் திருமணமாகியிருந்த மகளைக் காண ஒட்டோவாவிலிருந்து வந்துபோன காலத்தில்தான் ஆயிரம் பூதங்கள் மண்ணுள் அமுங்கியிருந்த கதை வெளியானது. ஒட்டோவாவில் பயங்கரமான குளிர்காலத்தில் பஸ்ஸுக்காய் காத்திருக்க நேர்ந்த வீரகத்தியாச்சிக்கு, நகர ஓரத்தில் ஒரு பார்க்கின் எதிரே வாழிடம் கொண்டிருந்த பூர்வகுடிப் பெண்ணோடு ஏற்பட்ட அறிமுகத்தினால் அந்த ஆயிரம் பூதங்களின் கதை அவளுக்குத் தெரியவந்திருந்ததாம்.

அதை வீரகத்தியாச்சி முதலில் தன் பேத்திக்கோ பேரனுக்கோ சொல்லியிருக்கக்கூடும். அது பின்னர் ஊராரிடம் பரவியிருக்கும். அவர்களிலிருந்து அது பற்றிப் படர்ந்து பிற எல்லைகளையும் சேர்ந்திருக்கிறது. மனிதனுக்குத் தொழில்நுட்பத்துடன் ஏற்பட்ட நெருக்கம் காலத்தை மாற்றியதெனினும் கதையை மாற்றவில்லை.

அது உரமேறி உலாவரக் கிளம்பிய காலத்தில் மாலினி அந்தப் பகுதியில் வீடொன்றை வாங்கியிருந்தாள். அவளே வீரகத்தி ஆச்சியைக் கண்டிராதபோதும், கதையைக் கேட்டாள்; கதையைக் கேட்டிருந்த வேறுவேறு இதயங்களிலிருந்து. அது அவர்களது வார்த்தைகளில் பிரமாண்டம் கொண்டிருக்க முடியும். கேட்ட அவளுக்கு நெஞ்சு நொறுங்கிப்போனது. இனி செய்வதற்கு எதுவும் சாத்தியமில்லையென்ற நிலையில் அவளே அந்தக் கதையை மண்ணுள் போட்டு மூடினாள். ஆயிரம் பூதங்களின் புதைமேட்டில் நானூறு குடும்பங்கள் குடியிருந்தன. நானூறு குடும்பங்களில் குடும்பத்துக்கு சராசரி நான்கெனப் பார்த்தாலும் ஆயிரத்து அறுநூறு மனித ஜீவன்கள். ஆயிரம் பூதங்கள் அமுங்கிக் கிடக்கும் மேட்டின்மேல் நிமிர்ந்திருக்கிற வீடுகளில்தான் தாம் குடியிருக்கிறோம் என்ற கதையை யாரும் நம்பிவிடத் தயாராயிருக்கவில்லை. மாலினியும் நம்பவில்லை. நினைக்கவும் விரும்பாத கதையை அவள் சொல்லிவிடவும் முடியாது. அது சுபத்திராவுக்குக் குறையாகவே இருந்து கொண்டிருந்தது நீண்டகாலமாய். பின்னர் அவளே அதுபற்றி மறதியாகிப்போனாள்.

அன்று காலையில் சுபத்திரா எழும்பி மேலே வந்த நேரத்துக்கு மாலினி வேலைக்குப் போயிருந்தாள். ஆனந்தியும் அனந்தியும் பள்ளி செல்லத் தயாராகத் தந்தையைக் காத்துக்கொண்டிருந்தனர்.

ஒன்பது மணிக்குத் தொலைக்காட்சி நிறுத்தப்பட்டது. வீட்டுக் கதவு வெளியே சாத்திப் பூட்டப்பட்டது. பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு சிவகுமாரனின் கார் புறப்பட்டது. அவள் பெரும்பாலும் விரும்பும், சிலபோது வெறுக்கும் அந்தத் தனிமை இறுதியாக வீட்டில்வந்து கவிந்தது.

(தேவகாந்தனின் ‘கந்தில் பாவை’ நாவலின் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அத்தியாயம் இது. சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி இந்நாவல் வெளிவருகிறது.)

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%99

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.