Jump to content

இமயமலையில் சாதுக்களால் ஆடைகளின்றி எப்படி இருக்க முடிகிறது?


Recommended Posts

Tamil_News_large_1520764_318_219.jpg

கேள்வி: இமயமலையில் சில சாதுக்கள் ஆடைகள் எதுவுமின்றி, நிர்வாணமாக நடந்து போவதை பார்த்திருக்கிறோம். அந்த குளிரில் எப்படி அவர்களால் ஆடைகள் இல்லாமல் இருக்க முடிகிறது?
சத்குரு: 
அவர்கள் தோல் தடிமனாக இருக்குமோ என்னவோ? (சிரிக்கிறார்). ஒரு விஷயம் கவனித்தீர்களா? அவர்கள் உடல் முழுதும் விபூதி (திருநீறு) பூசி இருந்தார்கள். அது அவர்களுக்கு உதவுகிறது. மேலும் சில வகையான ஆன்மீக பயிற்சிகளும் உதவுகின்றன. அவர்கள், தங்களுக்கு உடல் முக்கியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள். நீங்கள் உங்கள் உடலை, முக்கியமானதாக ஆக்கவில்லை என்றால், அதை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இழுக்க முடியும். உடல் ரொம்பவும் முக்கியம் என்று ஆகிவிட்டால், ஒவ்வொரு படியும் போராட்டம் தான். அந்த நிலையில், உடல் வசதி மட்டும் தான் உங்கள் வாழ்வில் முக்கிய விஷயம் என்றாகி விடும்.
எனவே, சாதுக்களும் சந்நியாசிகளும் தங்கள் ஸ்தூலத்தை, தங்கள் உடலை, மிகக் குறைந்த பட்ச முக்கியத்துவம் உடையதாக ஆக்குவதற்கு, விழிப்புணர்வுடன் பல பயிற்சிகளை செய்திருக்கிறார்கள். உடலுக்கு அவர் எந்த மதிப்பும் தருவதில்லை. உடலை ஒரு கருவியாக அவர் நினைக்கவில்லை, தான் அகப்பட்டுள்ள ஒரு பொறியாகத்தான் உடலை பார்க்கிறார். எப்படியாவது அதிலிருந்து விடுபடவே முனைகிறார். எனவே நீங்கள் உங்கள் உடலை எப்படிக் கையாள்கிறீர்கள், என்பது தான் அடிப்படை விஷயம். உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் என்ன மாதிரி உறவு இருக்கிறது? அப்படி ஒரு உறவு உண்மையிலேயே இருக்கிறதா? என்றெல்லாம் பார்க்க வேண்டும். உறவே இல்லை என்றால், அது இரு விதமாக இருக்க முடியும். ஒன்று நீங்கள் அதனின்றும் முற்றிலும் தனியாக இருக்கிறீர்கள்; இன்னொன்று நீங்கள் அதாகவே ஆகிவிட்டீர்கள்.
நீங்கள் உடலாகவே ஆகிவிட்டால், பிறகு அந்த உடலுக்கு சிறிய இடையூறோ துன்பமா வந்தால் கூட அது உங்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும். உங்கள் உடலிலிருந்து விலகி நிற்பது போன்ற உறவில் இருந்தால், சில விஷயங்கள் மட்டும் ஒரு பொருட்டாக தோன்றலாம். ஆனால் மற்றவர்களுக்கு பெரிதாக இருக்கும் பற்பல விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. நீங்கள் கூட ஓரளவு அப்படித்தான் மாறிக்கொண்டு வருகிறீர்கள். ஒரு வருடத்துக்கு முன் உங்களால், மூட்டுவலியைப் பொறுத்துக் கொண்டு, சம்மணம் போட்டு 2 மணி நேரம் தொடர்ந்து உட்கார முடியாது, இல்லையா? இப்போது பாருங்கள், மெதுவாக, உங்கள் உடலை ஒரு இடைவெளியுடன் கையாளத் தெரிந்து கொண்டீர்கள். உடல் வலியால் புலம்புகிறது; முழங்கால்களோ, “போதும் போதும் சத்சங்கம்... போய் விடலாம் இங்கிருந்து” என்று கதறுகின்றன. (சிரிக்கிறார்). ஆனால் நீங்கள்... பரவாயில்லை, இருக்கட்டும் என்று தொடர்ந்து அமர்ந்திருக்கிறீர்கள். இப்படி மெதுவாக உங்கள் உடலின் முக்கியத்துவம் உங்களுக்கு குறைந்து கொண்டே போகிறது.


இப்படி உங்கள் உடல் முக்கியத்துவத்தை இழந்துகொண்டே போகும் போது, வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் உங்களை எதுவுமே செய்யாது. இந்த ஏற்ற இறக்கங்கள், எப்போதுமே, உங்கள் உடலைத் தான் பாதிக்கின்றன. நான் உடல் என்று சொல்லும் போது, அதில் உங்கள் மனதையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஸ்தூல உடலும், மனதும் தான் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளால் பாதிப்படைகின்றன, இல்லையா? 
நீங்கள் உடல் தன்மையிலிருந்து விலகிப் போகப் போக, உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நீங்கள் முன்னேற்றப் பாதையில் தான் இருப்பீர்கள். உங்களுக்கு எப்படி போக வேண்டுமோ அப்படி ஒரே பாதையில்தான் போவீர்கள். இந்தப் பாதை அல்லது அந்தப் பாதை, என்று ஏதோ ஒரு பாதையில் போக வாய்ப்பே இல்லை. உங்கள் உடலுக்கு முக்கியத்துவம் குறையக் குறைய நீங்கள் உங்கள் வாழ்விற்கு முழு பொறுப்பு ஏற்கிறீர்கள். ஆனால் உடல் உங்களை ஆளும் போது, எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது.
ஸ்தூலத் தன்மை என்பது, பல சக்திகளால் ஆளப்படுகிறது. யாராலும் அதை முழுமையாக புரிந்து கொள்ளவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. நீங்கள் எவ்வளவு தான் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும், உங்களால் ஸ்தூலத் தன்மையின் மேல் 100% கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. நாம் இப்போது இங்கே அமர்ந்து இருக்கிறோம். இப்படி அமர்ந்திருக்கும் பொழுது, நம் மீது எத்தனை விதமான சக்திகள் தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன, தெரியுமா?
 

நம் பூமி உருண்டையாக இருக்கிறது. அப்படியானால் அதன் மேல் வாழும், நாமெல்லாம் விழுந்திருக்கவேண்டும். ஆனால் நாம் விழவில்லை. அது உருண்டையாக மட்டும் இல்லாமல் வேகமாக சுற்றிக்கொண்டும் இருக்கிறது. அந்த வேகத்தால் இந்நேரம் நாம் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. நம் சூரிய மண்டலமே மிகுந்த வேகத்துடன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. நமக்கு ஏதும் ஆகவில்லை. ஏனென்றால் இப்படி இருப்பதற்கு, பொருள் தன்மையின்போது, பற்பல சக்திகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. 
ஒரு சிறிய அணுவை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் இருக்கும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் இவற்றை விலகாமல் சேர்த்து வைக்க எத்தனை கோடி சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன தெரியுமா? அதை கணக்கிட்டு கூறவே முடியாது, அவை அனைத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியாது.
எனவே உங்கள் உடலிலிருந்து நீங்கள் விலகி இருப்பது தான் உங்கள் வாழ்வை உங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ள ஒரே வழி. அப்படி விலகி இருந்தால் வாழ்க்கை 100% உங்கள் பொறுப்பில் இருக்கும்.

கேள்வியாளர்: சத்குரு, அப்படியென்றால், உடலிலிருந்து விலகி இருப்பது எப்படி?
சத்குரு: ஏன், அதற்கு ஒரு சிறிய கத்தி போதாதா!! (சிரிப்பலை) அந்தத் தன்மையை அடையத்தான் நீங்கள் யோகப் பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பகுதி-நேர யோகியாக (part-time yogi) இருக்கிறீர்கள். (சிரிக்கிறார்). பகுதி நேர பணி என்றால் சில மணி நேரங்களாவது செய்யவேண்டும், அல்லவா? பகுதி நேர யோகிகள் என்றால் சில மணி நேரமாவது யோகா செய்யவேண்டும். ஆனால் நீங்கள் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் செய்கிறீர்கள்? (சிரிக்கிறார்). ஓ! அப்படியானால் உங்களை பகுதி நேர யோகிகள் என்று கூட சொல்ல முடியாதே! மிகுந்த கவனத்துடன், சில மணி நேரங்கள், யோகப் பயிற்சிகளில் நீங்கள் ஈடுபட்டால், உடலிலிருந்து விலகி இருக்கும் தன்மை மிக வேகமாக நிகழும்.
ஆனால் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் யோகா செய்தால்..? அப்போதும் நடக்கும், ஆனால் அப்போது அதிக காலம் ஆகும். பயிற்சி நேரத்தை அதிகப்படுத்தினால், அது விரைவில் வேலை செய்யும். எனவே உங்களில் யாரெல்லாம் இன்னும் பல லட்சம் ஆண்டுகள் வாழப்போகிறோம் என்று நினைக்கிறீர்களோ, அவர்கள் எல்லாம் மெதுவாக வரலாம். என் வாழ்நாள் மிகவும் குறுகிய காலம் தான் என்று நினைப்பவர்கள், ஏற்கனவே முடி நரைக்க ஆரம்பித்திருப்பவர்கள் எல்லாம், உங்களை வேகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்க்கை மிகவும் குறுகிய காலம் தான். எனவே அளவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1520764

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.