Jump to content

Recommended Posts

சொல்லத் தெரியவில்லை
சுடர் போல எரிகிறது மனம்
விம்மி வெடித்து
நேற்றைய வானம் போல்
பொழிந்து தள்ளிட
விழிகள் இரண்டும்
முட்டிக் கிடக்கின்றன 
அழுவதற்கான நாள்
இது அல்ல 
எழுவதற்கான நாள் இது என்று
உள்மனம் உறுதியாய் சொன்னாலும்
விழி உடைத்து
விழி நீர் சொரிகிறது...

#ஈழத்துப்பித்தன்

#மே18 2016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என் அம்மாவையும் என் தங்கையையும்
 என் காதலியையும்
 நிர்வாணமாக்கிப் பார்த்த மண் இது
 நீ தந்த துயரம் மலையெனில்,
அவமானம், கடலளவு
 என் கனவுபோல விரிந்திருக்கிறது
 இந்தக் கடல்
 குருதி பெருகிப் பீறிட்டு வழிந்த
 அந்த நாட்களின் வீச்சம்
 இன்னமும் மிச்சமிருக்கிறது இந்தக்
 காற்றில்
 ஓவ்வொன்றாய் இழந்துபோன
 அந்த ஆத்மாக்களின் அருகில்தான்
 இன்னமும் நின்றுகொண்டிருக்கிறோம்
 நாம்
 எரிந்தழிந்துபோன
 அந்த யுகத்தின் சிதைமேட்டில்
 நின்றபடியேதான்
 நினைவு கூருகின்றோம் அவர்களை
 மடியில் கிடந்திறைஞ்சிய அந்தக்
 குரல்களை
 இன்னமும் கடந்துவர இயலவில்லை எவராலும்
 எல்லலாவற்றிற்கும் அப்பால்
 எதுவுமே இல்லையென்றான வாழ்வை வாழச்
 சபிக்கப்பட்டவர்கள் நாம்
 புதைத்த இடத்திலும் தொலைத்த இடத்திலுமே
 இன்னமும்
 கிடந்துழல்கிறது மனம்
 அந்த நாட்களின் திறலை
 எங்குமே பாட முடியாத அந்தப் பாடலை
 தலைப்பிள்ளைகளின் குருதியால் எழுதிய
 அந்த வீர வரலாற்றை
 இறுதியாக
 இந்தக் கடற்கரை மணலில் தான்
 குழிதோண்டிப் புதைத்துவிட்டுப்
 புறப்பட்டோம்
 மேலே வானும் கீ;ழே நிலமும்
 நெருப்பாய் எரிந்த அந்த நாட்களில்
 நனைக்கவில்லைப் பெய்த மழையும்
 தீண்டவிலலை எந்தத் தென்றலும்
 ஊனும் சதையும் உருகி வழிய
 நாயும் தீண்டாப் பிண்டமெனக்
 கிடந்தோம்
 வழிநெடுக
 வரலாறு எம்மைக் கைவிட்ட கடைசி
 நொடியிலும்
 காலாற முடியாது
 சுமந்துகொண்டலைந்தோம்
 ராஜ கனவை
 காடு எம்மைக் காத்தது
 கடல் எம்மைக் கைவிட்டது
 ஒரு ராஜ்ஜியமே இந்தக்கடல்
 விளிம்பில்தான்
 குடங்கிப் படுத்துக் கிடந்தது
 காற்றே அற்ற அந்த நாட்களில்
 கந்தகம் மட்டுமே மூக்கில் மணந்தது
 வாழ்வை மரணம் துரத்தியது
 இருந்தும்
 எல்லாப் பாதைகளும் எங்கள்
 காலடியிலேயே முடிந்தன
 கொலுவிருந்த ஓரினமே பழிகிடந்த
 நாட்களவை
 ஆண்டவா
 எல்லாத் தியாகங்களையும் இந்தக் கடலடியில்
 தானே
 காவு கொடுத்தோம்
 புகைந்து கருகி எரிந்து நீறான
 ஒளிததும்பிய அந்த வாழ்வை
 இந்தக்கடலில் தானே கரைத்தோம் இறுதியாக
 பின்னர்
 எல்லாவற்றிற்கும் பின்னர்
 எழுந்து தடந்தோம் நிர்வாணமாக
 காடு எம்மைக் காத்தது
 இருந்தும் இன்னமும்
 என் கனவுபோல விரிந்திருக்கிறது
 இந்தக் கடல்...

Link to comment
Share on other sites

குமாரசாமித்தாத்தா வரவுக்கும் வலி சுமந்த வரிகளின் தரவுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.