Jump to content

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016


Recommended Posts

விஜயகாந்த், ஜிகே.மணி, சீமான்.. தேர்தல் களத்தில் உருண்ட + உருளும் பெரும் தலைகள்...!

சென்னை: தேர்தல் என்றாலே பெரும் தலைவர்கள் சில உருள்வது சகஜம்தான். இந்த சட்டசபைத் தேர்தலிலும் சில பெரும் தலைவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். உருண்ட மற்றும் உருண்டு கொள்ள தலைவர்களின் பட்டியல்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் - உளுந்தூர்ப்பேட்டை

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் - காட்டுமன்னார்கோவில்

பாமக தலைவர் ஜி.கே.மணி - மேட்டூர்

நாம் தமிழர் தலைவர் சீமான் - கடலுார்

அமைச்சர் கோகுல இந்திரா

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் - விருகம்பாக்கம்

பாஜக வானதி சீனிவாசன் - கோவை தெற்கு

பாஜக எச். ராஜா - தியாகராய நகர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் - நெய்வேலி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் - திருச்செந்துார்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா - ராமநாதபுரம்

மக்கள் தேமுதிக தலைவர் வி.சி.சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு

சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி - பெரம்பலுார்

விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார் - பண்ருட்டி

தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி - பல்லாவரம்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/many-vips-bite-the-dust-254081.html

கட்சிவாரி முடிவுகள்

கட்சிகள் முன்னிலை முடிவுகள்
admk.png அ.தி.மு.க., 37 95
dmk.png தி.மு.க., 26 64
congress.png காங்கிரஸ் 1 7
bmk.png பா.ம.க., 1  
bjp.png பா.ஜ.க., 0  
dmdk.png தே.மு.தி.க., 0  
mtmk.png ம.தி.மு.க.,    
vc.png விசி 0  
ptm.png புதிய தமிழகம் 1  
vote.png மற்றவை    
Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
7 hours ago, நவீனன் said:

மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!

கடைசி நிலவரப்படி நாம் தமிழர் கட்சிக்கு 1 சதவீத வாக்கு கிடைத்துள்ளது. அதாவது இதுவரை இக்கட்சிக்கு 1,01,985 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தமாகா (0.8%), சிபிஐ (0.7%), மதிமுக (0.7%), சிபிஎம் (0.7%), விடுதலைச் சிறுத்தைகள் (0.6%) உள்ளன. நீண்ட காலமாக அரசியலில் உள்ள கட்சிகளை விட கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/naam-tamilar-gets-decent-votes-254047.html

இருக்கும் 25 பாடங்களில் 10 பாடங்களிற்கு பரீட்சை எழுதி பெறும் புள்ளிகளை மொத்த பாடங்களான 25 ஆல் வகுத்து பெறும் விகிதத்தினையும் 20 பாடங்களுக்கு பரீட்சை எழுதி பெறும் புள்ளிகளை மொத்த பாடங்களான 25 ஆல் வகுத்து பெறும் விகிதத்தினையும் ஒப்பிட்டு எழுதுவது சரியா?

சீமான் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 232 இல் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை தமிழகத்து மொத்த வாக்காளர் எண்ணிக்கையால் வகுத்து வரும் விகிதத்தின் எண்ணிக்கையும், குறைந்த எண்ணிக்கையான தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு எண்ணிக்கையை தமிழகத்து மொத்த வாக்காளர் எண்ணிக்கையால் வகுத்து வரும் விகிதத்தின் எண்ணிக்கையும்  ஒப்பிடுவதில் என்ன 'லொஜிக்' இருக்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிங்களாண்ணே.. கூட்டணில...  நின்று அடுத்தவன் வாக்கையும் வாங்கிட்டு.. எங்கட சதவீதமுன்னு காட்டிறதை.. ஏன் நீங்க கவனத்தில எடுக்கிறீங்க இல்ல. பிரபாகரனை முன்னிறுத்திறான் என்பதற்காகவே இங்கு சிலருக்கு சீமானைக் கண்ணில் காட்டக் கூடாது என்றாகிவிட்டது. இவர்கள் தான் ஒட்டுக்குழுக்களை கொண்டு எமக்கு சனநாயகம் போதிக்க வெளிக்கிட்டிருக்கினம். இப்ப.. ஒற்றுமை மண்ணாங்கட்டி என்று கொண்டு. 35 வருசமா இனத்தை காட்டிக்கொடுத்து..அழிச்சவனிடம் ஒற்றுமை தேடிற நாங்க.. சீமானை ஒதுக்கனுன்னு உளத்தில் ஆசையும் வைச்சிருக்கம். ஏன் புலியும்.. பிரபாகரனும் அங்கு உயிர் வாழ்வதால் என்பது மட்டும் தான் காரணம். வேறு எதுவும் இல்லை.

ஹிந்து வின் சனநாயகம் நாம் தமிழரின் சதவீதத்தையே மறைக்கும் சனநாயகம் என்றால்.. யாழ் களத்தில் சிலரின் சனநாயகம் என்பதை அதனை விடக் கேவலமாக உள்ளதுtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலூரில் சீமான் படுதோல்வி: 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்

கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படுதோல்வி அடைந்தார். அவர் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
1463658268-7158.jpg
 
 
தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக குதித்த நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் போட்டியிட்டார்.
 
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி முகத்திலேயே இருந்தனர்.
 
கடலூரில் போட்டியிட்ட சீமான் படுதோல்வியடைந்து ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி இரண்டாம் இடமும், தமாகா வேட்பாளர் சந்திரசேகரன் மூன்றாவது இடம், பாமக வேட்பாளர் தாமரைக் கண்ணன் நான்காம் இடமும், நாம் தமிழர் சீமான் ஐந்தாவது இடமும் பிடித்தார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி பெரிய கட்சிகளுக்கு இணையாக பேசு பொருள் ஆகி இருப்பதே வெற்றி தான். இன்று சின்னத்திரைகளில் தோன்றிய திமுக அதிமுக கருத்தாளர்கள் கூட நாம் தமிழரை உச்சரிக்க வெளிக்கிட்டிருக்கிறார்கள்.  தேர்தல் சமயத்தில் நாம் தமிழரை ஒரு கட்சியாகக் கூட இனங்காட்ட விளையாத ஹிந்து.. சன் ரிவி.. ஜெயா ரிவி.. உட்பட பிரபல்ய ஊடக ஆதிக்க சக்திகள் எல்லாம் இப்ப நாம் தமிழரைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு புதிய கட்சிக்கு.. இது கூட ஒரு ஊக்கமே ஆகும். 

900000 இலட்சம் வாக்கு வாங்கிய விஜய்காந்தோட கூட்டணிக்கு அழைந்தவர்கள்.. ஏங்கியவர்கள்... முதல் தேர்தலிலேயே... 500,000 வாக்குகள் பெற்றிருக்கும்.. நாம் தமிழரை புறக்கணிக்க முடியுமா.. எனி..???!tw_blush:

Link to comment
Share on other sites

3 minutes ago, nedukkalapoovan said:

அப்படிங்களாண்ணே.. கூட்டணில...  நின்று அடுத்தவன் வாக்கையும் வாங்கிட்டு.. எங்கட சதவீதமுன்னு காட்டிறதை.. ஏன் நீங்க கவனத்தில எடுக்கிறீங்க இல்ல. பிரபாகரனை முன்னிறுத்திறான் என்பதற்காகவே இங்கு சிலருக்கு சீமானைக் கண்ணில் காட்டக் கூடாது என்றாகிவிட்டது. இவர்கள் தான் ஒட்டுக்குழுக்களை கொண்டு எமக்கு சனநாயகம் போதிக்க வெளிக்கிட்டிருக்கினம். இப்ப.. ஒற்றுமை மண்ணாங்கட்டி என்று கொண்டு. 35 வருசமா இனத்தை காட்டிக்கொடுத்து..அழிச்சவனிடம் ஒற்றுமை தேடிற நாங்க.. சீமானை ஒதுக்கனுன்னு உளத்தில் ஆசையும் வைச்சிருக்கம். ஏன் புலியும்.. பிரபாகரனும் அங்கு உயிர் வாழ்வதால் என்பது மட்டும் தான் காரணம். வேறு எதுவும் இல்லை.

 

பிரபாகரனையே கேவலப்படுத்தி அரசியல் செய்யும் சீமானின் தோல்வியை மிகவும் சந்தோசத்துடன் வரவேற்கின்றேன்.பிரபாகரனை உளமாற நேசிக்கும் எவராலும் சீமானை இம்மியளவு கூட ஆதரிக்க முடியாது!
 

Quote


ஹிந்து வின் சனநாயகம் நாம் தமிழரின் சதவீதத்தையே மறைக்கும் சனநாயகம் என்றால்.. யாழ் களத்தில் சிலரின் சனநாயகம் என்பதை அதனை விடக் கேவலமாக உள்ளதுtw_blush:

 

இப்படியே சம்பந்தமில்லாமல் புலம்ப வேண்டியது தான். இப்படியே புலம்பிக்கொண்டு இருங்கள். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

பிரபாகரனையே கேவலப்படுத்தி அரசியல் செய்யும் சீமானின் தோல்வியை மிகவும் சந்தோசத்துடன் வரவேற்கின்றேன்.பிரபாகரனை உளமாற நேசிக்கும் எவராலும் சீமானை இம்மியளவு கூட ஆதரிக்க முடியாது!

நீங்க பிரபாகரனை எந்தளவு நேசிக்கிறீங்க என்பதற்கு 1% ஆதாரமும் இல்லை. சீமானுக்கு குறைந்தது 500,000 மக்கள் அடையாளமாக அவரின் நம்பிக்கைக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். அது இன்னும் பரவும். நாம் அடுத்தவன் எந்தளவுக்கு நேசிக்கிறான் என்று அளவிடுவதை விட நாம் எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பதற்கான அடையாளத்தை தலைவரின் கொள்கை வெல்ல அமுலாக்குவது தான் விசுவாசம். 

தலைவரின் மண்ணில் வாழ்ந்த நமக்குள்ள தலைவர் மீதான நேசிப்பும்.. தமிழகத்தில் இருக்கும் நேசிப்புக்கும் இடையில் இடைவெளி இருக்குது. அதனைப் புரிந்து கொண்டு தான் நகர வேண்டியும் இருக்கிறது. தலைவரை நிந்திப்பவனை விட 1% நேசிப்பவன் மேல். 

தோற்ற போதும் திமிராச் சொல்கிறார் சீமான் என் தலைவன்.. பிரபாகரன் என்றுதான். உங்களைப் போன்றோர் தேர்தலுக்காக அரசியலுக்காக.. பிரபாகரனை புலிகளை பற்றிப் பேசுறான் என்று கூவினீர்களே இப்ப அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்..?!

எங்களைப் பொறுத்த வரை சீமானின் இன நேசிப்பு உங்களினதை விட அதிகம் என்பது தான் உண்மை. பின்னாடி நீங்க கடந்து வந்த சரிநிகர் பாதையும் வைச்சு கவனிச்சுப் பாருங்க. நீங்க.. நேசிச்ச விதம் என்னென்று எமக்குத் தெரியும். சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. நீங்க எல்லாம் தலைவரை நேசிச்சு எழுதிக்.. கிழிச்சதையும் நாம் கண்டு தான் வந்திருக்கிறம். tw_blush:

Link to comment
Share on other sites

வெறும் 1% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்த அதிமுக...!

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியை விட வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது அதிமுக.

அதிமுக கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

திமுக கூட்டணிக்கு 39.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 1 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பயங்கர பந்தாவுடன் வலம் வந்த தேமுதிக படு கேவலமான நிலைக்குப் போயுள்ளது அக்கட்சிக்கு வெறும் 2.4 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அக்கட்சியை விட பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.

இரவு 8 மணி நிலவரப்படி திமுக - அதிமுக கூட்டணிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்:

ADMK gets 42% votes, DMDK cornered with 2.3 % votes

அதிமுக கூட்டணி - 40.8% அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் - 1.75 கோடி.

 

திமுக கூட்டணி திமுக - 31.6% (வாக்குகள்- 1.35 கோடி) காங்கிரஸ் - 6.5% (வாக்குகள் 27 லட்சம்) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.7% ( வாக்குகள் 3 லட்சம்) புதிய தமிழகம் - 0.5% (வாக்குகள் 2 லட்சம்) மனிதநேய மக்கள் கட்சி - 0.5 சதவீதம் (வாக்குகள் 1.9 லட்சம்) திமுக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் - 39.8% திமுக கூட்டணி மொததமாக பெற்ற வாக்குகள் - 1.68 கோடி.

வாக்கு சதவீத வித்தியாசம் - 1 சதவீதம். மேலும் விவரங்களுக்கு http://eciresults.nic.in/PartyWiseResultS22.htm?st=S22

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-gets-42-votes-dmdk-cornered-with-2-3-votes-254035.html

Link to comment
Share on other sites

8 minutes ago, nedukkalapoovan said:

எங்களைப் பொறுத்த வரை சீமானின் இன நேசிப்பு உங்களினதை விட அதிகம் என்பது தான் உண்மை. பின்னாடி நீங்க கடந்து வந்த சரிநிகர் பாதையும் வைச்சு கவனிச்சுப் பாருங்க. நீங்க.. நேசிச்ச விதம் என்னென்று எமக்குத் தெரியும். சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. நீங்க எல்லாம் தலைவரை நேசிச்சு எழுதிக்.. கிழிச்சதையும் நாம் கண்டு தான் வந்திருக்கிறம். tw_blush:

அடடா...  எங்கடா காணேல என்று பார்த்தன்

அதென்ன கடந்து வந்த சரிநிகர் பாதை?!. இப்பவும் அதே சரிநிகர் கற்றுத் தந்த பாதையில் தான் என் கருத்துகள் இருக்கின்றன.  அன்று எதையெல்லாம் சரிநிகர் நடக்கும் என்று நினைத்து விமர்சனம் செய்ததோ அதை தான் காலம் இறுதியாக காட்டிச் சென்றது.

இனி என்ன... சீமானின் கேவலமான படு தோல்வியை ஏற்க பக்குவமில்லாமல் சம்பந்தமில்லாமல் உளற வேண்டியதுதான்.

நேரம் எனக்கு பொன்னானது பாஸ்.. நீங்க நடத்துங்கள் கச்சேரியை

 

Link to comment
Share on other sites

5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சீமான்!

 Seeman011.jpg

கடலூர்: கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டார். அதேபோல், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களையும் முதன்முதலாக அறிவித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரங்களை அவர் மேற்கொண்டார்.

சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராக எம்.சி.சம்பத்தும், தி.மு.க வேட்பாளராக இள.புகழந்தியும், த.மா.கா வேட்பாளராக சந்திரசேகரும், பா.ம.க வேட்பாளராக தாமரைக்கண்ணனும் களமிறங்கினர்.

கடலூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள் இன்று (19-ம் தேதி) மாலை அறிவிக்கப்பட்டது. இதில், எம்.சி.சம்பத் (அ.தி.மு.க) 70922 வாக்குகளும், இள.புகழேந்தி (தி.மு.க) 46509 வாக்குகளும், சந்திரசேகர் (த.மா.கா) 20608 வாக்குகளும், தாமரைக்கண்ணன் (பா.ம.க) 16905 வாக்குகளும், சீமான் (நாம் தமிழர் கட்சி) 12497 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற முழக்கத்தோடு தேர்தலில் களமிறங்கிய சீமான், தேர்தல் முடிவின்படி தோல்வியடைந்ததோடு, 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/64388-seeman-gets-5th-place-in-tn-election.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

இப்படியே சம்பந்தமில்லாமல் புலம்ப வேண்டியது தான். இப்படியே புலம்பிக்கொண்டு இருங்கள். :cool:

ஹிந்துவின் சனநாயகமும் உங்களது சனநாயகமும் ஒன்றென்று சொல்ல வந்தம். கொஞ்சம் நியத்தையும் தரிசிக்க பழகிக்கனும். ஒரு பக்கமாகவே சிந்திக்கக் கூடாது. நாம் தமிழர் கட்சியை.. பெரும் திராவிடக் கட்சிகளோடு ஒப்பிடுவதே தவறு. அந்தளவுக்கு அது சிறிது. பெரும்.. புகழ்வாய்ந்த சிவாஜி கணேசனே கட்சி அமைத்து முதல் தேர்தலிலேயே தோற்றவர் தான். கருணாநிதியும்.. ஜெயலலிதாவும் புதிசா கட்சி அமைச்சு அதிகாரத்துக்கு வந்தவர்கள் அல்ல. அடுத்தவர் அமைச்ச கட்சியை தட்டிப்பறித்து வந்தவர்கள். அவர்கள் எம் இனத்தை ஏய்த்து வாழ்வதை வரவேற்க சீமானை நிந்திக்கும் உங்கள் மனநிலை தான் புலம்பல் தனமானது. tw_blush:

7 minutes ago, நிழலி said:

அடடா...  எங்கடா காணேல என்று பார்த்தன்

அதென்ன கடந்து வந்த சரிநிகர் பாதை?!. இப்பவும் அதே சரிநிகர் கற்றுத் தந்த பாதையில் தான் என் கருத்துகள் இருக்கின்றன.  அன்று எதையெல்லாம் சரிநிகர் நடக்கும் என்று நினைத்து விமர்சனம் செய்ததோ அதை தான் காலம் இறுதியாக காட்டிச் சென்றது.

இனி என்ன... சீமானின் கேவலமான படு தோல்வியை ஏற்க பக்குவமில்லாமல் சம்பந்தமில்லாமல் உளற வேண்டியதுதான்.

நேரம் எனக்கு பொன்னானது பாஸ்.. நீங்க நடத்துங்கள் கச்சேரியை

 

ஆமாம் அன்றே காட்டிச் சென்றவர்கள் ஏன் வழிகாட்டாமல் ஓடினீர்கள். ஓ அப்ப கால இடைவெளியில் கிடைத்த வெற்றிகள் உங்களுக்கு.. வசதியாக அமையவில்லைப் போலும். இப்போ தோற்ற பின் அமுலாகிட்டுது. சரி அமுலாகின தத்துவங்களை வைச்சு இப்ப அடுத்ததா என்ன தத்துவம் எழுதப் போகிறீர்கள்.. எழுத ஒன்னுமே இல்லைப் போல. ஏனெனில் எனி எழுதி எதுவும் சாத்தியமாகாது (சோரம் போவதைத் தவிர)என்று தத்துவம் பேச அப்ப மறந்திருப்பீர்கள். இப்ப எநினைத்திருப்பீர்கள். ஆனால்... இப்ப.. பத்திரிகையே இல்லைப் போல. 

இதனை விட சீமானின் தோல்வி சாதாரணம். அதுவும் ஒரு உந்து சக்தியான தோல்வி. சரிந்து விழும் தோல்வியே அல்ல.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுகாவை ஏதோ தாங்கள் ஊட்டி வளர்த்தது போல் சிலர் துள்ளிக்குதிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கட்சியாக இருந்த (தே.மு.தி.க) வீழ்ச்சி பற்றியோ, அல்லது 8 சீட்டு மட்டுமே கிடைத்த காங்கிரஸ் பற்றியோ கதைக்காமல், நேற்று முளைத்த நாம் தமிழர் கட்சியின் (முதல் முயற்சி / தோல்வி) பற்றி
மட்டுமே கதைப்பது பொருத்தமானாதா? 

Link to comment
Share on other sites

நடிகர் கருணாஸ் வெற்றி... சரத்குமார் தோல்வி

Karunas01.jpg

சென்னை: திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்துள்ளார்.

திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கருணாஸ் 76,786 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திவாகரன் 68,090 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Sarathkumar02.jpg

சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் சரத்குமார் 26,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 88,357 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் சரத்குமார் 62,356 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில்குமார் 6,330 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/64382-actor-karunas-win-sarath-kumar-fail.art

Link to comment
Share on other sites

சசி ,

நாம்  தமிழர் மட்டும் தான்  ஈழத்தமிழனை  விற்று  அரசியல் செய்கின்றார்கள் மற்ற கட்சிகள்  தமிழ் நாட்டு அரசியல் செய்கின்றார்கள் .

நாம் தமிழர் தமிழ்நாட்டு  அரசியல் செய்தால் அவரை  விமர்சனம் செய்ய பலர்  வந்திருக்கமாட்டார்கள் .அவர் கெட்ட கேட்டுக்கு  வெளிநாடுகளில்  கிளை வேறு எம்மவர்  வைத்திருக்கினம் .

Link to comment
Share on other sites

உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தோல்வி!

Vijayakanth08.jpg

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தோல்வி அடைந்துள்ளார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க, மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் களமிறங்கினார். அவருக்கு போட்டியாக, அ.தி.மு.க சார்பில் குமரகுருவும், தி.மு.க சார்பில் வசந்தவேலு, பா.ம.க சார்பில் பாலுவும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உளுந்தூர்பேட்டை தொகுதியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், குமரகுரு (அ.தி.மு.க) 81,973, வசந்தவேலு (தி.மு.க) 77,809, விஜயகாந்த் (தே.மு.தி.க) 34,447, பாலு (பா.ம.க) 20,223 வாக்குகள் பெற்று, தி.மு.க வேட்பாளர் வசந்தவேலுவைவிட 4164 வாக்குகள் அதிகமாக பெற்று அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு வெற்றி பெற்றுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இருப்பினும், இந்த முறை விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த்துக்கு 2-வது இடம்கூட கிடைக்காமல், 3-வது இடத்துக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/64381-vijayakanth-failed-in-ulundurpet.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அம்மா வித்தது ...தனி தமிழீழம் என்று தீர்மானம் போட்டது ..அவ்வளவு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லிவிட்டு கடந்த தேர்தலில் விடுதலை போராளிகள் என்று மாற்றியது ...? ஓ.... Whole Sale விற்பனை என்பதால் சிலரின் கண்ணில் படலை ..சீமான் சில்லறை வர்த்தகம் செய்வதால் 
கண்ணை குத்துது போல  

Link to comment
Share on other sites

Ci1AhiuU4AEoBxC.jpg

மூட்டை முடிச்சுகளுடன் ட்விட்டரை விட்டு வெளியேறும் உடன்பிறப்புகள் #கொஞ்ச நஞ்ச ஆட்டமாடா ஆடினீங்க...

Link to comment
Share on other sites

அ.தி.மு.க வெற்றிக்கான 6 காரணங்கள்

flo1.jpg

 

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது.  எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே...


கூட்டணி கணக்கு:

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை கடந்த பல தேர்தல்களில், கூட்டணிகளே முடிவு செய்து வந்தன. 1996 ல் திமுக ஆட்சி அமைத்தபோது தமிழ் மாநில காங்கிரஸுடனும், 2001ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது த.மா.கா, பாமக உள்ளிட்ட கட்சிகளுடனும் 2006 ல் திமுக ஆட்சியமைத்தபோது காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மெகா கூட்டணியுடனும்,  2011ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தன.

ஆனால் இந்தத் தேர்தலில்தான் கூட்டணி சரிவர அமையாமல் எல்லா கட்சிகளும் தனித்தனி தீவாக விலகியே நின்றன. தி.மு.க,  கடைசி நேரம்வரை தே.மு.தி.க தன் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடைசிவரை போக்கு காட்டிக்கொண்டே இருந்தாரே தவிர,  திமுகவுடன் சேரவில்லை. மக்கள் நலக்கூட்டணி உடன் கூட்டணி அமைத்தார். இதேபோல வடமாவட்டங்களில் செறிவான வாக்கு வங்கியைக்கொண்ட பா.ம.க, ஆரம்பம் முதலே தனித்துதான் போட்டி என்று சொல்லி தனியாக களம் கண்டது. இப்படி கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதால்,  ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறி,  அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்கூட சில வெற்றி தோல்விகள் அமைந்துள்ளதை பார்க்கும்போது,  கூட்டணி இல்லாதது எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை திமுக தற்போது உணர்ந்திருக்கும். தவிர சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும்,  அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்த அதிமுகவின் சாதுர்யமும் அக்கட்சியின் வெற்றிக்கு கூடுதல் காரணமாக அமைந்துவிட்டது.

சொன்னாங்க செஞ்சாங்க, செய்வாங்க...

‘மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி, விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், திருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு- மாடுகள் வழங்கப்படும், மருத்துவ காப்பீட்டுத் திட்டம்...’ - இப்படி 2011-ம் ஆண்டு  அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதுமட்டுமின்றி அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட ஏகப்பட்ட ‘அம்மா’ திட்டங்களை செயல்படுத்தியது.

இதேபோல இந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், ‘100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின்சார கட்டணம் வசூலிக்கப்படாது. விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இலவச இன்டர்நெட் இணைப்பு, பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50 சதவிகித மான்யம்...'  போன்றவை உட்பட ஏகப்பட்ட அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தார். ஏற்கெனவே 2011 தேர்தல் அறிவிப்புகளில் சொன்னவற்றில் பலவற்றை அதிமுக நிறைவேற்றியதால், இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையும் செய்வார் என மக்கள் நம்பி வாக்களித்துள்ளதும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

தி.மு.க மீதான பொது எதிர்ப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட சில ஊழல் வழக்குகளின் மூலம்,  'ஊழல் கட்சி' என்ற திமுக மீது படிந்த பிம்பம் இந்த தேர்தல் வரை அகலாமல் போனதும் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. தவிர,  'தி.மு.க என்பதே குடும்ப ஆட்சி' என்பது இன்னொரு குற்றச்சாட்டு.மேலும் கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு எதிராக,  மக்கள் மனதில் பெரிய எதிர்ப்பலையை திமுக ஏற்படுத்தவில்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.

ஜெயலலிதா மீதான அபிமானம்

தனி ஒரு மனுஷியாக துணிந்து நிற்கும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார். வரலாறு காணாத மழை வெள்ளம், ஊழல் புகார்கள், ஓரிடத்தில் குவிந்திருந்த அரசு அதிகாரம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் வியாபாரம்... என பல புகார்கள், பிரச்னைகள் ஜெயலலிதா முன் அணிவகுத்து நின்றன. இவை அனைத்தையும் தனி ஒருவராக களத்தில் நின்று எதிர்கொண்டார். இவை எல்லாவற்றையும் தாண்டி,  இந்தத் தேர்தலில் பெருவாரியான தமிழக மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து அக்கட்சியை வெற்றியடைய வைத்திருப்பது மக்கள், குறிப்பாக அடித்தட்டு மக்கள்  ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தையே காட்டுகிறது.

வாக்கு வங்கி

வாக்கு வங்கியில் திமுகவைவிட அதிமுகவே பெரிய கட்சி. அது அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. அந்த வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே தவிர இறங்கவில்லை. இதை தவிர்த்து, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களில் கணிசமானோர் அதிமுகவுக்கே அதிகம் வாக்களித்து வந்திருகின்றனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. அடுத்தபடியாக மக்கள் அறிந்த இரட்டை இலை சின்னம். சீனியர் வாக்காளர்கள் மனதில் எம்ஜிஆர் அதனை பதியவைத்து சென்றதே காரணம். தவிர, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு இருந்த வாக்குவங்கியை விட அதில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்மாநில காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தி.மு.க,  தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எடுபடாத மதுவிலக்கு

தமிழகத்தில் டாஸ்மாக் மூலமான வருமானம் பெருகப் பெருக, மதுவால் ஏற்படும் குற்றங்களும் அதிகளவில் பெருகின. மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரி பல போராட்டங்களும் வலுவடைந்தன. சசிபெருமாளின் மரணம், மதுவிலக்குப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனது. சசிபெருமாளின் மரணத்தையும் மதுவிலக்கையும் முன்வைத்து,  மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் பலர்,  மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் இறங்கினர். 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால்,  மதுவிலக்கு கொண்டு வரப்படும்' என்றார் கருணாநிதி. மதுவிலக்கை வலியுறுத்தாத ஒரே கட்சியாக அ.தி.மு.க மட்டுமே இருந்தது.

தேர்தல் நெருங்கும்போதுதான், ' படிப்படியாக மதுவிலக்குக் கொண்டுவரப்படும்' என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இப்படியாக இந்தத் தேர்தலில் மதுவிலக்கு ஒரு முக்கியப் பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள்,  மதுவிலக்குப் பிரச்னை முக்கியப்பங்கு வகிக்கவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மதுவிலக்கை கொண்டுவருவதாக அறிவித்தால், பெண்களின் வாக்குகள் மொத்தத்தையும் அள்ளிவிடலாம் என கட்சிகளும் கணக்குப் போட்டன. ஆனால், அத்தனை கணக்குகளும் இப்போது பொய்த்து இருக்கின்றன.

ஒரு ஆண்,  தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடிக்கு செலவிட்டு, குடும்பத்தை தவிக்க விடும் நிலை பலகாலமாக நமது மனதில் பதிந்து கிடக்கிறது. ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரி இருக்கிறது. பெண்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்பட்ட சில நலத்திட்ட உதவிகள், கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக மாற்றி இருக்கிறது. இதனால், குடிக்காக செலவழிக்கும் கணவர்களைப் பற்றிய கவலைகளில், பொருளாதாரக் காரணங்களைப் பெண்கள் கண்டுகொள்ளவில்லை. உடல்நலன் சார்ந்த கவலைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றன. இந்தக் காரணத்தால்தான் பெண்களின் வாக்குகள் மதுவிலக்குக்கு ஆதரவான கட்சிகளுக்கு கிடைக்காமல் போய் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

http://www.vikatan.com/news/politics/64379-six-reasons-for-admks-victory.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

அடடா...  எங்கடா காணேல என்று பார்த்தன்

அதென்ன கடந்து வந்த சரிநிகர் பாதை?!. இப்பவும் அதே சரிநிகர் கற்றுத் தந்த பாதையில் தான் என் கருத்துகள் இருக்கின்றன.  அன்று எதையெல்லாம் சரிநிகர் நடக்கும் என்று நினைத்து விமர்சனம் செய்ததோ அதை தான் காலம் இறுதியாக காட்டிச் சென்றது.

இனி என்ன... சீமானின் கேவலமான படு தோல்வியை ஏற்க பக்குவமில்லாமல் சம்பந்தமில்லாமல் உளற வேண்டியதுதான்.

நேரம் எனக்கு பொன்னானது பாஸ்.. நீங்க நடத்துங்கள் கச்சேரியை

 

31 minutes ago, நிழலி said:

அடடா...  எங்கடா காணேல என்று பார்த்தன்

அதென்ன கடந்து வந்த சரிநிகர் பாதை?!. இப்பவும் அதே சரிநிகர் கற்றுத் தந்த பாதையில் தான் என் கருத்துகள் இருக்கின்றன.  அன்று எதையெல்லாம் சரிநிகர் நடக்கும் என்று நினைத்து விமர்சனம் செய்ததோ அதை தான் காலம் இறுதியாக காட்டிச் சென்றது.

இனி என்ன... சீமானின் கேவலமான படு தோல்வியை ஏற்க பக்குவமில்லாமல் சம்பந்தமில்லாமல் உளற வேண்டியதுதான்.

நேரம் எனக்கு பொன்னானது பாஸ்.. நீங்க நடத்துங்கள் கச்சேரியை...............................................


நிழலி சார் அவர்களே , அண்ணன் சீமானை விமர்சிக்க உங்களுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை , அண்ணன் சீமான் ஒரு போதும் தேசிய தலைவரை அசிங்கப் படுத்தியது இல்லை, ஆதாரம் இருந்தால் காட்டுங்கோ பாப்போம் , ஊடக பலம் பண பலம் ஒன்றும் இல்லாமல் இன்று 4,56,130 வாக்குகள் 1.1 % நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது , உங்களுக்கு தனிப் பட்ட முறையில் சீமானை பிடிக்காமல் இருக்கலாம் ,ஆனால்  அவரின் தியாகத்துக்கு நீங்க அவருக்கு பக்கத்தில் நிக்கவே தகுதி இல்லாதவர் ,

 

Link to comment
Share on other sites

அதிமுகவின் வெற்றிக்கு நமீதாவின் 'நச்' பாயின்ட்!

nami.jpg

டந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை நமீதா, அக்கட்சியின் வெற்றிக்கான காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நமீதா, அதிமுகவின் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.

 மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும்  வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.
      
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.

இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில்  அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!." எனக் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/politics/64389-namitha-tells-the-reason-election-victory-admk.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சார் அவர்களே , அண்ணன் சீமானை விமர்சிக்க உங்களுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை , அண்ணன் சீமான் ஒரு போதும் தேசிய தலைவரை அசிங்கப் படுத்தியது இல்லை, ஆதாரம் இருந்தால் காட்டுங்கோ பாப்போம் , ஊடக பலம் பண பலம் ஒன்றும் இல்லாமல் இன்று 4,56,130 வாக்குகள் 1.1 % நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது , உங்களுக்கு தனிப் பட்ட முறையில் சீமானை பிடிக்காமல் இருக்கலாம் ,ஆனால்  அவரின் தியாகத்துக்கு நீங்க அவருக்கு பக்கத்தில் நிக்கவே தகுதி இல்லாதவர் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

அதிமுகவின் வெற்றிக்கு நமீதாவின் 'நச்' பாயின்ட்!

nami.jpg

டந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை நமீதா, அக்கட்சியின் வெற்றிக்கான காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நமீதா, அதிமுகவின் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.

 மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும்  வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.
      
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.

இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில்  அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!." எனக் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/politics/64389-namitha-tells-the-reason-election-victory-admk.art

வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ....அடுத்த அம்மா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ வென்று,கருணாநிதி தோத்தது ஒரு மற்றரே இல்லை...சீமான் தான் கேட்ட தொகுதியில் தோத்து 5ம் இடம் வந்தாரே அது தான் மேட்டர்.அவருடைய தொண்டர்கள்,அவர்களது குடும்பம் கூட சீமானுக்கு வோட்டுப் போடவில்லை போல இருக்கு...நேற்று வரைக்கும் ஒரு சோகமான நாள். இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்...இவ எங்கட மக்களுக்காக ஒன்றும் செய்ய மாட்டார் என்றாலும், அவருடைய மக்களுக்காவது எதாவது செய்யட்டும்...பாவம் அந்த சுய நலமிக்க தமிழ்நாட்டு மக்கள்

பி;கு;இசையை நினைக்கத் தான் கவலையாக இருக்குது.இனிமேலாவாவது யதார்த்தத்தை புரிந்து கொண்டு நடப்பார் என்று நினைக்கிறேன். இனி மேல் யாழின் பல் வேறு திரிகளில் இசையின் ஆக்கங்களை எதிர் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.