Jump to content

அம்பாறை மத்தியமுகாம் கிராமத்தில் குண்டுதாக்குதல் 5பேர் காயம்


Recommended Posts

அம்பாறை மத்தியமுகாம் கிராமத்தில் குண்டுதாக்குதல் 5பேர் காயம்

எழுதியவர் R.Thurai

Sunday, 07 January 2007

அம்பாறை சென்ரகாம் நகரில் இன்று 10.30மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. விவசாய பொருள் விற்பனை நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரு சிங்களவர் இரு முஸ்லீம் ஒரு தமிழர் என மொத்தம் 5பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் கல்முனை அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை நகரிலிருந்து மேற்காக 20கிலோ மீற்றருக்கு அப்பால் இக்கிராமம் அமைந்துள்ளது. நூறுவீதம் தமிழர்களை கொண்ட இப்பகுதி 1981,1983,1990 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள காடையர்களாலும் ஸ்ரீலங்கா படைகளாலும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தமிழர்கள் பலர் இக்கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

தமிழர்களின் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்துள்ளதுடன் சிங்கள குடியேற்றங்களும் நடைபெற்றுவருகிறது.

விசேட அதிரடிப்படையினரே இங்கு நிலைகொண்டுள்ளனர். இவர்கள் தமிழர்களை அங்கிருந்து முற்றாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை மங்களகம ஊர்க்காவல் அரண்மீது இன்று காலை 7.30மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காவலரணில் இருந்த ஊர்க்காவல்படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://tamilnews24.com//index.php?option=c...30&Itemid=2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.