Jump to content

சமந்தா புட்டு - செய்முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது.

புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.)

கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும்.

அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும்.

பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும்.

பின் நீத்துப் பெட்டிக்குள்  கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும்.

பின்.. தண்ணீர் கொதிக்கும்.. பானையில் வைத்து.. மூடி.. சமந்தா புட்டை.. நீராவியில் அவித்து எடுக்கவும்...

சமந்தா புட்டு ரெடி... பட் இன்னும் அது முழுமையான சமந்தா புட்டு ஆகல்ல. 

+

சமந்தா புட்டை எப்படிச் சாப்பிடுவது என்று நீங்கள் இப்ப நினைப்பீங்கன்னு தெரியும்..

உங்களுக்கு வாழைப்பழத்தை உரிச்சு தந்தால் தான் சாப்பிடுவீங்க என்பது நமக்கும் நல்லாத் தெரியும் என்பதால்...

கடையில் கனிந்த.. புள்ளி விழாத.. வாழைப்பழத்தை  வாங்கி.. உரிச்சு.. புட்டில் சேர்த்து பிசையவும்...

பிசையும் போது கவனிக்க வேண்டியது...........

இதில முக்கியமா சமந்தா புட்டு விசேசம் என்ன என்றால்.. வாழைப்பழம் மட்டும் போட்டு பிசையக் கூடாது.. + தேவையான அளவு சீனி (சீனி சாப்பிட தடை உள்ளவை.. பனங்கட்டி.. அல்லது சக்கரை சாப்பிடலாம்.. அல்லது சுவீட்னர் அட் பண்ணலாம்.).. அட் பண்ணி பிசைந்து உருண்டைகளாக்கி உண்ணவும்.

இதுவே சமந்தா புட்டு ஆகும். tw_blush:

Telugu-Actress-Samantha-Photo-Gallery-57  

பொறுப்புத் துறப்பு: (இதில டபிள்.. ரிபிள்.. மீனிங்ஸ் எதுவும் இல்லை. நேரிடையாக சமையல் குறிப்பு தான் உள்ளது. டபிள்ஸ்.. ரிபிள்ஸ் போறதற்கு நாம் பொறுப்பல்ல. நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடலாமா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால்.. சமந்தா புட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும். இல்ல.. இன்சுலினை ஏற்றிட்டு சாப்பிடவும்... எதுக்கும் வைத்திய ஆலோசனை செய்து சாப்பிடவும். எந்த பின்.. பக்க.. விளைவுகளுக்கும் நாம் பொறுப்பல்ல.)tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயன் தாரா இடியப்பம்.

செய்முறை...

முதலில் வறுத்த சிவப்பு அரிசி மா.. மற்றும் அவித்த கோதுமை மா வாங்குங்கள் அல்லது தாயார் செய்து எடுங்கள்.

பின்.. சிவப்பு அரிசி மாவோடு சுடுதண்ணி.. உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இடியப்ப பதத்திற்கு பிசையவும்.

அதன் பின் கோதுமை மாவிற்கும் சுடுதண்ணி உப்புச் சேர்த்து இடியப்ப பதத்திற்கு பிசையவும்.

அப்புறம்.. இடியப்ப உரலை நன்கு கழுவி சுத்தப்படித்தி எடுக்கவும். சின்ன கண் இடியப்ப உரல் வேண்டாம். பெரிய கண் அவசியம். இடியப்ப மிசின் என்றாலும் ஓகே.

அதன் பின் மாவை திரட்டி எடுக்கவும். ஒரு திரட்டி சிவப்பு மாவில் இருந்தும்... இன்னொரு திரட்டி வெள்ளை மாவில் இருந்தும் நீட்டமாக.. திரட்டி பக்கம் பக்கமாக இருக்க இடியப்ப உரலில் வைச்சு.. கழுவிச் சுத்தம் செய்த இடியப்ப தட்டுக்கள் மீது.. இடியப்ப உரலால் இடிச்சுப் புளியவும்.

இப்போ....  இடியப்பத்தட்டில்... சிவப்பு வெள்ளை கலந்த இடியப்பம் நயந்தாராவின் வாழ்க்கை போல சிக்கலாக வந்திருக்கும்.

அவற்றை.. ஏலவே அடுப்பில்.. தண்ணி விட்டு கொதிக்க வைச்சிருக்கும் இட்லி சட்டியில் வைச்சு.. மூடி.. நீராவியில்.. அவிக்கவும்.

10- 15 நிமிசம் அவிச்ச பின் இறக்கி ஆறவிட்டு..

சம்பலோடு சாப்பிடவும்.

சம்பல் தயாரிக்கும் முறைக்கு யுரிப்பை நாடவும். அரிவரிப் பிள்ளைக்கு சொல்லிக்கிற கணக்கா.. எல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பாங்கன்னு எதிர்பார்க்கக் கூடாது.

இவ்வளவும் தான் நயன் தாரா இடியப்பம். tw_blush:

nayantara1.jpg

குறிப்பு: கனடாவில் இருந்து 10 டாலருக்கு 100 இடியப்பம் விற்பவர்களும் லண்டனில் 5 பவுன்னு 25 இடியப்பமும் 5 புட்டும் சொதி சம்பல் விற்பவர்களும்.. இந்த புட்டு.. இடியப்பங்களை கொப்பி அடிப்பது சட்டவிரோதமாகும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குழல் புட்டுகள் நமக்கு சரிவராது வண்டு கட்டி அவித்த புட்டுகள் நல்ல ருசி இந்த குழல் புட்டு சும்மா பார்க்க நல்லாத்தான் இருக்கும் ஆனால் ருசி இல்லை ??

நயன்தாரா இடியப்பத்திற்கு அந்த கால மரத்தால ஆன உரல்தான் நல்லா இருக்கும் போல்  எனக்கு தென்படுகிறது ?

உலோக உரல் எப்படி யெல்லாம் புளியுது என்று தெரியவில்லை 

ஆனாலும்  இப்ப கீர்த்தி சுரேஷ்  பரோட்டாவை அடிச்சுக்க இயலாது பாருங்க  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

 கீர்த்தி சுரேஷ்  பரோட்டாவை  ??

ஆகா.. இது நல்லா இருக்கே. இதை எப்படிச் செய்வது.. ஒரு குறிப்புப் போடலாமில்ல.. இங்க. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச  குரக்கன் மா கலந்தால்..... சமந்தா புட்டு,  நால்லாயிருக்குமா?tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஆகா.. இது நல்லா இருக்கே. இதை எப்படிச் செய்வது.. ஒரு குறிப்புப் போடலாமில்ல.. இங்க. tw_blush:

ஒவ்வொரு திரைப்படத்தின் சேலை வரும் நடிகை பரோட்டா வரப்படாதா என்ன 

குசி( ஷ் )ப்பு இட்லி என்மாதிரி நெடுக்கு இப்ப பழசா போட்டுது போல :unsure:

ஆனால் பாருங்க உங்கள் புட்டுக்கு ஒரு வாளி சொதி தேவைப்படுகிறதப்பா இதுக்கு தேங்காய்க்கு நான் எங்க போறது ??:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க இந்த புட்டுக்கும் இடியப்பத்திற்கும் ஒருத்தனை யும் காணவில்லை 

வாங்களண்டா ?☺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கொஞ்ச  குரக்கன் மா கலந்தால்..... சமந்தா புட்டு,  நால்லாயிருக்குமா?tw_blush:

கலர் கொஞ்சம் பிரச்சனை அடிக்கும். ஆனால் உடம்புக்கு நல்லது என்று சொல்லக் கேள்வி. குரக்கன் புட்டு சாப்பிடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறம்.. குரக்கன் மாவில்.. புட்டவிப்பார்கள் என்று. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

ஒவ்வொரு திரைப்படத்தின் சேலை வரும் நடிகை பரோட்டா வரப்படாதா என்ன 

குசி( ஷ் )ப்பு இட்லி என்மாதிரி நெடுக்கு இப்ப பழசா போட்டுது போல :unsure:

ஆனால் பாருங்க உங்கள் புட்டுக்கு ஒரு வாளி சொதி தேவைப்படுகிறதப்பா இதுக்கு தேங்காய்க்கு நான் எங்க போறது ??:rolleyes:

இப்ப ஹன்சிகா... இட்லி தான் இருக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கு இந்த வயதில புட்டுமாவைத்தான் பிசையக் கொடுத்துவைத்திருக்கின்றது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

நெடுக்ஸுக்கு இந்த வயதில புட்டுமாவைத்தான் பிசையக் கொடுத்துவைத்திருக்கின்றது. tw_blush:

அப்போ அது ரொட்டிக்கு தான் சரிவரும் போல??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சமந்தா புட்டு,  நல்லாத்தான் இருக்கு. நீங்கள் அவிக்கலாம்..., நாங்கள் அவித்தால் அடுத்தநாளே மனிசி அஜித் போண்டா போடத் தொடங்கிடும்....!  tw_blush:

கிண்ணத்திலோ , கன்னத்திலோ யாருக்குத் தெரியும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

அப்போ அது ரொட்டிக்கு தான் சரிவரும் போல??

ரொட்டி வரட்டியாக வராத வரையிலும் ஒகே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ரொட்டி வரட்டியாக வராத வரையிலும் ஒகே!

ஆக அடி பத்தியதாவது ஒன்று கிடைக்கும் என்ற திருப்தி கிடைக்கட்டுமே அவருக்கு 

நான் வரட்டியை சொன்னன்??கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ அண்ணன்களா.. தம்பிகளா..  எங்களுக்கு எது எதுக்கு எப்படி பிசையனுன்னு நல்லாவே தெரியும். முடிஞ்சா நீங்களும் பிசைஞ்சு பாருங்க. புட்டா வந்தா.. புட்டு.. இடியப்பமா வந்தா இடியப்பம்.. ரொட்டியா வந்தா ரொட்டி.. ஓகே. அதை விட்டிட்டு... வந்திட்டாங்கய்யா.. கலாய்க்கினமாமில்ல கலாய்ப்பு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரோஜாதேவி பழஞ்சோறு..

hqdefault.jpg

கோடை வெயிலுக்கு இதமான எளிய உணவு இது. செய்வது சுலபம். ஒரு முறை உண்டால் நாள் முழுக்க சூட்டைத் தணிக்கும் அருமையான அமிர்தம் எனலாம்.

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் – தேவைக்கேற்ப
அடை ஊறுகாய் – பாதி
புளிப்பில்லாத இளந்தயிர் – 1 கப்
தேங்காய்த் துருவல் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
சிறு வெங்காயம் – 4
சுட்ட வத்தல் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
இரவில் மீதமுள்ள சோற்றில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் அத்துடன் தயிர் சேர்த்து, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சுட்ட வத்தல், தேங்காய் துருவலை சேர்த்து உப்பிட்டு கொட்டை எடுத்த அடை ஊறுகாயை இட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

உண்பதற்கு ஏதுவாக பாத்திரத்தில் மாற்றி அதன் தண்ணீரோடு சேர்த்து சுவைத்தால் பசியும், தாகமும் தணியும். இது, அலாதியான ருசியைத் தரும் அற்புதமான உணவாகும். கோடை காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க அருமருந்தாக செயல்படும் காயல் பழஞ்சோறு காலை உணவாக பயன்படுத்துதல் சிறந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரெல்லாம் பாறின் யூத்தா இருக்கு..ஆனா உள்ளுடன் எல்லாம் நம்ம உள்ளூர் கிழவியாயெல்லோ இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ganthimathi-s-ramarao-lorry-driver-rajak

காந்திமதி  கத்தரிகாய்  குழம்பு.

தேவையான பொருட்கள்.....
முத்தின கத்தரிகாய் - 3
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
தக்காளி - 2
புளி - நெல்லிகாய் அளவு
மிளகாய் தூள் - 1தே.க
தனியாதூள் - 1/2 தே.க

அரைக்க...
தேங்காய் துருவல் - 2 தே.க
முந்திரி பருப்பு - 2 தே.க
சோம்பு - 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
பூண்டு - 1 பல்

தாளிக்க....
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
சோம்பு - 1/4 தே.க
கறிவேப்பிலை - 2
 
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பூண்டு தட்டி வைக்கவும்.
கத்தரிக்காய் காம்பு வெட்டி நல்ல நீள துண்டுகளாக்கவும்.
புளியை நல்ல கெட்டியாக கரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை
சேர்த்து தாளித்து பின் வெங்காயம்,பூண்டு சேர்த்து
வதக்கவும். கொஞ்சம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து
வதக்கவும். தக்காளி வதங்கிய பின் கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.
தனியாதுள், மிளகாய்தூள் ,புளி கரைசல் சேர்க்கவும். நன்றாக பச்சை வாசனை
போக வதங்கியம் பின் அரைத்துள்ள மசாலாவையும்
சேர்த்து கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்தவுடன்..... ஒரு கோப்பையில்.... சமந்தா புட்டு,  நயன்தாரா இடியப்பம், சரோஜாதேவி பழஞ்சோறு... 
போன்ற ஏதாவது ஒன்றுடன் கலந்து சாப்பிடவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு.. இடியப்பம்.. இட்லி எல்லாம் நீராவி காலத்துச் சாப்பாடுகள். இன்னும் நீராவிலான் அவிக்கிறாய்ங்களாக்கும். நம்ம அப்பத்தாட அப்பத்தா காலக்  கண்டுபிடிப்பு.. இவ்வளவு காலமும் நீடிக்குது. இன்னும் நீடிக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kajal-agarwal-162-h.jpg

 

காஜல் அகர்வால் மரவள்ளி கிழங்கு வடை :- 

 

organic_tapioca_starch1.jpg
கடலைபருப்பு - 1.5 கப்
மரவள்ளி கிழங்கு சிறியது
காய்ந்த மிளகாய் -3
சோம்பு - சிறிது
லவங்கம் - 2
உப்பு -தேவைக்கேற்ப
எண்ணெய் -தேவைக்கேற்ப
கருவேப்பிலை
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.

இந்த வடைக்கு.... ஓட்டை போட்டு சுடுவதா, ஓட்டை போடாமல் சுட வேணுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளாளுக்கு கிழம்பினா நாங்களும் சும்மா இருக்கேலா..

இப்ப நான் சொல்ல போறது.

மம்முட்டி ப்ளேன்டீ...

தேவையான பொருட்கள்.

தேயிலை-தேவையான அளவு

சீனி-தேவையான அளவு

கேத்தில்

(கரன்ட் அல்லது விறகு-கேத்திலுக்கு ஏற்ப)

தண்ணி.

கப் 2

செய்முறை..

 

கேத்திலில் தண்ணியை விட்டு அடுப்பில் ஆவிவர நன் கு கொதிக்கவைக்கவும்.

கொதிச்ச தண்ணிய கப்பில் விட்டு தேயிலை சீனி போடவும்.

நன்றாக நுரை தள்ள இழுத்து ஆத்தவும்.

 

சுவையான மம்முட்டி பிளேன்டீ ரெடி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

"விஜயசிறீ" நீராகாரக் கஞ்சி


தேவையானவை:

பழைய சாதம் சிறிதளவு, மோர் 1 கப், சின்ன வெங்காயம் 4 அல்லது பெரிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பழைய சாதத்தை உப்பு போட்டு கரைத்துக்கொள்ளுங்கள். அதோடு மோர் சேர்த்து அருந்தினால், உடம்பைக் குளிரவைக்கும் அற்புதமான கஞ்சி இது. விருப்பமுள்ளவர்கள் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மேலே தூவிக் குடிக்கலாம். அம்மை நோய் கண்டவர்களுக்கு உகந்த கஞ்சி இது. மண் பாத்திரத்தில் பழைய சாதத்தை வைத்திருந்து அருந்தினால் இன்னும் குளிர்ச்சி. செலவேயில்லாத எளிய கஞ்சி. ஆனால், கிடைக்கும் பலனோ மிகவும் அதிகம்.

சென்னையில் அன்றாடங்காய்ச்சிகளும், தொழிலாளர்களும் உணவுக் கூடையை ஏந்திவரும் வஞ்சியை காண ஏங்கி, "வரதப்பா.. வரதப்பா.. கஞ்சி வருதப்பா..!" என ஆடிப்பாடி விரும்பி உண்ணும் உணவு இது..! tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா ஆளாளுக்கு ஒன்று கொண்டு வாறியளே 

நமிதாக்கு என்ன சமையலை புகுத்தலாம் நானும் யோசித்து கொண்டு இருக்கிறன்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, முனிவர் ஜீ said:

அடப்பாவிகளா ஆளாளுக்கு ஒன்று கொண்டு வாறியளே 

நமிதாக்கு என்ன சமையலை புகுத்தலாம் நானும் யோசித்து கொண்டு இருக்கிறன்??

நமீதா அப்பளம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.