Jump to content

சமந்தா புட்டு - செய்முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது.

புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.)

கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும்.

அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும்.

பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும்.

பின் நீத்துப் பெட்டிக்குள்  கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும்.

பின்.. தண்ணீர் கொதிக்கும்.. பானையில் வைத்து.. மூடி.. சமந்தா புட்டை.. நீராவியில் அவித்து எடுக்கவும்...

சமந்தா புட்டு ரெடி... பட் இன்னும் அது முழுமையான சமந்தா புட்டு ஆகல்ல. 

+

சமந்தா புட்டை எப்படிச் சாப்பிடுவது என்று நீங்கள் இப்ப நினைப்பீங்கன்னு தெரியும்..

உங்களுக்கு வாழைப்பழத்தை உரிச்சு தந்தால் தான் சாப்பிடுவீங்க என்பது நமக்கும் நல்லாத் தெரியும் என்பதால்...

கடையில் கனிந்த.. புள்ளி விழாத.. வாழைப்பழத்தை  வாங்கி.. உரிச்சு.. புட்டில் சேர்த்து பிசையவும்...

பிசையும் போது கவனிக்க வேண்டியது...........

இதில முக்கியமா சமந்தா புட்டு விசேசம் என்ன என்றால்.. வாழைப்பழம் மட்டும் போட்டு பிசையக் கூடாது.. + தேவையான அளவு சீனி (சீனி சாப்பிட தடை உள்ளவை.. பனங்கட்டி.. அல்லது சக்கரை சாப்பிடலாம்.. அல்லது சுவீட்னர் அட் பண்ணலாம்.).. அட் பண்ணி பிசைந்து உருண்டைகளாக்கி உண்ணவும்.

இதுவே சமந்தா புட்டு ஆகும். tw_blush:

Telugu-Actress-Samantha-Photo-Gallery-57  

பொறுப்புத் துறப்பு: (இதில டபிள்.. ரிபிள்.. மீனிங்ஸ் எதுவும் இல்லை. நேரிடையாக சமையல் குறிப்பு தான் உள்ளது. டபிள்ஸ்.. ரிபிள்ஸ் போறதற்கு நாம் பொறுப்பல்ல. நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடலாமா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால்.. சமந்தா புட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும். இல்ல.. இன்சுலினை ஏற்றிட்டு சாப்பிடவும்... எதுக்கும் வைத்திய ஆலோசனை செய்து சாப்பிடவும். எந்த பின்.. பக்க.. விளைவுகளுக்கும் நாம் பொறுப்பல்ல.)tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயன் தாரா இடியப்பம்.

செய்முறை...

முதலில் வறுத்த சிவப்பு அரிசி மா.. மற்றும் அவித்த கோதுமை மா வாங்குங்கள் அல்லது தாயார் செய்து எடுங்கள்.

பின்.. சிவப்பு அரிசி மாவோடு சுடுதண்ணி.. உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இடியப்ப பதத்திற்கு பிசையவும்.

அதன் பின் கோதுமை மாவிற்கும் சுடுதண்ணி உப்புச் சேர்த்து இடியப்ப பதத்திற்கு பிசையவும்.

அப்புறம்.. இடியப்ப உரலை நன்கு கழுவி சுத்தப்படித்தி எடுக்கவும். சின்ன கண் இடியப்ப உரல் வேண்டாம். பெரிய கண் அவசியம். இடியப்ப மிசின் என்றாலும் ஓகே.

அதன் பின் மாவை திரட்டி எடுக்கவும். ஒரு திரட்டி சிவப்பு மாவில் இருந்தும்... இன்னொரு திரட்டி வெள்ளை மாவில் இருந்தும் நீட்டமாக.. திரட்டி பக்கம் பக்கமாக இருக்க இடியப்ப உரலில் வைச்சு.. கழுவிச் சுத்தம் செய்த இடியப்ப தட்டுக்கள் மீது.. இடியப்ப உரலால் இடிச்சுப் புளியவும்.

இப்போ....  இடியப்பத்தட்டில்... சிவப்பு வெள்ளை கலந்த இடியப்பம் நயந்தாராவின் வாழ்க்கை போல சிக்கலாக வந்திருக்கும்.

அவற்றை.. ஏலவே அடுப்பில்.. தண்ணி விட்டு கொதிக்க வைச்சிருக்கும் இட்லி சட்டியில் வைச்சு.. மூடி.. நீராவியில்.. அவிக்கவும்.

10- 15 நிமிசம் அவிச்ச பின் இறக்கி ஆறவிட்டு..

சம்பலோடு சாப்பிடவும்.

சம்பல் தயாரிக்கும் முறைக்கு யுரிப்பை நாடவும். அரிவரிப் பிள்ளைக்கு சொல்லிக்கிற கணக்கா.. எல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பாங்கன்னு எதிர்பார்க்கக் கூடாது.

இவ்வளவும் தான் நயன் தாரா இடியப்பம். tw_blush:

nayantara1.jpg

குறிப்பு: கனடாவில் இருந்து 10 டாலருக்கு 100 இடியப்பம் விற்பவர்களும் லண்டனில் 5 பவுன்னு 25 இடியப்பமும் 5 புட்டும் சொதி சம்பல் விற்பவர்களும்.. இந்த புட்டு.. இடியப்பங்களை கொப்பி அடிப்பது சட்டவிரோதமாகும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குழல் புட்டுகள் நமக்கு சரிவராது வண்டு கட்டி அவித்த புட்டுகள் நல்ல ருசி இந்த குழல் புட்டு சும்மா பார்க்க நல்லாத்தான் இருக்கும் ஆனால் ருசி இல்லை ??

நயன்தாரா இடியப்பத்திற்கு அந்த கால மரத்தால ஆன உரல்தான் நல்லா இருக்கும் போல்  எனக்கு தென்படுகிறது ?

உலோக உரல் எப்படி யெல்லாம் புளியுது என்று தெரியவில்லை 

ஆனாலும்  இப்ப கீர்த்தி சுரேஷ்  பரோட்டாவை அடிச்சுக்க இயலாது பாருங்க  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

 கீர்த்தி சுரேஷ்  பரோட்டாவை  ??

ஆகா.. இது நல்லா இருக்கே. இதை எப்படிச் செய்வது.. ஒரு குறிப்புப் போடலாமில்ல.. இங்க. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச  குரக்கன் மா கலந்தால்..... சமந்தா புட்டு,  நால்லாயிருக்குமா?tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஆகா.. இது நல்லா இருக்கே. இதை எப்படிச் செய்வது.. ஒரு குறிப்புப் போடலாமில்ல.. இங்க. tw_blush:

ஒவ்வொரு திரைப்படத்தின் சேலை வரும் நடிகை பரோட்டா வரப்படாதா என்ன 

குசி( ஷ் )ப்பு இட்லி என்மாதிரி நெடுக்கு இப்ப பழசா போட்டுது போல :unsure:

ஆனால் பாருங்க உங்கள் புட்டுக்கு ஒரு வாளி சொதி தேவைப்படுகிறதப்பா இதுக்கு தேங்காய்க்கு நான் எங்க போறது ??:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க இந்த புட்டுக்கும் இடியப்பத்திற்கும் ஒருத்தனை யும் காணவில்லை 

வாங்களண்டா ?☺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கொஞ்ச  குரக்கன் மா கலந்தால்..... சமந்தா புட்டு,  நால்லாயிருக்குமா?tw_blush:

கலர் கொஞ்சம் பிரச்சனை அடிக்கும். ஆனால் உடம்புக்கு நல்லது என்று சொல்லக் கேள்வி. குரக்கன் புட்டு சாப்பிடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறம்.. குரக்கன் மாவில்.. புட்டவிப்பார்கள் என்று. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

ஒவ்வொரு திரைப்படத்தின் சேலை வரும் நடிகை பரோட்டா வரப்படாதா என்ன 

குசி( ஷ் )ப்பு இட்லி என்மாதிரி நெடுக்கு இப்ப பழசா போட்டுது போல :unsure:

ஆனால் பாருங்க உங்கள் புட்டுக்கு ஒரு வாளி சொதி தேவைப்படுகிறதப்பா இதுக்கு தேங்காய்க்கு நான் எங்க போறது ??:rolleyes:

இப்ப ஹன்சிகா... இட்லி தான் இருக்கு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கு இந்த வயதில புட்டுமாவைத்தான் பிசையக் கொடுத்துவைத்திருக்கின்றது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

நெடுக்ஸுக்கு இந்த வயதில புட்டுமாவைத்தான் பிசையக் கொடுத்துவைத்திருக்கின்றது. tw_blush:

அப்போ அது ரொட்டிக்கு தான் சரிவரும் போல??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சமந்தா புட்டு,  நல்லாத்தான் இருக்கு. நீங்கள் அவிக்கலாம்..., நாங்கள் அவித்தால் அடுத்தநாளே மனிசி அஜித் போண்டா போடத் தொடங்கிடும்....!  tw_blush:

கிண்ணத்திலோ , கன்னத்திலோ யாருக்குத் தெரியும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

அப்போ அது ரொட்டிக்கு தான் சரிவரும் போல??

ரொட்டி வரட்டியாக வராத வரையிலும் ஒகே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ரொட்டி வரட்டியாக வராத வரையிலும் ஒகே!

ஆக அடி பத்தியதாவது ஒன்று கிடைக்கும் என்ற திருப்தி கிடைக்கட்டுமே அவருக்கு 

நான் வரட்டியை சொன்னன்??கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ அண்ணன்களா.. தம்பிகளா..  எங்களுக்கு எது எதுக்கு எப்படி பிசையனுன்னு நல்லாவே தெரியும். முடிஞ்சா நீங்களும் பிசைஞ்சு பாருங்க. புட்டா வந்தா.. புட்டு.. இடியப்பமா வந்தா இடியப்பம்.. ரொட்டியா வந்தா ரொட்டி.. ஓகே. அதை விட்டிட்டு... வந்திட்டாங்கய்யா.. கலாய்க்கினமாமில்ல கலாய்ப்பு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரோஜாதேவி பழஞ்சோறு..

hqdefault.jpg

கோடை வெயிலுக்கு இதமான எளிய உணவு இது. செய்வது சுலபம். ஒரு முறை உண்டால் நாள் முழுக்க சூட்டைத் தணிக்கும் அருமையான அமிர்தம் எனலாம்.

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் – தேவைக்கேற்ப
அடை ஊறுகாய் – பாதி
புளிப்பில்லாத இளந்தயிர் – 1 கப்
தேங்காய்த் துருவல் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
சிறு வெங்காயம் – 4
சுட்ட வத்தல் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
இரவில் மீதமுள்ள சோற்றில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் அத்துடன் தயிர் சேர்த்து, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சுட்ட வத்தல், தேங்காய் துருவலை சேர்த்து உப்பிட்டு கொட்டை எடுத்த அடை ஊறுகாயை இட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

உண்பதற்கு ஏதுவாக பாத்திரத்தில் மாற்றி அதன் தண்ணீரோடு சேர்த்து சுவைத்தால் பசியும், தாகமும் தணியும். இது, அலாதியான ருசியைத் தரும் அற்புதமான உணவாகும். கோடை காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க அருமருந்தாக செயல்படும் காயல் பழஞ்சோறு காலை உணவாக பயன்படுத்துதல் சிறந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரெல்லாம் பாறின் யூத்தா இருக்கு..ஆனா உள்ளுடன் எல்லாம் நம்ம உள்ளூர் கிழவியாயெல்லோ இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ganthimathi-s-ramarao-lorry-driver-rajak

காந்திமதி  கத்தரிகாய்  குழம்பு.

தேவையான பொருட்கள்.....
முத்தின கத்தரிகாய் - 3
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
தக்காளி - 2
புளி - நெல்லிகாய் அளவு
மிளகாய் தூள் - 1தே.க
தனியாதூள் - 1/2 தே.க

அரைக்க...
தேங்காய் துருவல் - 2 தே.க
முந்திரி பருப்பு - 2 தே.க
சோம்பு - 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
பூண்டு - 1 பல்

தாளிக்க....
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
சோம்பு - 1/4 தே.க
கறிவேப்பிலை - 2
 
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பூண்டு தட்டி வைக்கவும்.
கத்தரிக்காய் காம்பு வெட்டி நல்ல நீள துண்டுகளாக்கவும்.
புளியை நல்ல கெட்டியாக கரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை
சேர்த்து தாளித்து பின் வெங்காயம்,பூண்டு சேர்த்து
வதக்கவும். கொஞ்சம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து
வதக்கவும். தக்காளி வதங்கிய பின் கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.
தனியாதுள், மிளகாய்தூள் ,புளி கரைசல் சேர்க்கவும். நன்றாக பச்சை வாசனை
போக வதங்கியம் பின் அரைத்துள்ள மசாலாவையும்
சேர்த்து கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்தவுடன்..... ஒரு கோப்பையில்.... சமந்தா புட்டு,  நயன்தாரா இடியப்பம், சரோஜாதேவி பழஞ்சோறு... 
போன்ற ஏதாவது ஒன்றுடன் கலந்து சாப்பிடவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு.. இடியப்பம்.. இட்லி எல்லாம் நீராவி காலத்துச் சாப்பாடுகள். இன்னும் நீராவிலான் அவிக்கிறாய்ங்களாக்கும். நம்ம அப்பத்தாட அப்பத்தா காலக்  கண்டுபிடிப்பு.. இவ்வளவு காலமும் நீடிக்குது. இன்னும் நீடிக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kajal-agarwal-162-h.jpg

 

காஜல் அகர்வால் மரவள்ளி கிழங்கு வடை :- 

 

organic_tapioca_starch1.jpg
கடலைபருப்பு - 1.5 கப்
மரவள்ளி கிழங்கு சிறியது
காய்ந்த மிளகாய் -3
சோம்பு - சிறிது
லவங்கம் - 2
உப்பு -தேவைக்கேற்ப
எண்ணெய் -தேவைக்கேற்ப
கருவேப்பிலை
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.

இந்த வடைக்கு.... ஓட்டை போட்டு சுடுவதா, ஓட்டை போடாமல் சுட வேணுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளாளுக்கு கிழம்பினா நாங்களும் சும்மா இருக்கேலா..

இப்ப நான் சொல்ல போறது.

மம்முட்டி ப்ளேன்டீ...

தேவையான பொருட்கள்.

தேயிலை-தேவையான அளவு

சீனி-தேவையான அளவு

கேத்தில்

(கரன்ட் அல்லது விறகு-கேத்திலுக்கு ஏற்ப)

தண்ணி.

கப் 2

செய்முறை..

 

கேத்திலில் தண்ணியை விட்டு அடுப்பில் ஆவிவர நன் கு கொதிக்கவைக்கவும்.

கொதிச்ச தண்ணிய கப்பில் விட்டு தேயிலை சீனி போடவும்.

நன்றாக நுரை தள்ள இழுத்து ஆத்தவும்.

 

சுவையான மம்முட்டி பிளேன்டீ ரெடி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

"விஜயசிறீ" நீராகாரக் கஞ்சி


தேவையானவை:

பழைய சாதம் சிறிதளவு, மோர் 1 கப், சின்ன வெங்காயம் 4 அல்லது பெரிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பழைய சாதத்தை உப்பு போட்டு கரைத்துக்கொள்ளுங்கள். அதோடு மோர் சேர்த்து அருந்தினால், உடம்பைக் குளிரவைக்கும் அற்புதமான கஞ்சி இது. விருப்பமுள்ளவர்கள் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மேலே தூவிக் குடிக்கலாம். அம்மை நோய் கண்டவர்களுக்கு உகந்த கஞ்சி இது. மண் பாத்திரத்தில் பழைய சாதத்தை வைத்திருந்து அருந்தினால் இன்னும் குளிர்ச்சி. செலவேயில்லாத எளிய கஞ்சி. ஆனால், கிடைக்கும் பலனோ மிகவும் அதிகம்.

சென்னையில் அன்றாடங்காய்ச்சிகளும், தொழிலாளர்களும் உணவுக் கூடையை ஏந்திவரும் வஞ்சியை காண ஏங்கி, "வரதப்பா.. வரதப்பா.. கஞ்சி வருதப்பா..!" என ஆடிப்பாடி விரும்பி உண்ணும் உணவு இது..! tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா ஆளாளுக்கு ஒன்று கொண்டு வாறியளே 

நமிதாக்கு என்ன சமையலை புகுத்தலாம் நானும் யோசித்து கொண்டு இருக்கிறன்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, முனிவர் ஜீ said:

அடப்பாவிகளா ஆளாளுக்கு ஒன்று கொண்டு வாறியளே 

நமிதாக்கு என்ன சமையலை புகுத்தலாம் நானும் யோசித்து கொண்டு இருக்கிறன்??

நமீதா அப்பளம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.