Jump to content

"அப்பால் ஒரு நிலம்" ...பல வீரர் கதையும்.


Recommended Posts

"அப்பால் ஒரு  நிலம்"  நாவலை வாசிக்க  தொடங்கும்  போது வழமையான  போர்  பற்றிய  வலியை  பேசப்போகிறது என்னும்  முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது  வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல்  நாவல்கள் தந்து  போன வலியை இது  கொஞ்சம் கூடுதால  கொடுக்கலாம்  என்னும்  எண்ணமும்  இருந்தது, காரணம் அந்த  போரோடு வாழ்த்த  ஒவ்வெரு ஜீவனும்  அறியும்  அதன்  உக்கிரம் அதிலும்  அதில்  தன்னை  செலுத்தி நீந்திய இளையவர்களுக்கு அது  இப்பொழுது  பெரு  வலி .

apaal

வீரன் பற்றி ஆசிரியர்  சொல்ல  தொடங்கும் போது, எம்  அருகில் இருந்த ஒரு  வீரன் நினைவில் வருகிறான் ,அவன் தான் இளங்கீரன் இவன் பூநகரி மண்ணில் பிறந்த ஒருவன் அழகிய வெண்மை நிறமான  அவனுது தேகம், ஒரு பெண்ணுக்குரிய அவனின்வசீகர முகம்  எவரையும் இவன் பெடியன என  கேள்வியை  கேட்க தோன்றும் ,அடிப்படை பயிற்சி முடிந்து ,வேவு பயிற்சிக்கு வந்து நிக்கிறான் மாங்குளம் அண்டிய பனிக்கம்குளத்தில், இரவு  பகலாக  தொடர்  பயிற்ச்சி ஜெயசுக்குறு படைகளுக்கு  எதிரா வேவு பார்பதற்கு மிக பெரும்  தயார்  படுத்தல், எவர்  எப்ப  உறங்குகிறார்கள்  என்று  கூட  தெரியாத பயிற்ச்சி ஆக  அது  நீண்டு  போகுறது ,அதன்  களைப்பு அவனை  அடிக்கடி ஓடும் போது  கூட  நித்திரைக்கு  கொண்டு  சென்றுவிடும் ,ஒரு  இடத்தில  இருந்து விட்டால் அப்படியே  உறங்கி  விடுவான் ஒரே  கேலியாக  அவனை போட்டு  கிண்டி  எடுப்பதுதான்  சக போராளிகள் வேலையாக இருக்கும் ,மச்சான்  இவனை  நம்பி கம்பியை  கடக்க   முடியாது இவன்  கம்பி  நீட்டிவிடுவான்  அப்புறம் ஆமி  எங்களுக்கு கம்பி செருகுவான் என அவனை நக்கல் பண்ணாத  போராளிகள் இல்லை  எனலாம் .

 

மூன்று பட்டு கொமாண்டோ கம்பிகளை  போட்டு ரைபிள் கோல்சாருடன் எழும்பி பாய்ய சொன்னால்  ஓடிவந்த  வேகத்தில் இடறி  அதன்  மேல் விழுந்து கம்பிகள் அவன் கைகளை உடலை கீறி இரத்தம் வடியும், ஆனாலும் மீண்டும்  பின்னாடி  வந்து  முயற்ச்சி  செய்வான் பார்வைக்கு  பாவமாக இருக்கும், ஆனால் தான்  கொள்கையில் சரியாக  இருப்பான் அதை  கடக்காமல்  ஒருநாளும்  வரவும் மாட்டான் ,பயிற்ச்சி மாஸ்டர்  சொல்லுவார் பருவாயில்லை நாளைக்கு முயற்ச்சி  செய்  என  இல்லை என்னால்  முடியும் என்பான்,அவனுக்கு  பிரச்சினை இந்த நித்திரை  தான், ஒரு நிமிடம் மேலாக  ஒரு  இடத்தில நின்றால் அப்படியே அயர்த்து போவான் அவனுக்கு கொடுக்காத தண்டனை இல்லை,ஒரு முறை வெள்ளி பற்றி படிப்புக்கும்  போது உறங்கி விட்டான் அதற்க்க மாஸ்டர் குண்டை  கழட்டி கையில் கொடுத்து விட்டு  சொன்னார் ,உன்கையில்  இருப்பது எட்டுபேர்  உயிர் கண்ணை  மூடினால்  கையை  விடுவ  விட்டால்  வெடிக்கும் நீ தான்  முடிவை  எடுக்கணும் என,தலையை  ஆட்டியவன் அப்படியே  உறங்கி போனான் வெள்ளி  பற்றி  படிப்பை  எவர் கவனித்தது இவனிடம்  குண்டு இருக்க, அது  மாஸ்டருக்கும் தெரியும் ,ஆனால்  அவர்  கொடுத்த குண்டு வெடிக்காது என  அவருக்கு மட்டும் தான் தெரியும் ,அவன் மெதுவாக உறங்கி போக குண்டு நழுவ போகுது என  ஆளையாள் பாய, மாஸ்டர் சிரித்த படி எழும்படா எழுப்பி  நில் நீ  திருந்த உன்னை  நம்பினால்  இப்ப  எல்லோரும்  வெள்ளி  பார்க்க வேண்டி  வந்திருக்கும் ,என  குண்டை கையில் எடுத்தார் அப்ப தான் தெரியும் அது  வெடிக்காது என .

 

இவ்வாறு இருந்த அந்த போராளி இளங்கீரன் ஜெயசுக்குறு ஆமியுடன்  கிளிக்கோடு விளையாடிய  வரலாறு இருக்கிறது ,அவனிடம் ஒரு  அசாத்திய துணிவு  இருக்கிறது சரியான கணிப்பு  கூடவே இருக்கும் எப்பொழுதும் ,ஒரு முறை மாங்குளம் சின்ன கிணத்தடி கடந்து உள்ள போய் வரும் போது நால்வர் இவனும்  அதில்  ஒருவன் கண்டி றோட்டை  கடந்து எங்கள் நிலைகளுக்கு வர நடக்க தொடங்க ஆமி  கண்டுட்டு  அடிக்க வெளிக்கிட ,ஓடுங்கடா  என  சுயாத் கட்டளை போட ,ஓடி  வழமையான இடத்துக்கு வாங்கோ,  பிரிச்சு போ, எல்லாம்  பிரிச்சு போ,  என  கத்தியபடி ஓவரு  திக்காக நால்வரும் பிரிந்து போக ஓடி மறைந்து பின்னேரம்  ஒரு  செக்கள் பொழுதில் கல்லிருப்பு  றோட்டில் ஒரு  இடத்தில  நின்றுதான்  போனது, ஆகவே அங்க  போகணும்.

எல்லோரும் வந்தாச்சு  இவனை காணவில்லை இப்ப இவன்  இல்லாமல்  போக முடியாது சண்டை நடந்த மாதிரி தெரியவும் இல்லை துப்பாக்கி சூட்டு   சத்தமும் இல்லை எங்க போனவன் ஆமி  பிடிந்து இருப்பன்,அல்லது குப்பி கடிச்சானா ,இடத்தை விட்டுடானா என பல யோசனை  அனைவருக்கும் ,சரி ஆளை ஒருக்கா பார்ப்பம் பொறுங்க கொஞ்சம் இருளட்டும் என காத்திருந்து தேடியும் ஆள் இல்லை ,இப்ப  போனால் பதில் சொல் வேணும் இன்னும் ஒருநாள் நிண்டு  தேடுவம் என சுயாத் சொல்ல சாப்படு பிரச்சினை வந்தால் போவம் பக்கத்தில  தானே நிக்கிறம் என சொல்லிபோட்டு இரவில் குருவி சத்தம் ,மெல்லிய விசில் சத்தமாக அவனிடம்  இருந்து  ஏதாவது சிக்னல் வருகிறாதா என தேடல் தொடங்குது .

 

அடுத்தநாளும் ஆள் கிடைக்கவில்லை இப்ப தளபதிக்கு என்ன  பதில் சொல்வது என்ன  நடந்தது  என  சொல்வது, எத்தினை கேள்விகள் எழும் ,என்னும்  குழப்பம் லீடருக்கு, சரி எதுக்கு தொடர்பை  எடுத்து சொல்லுவம்  வேற வழியில்லையே, என்னும் நோக்கில் வேக்கியை ஒன் செய்தார் சுயாத் ஓவர் என முடிக்க முந்திக்கொண்டு டயஸ் சொன்னார்,  ஆள் வந்திட்டு நீங்க வாங்க  என அட கருமம் தப்பிச்சம்  சாமி என ஒரு  சந்தோஷம் ,இரவு நடந்து விடியகாலை அறிவிச்சு எங்க  ஆக்களின்  இடம்  வந்து முதல் வேலையா இவனை ஓடி  போய்  என்ன  நடந்தது  என கேட்க  போனால் அவன் மிக பெறுமதியான  தகவலுடன் வந்திருந்தான் .

செக்கள் பொழுதில் ஆமி கலைக்க இவன் கொஞ்ச தூரம்  ஓடியவன் விழுந்து படுத்து விட்டான் ஒரு பற்றையில், இவனை  கடந்து ஆமி போயிட்டு புலி ஓடிட்டு  என கிளியர்  பண்ணிபோட்டு  போக, பிறகு எழும்பி  இவன் நடக்க தொடங்கி  இருக்கிறான், அப்பொழுது கல்லிருப்பு ரோட்டால் ஆமி ஆட்லறிகளை கட்டியபடி  உழவு இயத்திரம் போவதை  கவனித்தவன் றோட்டை  கடக்காமல்  பக்கவாடாக  நடந்து எங்க போகுது  என  தொடர்த்து போய் மூன்று முறிப்பு சந்தியில் இருந்து கோண வாக்கில் ஒரு  ஆட்லறி நிலை புதிதாக  அமைக்கபட்டு  இருப்பதையும் ,அதற்கு செல் அடிப்பது என்றால் மட்டும் பின்னணியில் இருந்து கொண்டுவந்து அடித்து விட்டு மீண்டும் ஆட்லறி கல்லிருப்பு நோக்கி போவதாகவும் இருநாள் பக்கத்தில் இருந்து அவதானித்து   விட்டு தான்  வெள்ளி பார்த்து வந்து சேர்த்த கதை சொன்னான் .

ஆச்சரியம் வெள்ளி படிப்பிக்க தூங்கியவன் இவனை நம்பி உள்ள கொண்டுபோக முடியாது என சொன்னவர்களுக்கு தான் செயல் மூலம் ஒரு பாடம் கொடுத்தான், வீரனை போல அவனும் நிலைமையில் தன்னை தயார் செய்து சாகாசம் புரிந்து வந்தான் ,சுயாத் நக்கலாக சொல்லும் இவன் ஓடி இருப்பான் ஐந்து பட்டு கம்பி வேலி  குறுக்க வந்திருக்கும் பாயிற பஞ்சில அதிலையே படுத்திட்டான் போல என ,ஓம் அண்ணை  அதுவும் உண்மைதான் நான் புகுந்து தான் வந்தான்  என மறுத்தான் போட்டான் இளங்கீரன் அவன் பின்னாளில் தனித்து வேவு பார்த்து செம்பியன் வேவு அணிக்கு போகும் அளவு வளர்த்து இருந்தான் .

மணியின் காதலும் ,வீரனின் பாசமும் ,அருளினியின் காதலும் ,றோமியோவின் வேட்கையும் இறுதியில் வென்று இருக்க வேணும் எப்படி கனவாக போனது என்பதுதான் ரண வலி .

"அப்பால் ஒரு  நிலம்" இப்படியான ஒரு சாகாச வீரனை பேசி போகிறது ,தாங்கள் கொண்ட இலட்சியத்தின் பற்றை இறுதிவரை ஏந்தி, உறவுகள் பிரிந்து ,வசந்த காலங்களை தொலைத்து ,சக பெண் போராளிகளை காணும் போது எழும் காதல் பார்வைகள் புறம் தள்ளி, போர் என்னும் அரக்கனை வெல்லும் ஒரு நோக்கு மட்டும் கொண்டு ஒரு  போராளியாக பயணிப்பது  என்பது  ஒருவித தவநிலை தான் ,ஒவ்வெரு பெரு வெற்றியின் பின்னும் ஒரு சாதாரண வீரன் பெரு வீரனாக பேழையில் உறங்கி போன காலங்களை இப்பொழுது மனத்திரையில் கொண்டு வருகையில், இதயத்தின் ஒரு மூலையில் நெருச்சி முள்ளாக குற்றி போகுறது குற்ற உணர்வும் அவர்களால் வாழ்கிறோம் என்னும் இந்த பிச்சை வாழ்க்கையும் .

ஆனால் என்ன இந்த வீரர்கள் வாழ்வு எங்களில் இருந்து "அப்பால் ஒரு நிலமாக" வாழ்த்துகொண்டே இருக்கும் அது அவர்களுக்கான நிலம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...இது[அப்பால் ஒரு நிலம்] புலனாய்வுப் பொறுப்பாளார் வீரமணியின் கதையா?

Link to comment
Share on other sites

10 minutes ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...இது[அப்பால் ஒரு நிலம்] புலனாய்வுப் பொறுப்பாளார் வீரமணியின் கதையா?

சாள்ஸ் அன்ரனி  சிறப்பு  தளபதி  வீரமணியாக  இருக்கலாம் ரோமியோ பாத்திரம் பிரிகேடியர் பால்ராஜ் ஆக  இருக்காலம்  ஆசிரியருக்கு  வெளிச்சம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் சாள்ஸ் அன்ரனியில் இருந்த வீரமணியைத் தான் குறிப்பிட்டேன்...ரோமியோ நிட்சயம் பால்ராஜ் அண்ணா தான்

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அப்பால் ஒரு நிலம் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். குணா கவியழகனின் மூன்று நாவல்களிலும் மிகவும் பிடித்தது இதுதான். புலிகளின் தியாகங்களையும், போட்டிகளையும், பொறாமைகளையும், காதல்களையும், மக்களின் போர் நிலத்து வாழ்வையும் அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார்.

ஒரு சிறு இராணுவ நடவடிக்கையையே மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடாத்திய தளபதிகளையும், ட்ரோன் இல்லாததால் மிகவும் தியாக உணர்வும், சாகசங்களும் புரியக்கூடிய வேவுப்புலிகளை இழந்ததும், துயிலுமில்லத்தில் மழைத்துமி படாமல் தன் மகனின் வித்துடலுக்கு சேலைத் தலைப்பைப் பிடித்த தாயையும் கண்முன் கொண்டுவந்து கண்களைப் பனிக்கச் செய்துள்ளார்.

இவ்வளவு திறமையானவர்களை கொண்டிருந்த புலிகள் எப்படி அழிந்தார்கள் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

தமிழர்களின் வீரவரலாற்றின் ஒரு துளியையாவது அறிந்துகொள்ள இப்புத்தகம் உதவும்.

Link to comment
Share on other sites

On 24/08/2016 at 9:54 PM, Athavan CH said:

 

இது  ஈழத்தின்  தலைசிறந்த கவிஞர்  நெற்கொலுதாசன்  அவர்களின்  பேஸ்புக்  பதிவு  ...தமிழ்நதியின்  எழுத்தே  எழுத்தா  என  கேட்கும்  அளவுக்கு  வளர்த்து  உள்ளார்  என்பது  மகிழ்ச்சி .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
அப்பால் ஒரு நிலம்
குணா கவியழகன்
 
இரு தலைமுறைகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினால் ஈழத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை வெறும், வெற்றி தோல்வி கணக்காக மட்டுமே பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்க்க முனைவதைக் காட்டிலும் பெரிய அபத்தம் எதுவுமில்லை. புலிகள் பிற இயக்கத்தினர், ராணுவம், அரசு, தமிழர்கள், சிங்களவர், முஸ்லீம்கள் என எல்லாத் தரப்பினருக்கும் அது சேர்த்திருப்பது வெவ்வேறு வகையிலான இழப்புகளையே. போர்நிலம் என்பது மரபார்ந்த திணைவகைகள் எதனுள்ளும் பொருந்தக் கூடிய ஒன்றல்ல. அதன் வாழ்முறையும், நிச்சயமற்ற தன்மையும், கொந்தளிப்பும், வெறுமையும், கைப்பும் பிறரால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாதவை. அவ்வாறான போர்நிலத்து நிகழ்வுகளை புறவயமாக விவரிப்பதோடு மட்டுமல்லாது, அதனூடாக வாழ விதிக்கப்பட்ட மனிதர்களின் அகவயமான நெருக்குதல்களை, உணர்வுகளின் தெறிப்புகளை அவற்றின் நுட்பத்துடன் சித்தரிக்க முனைவதாலேயே ‘அப்பால் ஒரு நிலம்’ முக்கியமான நாவலாகிறது. ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் தவிர்க்க இயலாமையை , விடுதலையை , இயக்கத்தின் பங்களிப்பை, அவற்றின் நடைமுறை செயல்பாடுகளை ஒருவித இலட்சியவாத நோக்குடன், நேர்மறையாக அணுகும் தன்மையே இந்நாவலில் வெளிப்படுகிறது. இறுதிச் சமருக்கு முந்தையவொரு காலகட்டத்தில், கிளிநொச்சியில் ஏ-9 வீதியை ஒட்டி இலங்கை ராணுவத் தளமொன்று அமைக்கப்பட்டிருந்தது. வலுவான அரண்களோடு இருந்த அதை தாக்கி அழிக்கத் திட்டமிடுவதற்கு ஏதுவாக , அதற்குள்ளாக ஊடுருவிச் சென்று வேவு பார்த்துத் திரும்ப கட்டளையிடப்பட்ட இயக்கத்தை சார்ந்த இரு வீரர்களின் சாகசப் பயணமே இந்நாவலின் களம். அதை மாத்திரமே விவரித்திருந்தால் இந்நூல் போர்த்தந்திரம் குறித்த ஒரு ஆவணப் பதிவாகவோ சாகச வகையின்பாற்பட்ட விறுவிறுப்பானதொரு புதினமாகவோ அறியப்பட்டிருக்கும். ஆனால் இந்நாவல் போர்க்களத்து நிலவரங்களை விரித்து எழுதுவதுடன் மட்டும் நின்று விடாமல் அவற்றை பின்புலமாகக் கொண்டு மனித மனதின் இருத்தல் சிக்கல்களை , வாழ்தலுக்கான அதன் ஆழமான தவிப்புகளை உணர்ச்சிகரமான ஒரு நாடகமாக கட்டமைத்து காட்டிய விதத்தில்தான் அசலானதொரு இலக்கியப்பிரதியாகவும் வெற்றியடைந்திருக்கிறது.
 
-  கணியன் பூங்குன்றன்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.