Jump to content

"கணையாழி" இதழில்  எனது "அஸ்மிதா எனும் குட்டி தேவதை" கவிதை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜூன் மாத "கணையாழி" இதழில்  வெளியாகியுள்ள எனது "அஸ்மிதா எனும் குட்டி தேவதை" கவிதையை,   யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

அஸ்மிதா எனும் குட்டி தேவதை
-----------------------------------------------------
எங்கள் எதிர் வீட்டிலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு
அஸ்மிதா எனும் குட்டி தேவதை
கோடை விடுமுறைக்கு வந்திருக்கிறாள்.
கையோடு கொண்டுவந்த குட்டி மழைக்காலத்தை
எங்கள் வீட்டில் விரித்து வைத்து, 
நிறமற்ற கோடையை நிறப்பிரிகை செய்து 
வானவில் காட்டுகிறாள்.
அஸ்மிதா பாட்டி, அஸ்மிதா தாத்தா,
அஸ்மிதா நாய்க்குட்டி வரிசையில்
அஸ்மிதா மாமா, அஸ்மிதா அத்தை என்று
நாங்களும் பெயராகு பெயர்களாகிறோம்.
கோடையை இழுத்துக்கொண்டு நகரும் எறும்புகளை
யாரும் மிதித்துவிடாமல் கங்காணியாகிறாள்.
பறவைகள் கத்தும் ஒலிகளைச்
சொல்லிக் கொடுத்த எங்களுக்கு
மரங்கள் கத்தும் ஓசையைக் கற்றுக்கொடுக்கிறாள்.
பீங்கான் பொம்மைகள், கோப்பைகள்,
மூக்குக் கண்ணாடி என்று
அவள் உடைக்கும் பொருள்களெல்லாம்
தேவையில்லாத பொருள்கள்தாம் என்று
என் அம்மா சான்றளிக்கிறாள்.
தேவையில்லாத பொருள்களை உடைப்பதற்காகவே
அவள் கோடையில் வருவதாக எண்ணிக்கொள்கிறோம்.
கொடுங்கோடையை நாம் வரவேற்க
குட்டி தேவதைகள் காரணமாகிறார்கள்!

(நன்றி : கணையாழி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்மிதாவை நம்ம வீட்டுக்கும்  ஒருநாளைக்கு அழைக்கத்தான் வேண்டும்... உடைக்கிறதுக்கு  நிறையப் பொருட்கள் கிடக்கு....!

பகிர்வுக்கு நன்றி சேயோன்...!!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்..சேயோன்..!

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2.6.2016 at 3:32 PM, seyon yazhvaendhan said:

--------
பீங்கான் பொம்மைகள், கோப்பைகள்,
மூக்குக் கண்ணாடி என்று
அவள் உடைக்கும் பொருள்களெல்லாம்
தேவையில்லாத பொருள்கள்தாம் என்று
என் அம்மா சான்றளிக்கிறாள்.
தேவையில்லாத பொருள்களை உடைப்பதற்காகவே
அவள் கோடையில் வருவதாக எண்ணிக்கொள்கிறோம்.
கொடுங்கோடையை நாம் வரவேற்க
குட்டி தேவதைகள் காரணமாகிறார்கள்!

(நன்றி : கணையாழி)

நல்லதொரு கோணத்தில்... அஸ்மிதாவை அணுகிய விதம் பிடித்திருந்தது.
பகிர்விற்கு... நன்றி சேயோன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, suvy said:

அஸ்மிதாவை நம்ம வீட்டுக்கும்  ஒருநாளைக்கு அழைக்கத்தான் வேண்டும்... உடைக்கிறதுக்கு  நிறையப் பொருட்கள் கிடக்கு....!

பகிர்வுக்கு நன்றி சேயோன்...!!  tw_blush:

அஸ்மிதாக்கள் நம் அனைவருடைய வீட்டுக்கும் அடிக்கடி வருகிறவர்கள்தாம்.   தங்களின் அன்புக்கு நன்றி suvy!

 

7 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள்..சேயோன்..!

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழர்!

 

4 hours ago, தமிழ் சிறி said:

நல்லதொரு கோணத்தில்... அஸ்மிதாவை அணுகிய விதம் பிடித்திருந்தது.
பகிர்விற்கு... நன்றி சேயோன்.

தங்களின் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.