Jump to content

மான் இறைச்சி கறி


Recommended Posts

இங்கு Spice land கடையில் நல்ல கோழி வாங்கி வருவம் என்று முந்த நாள் போன போது அங்கு மான் இறைச்சி விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். கோழி, ஆடு, மாடு, பன்றி, காடை, வாத்து, ஒட்டகம், மரை, முயல், ஆமை, எருமை, வான்கோழி என்று நிறைய இறைச்சி வகைகளை ஒரு கை பார்த்தாச்சு, மான் இறைச்சியையும் ஏன் விடுவான் என்று நினைச்சு  வாங்கி வந்தேன்.

வாங்கி வந்த பிறகு தான் மனிசி சொன்னார், இதை சமைக்க தனக்கு தெரியாது என்று. இணையம் இருக்க பயமேன் என்று சொல்லிவிட்டு கூகிள் ஆண்டவரிடம் மான்  இறைச்சி கறி பற்றி வரம் கேட்டேன். உடனே ஆண்டவர் வீடியோ சகிதம் என் முன் தோன்றி விடை தந்தார்,

கீழே இருக்கும் வீடியோவில் மான் இறைச்சி எப்படி செய்வது என்று இருக்குது. அதுவும் இலங்கையில் சமைக்கும் முறையில், அதை அச்சொட்டாக பின்பற்றி சமைச்சுப் பார்த்தம்...........சுவை சொல்லி மாளாது. ரசம், பருப்பு ஆகியவற்றுடன் மான் இறைச்சியை சாப்பிட்டம். மற்ற பல இறைச்சிகளுடன் ஒப்பிடும் போது மான் இறைச்சி கொழுப்பு குறைந்தது என்று சொல்கின்றார்கள். இனி அடிக்கடி சமைப்பம்

 

 

மேலே உள்ள முறை தென்னிலங்கை சமையல் முறை என்று நினைக்கின்றேன். வன்னியிலும் கிழக்கின் காடு சார்ந்த பகுதிகளிலும் மான் இறைச்சியை எம் தமிழர்களும் சுவையாக சமைப்பார்களாம். அச் செய்முறை உங்களுக்கு தெரிந்தால் இங்கு எழுதவும்.

Link to comment
Share on other sites

12 minutes ago, நிழலி said:

. கோழி, ஆடு, மாடு, பன்றி, காடை, வாத்து, ஒட்டகம், மரை, முயல், ஆமை, எருமை, வான்கோழி என்று நிறைய இறைச்சி வகைகளை ஒரு கை பார்த்தாச்சு,

 

 

நிழலி  இதுவும் கனடாவில் இருக்காம்....:grin: ஒரு கை பாருங்கோ.. ஏதோ என்னால் இயன்ற உதவி..:)

 

கனடாவில் நீல நிற லாப்ஸ்டர்
=============================
கனடாவில் உள்ள மீனவரால் பிடிக்கப்பட்ட இந்த அரிய வகை லாப்ஸ்டர், இதை பிடித்தவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவருமாம்.

ஆனால் இதை யாரும் சாப்பிடப்போவதில்லை.// ஆஆ அப்படி சொல்லகூடாது  நிழலிக்கு இது தெரிந்தால்...:grin:

பிடிக்கப்பட்ட இரண்டு நீல நிற லாப்ஸ்டர்களில் ஒன்று கடலுக்குள்ளேயே விடப்பட்டுள்ளது. மற்றொன்று அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த புள்ளி மான் என்ன பாவம் செய்ததோ

Link to comment
Share on other sites

4 minutes ago, ரதி said:

அந்த புள்ளி மான் என்ன பாவம் செய்ததோ

பேட்டுக் கோழிகளும் கொண்டைச் சேவல்களும் தாடி கிடாக்களும் துள்ளும் மீன்களும் செய்த பாவத்தைதான் புள்ளி மானும் செய்து இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

அந்த புள்ளி மான் என்ன பாவம் செய்ததோ

 

8 minutes ago, நிழலி said:

பேட்டுக் கோழிகளும் கொண்டைச் சேவல்களும் தாடி கிடாக்களும் துள்ளும் மீன்களும் செய்த பாவத்தைதான் புள்ளி மானும் செய்து இருக்கும்

கொன்னால் பாவம் தின்னால் போச்சு... அது தான் நம் கட்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரை இறைச்சி இன்னும் சுப்பராய் இருக்கும்.நான் மட்டக்கிளப்பில் இருக்கும் போது காட்டுக்குப் போறவர்கள் கொண்டு வந்து விற்பார்கள்...மற்ற இறைச்சிகளை சமைப்பது போல தான் இதையும் அம்மா சமைத்து தந்தது ஞாபகம்

Link to comment
Share on other sites

கனடாவில் சட்டப்படி மானை வேட்டையாட முடியாது. விபத்தில் சிக்கி இறந்த மானை உடனே வாகனத்தில் ஏற்றி இறைச்சிக்காக கொன்டு சென்றாலும் தாம் கொல்லவில்லை என்று நிரூபிக்க கஷ்டம். ஆனாலும் எப்படித்தான் தமிழ் கடைகள் மானையும் மரையையும் கொண்டு வந்து விற்கின்றார்களோ தெரியாது

அத்துடன் இது லைசென்ஸ் பெற்ற (நீல நிற சீல் அடித்த) இறைச்சி அல்ல என்பதால் சில Risks சும் உண்டு. காலாவதியான இறைச்சியை விற்கும் சந்தர்ப்பம் அதிகம். ஓரளவுக்கேனும் வாடிக்கையாளர்களை அதிகம் கொண்ட கடை என்றால் ஓரளவு நம்பலாம். குழந்தைகளுக்கு கொடுக்க முன்னர் நாம் சாப்பிட்டு பார்ப்பது நல்லம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனில் உள்ள தமிழ் கடையில் ஒருமுறை பங்கு மான் இறைச்சி என்று வாங்கி வந்து பார்த்தால் நிறைய ரோமம் இறைச்சி சாப்பிடும் ஆசையே போச்சு.

ஊரில் இருக்கும் போது பல தடவை சாப்பிட்டு இருக்கின்றேன் அந்தமாதிரி இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி நிழலி 

Link to comment
Share on other sites

மான் இறைச்சி சமையலுக்கு வன்னிதான் திறம். சிறு வயதில் அம்மா  மான், மரை என்று செய்து தந்திருக்கிறா சுவை மறந்து போய்விட்டது. குத்து மதிப்பா ஒரு 40 வருடங்களின் பின்னர் வன்னியில் சந்தர்ப்பம் மறுபடியும் கிடைத்தது. ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் இங்கு வாங்க முடியாது. 1 கிலோ வைத்திருந்தாலே 1 லட்சம் ரூபாய் தண்டனை.

கொடுத்து வைத்த நிழலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

மரை இறைச்சி இன்னும் சுப்பராய் இருக்கும்.நான் மட்டக்கிளப்பில் இருக்கும் போது காட்டுக்குப் போறவர்கள் கொண்டு வந்து விற்பார்கள்...மற்ற இறைச்சிகளை சமைப்பது போல தான் இதையும் அம்மா சமைத்து தந்தது ஞாபகம்

image.pngv_hirsch.jpg

நானும் இதனைச் தான் எழுத வந்தேன், ரதி எழுதி விட்டார்.
இங்கும் குறிப்பிட்ட சில இறைச்சிக் கடைகளில் மான், மரை போன்ற இறைச்சிகளை விற்பார்கள்.
மான் இறைச்சியை விட... மரை இறைச்சி சுவையாக இருக்கும்.
அடுத்த முறை... நிழலி, மரை இறைச்சியை அந்தக் கடையில் வாங்கி, தண்ணீர் குறைவாக விட்டு.... பிரட்டல் கறியாக சமைத்துப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

மரை இறைச்சி இன்னும் சுப்பராய் இருக்கும்.நான் மட்டக்கிளப்பில் இருக்கும் போது காட்டுக்குப் போறவர்கள் கொண்டு வந்து விற்பார்கள்...மற்ற இறைச்சிகளை சமைப்பது போல தான் இதையும் அம்மா சமைத்து தந்தது ஞாபகம்

களுவாஞ்சிகுடியில் இருந்த ஞாபகம் போல ??ரதி

என்ன  மான் இறைச்சி கொஞ்சம்  மிருதுவான இருக்கும்  பற்களுக்கு வேலை இல்லை 

சமையல் முறை பிற இறைச்சி வகைகள் சமைப்பது போல்தான் மசாலா வகைகளை குறைப்பது நல்லது ஏனெனில் இந்த இறைச்சி மென்மையானது ??

எத்தனை புள்ளி மானவை போட்டிருப்போம்.  ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டையாட தடை தான். மான் மட்டுமல்ல, ஆடு, கோழி, பன்றி, மாடு எதுவுமே வேட்டையாடவோ, அனுமதி இல்லா இடங்களில் இறைச்சிக்காக வெட்டவோ முடியாது.

ஆனால் எல்லாவற்றையும் அனுமதிக்கப் பட்ட இடங்களில், இறைச்சிக்காக வளர்த்து , வெட்டி இறைச்சியை விற்க முடியும்.

சூப்பர் மார்கட்டுகளில் Venison என்ற பெயரில் கிடைக்கிறதே...

பிறகேன், எங்க கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நவம்பர் டிசம்பர் மாதங்களில்   மான் மரை முயல் பன்றி எல்லாம் வேட்டையாட அனுமதிப்பார்கள்... சம்பந்தப் பட்டவர்கள் அதற்குரிய அனுமதி பெற்று நாய்களுடன் சென்று வேட்டையாடுவார்கள்...! வளர்ப்பு விலங்குகளைவிட காட்டு விலங்குகளின் சுவை அதிகம்....! அதிகாலையில் வேலைக்குப் போகும்போது பலவகையான மிருகங்கள் அடிபட்டு வீதியில் கிடக்கும்....!

Link to comment
Share on other sites

35 minutes ago, Nathamuni said:

வேட்டையாட தடை தான். மான் மட்டுமல்ல, ஆடு, கோழி, பன்றி, மாடு எதுவுமே வேட்டையாடவோ, அனுமதி இல்லா இடங்களில் இறைச்சிக்காக வெட்டவோ முடியாது.

ஆனால் எல்லாவற்றையும் அனுமதிக்கப் பட்ட இடங்களில், இறைச்சிக்காக வளர்த்து , வெட்டி இறைச்சியை விற்க முடியும்.

சூப்பர் மார்கட்டுகளில் Venison என்ற பெயரில் கிடைக்கிறதே...

பிறகேன், எங்க கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்பு?

ஆனாலும் நம்ம நாட்டு புள்ளி மானின் ருசி வருமா? :grin:

இங்கு மான் இறைச்சி வைத்திருந்தாலோ, கொண்டு சென்றாலோ அம்பிட்டா அம்புட்டுதான். அந்த காலத்தில் செட்டிகுளத்திலிருந்து வந்த மான் வத்தல் புகரணையில் சிமெந்து பையால சுத்தப்பட்டு, பாறைக் கருவாட்டுக்கு மற்றப்பக்கம் தொங்கும். இதை அம்மா சமைத்ததாகவே ஞாபகத்தில் இல்லை. போகவும் வரவும் வத்தலாகவே திண்டு முடித்து விடுவோம்.  

"இலங்கையில் மானை வீட்டில் வளர்க்கலாம் வெட்ட முடியாது". ஏன் இங்கு ஒரு மான் பண்ணை உருவாக்கி மான்களை வளர்த்து உணவுக்காக வெட்டலாம்தானே  என்ற எனது கேள்விக்கு எனக்கு ஒரு சுகாதார  உத்தியோகத்தரின் விடை இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைச் சமநிலையை, ஆயுதங்களைப் பயன்படுத்தும் மனிதன் அநியாயத்துக்கு குழப்புவதால்தான் தான் அந்த தடை.

அவற்றை உணவுக்காக வளர்ப்பது, இயற்கையான வளர்ச்சிக்கு வெளியானது என்பதால், கண்காணிப்புடன் அனுமதி.

மீன் பிடிக்கலாம், டைனமற் பயன்படுத்தி பிடிப்பது தடை.

இந்தியாவில், புலி வேட்டையை வீரம், கம்பீரத்துடன் முடிச்சுப் போட்டு, புலி இனமே அழியும் தருணத்தில் இந்திய அரசு முழித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, முனிவர் ஜீ said:

களுவாஞ்சிகுடியில் இருந்த ஞாபகம் போல ??ரதி

என்ன  மான் இறைச்சி கொஞ்சம்  மிருதுவான இருக்கும்  பற்களுக்கு வேலை இல்லை 

சமையல் முறை பிற இறைச்சி வகைகள் சமைப்பது போல்தான் மசாலா வகைகளை குறைப்பது நல்லது ஏனெனில் இந்த இறைச்சி மென்மையானது ??

எத்தனை புள்ளி மானவை போட்டிருப்போம்.  ??

கதிர்காமம், ஆச்சிரமம் எண்டெல்லாம் அடிச்சுவிட்டியள், இப்ப மான், மரையோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தப் பெண்டாட்டியை கூட அனுமதி இல்லாமல் தொட முடியாது :rolleyes: இதுக்குள்ள மானாவது மீனாவது.எவன்டா அவன் பெண்ணை மானோட ஒப்பிட்டு வயித்தில அடிச்சவன்.tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்,நான் மட்டக்களப்பில் 10,12 வருசமாக இருந்தேன்...துரதிஸ்டவசமாக டவுணை விட்டு கல்லடிப் பாலம் தாண்டி எங்கேயும் போகேயில்ல...காட்டுக்கு விறகு வெட்டப் போகும் ஆட்கள்,அங்கிருந்து இறைச்சி கொண்டு வந்து விற்பார்கள்

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

சொந்தப் பெண்டாட்டியை கூட அனுமதி இல்லாமல் தொட முடியாது :rolleyes: இதுக்குள்ள மானாவது மீனாவது.எவன்டா அவன் பெண்ணை மானோட ஒப்பிட்டு வயித்தில அடிச்சவன்.tw_angry:

உங்களுக்காக ஒரு பாட்டு. ஆனா இந்த மானை எல்லாம்  கறி வைக்க முடியாது. :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

கதிர்காமம், ஆச்சிரமம் எண்டெல்லாம் அடிச்சுவிட்டியள், இப்ப மான், மரையோ ?

பெயர் தான் நண்பா முனிவர் ஆனால் ஒன்றும் விட்டு வைப்பது கிடையாது 

பாதயாத்திரையின் போது மட்டும் தவிர்த்து. 

6 hours ago, ரதி said:

முனிவர்,நான் மட்டக்களப்பில் 10,12 வருசமாக இருந்தேன்...துரதிஸ்டவசமாக டவுணை விட்டு கல்லடிப் பாலம் தாண்டி எங்கேயும் போகேயில்ல...காட்டுக்கு விறகு வெட்டப் போகும் ஆட்கள்,அங்கிருந்து இறைச்சி கொண்டு வந்து விற்பார்கள்

நம்மலாமா

ஏனென்றால் களுவாஞ்சிக்குடியில் தான் இறைச்சி வகைகள் அதிகம் கிடைக்கும் காட்டு விலங்குகள் ஒரு காலத்தில். ?

இப்ப விறகு என்ன சுள்ளி எடுக்க கூட விடுவதில்லை காட்டு பகுதியில் 

 

மரத்தில் ஒரு நாரைக் உரித்தால் கூட விசாரணையப்பா இப்ப 

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் ஆமைக்கறிதேட கன நாளைக்கு முன்னம் நிழலி சமைச்ச மான் கறி வந்து நிற்கிறது  இந்த இறைச்சி கிடைப்பதென்பது தற்போது குதிரை கொம்பாக உள்ளது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.