Jump to content

வடமாகாண சபையால் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயற்றிட்டம் 2வது வருடமாகவும் விரிவுபடுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது


Recommended Posts

வடக்கில் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது வாழ்வாதார உதவிகளை வழங்கும் ஒன்றுகூடல் இன்று (06) முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு 43 மில்லியன் ருபாய் நிதியை ஒதுக்கி, பயனாளிகள் பதிவு செய்யப்பட்ட வேளையிலே வடக்கு மாகாணம் முழுவதும் மொத்தமாக 12,494 குடும்பங்கள் பதிவு செய்திருந்தது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 147 குடும்பங்கள் வீதமும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் 125 குடும்பங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடப்பட வேண்டியது. அத்துடன் விசேட தேவைகள் உடையவர்கள் என்னும் அடிப்படையில் 05 மாவட்டங்களிலும் தெரிவுகள் இடம்பெற்று, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50,000/- ரூபா வீதம் வாழ்வாதார உதவித் திட்டத்தை 860 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தற்போது மீதமாக உள்ள பதிவு செய்த குடும்பங்களுக்கும், கடந்த ஆண்டு பதிவு செய்யத் தவறிய நிலையில் இந்த ஆண்டு பதிவுகளைச் செய்த குடும்பங்களுடன் ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து இறந்த அங்கத்தவர்களின் குடும்பங்களின் பதிவுகளும், மேற்கொள்ளப்பட்டு இந்த வருட நிதி ஒதுக்கீட்டில் 25 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 குடும்பங்களைத் தெரிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50,000/= வீதம் வழங்குவதற்காக, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, பயனாளிகளின் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பான மதிப்பீடு செய்யபட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கான தேவை மதிப்பீடு தொடர்பான முதலாவது ஒன்றுகூடல் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.இந்த விசேட ஒன்றுகூடலில் முல்லைத்தீவு மாவட்ட பங்குத் தந்தை, இந்துமத குருக்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராஜா, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு இதேபோன்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தேவை மதிப்பீடு செய்யும் கலந்துரையாடல்கள் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் திட்டமிடப்பட்டுள்ளதன் படியாக மன்னார் மாவட்டத்திற்கான கூட்டம் நாளை (07) மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்திலும், யாழ் மாவட்டத்துக்கான கூட்டம் நாளை மறுநாள் (08) யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்திலும், வவுனியா மாவட்டத்துக்கான கூட்டம் 09-06-2016 வியாழன் அன்று வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்திலும், கிளிநொச்சி மாவட்டத்துக்கான கூட்டம் 10-06-2016 வெள்ளி அன்று மாவட்ட செயலக பயிற்சி நிலையத்திலும் நடைபெறவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

http://www.tamilwin.com/politics/01/106868

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.