Jump to content

மரிக்கார் ராம்தாஸ் காலமானார்


Recommended Posts

மரிக்கார் ராம்தாஸ் காலமானார்

 

இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் நாடக கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்றழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் இன்று காலை காலமானார்.

அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், சென்னையில் வைத்து 69 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கோமாளிகள் திரைப்படத்தின் ஊடாக சர்வதேச அளவில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

asdsaa.jpg

http://www.virakesari.lk/article/8879

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரின் மனங்களின் நீங்க இடம்பிடித்த சிறந்த நகைச்சுவை கலைஞர்.  

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

நான் கண்ட மரிக்கார் ராம்தாஸ்! குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நியூசிலாந்திலிருந்து எஸ் எம் வரதராஜன்:

13 ஜூலை 2016
Bookmark and Share
 

 

நான் கண்ட மரிக்கார் ராம்தாஸ்! குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நியூசிலாந்திலிருந்து  எஸ் எம் வரதராஜன்:
1974 ஆம் ஆண்டு டீ எஸ் சேனநாயக்க கல்லூரி மண்டபத்தில் ஓர் இளைஞர் அரை மணி நேர நாடகம்  ஒன்றை மேடையேற்றினார் .அ வர பின்னர் பல வானொலி நாடகங்களையும் எழுதி நடித்து மேடையுமேற்றினார் .இந்த நாடகத்தை மக்கள் வங்கியின் விளம்பரத்திற்காக அமரர்  சில்லையூர் செல்வராசன் வானொலிக்கு எழுதித் தரும்படி கேட்க -அதுவே -கோமாளிகள் கும்மாளமனது.
இதனை எழுதிய அந்த இளைஞர் தான் அமரர் எஸ் ராம்தாஸ் .
 
 
90 வாரங்கள் வானொலியில் வெற்றிகரமாக ஒலித்த இந்த நாடகம் பின்னர் "கோமாளிகள் "திரைப்படமானது ராம்தாஸ் அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார் .அதுவே அவருக்கு மரிக்கார் என்ற இடுகுறிப் பெயரையும் கொடுத்தது .
 
யாழ்ப்பாணத்தில்  "கோமாளிகள் "திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் திரும்பிப் போன அதிசயம் ஈழத்துத் தமிழ்த் திரைப்படம் ஒன்றிற்கு நிகழ்ந்தது  (மல்லிகை) . 
 
கோமாளிகள் திரைப்படம் ஏற்கனவே வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களை விட அதிக நாட்கள் ஓடியது .
 
படம் ஒரு நகைச்சுவைப் படமெனினும் ஈழத்தில் இனிமேல் தமிழ்ப் படங்களைத் தயாரிக்கலாம் என்ற தெம்பை ஏற்படுத்தியது எனப்படும் 
 
ஈழத்துத் தமிழ்த் திரைப்பட உலகில் கோமாளிகள் ஒரு புதிய நம்பிக்கையை  ஏற்படுத்தியது (சுதந்திரன் ) 
 
கோமாளிகளைத் தொடர்ந்து ஏமாளிகள் திரைப்படத்தை ராம்தாஸ் தயாரித்து  வெளியிடடார் .இதன் கதைவசனம் உதவி நெறியாள்கை   ஆகிய பணிகளையும் இவரே மேற்கொண்டார் .
 
அமரர் வீ பீ கணேசனின் புதிய காற்று ,நான் உங்கள் தோழன் , நாடு போற்ற வாழ்க ஆகிய திரைப்படங்களுடன் குத்து விளக்கு ,மாமியார் வீடு , Blendings, நொமியன   மினிசு - ஷர்மிளாவின் இதயராகம் 
  • ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் .
 
  • புரோக்கர் கந்தையா,சுமதி,காதல் ஜாக்கிரதை,கலாட்டா காதல் போன்றவை அவர் நடித்த நாடகங்கள் 
 
 
காலங்கள் ,எதிர்பாராதது  காணிக்கை , மலையோரம் வீசும் காற்று , அதிர்ச்சி வைத்தியம் என்பன இவர் நடித்த  தொலைக் காட்சி நாடகங்கள் .
 
நடிப்பதில் கடினமான விடயம் பெண்ணாக நடித்தல் என்பர் .ராம்தாஸ் பெண் பாத்திரத்தில் அருமையாக  நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தார் .
 
பல குணசித்திரப்  பாத்திரங்களில் நடித்த ராம் தாஸ் ஒரு மரிக்கார் என்ற நகைச்சுவைப் பாத்திரமாகவே மக்கள் மனதில் நிறைந்தார் .
 
வானொலி வர்த்தக விளம்பரசேவையில் அவரது பணி குறிப்பிடத்க்கது ."அங்கிள் எனக்கு இன்னைக்கு மனசு நல்லால்ல " என்று இவரது மகள் பிரியா சொல்வதும் அதனைத் தொடர்ந்து மரிக்கார் கதைப்பதுமான ஸ்டார் விளம்பரம் எங்கள் பாடசாலை நாட்களில் வானொலியில் ஒலித்து பள்ளி மாணவர்களும் சொல்லித் திரிந்த ஒன்றாகும் .
 
செய்மதித் தொலைக் காட்சிகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முன்னர்,  இலங்கைத் தொலைக்காடசி வரலாற்றில்  ஆதிக்கம் செய்த ஒரு "பெரும் கோள்" மறைந்த கலைஞர் மரிக்கார் எஸ் ராமதாஸ் அவர்கள் என்று  சொல்லமுடியும் .
 
1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடங்கிய ரூபவாஹினி, அதன் முக்கிய தமிழ் நிகழ்ச்சிகளில் ஒன்றாக '"பொன் மாலைப் பொழுது " என்ற நிகழ்ச்சியை -தமிழ் பேசும் குடும்பங்கள்   தமது அன்றாடக் கடமைகளை ஒத்திவைத்துப் பார்க்கும் வகையில் தென்னிந்திய திரைப்படப் பாடல் களை  அவை அங்கு வெளியிட்ட கையோடு இலங்கையில் ஒளிபரப்பிய சேவையைப் புரிந்தவர் ராம் தாஸ்  .விளம்பர நிகழ்ச்சியெனினும் மக்கள் ரசனையைப்  புரிந்து வாராவாரம் அவற்றை அழகுறத் தொகுத்து வழங்கி வந்தவர் அவர் .
 
நடிகை ராதிகாவின்  கன்னிப   படைப்பான பெண்  ( ஓரங்கத் தொடர்கள்) பாலசந்தரின் தொடர்கள் ,அகிலனின் சித்திரப்பாவை போன்ற ஆரம்பகால தொலைக்காடசித் தொடர்கள்  தமிழகத்தில் வெளிவந்தபோது அவற்றை விளம்பர உதவியுடன் இலங்கைத் தமிழ்பேசும் இரசிகர்கள்  சுவைப்புக்கு   வழிசெய்தவர்  ராம்தாஸ் .
 
இலங்கை அரசின்கட்டுப்பாட்டிலுள்ள அரச கூட்டுத்தாபனம் தமிழ் பேசும் ரசிகர்கள் மீது உள்ளார்ந்தமான அக்கறையைக் காட்டுமாக இருப்பின் தனது அதிகாரிகளில் ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பி நல்ல நிகழ்ச்சிகளைத் தெரிவுசெய்து தனது பணியில் முக்கிய பணி யாக நாட்டின் ஒரு பகுதி மக்களுக்குத்  தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டியது அதன் கடனாகும். ரூபவாஹினி தொடங்கிய  காலம் முதல் தகுதி வாய்ந்த தமிழதிகாரிகள் அங்கு பணியாற்றி வருகின்ற்னர் . ஆனால் அரச நிறுவனம் அந்தச் சேவையை செய்யவில்லை . தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று நியமிக்கப்படட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் எண்ணவில்லை .
 
ராம்தாஸ்  இந்த இடத்தை நிரப்பினார் .இதனால்  இலங்கை தமிழ் ரசிகர்களின் இரசனையையும்  அவரே நிரப்பவேண்டியவரானார்.
 
செய்மதித் தொலைகாட்சிகளின் வருகையும் தனியார் தொலைக்காடசியின் செய்மதித் தொடர்புகளும் மேவும் வரையிலும் ராம்தாஸ் இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் ஓர்  இணைகரமாக இயங்கியவர் .பெரும்பாலுமே .
ரூபவாஹினியின் ஒளிபரப்பு விதிமுறைகளுக்கேற்ப நிகழ்ச்சிகளைத் தொகுத்து ,தயாரித்து வழங்கினார் .
 
 
நான் சக்திக்கு முகாமையாளரான பின்னர் ஒருநாள்  சக்தியில் ஒரு சினிமாப் பாடல்  
ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தவேளை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது .மறுமுனையில் ராம்தாஸ் அண்ணர் "வரதா வணக்கம் ...என்று சுகம்விசாரித்துப் பேச்சைத் தொடங்கியவர் .இப்போ போய்க்கொண்டிருக்கும் பாடல் நினைவிருக்கிறதா ?" என்று  கேட்டார் .
 
ரூபவாஹினியில் அந்தப் பாடலை அவர் "பொன் மாலைப் பொழுது" நிகழ்ச்சியில் இட்டு வந்தபோது அதில்  இரண்டு "செக்கன்ட்ஸ் "கால அளவுள்ள காட்சியை  எடுத்துவிட்டு அனுப்பும்படி நிகழ்ச்சியை -ஒளிபரப்பிற்கு முதல் பார்வையிட்ட  நான் அவரிடம் கேட்டிருந்தேன் .
 
ஆனால் நான் முகாமையாளராக பணியாற்றிய தனியார் ஊடகத்தில் அது போகிறதே என்பதை எனக்கு நினைவூட்டவே எனக்கு அவர் தொலைபேசி எடுத்தார் .
 
"ஒரு "இரண்டு செக்கன்ஸ்(விநாடிகள்)காட்சிக்கு"  --என்னை  "எடிட்டிங்" புக் பண்ண வைச்சு என்ன வேலை செய்தீர்கள் ...இப்ப பார்த்தீர்களா .சன்னில(Sun) வாற எல்லாம் இனி எப்பிடி எடிட் பண்ணி போட போறீர்கள் என்று நானும் பார்க்கத்தானே போறேன் "...என்று பகிடியாகச் சொன்னார்.
 
சில நாட்களுக்கு முன்னர் ராம் அண்ணர் தொடர்பான சில படங்களைத் தேடினேன்.
 
 அவர் பிரதி எழுதி -அவசரமாய் ஒரு புதுவருடத் திருநாளுக்கு நான் தயாரித்த "அதிர்ச்சி வைத்தியம் " நகைச்சுவை நாடகத்தின் shooting shots படங்களைத் தான் நான்  தேடினேன் .
 
அந்தப் படங்களை  வைத்தே ராம் அண்ணரைப் பற்றி ஒரு குறிப்பு எழுத நினைத்தேன்  அவர்  மகன் சதீஷ் உள்ள படம் ஒன்று கிடைத்தது . அதனை வைத்து (அமரர் கே எஸ் பாலச்சந்திரனுடன் அவர் நிற்கும் படம் ) முகநூலில் எழுதியிருந்தேன்.
 
சதீஷ் ராமதாஸ் அதற்கு குறிப்புரையும் எழுதியிருந்தார்.
 
நெல்லியடி மத்திய  மகா வித்தியாலயத்தில் "கிரேஸி கோமாளிகள் "நாடகம்  மேடையேறியபோது ராமதாஸை  முதலில் நேரில் பார்த்தேன் . அன்று  பத்தோடு பதினொன்றாக  ஒரு  ரசிகனாக இருந்தேன் .கதைக்கமுடியவில்லை .ராமதாஸ் நாடகம் முடிந்து மேடையை விட்டிறங்கி வித்தியாலய வாசல் வரைக்கும் செல்லும் வரை நாமும் பின்னால் சென்று அவரை வழியனுப்பினோம். அது எம் பாடசாலைக் காலம் .
 
பின்னர் ரூபவாஹினிக்கு வந்தபின்னர் தான் அவருடன் நேரில் பழகும் வாய்ப்புக் கிடைத்தது .பொன் மாலைப் பொழுது "கசட் " டை வாரம் தோறும் கொண்டுவார் .ரூபவாஹினி வரவேற்பு மண்டபம் , வர்த்தகப் பிரிவு என்பன அவரின் நினைவுகளைச்  சுமக்கும்.
 
மலையோரம் வீசும் காற்று தொலைக்காட்சி தொடர் நாடக ஒளிப்பதிவில் நான் உதவித் தயாரிப்பாளர் . ஹட்டன்- " டின் சின்" பெருந்தோட்டப்  பயிற்சி மண்டபத்தில்  ஒளிப்பதிவுக் குழுவினர் ,கலைஞர்கள் தங்கியிருந்தோம்  . ராம்தாஸ் அண்ணரின் நகைச்சுவைகளும் அவர்  
நடித்த திரைப்படங்களின் ஒளிப்பதிவின்போது ஏற்படட சுவையான அனுபவங்களும் இரவில் அங்கு தங்கியிருந்த கலைஞர்களை மகிழ்ச்சியில் குளிக்க  வைத்தன . 
 
பெருநாள் ஒளிபரப்பு ஒன்றிற்கு விளம்பர அனுசரணையுடன்  ஒரு தொலைக்காடசி நாடகம் தருவதாக ராம் உறுதியளித்திருந்தார் .
 
ஆனால் அதனைத் தருவதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது . பணிப்பாளராக இருந்த திரு விஸ்வநாதன்  
-"ராம்தாஸிடம் ஒரு பிரதி  இருக் கிறது . நகைச்சுவை நாட கம் தான் . ஏற்கனவே ஒதுக்கப்பட்ட் நேரம் உள்ளது .அதனை விடவும்  முடியாது . செய்கிறீர்களா ?  .".என்று கேட்டுக் கொண்டார்.
 
பொதுவாகவே அந்நாளில் ஒரு அரை மணி நேர தொலைக்காட் நாடகத்திற்கு -ஒளிப்பதிவுக்கு - ஐந்து  நாட்கள்  சராசரி தேவைப்படும் . ஆனால் கமரா -சாதனங்கள் வழங்கற்  பிரிவில் அந்தளவு நாட்களுக்கு கமரா இருக்கவில்லை.  மூன்று நாட்களே இருந்தன.
 
ராம்தாஸ் சொன்னார். "நீங்கள் book  பண்ணுங்கள் .நான் செய்து  தருகிறேன் " என்று. 
 
ரூபவாஹினியில் Programme budget (Drama) அனுமதிக்கு  பிரதியையும் இணைத்தல்  வேண்டும் என்ற வழமையிருந்தது. .
 
ராம்தாஸ் பிரதியைத் தரவேயில்லை . அதனால் அனுமதிக்கு தாமதாயிற்று .நிதிப்பிரிவில் உள்ளவர்களுக்கு  தமிழ் மொழி விளங்காததால் - அவர்களைச் சமாளிப்பது சுலபமாக  இருந்தது . எப்படியும் பிரதியை ஒளிப்பதிவுக்கு முன் தந்துவிடுவேன் -என்ற  உறுதியுடன் அனுமதியைப் பெற்றுவிடடேன் . அப்போதான் செலவுக்கான முற்பணத்தைப் பெறமுடியும் .
 
ராம்தாஸ் - பிரதியைத் தந்தது ஒளிப்பதிவு ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னராகும் .
 
நான் "டென்சனாக " இருந்தாலும் அவர்  வழமைபோலவே எவ்விதமான குழப்பமுமில்லாமல் இருந்தார் .
 
 
ஆயினும் Location survey  விடயங்கள் பற்றியெல்லாம் ஒன்றும் யோசிக்கவேண்டாம் என்றும் தான் எல்லாம் பார்த்துள்ளதாகவும் சொல்லியிருந்தார் . எனினும் நான் இயக்குனர் என்ற வகையில் முதல் நாள் இரவில் தமது வாகனத்தில் கூட்டிச்சென்று காட்டினார் .
 
இவருடன் அதில் நடித்தவர்கள் உபாலி செல்வசேகரன் விஜயாள் பீட்டர் ,ஸ்ரீதர் ,நிலாமதி  ,ஒரு பாம்பு .
 
ஒரு பாம்புக்காக மூன்று பாம்புகள் நடிக்கவேண்டியிருந்தன.ஏனெனில் ஒளி வெளிச்சம் , எமது  தயாரிப்பு வேலைகளின் சத்தம் என்பவற்றில் பாம்பு களைத்துவிடும்..கோபம் வந்து பலமாய்ச் சீறும் இரவில் பாம்பு "சீன் "எடுப்பதால் அடுத்த இரண்டு வீடுகளுக்கு கேட்கும் . ஒளிப்பதிவாளர் , ஏனையவரளுடன்  நானும் தளர்ந்திடுவேன் .செய்து முடித்து "எடிட் பண்ணி" ம்யூஸிக்  எல்லாம் போட்டு எப்போ முடிக்கப் போகிறேன் என்று ...
 
 அவரது வலது  கரமான  உபாலி கூடத்  தளர்ந்து போய் விடுவார் .ராம் தளரமாடடார் . அவரில் எந்தவிதமான "சுருதி " மாற்றமும் இருக்காது 
 
"வரதா ..இந்த Field இல எத்தனையோ பாம்பைக் கண்டவன்  .நாளைக்கு  களணியில சிங்களப் படங்களுக்குப் பாம்பு  மிருகம் கொடுக்கறவன் ஒருத்தன் இருக்கான் .அவனிடம் காலையில போய் கூட்டி வாறேன் " என்று சொன்னபடியே நேரம் சற்றுப் பிந்தினாலும் பாம்புடனும் பாம்புக்கு காரானுடனும் வந்திறங்கினார் ராம் அண்ணர் .
 
கலைஞர்களுக்கான உணவு சிற்றுண்டியை விட பாம்புரிமையாளரின் " முட்டைத் தொல்லை " (பாம்புக்கு உணவு) ஒரு புது அனுபவம் .
 
ராம்தாஸ் அண்ணருக்கு இந்த ஒளிப்பதிவுடன் வேறு பல அலுவல்களுமிருந்தன. இலங்கை  வானொலி விளம்பர  நிகழ்ச்சிகள் ரூபவாஹினியின் விளம்பர நிகழ்ச்சிகள் - என்பன அவை .
 
அவற்றுக்கு மத்தியிலும் இந்த ஒளிப்பதிவில் சொன்ன நேரத்துக்கு வந்து செய்து தந்துவிடுவார் .
 
இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் - பிரதியை ஒருதரம் பார்ப்பார் ; அதிலுள்ள (அவரே எழுதிய) கதை வசனத்தை 
அவர் சொல்லாமல் தமக்கு வந்ததை ஒளிப்பதிவின்போது சொன்னாலும் -அதனையே வேறு Takes தடவைகள் எடுக்கும்போதும் சொற்கள் ஒழுங்கு மாறாமல் சொல்வர் .
 
நகைச்சுவையில் வசனங்கள் இப்படி ஒரே மாதிரியாகவே சொல்வது என்பது சிரமமான விடயமாகும் .நடிப்பவர்கள் ஒவ்வொரு கோணத்திலும் சொற்களின் ஒழுங்கை மாறி மாறிச் சொல்கையில் பின்னர் தொகுப்பின்போது மிகவும் சிரமப் படவேண்டியிருக்கும் . ராம் அண்ணருடன் இந்த விடயத்தில்  வேலை செய்வது சுலபமானதாகும் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.  
 
 
அவர் சொன்னது போலவே  மூன்று நாட்களில் ஒளிப்பதிவை முடித்தோம் இதற்கு அவரது பல்வகைமையான திரையனுபம் எனக்குத் துணையாக இருந்தது .   
 
 
 இந்த அவசரங்களில் ஓரு காடசியில் வீட்டினுள்ளே மூக்குக் கண்ணாடியுடனும் வெளியே கண்ணாடியில்லாமலும் காட்சியை எடுத்து  விட்டோம் .
 
எடிட்டிங் மேசையிலிருந்தபோதுதான் அது தெரிந்தது.
 
ராம் அண்ணருக்கு இதை நான் மறுநாள் சொன்னபோதும் அவர் "அப்படியா? அதுக்கு யோசிக்காதீங்க ...ஆட்கள் சிரிப்பிலேயே அதனைக் கவனிக்க மாட்டார்கள் " என்று சாதாரணமாகவே சொன்னார்.
 
ரசிகர்களை நன்க றிந்து வைத்த கலைஞர் அவர் .
 
அதனால் தான்   பல தசாப்தங்களாக தமக்கென்று ஒரு ரசிகர் கூடடத்தையே தமக்கென அவர் வைத்துக்கொள்ள முடிந்தது !
 
சுகவீனமுற்றிருந்த வேளையில் கூட  ஏதாவது கலைப்பணி செய்யவேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்துடனிருந்தவர் அவர் !
 
நிம்மதியின் கரங்கள் அவரை நித்திய உறக்கத்தில் ஏந்தட்டும் !

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134024/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Marikar Ramdas-1

Marikar-Ramdas-2.jpg

1970 களில்.... கொடி கட்டிப் பறந்த கலைஜர்களில், மரிக்கார் ராமதாசும் ஒருவர். 
அன்னாரின் மறைவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்:..... .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

 
கோமாளிகள்

இந்த பாட்டு நினைவு உள்ளதா மரைக்கார் ராமதாசின் சொந்தக் குரலில் பாடிய பாடல் தவில் அடிப்பது யார் தெரியுமா ? வி .எச் . அப்துல் ஹமீத் ( இன்று அவரின் பிறந்த தினம் ) இதில் ஜூவால் என்ற சொல் இப்போதும் பழக்கத்தில் உள்ள சொல் .... இந்த பாடல் நினைவு உள்ளவர்கள் மட்டும் லைக் பண்ணுங்கள் நினைவில் நீங்காத இலங்கை சினிமா பாடல் .....

Posted by Subathiran Thambi on Dienstag, 12. April 2016

 

இந்த பாட்டு நினைவு உள்ளதா மரைக்கார் ராமதாசின் சொந்தக் குரலில் பாடிய பாடல் 
தவில் அடிப்பது யார் தெரியுமா ? வி .எச் . அப்துல் ஹமீத் ( இன்று அவரின் பிறந்த தினம் ) இதில் ஜூவால் என்ற சொல் இப்போதும் பழக்கத்தில் உள்ள சொல் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.