Jump to content

தமிழன்டா..! - தமிழர்களுக்கான சமூக வலைத்தளம்


Recommended Posts

தமிழன்டா..! - தமிழர்களுக்கான சமூக வலைத்தளம்

 

 
thamizhanda____2933527f.jpg
 

தமிழர்களுக்காகத் தமிழகத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம் இருந்தால் எப்படியிருக்கும்? இந்த நெடுநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறது ‘தமிழன்டா’.

“தமிழா இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை. உங்கள் படைப்புகளைப் பதிவேற்றுங்கள்” என்று வரவேற்கிறது ‘தமிழன்டா' கைப்பேசி செயலியின் முகப்புப் பக்கம்.

வழக்கமான சமூக வலைத்தளச் செயலிகள் போல, நமக்குத் தேவையில்லாததையும் சேர்த்துக் கொட்டாமல், என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்துகொள்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இந்தச் செயலியின் சிறப்பு. படைப்புலகம், ரசிகர் மன்றம், தொழில் புதிது, இசை, ருசியோ ருசி, சிரிப்பு, செய்திக் கதம்பம், டென்ட் கொட்டாய், படிப்பும் வேலையும், உறவுகள், ஆன்மிகம், ஆட்டம் (விளையாட்டு), அரசியல் பேட்டை, ஆஹா ஆர்கானிக், நம்ம சென்னைடா, நெல்லை வாலா, மதுரை மச்சான்ஸ் என்று சுமார் 25 பிரிவுகள் இருக்கின்றன. விருப்பமான பிரிவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டால், அதுபற்றிய தகவல்களை அதிகமாகப் பார்க்க முடியும். கருத்திட முடியும். ‘லைக்’கிற்குப் பதில் ‘விசில்’ என்பது போன்ற மண்ணுக்கேற்ற வார்த்தைகள் இங்கே சகஜமாகப் புழக்கத்தில் இருக்கின்றன.

இதை வடிவமைத்த சாம் இளங்கோ மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஐபிஎம் நிறுவனத்தின் இந்தியத் துணைத் தலைவராக இருந்தவர். அவரிடம் பேசினோம்.

“அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மீம்ஸ் போடுவதற்கும், ஜோக் பதிவிடுவதற்கும் கூட தனித்தனி ஆப்கள் வந்துவிட்டன. ஆனால், தமிழின் இனிமை, பெருமை, தமிழர்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை அறிந்துகொள்ளவும், பகிர்ந்துகொள்ளவும் ஒரு செயலி வந்தால் எப்படியிருக்கும்? என்று நீண்டகாலமாக எதிர்பார்த்தேன். வரவில்லை. ‘இப்படியொரு புத்தகம் இருந்தால் எப்படியிருக்கும் என்று கருதுகிறாயா? சரி, அப்படியானால் அந்தப் புத்தகத்தை எழுதும் தகுதி உனக்கே இருக்கிறது’ என்பார்கள். அதைப்போல நம் எண்ணத்தை நாமே செயல்படுத்தினால் என்ன என்று தோன்றியது” என்று இத்திட்டம் மனதில் உதித்த கதையைச் சொல்கிறார் சாம் இளங்கோ.

கடந்த வருடம் சிவகாசி சென்றவர், பரவலாக அனைவரது கையிலும் விலைமிக்க திறன்கைப்பேசிகள் இருப்பதைக் கவனித்திருக்கிறார். ஆனால், அதனை சாதாரண கைப்பேசியைப் போலவே பேசுவதற்கும், பாடல் கேட்பதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் மட்டுமே அவர்கள் பயன்படுத்துவதையும், சிலர் அதிகபட்சம் வாட்ஸ்அப் பயன்படுத்துவதையும் கண்டிருக்கிறார் இளங்கோ. திறன் கைப்பேசியில் என்னென்ன ஆப்கள் இருக்கின்றன, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொன்னாலும்கூட, ‘அதெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கு சார், நமக்கு ஒத்துவராது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

“அப்போதுதான் யோசித்துப் பார்த்தேன். அமெரிக்க, ஜெர்மனி போன்ற பலநாட்டு நிறுவனங்களுக்கெல்லாம் பெரிய பெரிய சாப்ட்வேர்களை எழுதித்தருகிறோம். ஆனால் தமிழ் மக்களுக்காகத் தமிழ் மொழியில் என்ன செய்திருக்கிறோம் என்று. உலகத் தமிழர்களின் எண்ணிக்கை 7.5 கோடி. ஜெர்மன் மக்கள் தொகை 8 கோடி தான், பிரான்ஸ், இத்தாலி மக்கள் தொகை இதைவிடக்குறைவு. ஆனால், அவர்கள் தங்கள் கைப்பேசி செயலிகளில் தாய்மொழியைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இங்கே என்ன பிரச்சினை என்றால், நம்மிடம் தொழில்நுட்ப அறிவு அதிகமிருந்தாலும், இந்திய மொழிகளில், முக்கியமாகத் தமிழ் மொழியில், அதிகபட்சமாக செயலிகள் உருவாக்கப்படவில்லை என்பதை உணர்ந்து ‘தமிழன்டா’வை உருவாக்கினோம்” என்கிறார்.

பயனர்களுக்குப் பிடித்துப்போக, ‘தமிழன்டா’ வெற்றிப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களில், சுமார் 5000 பேர் இந்தச் செயலியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பயனர்களால் தினமும் நூற்றுக்கணக்கான பதிவுகள் இடப்படுகின்றன. இருந்தாலும் பயனர்களிடம் இருந்து கருத்துக்கேட்டு மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அப்டேட் வெர்ஷன்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

“இந்தச் செயலியை ஆன்ட்ராய்ட் கூகுள் ப்ளே ஸ்டோர்களிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களிலும் இருந்து டவுன்லோட் செய்ய முடியும்” என்ற இளங்கோவிடம் அவரது இலக்கு பற்றிக் கேட்டோம். "இரண்டு வருடத்தில், 50% சதவிகிதம் உலகத்தமிழர்கள் 'தமிழன்டா' வில் ஒருங்கிணைந்து தமிழில் பேச வேண்டும், தமிழில் படைக்க வேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தின் ஆசை. அதற்காகக் கடுமையாக உழைப்போம்" என்றார்.

கனவு ஈடேற நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.

http://tamil.thehindu.com/society/lifestyle/தமிழன்டா-தமிழர்களுக்கான-சமூக-வலைத்தளம்/article8853354.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.