Jump to content

ஒரு கூர்வாளின் நிழலில் எனக்குத் தெரிந்த தமிழினியை காணவில்லை! முன்னாள் போராளி வெற்றிச் செல்வி!!


Recommended Posts

ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வி தெரிவித்துள்ளார்.

அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு பெண் போராளிகள் தடுப்பு முகாம் தொடர்பாக எழுதப்பட்ட 'ஆறிப்போன காயங்களின் வலி' புத்தக வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய தமிழினி குறித்து நிறையவே தெரியும் என்றும் அவர் சாதாரண போராளியாக இருந்த காலத்திலிருந்தே அவருடன் தான் நெருங்கிப் பழகியுள்ளதாகவும் தெரிவித்தார். இறுதிவரை அவர் என்ன மனநிலையுடன் இருந்தார் என்பதும் தனக்குத் தெரியும் என்று கூறிய வெற்றிச்செல்வி அவரின் பற்றுறுதியையும் தான் அறிவேன் என்றும் குறிப்பிட்டார்.

ஆகவே எனக்கு அக்காவை நன்கு தெரியும் எனக் கூறிய அவர் தமிழினியால் எழுதப்பட்டதாக வந்திருக்கின்ற இந்த நூலில் எனக்கு நன்கு தெரிந்த என் அக்காவை நான் காணவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

கூர்வாளின் நிழலில் என்ற நூல் போல தனது இந்த நூலை நீங்கள் எதிர்பார்ப்பதும் இனி தனது எழுத்துக்கள் அவ்வாறு வரவேண்டும் என எதிர்பார்ப்பதும் வீணான எதிர்பார்ப்புக்கள் என்றே சொல்ல விரும்புவதாகவும் வெற்றிச்செல்வி குறிப்பிட்டுள்ளார்.

எமது வாழ்வில் நடந்தவைகள் பற்றியும் இனி தமிழர்களாகிய எமது எதிர்பார்ப்பு எவ்வாறானது என்பது பற்றியுமே தான் எழுதியுள்ளதாகவும் அவ்வாறே தனது எழுத்துக்களும் என்றும் இருக்கும் என்றும் வெற்றிச் செல்வி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை மகளீர் பொறுப்பாளர் தமிழினி புற்றுநோயால் சாவடைந்தபோது கிளிநொச்சியில் நடைபெற்ற அவரது இறுதிமரண நிகழ்வை தலைமையேற்று நடத்திய வெற்றிச்செல்வி ஒரு கூர்வாளின் நிழலில் புத்தக வெளியீட்டை புறக்கணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/ltte/01/111586

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

நேற்றைய தினம் முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு பெண் போராளிகள் தடுப்பு முகாம் தொடர்பாக எழுதப்பட்ட 'ஆறிப்போன காயங்களின் வலி' புத்தக வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது.

 

இன்றுதான் புத்தகம் கையில் கிடைத்தது. வாசித்தபின் பதிவிடுகின்றேன். ஆனால் பதிவிட்ட பின்னர் இலங்கையில் வெளியிட்ட புத்தகம் அரச சார்பு என்று சொல்லப்படாது. 

ஆமா இப்பவே சொல்லிப்புட்டேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

கம்பீரமாக சிரித்த முகத்துடன் வந்த தலைவரை வாயடைத்து போன நிலையில் பார்த்தேன்! ஒரு கூர்வாளின் நிழலில் பதிவு

1992ஆம் ஆண்டு ஆரம்பத்தல் ஒருநாள் எனது முகாம் ஒரு முக்கியமான உறுப்பினரை வரவேற்பதற்கு தயாராகத் தொடங்கியது. எமக்கு புதிய வெள்ளை சேட்டும், கறுப்பு நிற நீளக் காற்சட்டையும், புதிய சப்பாத்துகளும் தரப்பட்டன.

அங்கு நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு தேனீர், சிற்றுண்டி பரிமாறும் வேலை எமக்கு தரப்பட்டிருந்தது. நாங்கள் அதற்கேற்ற வகையில் தயாராகிக் காத்திருந்தோம். மேலதிக தகவல்கள் எதுவும் எமக்கு தெரிந்திருக்கவில்லை. இயக்கத்தில் எமக்கு தேவயைான தகவல்களை பெற முயற்சி செய்தல் பெரும் குற்றமாகவே கருதப்பட்டது.

சற்று நேரத்தில் பஜரோ வாகனம் ஒன்று வந்து நின்றது. தளபதி சொரண்மும், அவருடன் நவீன ஆயதங்களை தாங்கியிருந்த வேறு போராளிகளும் வந்து இறங்கினர். அவர்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளையும் சுற்றுப் புறங்களையும் ஆராய்ந்ததுடன், அந்த முகாமை சுற்றி வளைத்து காவல் நிற்க தொடங்கினர்.

அதனை தொடர்ந்து இன்னொரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து தலைவர் திரு. பிரபாகரன் அவர்களும் உதவியாளர்களும் இறங்கினர். கம்பீரமாக சிரித்த முகத்துடன் தலைவர் வந்து இறங்கியதை நேரடியாகக் கண்டு வாயடைத்து போன நிலையில் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதுவரை பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் அவரைப் பற்றி அறிந்திருந்தேன். படிக்கிற காலங்களிலும், அவரது புகைப்படங்களை பாதுகாப்பாக சேகரித்து வைப்பது விருப்பமான விடயமாக இருந்தது. இயக்கத்தில் இணைந்த பின்னர் போராளிகள் அவரைப் பற்றிச் சொன்ன நிறையக் கதைகளை கேள்விப் பட்டிருந்தேன். ஆனால் நேரடியாக இவ்வளவு அருகாமையில் தலைவரை காணமுடியும் என நான் கனவு கூடக் கண்டிருக்கவில்லை.

என்னையே கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. எனது பெற்றோரில் வைத்திருந்ததற்கு நிகரான அன்பையும், மதிப்பையும் அவரிடம் வைத்திருந்தேன். எனது போராட்ட வாழ்வின் ஆரம்ப காலத்தில் மறக்க முடியாத ஒரு பொன் நாளாக அது எனக்குள்ளேயே பதிந்திருந்தது.

போர்க்களங்களில் காயமடைந்து தமது அங்கங்களை இழந்திருந்த பெண் போராளிகளை சந்திப்பதற்காகவே தலைவர் அங்கு வருகை தந்திருந்தார்.

1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவுச் சமர்க்களத்தில் தான் முதன் முதலாகப் பெண் போராளிகள் பெரும்படையணியாகப் பங்கு பற்றி அதிகளவு பாரிய காயங்களுடன் அங்கவீனங்களையும் அடைந்திருந்தனர்.

அவர்களுக்காக அடுத்த கட்ட வேலைத் திட்டங்களைப் பற்றி ஆராய்வதற்காகவும், அந்த போராளிகளின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிவதற்காகவுமே தலைவரின் அன்றைய சந்திப்பு ஏற்பாடகியிருந்தது.

அவர்கள் அனைவருக்குமான தேனீர் உபசரணைகளை நாம் மேற்கொண்டோம். போர்க்களத்தில் அங்கங்களை இழந்திருந்த அந்த பெண் போராளிகள் மிகவும் மகிழ்ச்சியாக தலைவருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

தமது பொறுப்பாளர், தளபதிகளிடம் காணப்படும் பயம் தலைவரிடம் இல்லாமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது, குடும்பத்தில் உரிமையுடன் அம்மா, அப்பாவுடன் பேசுவது போல "அண்ணா அண்ணா" என அழைத்து தமது பிரச்சினைகளை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கூட்டம் முடிந்து தலைவர் புறப்படத் தயாராகிய போது, திடீரென எமது பொறுப்பாளரை அழைத்து "மற்றப் பிள்ளைகளையும் கொஞசம் கூப்பிடுங்கோ" என்றதுமே அதுவரை ஒளிந்துப் பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் நேரடியாக தலைவருக்கு முன்னால் போய் நின்றோம்.

சிலருடைய பெயர்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். சிலருடைய பெயர்கள் ஆங்கிலப் பெயர்களைப் போல் இருந்ததை உணர்ந்து, "அர்த்தமுள்ள தமிழ் பெயர்களை இந்த பிள்ளைகளுக்கு வைக்க கூடாதா? பாருங்கள் மில்லர், டாம்போ, போர்க் எனக் கரும்புலி மாவீரர்களது பெயர்கள் உள்ளன. ஒரு காலத்தில் இவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்து போராடினார்கள் என ஆய்வு நடத்த தொடங்கி விடுவார்கள்" என எமது பொறுப்பாளருக்கு கூறினார்.

அடுத்ததாக எமக்கு தரப்பட்டுள்ள வேலைகளைப் பற்றி விசாரித்தார். "வேறு என்ன சொல்லுங்கள்" என்று அவர் எம்மிடம் கேட்டதுதான் தாமதம். "அண்ணா எங்களை பயிற்சி எடுப்பதற்கு அனுப்புங்கள்" என ஒருமித்த குரலில் எல்லோரும் பாடினோம். "ஓகோ.. பயிற்சிக்கு அனுப்பாமலே உங்களை பதுக்கி வைத்திருக்கின்றார்களா? எனச் சிரித்தபடி, உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அணியில் பயிற்சியெடுக்க அனுப்ப முடியாது. வேலைகள் பாதிப்படையும் பத்துப் பத்துப் பேராக ஒவ்வொரு பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கின்றேன்." என கூறி விடை பெற்றுக்கொண்டார்.

http://www.tamilwin.com/ltte/01/116478

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.