Jump to content

சிங்களம் தெரியுமா?


Recommended Posts

சிங்களம் தெரியுமா?

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிய மினிபஸ்ஸில் முதல் பஸ்சை சன நெரிசல் காரணமாக விட்டுவிட்டு அடுத்ததில் ஏறி முன் சீற்றில் ஜாலியா குந்தி இருந்த போது பள்ளி சீருடைகளுடன் ஒரு மாணவர் குழாம். ஒருவரை தவிர அனைவரும் மாணவிகள். அந்த மாணவனும் என்ன நினைத்தானோ அருகில் வந்து அங்கிள் இதில இருக்கலாமா என்று நான் ஏதோ மினிபஸ் உரிமையாளர் போல கேட்டான். நானும் பக்கத்தில் இருந்த குட்டி சீட்டை மடித்து அவனின் வருகைக்கு உதவினேன். 

வந்த குட்டியன் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப்போட்டது. 

சிங்களம் தெரியுமா?

விசரனின் ஒஸ்லோ முருகா கத்தல்தான் மண்டைக்குள்ள முதலில் வந்தது.

சிங்களத்தில் எண்ணவே தெரியாத என்னை இவன் எதுக்கு தமிழில சிங்களம் தெரியுமா என்கின்றான். நானும் புரியாத மாதிரி கதைக்க தொடங்கினேன்.

என்னத்துக்கு யூனிபோர்மொடே எல்லாரும் வாறிங்க?

நாங்க இராமநாதன் கல்லூரிக்கு ஒரு போட்டிக்கு போறம் 

எந்த பள்ளிக்கூடம்?

பண்டத்தரிப்பு இந்து கல்லூரி

உங்கள் பழைய அதிபர் சரவணமுத்துவை தெரியுமா எண்டு கேட்டபின்தான் நானே நாக்கை கடித்தேன். அவர் இளைப்பாறியே ஒரு 40 வருடமாவது இருக்கும்.

நீங்களும் பண்டத்தரிப்பு இந்துவா?

இல்லை எனது நண்பன் உங்குதான் படித்தான், அவனின் அப்பாதான் பழைய அதிபர் சரவணமுத்து.

அப்ப நீங்க எங்கு படித்தநீங்கள்?

யாழ் மத்திய கல்லூரியிலும் மகாஜனா கல்லூரியிலும்

எப்படி இங்கு படித்த ஒருவர் உங்கள் நண்பனானார்? 

இருவரும் மஹாஜனாவில் ஒன்றாக படித்தம். 

இப்போது நாம் வயதை மறந்து நண்பர்களாகினோம்

என்ன போட்டி இண்டைக்கு?

சிங்கள பேச்சு, அங்கிள் நான் பேசி காட்டுறேன் ஒருக்கா சரி பிழை பாக்குறீங்களா?

எனக்கு சிங்களம் தெரியாது அப்பன்

அப்ப உங்களுக்கு தமிழை தவிர வேறு பாஷையே தெரியாதா என்று மண்டையில் சுத்தியலால் அடித்தான்.

இல்லை தமிழ், ஆங்கிலம், நோர்ஸ்க் சரளமாக பேசவரும், எழுதவும், வாசிக்கவும் முடியும், டேனிஷ், சுவீடிஷ், மலையாளம் ஓரளவு புரிந்து கொள்ளவும் முடியும்.

பரவாயில்லை அங்கிள் நான் ஒருமுறை பேசுகின்றேன் சரி பாருங்கள் என்றபடி எனது பதிலுக்கு காத்திராமல் சிங்களத்தில் ஏதோ பேசினான். 

ஒண்ணுமே புரியாவிட்டாலும் அடிக்கடி தமிழ் என்ற வார்த்தை வந்து போனது. தலையை ஆட்டியபடி தமிழின் பெருமை பற்றி சிங்களத்தில் பேசினான் என்று நினைத்து ஆதரவாய் இருந்தேன்..

அப்பன் உங்கட ஹோல்ட் வந்துட்டுது என்று இடை நிறுத்தியபடி வென்று வர வாழ்த்துக்களையும் சொன்னேன்.

இவ்வளவு பாஷை தெரிஞ்ச உங்களுக்கு சிங்களம் தெரியாதென்று பொய்தானே சொல்லுறீங்க என்றபடி இறங்கினான். 

யாரோ காறி மூஞ்சியில துப்பின மாதிரி இருந்தது.

இல்லை, நானே குப்புற படுத்திருந்து முகட்டை நோக்கி துப்ப அது திரும்பி எனது மூஞ்சியில் விழுந்தது போலிருந்தது.

தமிழ் தேசியம் பேசும் விண்ணர்களுக்கு சிங்களம் தெரியாது என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். இனவாதிகளுக்கு அது கர்வமாக கூட இருக்கலாம் - எனக்கு அவமானமாக இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிறிது காலம் பொறுங்கள்.உங்கள் ஆதங்கம் நிறைவேறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் அந்தப் பையன் ஒரு காலத்தில் நன்றாக இருப்பான்.

Link to comment
Share on other sites

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் முகட்டை நோக்கி துப்பினதுடன் விட்டுவிட்டீர்கள் முகட்டை நோக்கி சத்தியெடுத்திருந்தால்  என்னவாகியிருக்கும் - அந்த சத்தியிலேயே முழ்கி செத்துவிட்டிருப்பீர்கள். சிங்களம் தெரியாமல் போனதற்கு நீங்கள் அவமானப்படவேண்டிய தேவையே கிடையாது. சிங்களத்தை ஒரு மொழியாக சுயவிருப்பத்தின் பேரில் கற்பதற்கும்  அம் மொழியை திணித்து நாட்டை சிங்களமயமாக்கலுக்கும் நிறையவே வித்தியாசமுண்டு என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளின் பேரினவாத போக்கும் இலங்கை சிங்களவர்களின் நாடு என்ற எண்ணமும் சிங்களவர்கள் மத்தியில் நீங்கி மொழிககளுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். வேற்று மொழியால் தாய்மொழி சாவதை எவருமே அனுமதிக்கமாட்டார்கள். தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள எத்தனையோ பெயர்பலகைகள்  அறிவிப்பு பதாகைகளில் தமிழ் தவிர்க்கப்பட்டு பிழையாக எழுதப்பட்டு அல்லது ஓரங்கட்டப்பட்டு சிங்களத்தையே பிரதான மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவதும் கண்டனத்துக்குரியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

வெள்ளைக்காரன் நாடுகளில் நாங்கள் குடியேறிகள்!

அவர்கள் தங்கள் மொழியை எங்கள் மீது திணிப்பதில்லை! நாங்களாகவே எமது தேவைகளுக்காகப் படிக்கிறோம்! அவுசிலும் ஆங்கிலம் தெரியாத பலர் பல வருடங்களாக வாழுகின்றார்கள்! அவர்கள் மீது மொழி திணிக்கப் படுவதில்லை!

ஆனால் இலங்கையில் நாங்கள் பூர்வீக குடிகள்!

சொந்த மொழியில் எமது தேவைகளை நிறைவு செய்ய வகை செய்ய வேண்டியது எமது அரசின் கடமை!

சிங்கள மொழி எமதினத்தின் மீது பலவந்தமாகத் திணிக்கப் படுகின்றது! அது தான் பிரச்சனையே!

பல மேற்கத்தைய நாடுகளில்...சீனமொழி, இந்தி, உருது, தமிழ் போன்ற மொழிகளில் தொடர்பாடல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது!

சிங்களத்தை விடவும்...தமிழ் அதிக நாடுகளிலும், அதிக மக்களாலும் பேசப்படுகின்றது!

உங்கள் கருத்துப்படி...பார்த்தாலும்..சிங்களத்துக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு! கரையோரச் சிங்களவர்கள் எல்லோரும் ஆதித் தமிழர்களே!

எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது?

 

எல்லா நாய்களும்... தங்கள் மொழியில் குரைக்கும் போது....தமிழ் நாய் மட்டும் எதற்காக இன்னொரு நாயின் மொழியில் குரைக்க வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள்?

யூத நாய்கள்...உலக மொழிகளை அறிந்திருந்தும்...தங்கள் நாட்டில் யூத மொழியிலேயே குரைக்க விரும்புகின்றனவே? அது ஏன்?

எங்களைச் சிங்களத்தில் குரைக்கும் படி கூறும்  வேற்றுமொழி நாய்கள் தமிழில் குரைக்க ஏன் பின்னிற்கின்றன?

 

1548167_orig.jpg

Link to comment
Share on other sites

"எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது? "  அவர்கள் ஏன் தமிழ் படிக்க கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

புதுசா ஒரு நல்லிணக்க ஆதரவாளார் போல கிடக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியை ஒருவன் விரும்பி கற்கும் போது....இருக்கும் ஆர்வம் வேறு,
அந்த மொழியையையோ, மதத்தையோ திணிக்கும் போது.... அதில் வெறுப்புத் தான் ஏற்படும்.
அதில்... சிங்களமும், புத்த சமயமும் முதலிடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

யாரோ காறி மூஞ்சியில துப்பின மாதிரி இருந்தது.

இல்லை, நானே குப்புற படுத்திருந்து முகட்டை நோக்கி துப்ப அது திரும்பி எனது மூஞ்சியில் விழுந்தது போலிருந்தது.

தமிழ் தேசியம் பேசும் விண்ணர்களுக்கு சிங்களம் தெரியாது என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். இனவாதிகளுக்கு அது கர்வமாக கூட இருக்கலாம் - எனக்கு அவமானமாக இருக்குது.

சிவா அண்ணை 
இப்பிடி முகத்தில் துப்ப்பிக்கொள்ளும்  அளவுக்கு சிங்களம் தெரியாதது ஒரு குறை இல்லை 
அத்துடன் இந்த மொழியை படிப்பதால் இந்த கேடு கேட்ட நாட்டில் மட்டுமே ஏதாவது புடுங்கலாம். 

தெரிந்து  வைத்திருந்தால் நல்லது ...ஆனால் கட்டாயம் இல்லை 

இவ்வளவு பாஷை தெரிந்தும் உங்களுக்கு தமிழ் தெரியவில்லையே என்று அந்த மாணவன் சொல்லியிருந்தால் நீங்கள் கவலைப்படுவதில் அர்த்தம் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கு முதல் ஒழுங்காத் தமிழையும் அதற்கடுத்ததாக ஆங்கிலத்தையும் எல்லோரும் படிக்க வேணும் பாருங்கோ.  ஆங்கிலம் சர்வதேசமொழி.  இனிவாற காலத்தில சீன மாண்டரீனுக்கு மூன்றாவது இடத்தைக் கொடுக்க வேணும்.  அதுக்குப் பிறகு சிங்களம் படிக்க மூளையில இடமிருந்தாப் படிக்கலாம்.  இந்தியாவில தமிழ்நாட்டிலயும் இதே மாதிரி மூளையில இடமிருந்தா மட்டும் இந்தி படிக்கலாம்.

Link to comment
Share on other sites

சிங்களவருக்கு தமிழ் தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு யாரும் புகுத்தவில்லை. தமிழர்களும் அப்படித்தான்.புகுத்தி சிங்களம் படிக்க வேண்டிய அவசியம் என்ன? விரும்பினால் யாரும் எந்த மொழியும் படிக்கலாம். இதில் சிங்களம் தெரியாததால் வெட்கித்தலை குனிய என்ன உள்ளது?

கனடாவில் அரச கரும மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் உண்டு. ஆங்கிலம் பேச தெரிந்தவர் பிரெஞ் தெரியாததால் வெட்கி தலை குனியவில்லை. அதே போல் பிரெஞ் தெரிந்தவர் ஆங்கிலம் தெரியவில்லை என வெட்கி தலை குனியவில்லை. இது எமக்கும் பொருந்தும்.எமது தாழ்வு மனப்பான்மை தான் வெட்கித்தலை குனிய  காரணம் என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா,

இரண்டு நட்ட்களுக்கு முன்புதான் கொழும்பில் கடந்த பத்து வருடங்களாக இலக்கத்தகடு பெற்றுக்கொள்ளாத எனது மோட்டர் சைக்கிளுக்கு இலக்கத் தகடு பெற்றிருந்தேன் அதுவும் கொழும்பு ஆர் எம் பியில் எனக்குச் சிங்களத்தில் சுட்டுப்போட்டாலும் ஒரு சொல்லுகூட வராது. தவிர சிங்களம் தெரிந்திருந்தால் சிலசமயம் அலுவல் நடைபெற்றிருக்காது காரணம் மோட்டார் வாகனப் போக்குவரத்து இணை ஆணையாளர் இவ்விடையம் முடிய நிறைய நாட்கள் எடுக்கும் (கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்) எனக்கூற நான் பேந்தப்பேந்த முழிக்கிறதைப் பார்த்து பரிதாபப்பட்டு பழைய வர்த்தமாணியின் அறிவித்தலின் நகலை எடுத்து, அதில் எதையோ எழுதி, எனது விண்ணப்பத்துடன் இணைத்து, அலுவலை மனிசன் முடிச்சுக்கொடுத்திட்டுது.

சத்தியமாகச் சொல்லுறன் இவ்வளவுக்கும் ஒருசதமேனும் நான் இதற்காகக் கையூட்டுக்கொடுக்கவில்லை.

எனது எண்ணம் சிங்களம் தெரிந்தால் இது நடக்காது.

ஆனால் யாழ்ப்பாணத்தில் எல்லா டுயூட்டரிக் கொட்டில்களிலும் சிங்களம் பேச எழுதப் படிப்பிகிறார்கள். தவிர பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் சிங்கள அறிவு சொல்லிக்கொள்ளும்படி உண்டு ஆளுக்காள் மாறுபடும்.

சிங்கள மொழித்தேர்வில் சித்தியடைந்த தமிழ் அரச உத்தியோகத்தர்களுக்கும் தமிழ் மொழி தெரிந்த சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கும் மட்டுமே பதவி உயர்வு இங்கிரிமென்ட் இவைகள் கிடக்கும். தவிர மினிபஸ்சில் முன் சீட்டில் அமர்வதற்காக சிங்களம் அறிந்திருக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பல்கலைக்கழகங்களில் கூட ஆங்கிலம் தான் பாட மொழி.

இங்க சிலர் நல்லா விடுப்புப் காட்டினம். tw_blush::rolleyes:

சிங்களவனே ஆங்கிலம் கதைக்கிறதில பெருமைப்படுறான். இவை என்னடான்னா...........................  தமிழர்களிடம் சிங்களத்தைப் புகுத்தினமாம்.

முதல்ல சர்வதேச மொழியை ஒழுங்காப் படிங்க. எல்லாரும் எல்லாரையும் புரிஞ்சு கொள்ளலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக துபாயில் கேட்டுக் கேட்டு  புளித்துப்போன கேள்வி..!

இங்கே பெரும்பாலும் டாக்ஸிகளில் போகும்போது ஆசிய நாட்டவராக இருந்தால் கேட்கும் முதல் கேள்வி..

ஒருமுறை 'தெய்ரா துபாய்' செல்ல டாக்ஸியில் ஏறியவுடன் டாக்ஸி ஓட்டுநர் கேட்டது

"ஹிதர் ஹை..?"

நான் கேள்விக்குறியுடன் அவரின் முகத்தை நோக்க, மறுபடியும் அதே கேள்வி..!

"உங்கள் மொழியை புரிந்துகொள்ள முடியவில்லை..!" என அழுத்தமாக ஆங்கிலத்தில் கூறியவுடன் இறங்கினார்... "சாரி, நீங்கள் எங்கே போகவேண்டும்..?"

"நாஸர் ஸ்கொயர்..!" என்றேன்.

பின் சில நிமிடங்களில் நிலமை சகஜமானதும், சினேகமாக அவர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார்,

"உங்களுக்கு இந்தி தெரியாதா..?"

"தெரியாது"

"இந்தி உங்கள் நாட்டு மொழியல்லவா..?"

"இல்லை, எனது நாட்டு மொழி தமிழ்!"

"உங்கள் நாடு எது..? எங்கே இருக்கிறது..?"

"தமிழ்நாடு, சென்னை"

"தமிழ்நாடு, இந்தியாவுடான அங்கம் தானே? உங்கள் தேசிய மொழியான(?) இந்தியை ஏன் கற்றுக்கொள்ளவில்லை..?"

"60 வருடங்களுக்குமுன் இந்தியா என்ற நாடே இல்லை, ஆனால் என் தமிழ்ப் பகுதி, பல்லாயிரம் ஆண்டுகளாக தனித்துவமாக, தனி நாடாக இருந்தது..இப்பொழுதும் தொடர்கிறது..!"

"தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பேசும் பொழி இந்தி. இந்தியை படித்தால் இந்தியாவில் எங்கும் பிழைக்கலாம்..!"

(ஸ்ஸப்பா.. இம்மாதியான சிந்தனையைக் கேட்டுக்கேட்டு வெறுத்தே போச்சு!)

"தேவை இல்லை, ஆங்கிலத்தை படித்தால் உலகில் எங்கும் பிழைக்கலாம், உலகத்தின் சிறுபகுதிதான் இந்தியா. என் தொழிலிற்கு தேவைப்பட்டால் அரபியை படிப்பேனேயொழிய இந்தியை அல்ல. எந்த மொழியை கற்பது என்பது தேவையை பொருத்தது..இந்தி, 40சதவீத வட இந்திய மக்களால் மட்டுமே பேசப்படுகிறது..இப்போழுதும் இந்தி பேசாத மக்களிடம் அது வலிந்து திணிக்கப்படுகிறது..!"

"முடிவாக சொல்லுங்கள், நீங்கள் இந்தியன் இல்லையா..?"

"இல்லை, நான் தமிழன்..!"

பெரும்பாலும் இத்தோடு உரையாடல் முடிந்து வேறொரு பொருள் சம்மந்தமாக தொடரும்.

சில டாக்ஸி ஓட்டுநர்கள் மிக விவரமாக, "உங்கள் கடவுச்சீட்டில் என்ன எழுதியுள்ளது..?" என வளைத்துக் கேட்பார்கள்..!

"எழுதியுள்ளது இந்தியன், ஆனால் தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

டாக்ஸி ஓட்டுநர் அமைதியாகிவிடுவார்..

இது ஒரு தொடர்கதை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தான் காதலித்த ஆணோடு படுப்பதிலும் 
ஒரு காம வெறி பிடித்த வல்லுறவு கரனுடன் படுப்பதிலும் 

நிகழ்வது என்னவோ ஓன்றுதானே ?
என்றுதான் ............. இனி விட்டு கொடுப்பு வீரர்கள் 
வாய் வீச்சு தொடங்க போகிறது என்று நினைக்கிறேன்.


வல்லுறவு கொண்ட இராணுவத்தினர் மீது ஐ நா வில் வழக்குப்போட நிற்கும் 
தமிழர்களை நினைத்து ... வெட்க்கி தலை குனிகிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மொழியையும் தேவைக்காகவும், சுய விருப்பத்திற்காகவும்தான் கற்கின்றோம்.. விருப்பமில்லாத எதையும் (மொழியாகட்டும், வேறு விடயங்களாகட்டும்) கற்பது இலகுவானதல்ல.

சிங்களவர்கள் தமிழர்களை மேலாதிக்கம் செய்யும்வரை பெரும்பாலான தமிழர்களுக்கு சிங்களம் படிப்பதில் நாட்டம் இருக்காது. அத்தோடு சிங்களம் திராவிடக் குடும்ப மொழியாக (மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற) இல்லாததால் அதன் அந்நியத்தன்மையே மொழியை அறியவிடுவதில்லை.

இதுபோன்ற காரணங்களால்தான் எமது தலைமுறை சிங்களத்தைக் கற்கவில்லை.

 

ஆனால் தற்போது இனங்களுக்கான ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் உருவாக்க இலங்கைத் தேசியம் என்று ஒற்றைத் தேசியத்தை நிலைநாட்டும் செயற்பாடே நடக்கின்றது. இதற்கு தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் தெரிந்துகொள்ளவேண்டும்தான். ஆனால் சிங்களவர்கள் தமிழர்களைப் படிப்பது நடக்காது. எனவே சிறுகச் சிறுக தமிழ் மொழி இல்லாமல் இலங்கை முழுவதும் சிங்களமாகவே மாறிவிடும்.

புலம்பெயர்ந்த எமது தலைமுறையும் தாம் வசிக்கும் நாடுகளின் மொழிக்காரர்கள் ஆகிவிடுவார்கள் (தமிழர்கள் என்ற அடையாளத்தோடு!).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு பரபரப்புக்காக.......ஜீவன்  கந்தாந்தரட்ட போமஸ்துதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட கொழும்பு சென்றால் பே  பே பே பே என்று முளிக்கிறதுதான் ஏதோ ஆங்கிலம் அரைகுறை வேற கொஞ்சம் சிங்களத்தையும்  தூக்கி போடுவன் அவன் அவன் ட  மொழியை மறக்காமல் இருக்கும் வரைக்கும் பேசி விடுவேன்  ஹிஹிஹிஹி

சில நேரம் சைகை மட்டுமே  என்ன வாழ்க்கைகயடா இரு மொழி ஒரு நாடு ஆனால் இங்கே சிங்களவர்கள் தமிழ் கற்க வேண்டும் அதே போல் தமிழர்களும் சிங்களம் கற்க வேண்டும்  தேவைகளுக்காக சிங்கள பகுதிகளுக்கு செல்லும் போது ( இல‌ங்கையில் வசிப்போர் ):unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசக்கூடிய சிங்கள மக்களை விடச் சிங்களம் பேசத் தெரிந்த தமிழர்களே இலங்கையில் அதிகம்.

56 இல் தனிச் சிங்களச் சட்டம்  சிங்கள அரசினால் திணிக்கப்பட்டதால்  மட்டுமே

தமிழர்கள் சிங்கள மொழியை வெறுக்க ஆரம்பித்தனர்.

இப்போது வெட்கித் தலை குனிய ஒன்றுமே இல்லை
சிங்கள மொழியைக் கற்காதவர்கள் வீரத்தமிழர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து பொதுவாக கொழும்பையும் அதன் சுற்றுப்புறங்களிம் பிறந்து வளர்ந்த தமிழர்கள் சிங்களம் கதைக்க கூடியவர்களே.

இதற்கு காரணம் எங்களை சுற்றி வசிப்பவர்கள் சிங்களவர்கள் என்றபடியினால் நாங்களும் அவர்க‌ளுடன் இதயத்தால் இணந்து ஒன்றாக வாழத்தொடங்கிவிட்டதால் அவர்களும் எங்களை சக மனிதர்களாக மதித்து தாங்கள் சகோதர்களை போல நடத்துகின்றார்கள். அவர்கள் வீட்டில் எந்த நல்ல/கெட்ட விடயம் நடந்தாலும் நாங்கள் கலந்து கொள்வோம் அதுபோல் அவர்களும் எங்கள் வீட்டிட்க்கு வருவார்கள் எனவே எனது சிறுவயது முதல் அவர்களது மொழி நன்கு தெரியும். அவர்களுக்கும் தமிழ் தெரியும். இதனால் எங்களது அடையாளத்தை நாங்கள் ஒருபோது இழக்கவில்லை.

இலங்கையில் இரண்டு மொழிகள் உண்டு, தமிழ் அல்லது சிங்களம் உங்களுக்கு விருப்ப‌மானமொழியில் நீங்கள் கல்வி கற்கலாம். 
(இப்பொழுது பெரும்பாலும் எல்லோரும் ஆங்கிலத்தில்தான் கற்கின்றார்கள்), உயர்கல்வி ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படல் வேண்டும்.
 
வடக்கு கிழ‌க்கை  சேந்தவர்களுக்கு சிங்களம் தெரியாமைக்கு காரணம் இலங்கையின் இனப்பரம்பலே. வடக்கில் தமிழர்கள் அதிகம் எனவே அங்கு பிறந்து வாழும் சிங்களவன் அழகாக தமிழ் க‌தைப்பான், அதேபோல் தெற்கில் வாழும் தமிழன் சிங்களத்தில் நன்கு உரையாடுவான். 

இங்கு யாரையும் யாரும் மேலாதிக்கம் செய்யவில்லை, அரசிய ல்வாதி ஊத்தைகள்தான் இந்த மாதிரியான மேலாதிக்கத்தையும் இனவெறியையும் பரப்புகின்றார்கள். மேலும் இனம் என்று வரும்போது எல்லோரும் இனவாதிகள்தான் இதில் தமிழர்கள் சிங்களவர்கள் என வேறுபாடில்லை.

ஓரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் சிறுபான்மையாகவும் இருந்தால் என்ன நடக்கும்?  

இங்கு கருத்தெழுதும் பலர் சிங்கள மக்களுடன் சரியாக ஒன்றிணைந்து வாழவில்லை, அவர்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை. எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களது நியாயமான போராட்டத்திற்கா காரணங்களை அடிமட்ட/பாமர/கிராம‌ சிங்கள மக்களிடம் சரியான முறையில் விளங்கப்படுத்தியுள்ளார்கள்? அல்லது கொண்டு சென்றுளார்கள்?

சிங்களவன் அடிக்கின்றான்/சிங்களவன் இன்வாதி/சிங்களவன் துவேசி
இதுதான் தமிழர்களின் கூப்பாடு. சிங்களவன் கொடியா என கத்தினால், அடோ உம்பகே ரடே உம்படம அனுராதபுரங் எயாட யன்ட பே, பலயங் ஹுத்தோ எனக் நாங்களும் திருப்பி கத்த வேண்டும்.

அதை விட்டிட்டு நாட்ட விட்டு ஓடுகிறது, பிறகு ஜெர்மனி நல்லம் இங்கிலாந்து சரியில்லை என அலட்டுவது. பிரான்சில் ஆங்கிலம் இல்லை என பிள்ளைகள் படிப்பிற்காக இங்கிலாந்து ஓடுவது,பிறகு brit-exit கோசம் போடுவது, போலிஷ்காரர் எல்லம் இங்கு வருகின்றார்கள் இங்கிலாந்து சரியில்லை என கனடா அல்லது அவுஸ் ஓடுவது, இப்படியே எதிலும் திருப்பதியற்று வாழ்க்கை முழுவது நாடோடிபோல் ஓடிக்கொண்டிருப்பர்கள்.

 
   
 

7 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது


 

7 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது

நிச்சயம் அல்ல. இந்த இந்தியன் 'tag' அதிக தலைமுறைகள் நீடிக்காது என்றே தோன்றுகிறது.

தமிழன் என்ற எண்ணமே இன்னமும் இந்தியாவில் ஓரளவேனும் தனித்துவாமாக இருக்க உதவுகிறது.. எந்த உணர்வுமின்றி, விழிப்பின்றியிருந்தால் பீகாரிகள் மாதிரி நிச்சயம் பின் தங்கியிருப்போம்..

பாரிய மனித அழிவிற்கான முதல் காரணி தமிழர்களின் ஒற்றுமையின்மை. கேரளாக்காரன்களால் ஏன் தில்லியில் ஆளுமை செலுத்த முடிகிறதென்றால் அவர்களின் ஒற்றுமையே.அதை நீங்கள் வசிக்கும் கத்தாரிலும் காணலாம்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

நிச்சயம் அல்ல. இந்த இந்தியன் 'tag' அதிக தலைமுறைகள் நீடிக்காது என்றே தோன்றுகிறது.

தமிழன் என்ற எண்ணமே இன்னமும் இந்தியாவில் ஓரளவேனும் தனித்துவாமாக இருக்க உதவுகிறது.. எந்த உணர்வுமின்றி, விழிப்பின்றியிருந்தால் பீகாரிகள் மாதிரி நிச்சயம் பின் தங்கியிருப்போம்..

பாரிய மனித அழிவிற்கான முதல் காரணி தமிழர்களின் ஒற்றுமையின்மை. கேரளாக்காரன்களால் ஏன் தில்லியில் ஆளுமை செலுத்த முடிகிறதென்றால் அவர்களின் ஒற்றுமையே.அதை நீங்கள் வசிக்கும் கத்தாரிலும் காணலாம்..

 

ராச வன்னியன் அண்ணை  இந்திய  தமிழர்களை இந்திய  வேறு மாநிலத்தவர் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை நான் வெளிநாட்டில் இருக்கும் போது பார்த்த ஒன்று உதாரணம் மலையாளி, பஞ்சாபி கேட்டா மதராசி என்பார்கள் ஏனென்றால் வெள்ளையன் இந்தியாவை பிடிக்க அவர்கள் தமிழ் நாட்டில் தானாம் கால் ஊன்றினார்கள் என்று சொன்னான் அது உன்மையா விளக்கம் த‌ரவும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, முனிவர் ஜீ said:

ராச வன்னியன் அண்ணை  இந்திய  தமிழர்களை இந்திய  வேறு மாநிலத்தவர் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை நான் வெளிநாட்டில் இருக்கும் போது பார்த்த ஒன்று உதாரணம் மலையாளி, பஞ்சாபி கேட்டா மதராசி என்பார்கள் ஏனென்றால் வெள்ளையன் இந்தியாவை பிடிக்க அவர்கள் தமிழ் நாட்டில் தானாம் கால் ஊன்றினார்கள் என்று சொன்னான் அது உன்மையா விளக்கம் த‌ரவும் :rolleyes:

இல்லை முனி..

வட இந்தியர்கள், தமிழர்களை அந்நியமாக பார்க்கக் காரணம், நாங்கள் இந்தியை உள்ளே விடவில்லை.. வட இந்தியர்களின் மொழியை, அவர்களின் ஆதிக்கத்தை துரத்திய/எதிர்க்கும் முதல்மாநிலம் இன்னமும் தமிழ்நாடுதான். அத்தோடு சமீபத்திய ராசீவ் காந்தியின் கொலையும், பழங்கால இ(ந்)திகாச கதையான இராவணன் - ராமன் மோதல்களும் காரணம்.

வெள்ளையன் இந்தியாவில் காலூன்றியது கல்கத்தாவில்தான்.. பின்னர்தான் 'இந்தியா' என சொல்லப்படும் பகுதிகளை ஆண்ட சிற்றரசுகளின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி தன் ஆளுமையை தொடங்கினான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

வெள்ளைக்காரன் நாடுகளில் நாங்கள் குடியேறிகள்!

அவர்கள் தங்கள் மொழியை எங்கள் மீது திணிப்பதில்லை! நாங்களாகவே எமது தேவைகளுக்காகப் படிக்கிறோம்! அவுசிலும் ஆங்கிலம் தெரியாத பலர் பல வருடங்களாக வாழுகின்றார்கள்! அவர்கள் மீது மொழி திணிக்கப் படுவதில்லை!

ஆனால் இலங்கையில் நாங்கள் பூர்வீக குடிகள்!

சொந்த மொழியில் எமது தேவைகளை நிறைவு செய்ய வகை செய்ய வேண்டியது எமது அரசின் கடமை!

சிங்கள மொழி எமதினத்தின் மீது பலவந்தமாகத் திணிக்கப் படுகின்றது! அது தான் பிரச்சனையே!

பல மேற்கத்தைய நாடுகளில்...சீனமொழி, இந்தி, உருது, தமிழ் போன்ற மொழிகளில் தொடர்பாடல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது!

சிங்களத்தை விடவும்...தமிழ் அதிக நாடுகளிலும், அதிக மக்களாலும் பேசப்படுகின்றது!

உங்கள் கருத்துப்படி...பார்த்தாலும்..சிங்களத்துக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு! கரையோரச் சிங்களவர்கள் எல்லோரும் ஆதித் தமிழர்களே!

எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது?

 

எல்லா நாய்களும்... தங்கள் மொழியில் குரைக்கும் போது....தமிழ் நாய் மட்டும் எதற்காக இன்னொரு நாயின் மொழியில் குரைக்க வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள்?

யூத நாய்கள்...உலக மொழிகளை அறிந்திருந்தும்...தங்கள் நாட்டில் யூத மொழியிலேயே குரைக்க விரும்புகின்றனவே? அது ஏன்?

எங்களைச் சிங்களத்தில் குரைக்கும் படி கூறும்  வேற்றுமொழி நாய்கள் தமிழில் குரைக்க ஏன் பின்னிற்கின்றன?

 

1548167_orig.jpg

அண்ணை

அ விலிருந்தா??

அது தூங்குபவர்களுக்கு......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.