Jump to content

சிங்களம் தெரியுமா?


Recommended Posts

சிங்களம் தெரியுமா?

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிய மினிபஸ்ஸில் முதல் பஸ்சை சன நெரிசல் காரணமாக விட்டுவிட்டு அடுத்ததில் ஏறி முன் சீற்றில் ஜாலியா குந்தி இருந்த போது பள்ளி சீருடைகளுடன் ஒரு மாணவர் குழாம். ஒருவரை தவிர அனைவரும் மாணவிகள். அந்த மாணவனும் என்ன நினைத்தானோ அருகில் வந்து அங்கிள் இதில இருக்கலாமா என்று நான் ஏதோ மினிபஸ் உரிமையாளர் போல கேட்டான். நானும் பக்கத்தில் இருந்த குட்டி சீட்டை மடித்து அவனின் வருகைக்கு உதவினேன். 

வந்த குட்டியன் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப்போட்டது. 

சிங்களம் தெரியுமா?

விசரனின் ஒஸ்லோ முருகா கத்தல்தான் மண்டைக்குள்ள முதலில் வந்தது.

சிங்களத்தில் எண்ணவே தெரியாத என்னை இவன் எதுக்கு தமிழில சிங்களம் தெரியுமா என்கின்றான். நானும் புரியாத மாதிரி கதைக்க தொடங்கினேன்.

என்னத்துக்கு யூனிபோர்மொடே எல்லாரும் வாறிங்க?

நாங்க இராமநாதன் கல்லூரிக்கு ஒரு போட்டிக்கு போறம் 

எந்த பள்ளிக்கூடம்?

பண்டத்தரிப்பு இந்து கல்லூரி

உங்கள் பழைய அதிபர் சரவணமுத்துவை தெரியுமா எண்டு கேட்டபின்தான் நானே நாக்கை கடித்தேன். அவர் இளைப்பாறியே ஒரு 40 வருடமாவது இருக்கும்.

நீங்களும் பண்டத்தரிப்பு இந்துவா?

இல்லை எனது நண்பன் உங்குதான் படித்தான், அவனின் அப்பாதான் பழைய அதிபர் சரவணமுத்து.

அப்ப நீங்க எங்கு படித்தநீங்கள்?

யாழ் மத்திய கல்லூரியிலும் மகாஜனா கல்லூரியிலும்

எப்படி இங்கு படித்த ஒருவர் உங்கள் நண்பனானார்? 

இருவரும் மஹாஜனாவில் ஒன்றாக படித்தம். 

இப்போது நாம் வயதை மறந்து நண்பர்களாகினோம்

என்ன போட்டி இண்டைக்கு?

சிங்கள பேச்சு, அங்கிள் நான் பேசி காட்டுறேன் ஒருக்கா சரி பிழை பாக்குறீங்களா?

எனக்கு சிங்களம் தெரியாது அப்பன்

அப்ப உங்களுக்கு தமிழை தவிர வேறு பாஷையே தெரியாதா என்று மண்டையில் சுத்தியலால் அடித்தான்.

இல்லை தமிழ், ஆங்கிலம், நோர்ஸ்க் சரளமாக பேசவரும், எழுதவும், வாசிக்கவும் முடியும், டேனிஷ், சுவீடிஷ், மலையாளம் ஓரளவு புரிந்து கொள்ளவும் முடியும்.

பரவாயில்லை அங்கிள் நான் ஒருமுறை பேசுகின்றேன் சரி பாருங்கள் என்றபடி எனது பதிலுக்கு காத்திராமல் சிங்களத்தில் ஏதோ பேசினான். 

ஒண்ணுமே புரியாவிட்டாலும் அடிக்கடி தமிழ் என்ற வார்த்தை வந்து போனது. தலையை ஆட்டியபடி தமிழின் பெருமை பற்றி சிங்களத்தில் பேசினான் என்று நினைத்து ஆதரவாய் இருந்தேன்..

அப்பன் உங்கட ஹோல்ட் வந்துட்டுது என்று இடை நிறுத்தியபடி வென்று வர வாழ்த்துக்களையும் சொன்னேன்.

இவ்வளவு பாஷை தெரிஞ்ச உங்களுக்கு சிங்களம் தெரியாதென்று பொய்தானே சொல்லுறீங்க என்றபடி இறங்கினான். 

யாரோ காறி மூஞ்சியில துப்பின மாதிரி இருந்தது.

இல்லை, நானே குப்புற படுத்திருந்து முகட்டை நோக்கி துப்ப அது திரும்பி எனது மூஞ்சியில் விழுந்தது போலிருந்தது.

தமிழ் தேசியம் பேசும் விண்ணர்களுக்கு சிங்களம் தெரியாது என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். இனவாதிகளுக்கு அது கர்வமாக கூட இருக்கலாம் - எனக்கு அவமானமாக இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிறிது காலம் பொறுங்கள்.உங்கள் ஆதங்கம் நிறைவேறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் அந்தப் பையன் ஒரு காலத்தில் நன்றாக இருப்பான்.

Link to comment
Share on other sites

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் முகட்டை நோக்கி துப்பினதுடன் விட்டுவிட்டீர்கள் முகட்டை நோக்கி சத்தியெடுத்திருந்தால்  என்னவாகியிருக்கும் - அந்த சத்தியிலேயே முழ்கி செத்துவிட்டிருப்பீர்கள். சிங்களம் தெரியாமல் போனதற்கு நீங்கள் அவமானப்படவேண்டிய தேவையே கிடையாது. சிங்களத்தை ஒரு மொழியாக சுயவிருப்பத்தின் பேரில் கற்பதற்கும்  அம் மொழியை திணித்து நாட்டை சிங்களமயமாக்கலுக்கும் நிறையவே வித்தியாசமுண்டு என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளின் பேரினவாத போக்கும் இலங்கை சிங்களவர்களின் நாடு என்ற எண்ணமும் சிங்களவர்கள் மத்தியில் நீங்கி மொழிககளுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். வேற்று மொழியால் தாய்மொழி சாவதை எவருமே அனுமதிக்கமாட்டார்கள். தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள எத்தனையோ பெயர்பலகைகள்  அறிவிப்பு பதாகைகளில் தமிழ் தவிர்க்கப்பட்டு பிழையாக எழுதப்பட்டு அல்லது ஓரங்கட்டப்பட்டு சிங்களத்தையே பிரதான மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவதும் கண்டனத்துக்குரியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

வெள்ளைக்காரன் நாடுகளில் நாங்கள் குடியேறிகள்!

அவர்கள் தங்கள் மொழியை எங்கள் மீது திணிப்பதில்லை! நாங்களாகவே எமது தேவைகளுக்காகப் படிக்கிறோம்! அவுசிலும் ஆங்கிலம் தெரியாத பலர் பல வருடங்களாக வாழுகின்றார்கள்! அவர்கள் மீது மொழி திணிக்கப் படுவதில்லை!

ஆனால் இலங்கையில் நாங்கள் பூர்வீக குடிகள்!

சொந்த மொழியில் எமது தேவைகளை நிறைவு செய்ய வகை செய்ய வேண்டியது எமது அரசின் கடமை!

சிங்கள மொழி எமதினத்தின் மீது பலவந்தமாகத் திணிக்கப் படுகின்றது! அது தான் பிரச்சனையே!

பல மேற்கத்தைய நாடுகளில்...சீனமொழி, இந்தி, உருது, தமிழ் போன்ற மொழிகளில் தொடர்பாடல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது!

சிங்களத்தை விடவும்...தமிழ் அதிக நாடுகளிலும், அதிக மக்களாலும் பேசப்படுகின்றது!

உங்கள் கருத்துப்படி...பார்த்தாலும்..சிங்களத்துக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு! கரையோரச் சிங்களவர்கள் எல்லோரும் ஆதித் தமிழர்களே!

எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது?

 

எல்லா நாய்களும்... தங்கள் மொழியில் குரைக்கும் போது....தமிழ் நாய் மட்டும் எதற்காக இன்னொரு நாயின் மொழியில் குரைக்க வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள்?

யூத நாய்கள்...உலக மொழிகளை அறிந்திருந்தும்...தங்கள் நாட்டில் யூத மொழியிலேயே குரைக்க விரும்புகின்றனவே? அது ஏன்?

எங்களைச் சிங்களத்தில் குரைக்கும் படி கூறும்  வேற்றுமொழி நாய்கள் தமிழில் குரைக்க ஏன் பின்னிற்கின்றன?

 

1548167_orig.jpg

Link to comment
Share on other sites

"எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது? "  அவர்கள் ஏன் தமிழ் படிக்க கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

புதுசா ஒரு நல்லிணக்க ஆதரவாளார் போல கிடக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியை ஒருவன் விரும்பி கற்கும் போது....இருக்கும் ஆர்வம் வேறு,
அந்த மொழியையையோ, மதத்தையோ திணிக்கும் போது.... அதில் வெறுப்புத் தான் ஏற்படும்.
அதில்... சிங்களமும், புத்த சமயமும் முதலிடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

யாரோ காறி மூஞ்சியில துப்பின மாதிரி இருந்தது.

இல்லை, நானே குப்புற படுத்திருந்து முகட்டை நோக்கி துப்ப அது திரும்பி எனது மூஞ்சியில் விழுந்தது போலிருந்தது.

தமிழ் தேசியம் பேசும் விண்ணர்களுக்கு சிங்களம் தெரியாது என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். இனவாதிகளுக்கு அது கர்வமாக கூட இருக்கலாம் - எனக்கு அவமானமாக இருக்குது.

சிவா அண்ணை 
இப்பிடி முகத்தில் துப்ப்பிக்கொள்ளும்  அளவுக்கு சிங்களம் தெரியாதது ஒரு குறை இல்லை 
அத்துடன் இந்த மொழியை படிப்பதால் இந்த கேடு கேட்ட நாட்டில் மட்டுமே ஏதாவது புடுங்கலாம். 

தெரிந்து  வைத்திருந்தால் நல்லது ...ஆனால் கட்டாயம் இல்லை 

இவ்வளவு பாஷை தெரிந்தும் உங்களுக்கு தமிழ் தெரியவில்லையே என்று அந்த மாணவன் சொல்லியிருந்தால் நீங்கள் கவலைப்படுவதில் அர்த்தம் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கு முதல் ஒழுங்காத் தமிழையும் அதற்கடுத்ததாக ஆங்கிலத்தையும் எல்லோரும் படிக்க வேணும் பாருங்கோ.  ஆங்கிலம் சர்வதேசமொழி.  இனிவாற காலத்தில சீன மாண்டரீனுக்கு மூன்றாவது இடத்தைக் கொடுக்க வேணும்.  அதுக்குப் பிறகு சிங்களம் படிக்க மூளையில இடமிருந்தாப் படிக்கலாம்.  இந்தியாவில தமிழ்நாட்டிலயும் இதே மாதிரி மூளையில இடமிருந்தா மட்டும் இந்தி படிக்கலாம்.

Link to comment
Share on other sites

சிங்களவருக்கு தமிழ் தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு யாரும் புகுத்தவில்லை. தமிழர்களும் அப்படித்தான்.புகுத்தி சிங்களம் படிக்க வேண்டிய அவசியம் என்ன? விரும்பினால் யாரும் எந்த மொழியும் படிக்கலாம். இதில் சிங்களம் தெரியாததால் வெட்கித்தலை குனிய என்ன உள்ளது?

கனடாவில் அரச கரும மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் உண்டு. ஆங்கிலம் பேச தெரிந்தவர் பிரெஞ் தெரியாததால் வெட்கி தலை குனியவில்லை. அதே போல் பிரெஞ் தெரிந்தவர் ஆங்கிலம் தெரியவில்லை என வெட்கி தலை குனியவில்லை. இது எமக்கும் பொருந்தும்.எமது தாழ்வு மனப்பான்மை தான் வெட்கித்தலை குனிய  காரணம் என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா,

இரண்டு நட்ட்களுக்கு முன்புதான் கொழும்பில் கடந்த பத்து வருடங்களாக இலக்கத்தகடு பெற்றுக்கொள்ளாத எனது மோட்டர் சைக்கிளுக்கு இலக்கத் தகடு பெற்றிருந்தேன் அதுவும் கொழும்பு ஆர் எம் பியில் எனக்குச் சிங்களத்தில் சுட்டுப்போட்டாலும் ஒரு சொல்லுகூட வராது. தவிர சிங்களம் தெரிந்திருந்தால் சிலசமயம் அலுவல் நடைபெற்றிருக்காது காரணம் மோட்டார் வாகனப் போக்குவரத்து இணை ஆணையாளர் இவ்விடையம் முடிய நிறைய நாட்கள் எடுக்கும் (கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்) எனக்கூற நான் பேந்தப்பேந்த முழிக்கிறதைப் பார்த்து பரிதாபப்பட்டு பழைய வர்த்தமாணியின் அறிவித்தலின் நகலை எடுத்து, அதில் எதையோ எழுதி, எனது விண்ணப்பத்துடன் இணைத்து, அலுவலை மனிசன் முடிச்சுக்கொடுத்திட்டுது.

சத்தியமாகச் சொல்லுறன் இவ்வளவுக்கும் ஒருசதமேனும் நான் இதற்காகக் கையூட்டுக்கொடுக்கவில்லை.

எனது எண்ணம் சிங்களம் தெரிந்தால் இது நடக்காது.

ஆனால் யாழ்ப்பாணத்தில் எல்லா டுயூட்டரிக் கொட்டில்களிலும் சிங்களம் பேச எழுதப் படிப்பிகிறார்கள். தவிர பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் சிங்கள அறிவு சொல்லிக்கொள்ளும்படி உண்டு ஆளுக்காள் மாறுபடும்.

சிங்கள மொழித்தேர்வில் சித்தியடைந்த தமிழ் அரச உத்தியோகத்தர்களுக்கும் தமிழ் மொழி தெரிந்த சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கும் மட்டுமே பதவி உயர்வு இங்கிரிமென்ட் இவைகள் கிடக்கும். தவிர மினிபஸ்சில் முன் சீட்டில் அமர்வதற்காக சிங்களம் அறிந்திருக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பல்கலைக்கழகங்களில் கூட ஆங்கிலம் தான் பாட மொழி.

இங்க சிலர் நல்லா விடுப்புப் காட்டினம். tw_blush::rolleyes:

சிங்களவனே ஆங்கிலம் கதைக்கிறதில பெருமைப்படுறான். இவை என்னடான்னா...........................  தமிழர்களிடம் சிங்களத்தைப் புகுத்தினமாம்.

முதல்ல சர்வதேச மொழியை ஒழுங்காப் படிங்க. எல்லாரும் எல்லாரையும் புரிஞ்சு கொள்ளலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக துபாயில் கேட்டுக் கேட்டு  புளித்துப்போன கேள்வி..!

இங்கே பெரும்பாலும் டாக்ஸிகளில் போகும்போது ஆசிய நாட்டவராக இருந்தால் கேட்கும் முதல் கேள்வி..

ஒருமுறை 'தெய்ரா துபாய்' செல்ல டாக்ஸியில் ஏறியவுடன் டாக்ஸி ஓட்டுநர் கேட்டது

"ஹிதர் ஹை..?"

நான் கேள்விக்குறியுடன் அவரின் முகத்தை நோக்க, மறுபடியும் அதே கேள்வி..!

"உங்கள் மொழியை புரிந்துகொள்ள முடியவில்லை..!" என அழுத்தமாக ஆங்கிலத்தில் கூறியவுடன் இறங்கினார்... "சாரி, நீங்கள் எங்கே போகவேண்டும்..?"

"நாஸர் ஸ்கொயர்..!" என்றேன்.

பின் சில நிமிடங்களில் நிலமை சகஜமானதும், சினேகமாக அவர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார்,

"உங்களுக்கு இந்தி தெரியாதா..?"

"தெரியாது"

"இந்தி உங்கள் நாட்டு மொழியல்லவா..?"

"இல்லை, எனது நாட்டு மொழி தமிழ்!"

"உங்கள் நாடு எது..? எங்கே இருக்கிறது..?"

"தமிழ்நாடு, சென்னை"

"தமிழ்நாடு, இந்தியாவுடான அங்கம் தானே? உங்கள் தேசிய மொழியான(?) இந்தியை ஏன் கற்றுக்கொள்ளவில்லை..?"

"60 வருடங்களுக்குமுன் இந்தியா என்ற நாடே இல்லை, ஆனால் என் தமிழ்ப் பகுதி, பல்லாயிரம் ஆண்டுகளாக தனித்துவமாக, தனி நாடாக இருந்தது..இப்பொழுதும் தொடர்கிறது..!"

"தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பேசும் பொழி இந்தி. இந்தியை படித்தால் இந்தியாவில் எங்கும் பிழைக்கலாம்..!"

(ஸ்ஸப்பா.. இம்மாதியான சிந்தனையைக் கேட்டுக்கேட்டு வெறுத்தே போச்சு!)

"தேவை இல்லை, ஆங்கிலத்தை படித்தால் உலகில் எங்கும் பிழைக்கலாம், உலகத்தின் சிறுபகுதிதான் இந்தியா. என் தொழிலிற்கு தேவைப்பட்டால் அரபியை படிப்பேனேயொழிய இந்தியை அல்ல. எந்த மொழியை கற்பது என்பது தேவையை பொருத்தது..இந்தி, 40சதவீத வட இந்திய மக்களால் மட்டுமே பேசப்படுகிறது..இப்போழுதும் இந்தி பேசாத மக்களிடம் அது வலிந்து திணிக்கப்படுகிறது..!"

"முடிவாக சொல்லுங்கள், நீங்கள் இந்தியன் இல்லையா..?"

"இல்லை, நான் தமிழன்..!"

பெரும்பாலும் இத்தோடு உரையாடல் முடிந்து வேறொரு பொருள் சம்மந்தமாக தொடரும்.

சில டாக்ஸி ஓட்டுநர்கள் மிக விவரமாக, "உங்கள் கடவுச்சீட்டில் என்ன எழுதியுள்ளது..?" என வளைத்துக் கேட்பார்கள்..!

"எழுதியுள்ளது இந்தியன், ஆனால் தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

டாக்ஸி ஓட்டுநர் அமைதியாகிவிடுவார்..

இது ஒரு தொடர்கதை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தான் காதலித்த ஆணோடு படுப்பதிலும் 
ஒரு காம வெறி பிடித்த வல்லுறவு கரனுடன் படுப்பதிலும் 

நிகழ்வது என்னவோ ஓன்றுதானே ?
என்றுதான் ............. இனி விட்டு கொடுப்பு வீரர்கள் 
வாய் வீச்சு தொடங்க போகிறது என்று நினைக்கிறேன்.


வல்லுறவு கொண்ட இராணுவத்தினர் மீது ஐ நா வில் வழக்குப்போட நிற்கும் 
தமிழர்களை நினைத்து ... வெட்க்கி தலை குனிகிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மொழியையும் தேவைக்காகவும், சுய விருப்பத்திற்காகவும்தான் கற்கின்றோம்.. விருப்பமில்லாத எதையும் (மொழியாகட்டும், வேறு விடயங்களாகட்டும்) கற்பது இலகுவானதல்ல.

சிங்களவர்கள் தமிழர்களை மேலாதிக்கம் செய்யும்வரை பெரும்பாலான தமிழர்களுக்கு சிங்களம் படிப்பதில் நாட்டம் இருக்காது. அத்தோடு சிங்களம் திராவிடக் குடும்ப மொழியாக (மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற) இல்லாததால் அதன் அந்நியத்தன்மையே மொழியை அறியவிடுவதில்லை.

இதுபோன்ற காரணங்களால்தான் எமது தலைமுறை சிங்களத்தைக் கற்கவில்லை.

 

ஆனால் தற்போது இனங்களுக்கான ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் உருவாக்க இலங்கைத் தேசியம் என்று ஒற்றைத் தேசியத்தை நிலைநாட்டும் செயற்பாடே நடக்கின்றது. இதற்கு தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் தெரிந்துகொள்ளவேண்டும்தான். ஆனால் சிங்களவர்கள் தமிழர்களைப் படிப்பது நடக்காது. எனவே சிறுகச் சிறுக தமிழ் மொழி இல்லாமல் இலங்கை முழுவதும் சிங்களமாகவே மாறிவிடும்.

புலம்பெயர்ந்த எமது தலைமுறையும் தாம் வசிக்கும் நாடுகளின் மொழிக்காரர்கள் ஆகிவிடுவார்கள் (தமிழர்கள் என்ற அடையாளத்தோடு!).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு பரபரப்புக்காக.......ஜீவன்  கந்தாந்தரட்ட போமஸ்துதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட கொழும்பு சென்றால் பே  பே பே பே என்று முளிக்கிறதுதான் ஏதோ ஆங்கிலம் அரைகுறை வேற கொஞ்சம் சிங்களத்தையும்  தூக்கி போடுவன் அவன் அவன் ட  மொழியை மறக்காமல் இருக்கும் வரைக்கும் பேசி விடுவேன்  ஹிஹிஹிஹி

சில நேரம் சைகை மட்டுமே  என்ன வாழ்க்கைகயடா இரு மொழி ஒரு நாடு ஆனால் இங்கே சிங்களவர்கள் தமிழ் கற்க வேண்டும் அதே போல் தமிழர்களும் சிங்களம் கற்க வேண்டும்  தேவைகளுக்காக சிங்கள பகுதிகளுக்கு செல்லும் போது ( இல‌ங்கையில் வசிப்போர் ):unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசக்கூடிய சிங்கள மக்களை விடச் சிங்களம் பேசத் தெரிந்த தமிழர்களே இலங்கையில் அதிகம்.

56 இல் தனிச் சிங்களச் சட்டம்  சிங்கள அரசினால் திணிக்கப்பட்டதால்  மட்டுமே

தமிழர்கள் சிங்கள மொழியை வெறுக்க ஆரம்பித்தனர்.

இப்போது வெட்கித் தலை குனிய ஒன்றுமே இல்லை
சிங்கள மொழியைக் கற்காதவர்கள் வீரத்தமிழர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து பொதுவாக கொழும்பையும் அதன் சுற்றுப்புறங்களிம் பிறந்து வளர்ந்த தமிழர்கள் சிங்களம் கதைக்க கூடியவர்களே.

இதற்கு காரணம் எங்களை சுற்றி வசிப்பவர்கள் சிங்களவர்கள் என்றபடியினால் நாங்களும் அவர்க‌ளுடன் இதயத்தால் இணந்து ஒன்றாக வாழத்தொடங்கிவிட்டதால் அவர்களும் எங்களை சக மனிதர்களாக மதித்து தாங்கள் சகோதர்களை போல நடத்துகின்றார்கள். அவர்கள் வீட்டில் எந்த நல்ல/கெட்ட விடயம் நடந்தாலும் நாங்கள் கலந்து கொள்வோம் அதுபோல் அவர்களும் எங்கள் வீட்டிட்க்கு வருவார்கள் எனவே எனது சிறுவயது முதல் அவர்களது மொழி நன்கு தெரியும். அவர்களுக்கும் தமிழ் தெரியும். இதனால் எங்களது அடையாளத்தை நாங்கள் ஒருபோது இழக்கவில்லை.

இலங்கையில் இரண்டு மொழிகள் உண்டு, தமிழ் அல்லது சிங்களம் உங்களுக்கு விருப்ப‌மானமொழியில் நீங்கள் கல்வி கற்கலாம். 
(இப்பொழுது பெரும்பாலும் எல்லோரும் ஆங்கிலத்தில்தான் கற்கின்றார்கள்), உயர்கல்வி ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படல் வேண்டும்.
 
வடக்கு கிழ‌க்கை  சேந்தவர்களுக்கு சிங்களம் தெரியாமைக்கு காரணம் இலங்கையின் இனப்பரம்பலே. வடக்கில் தமிழர்கள் அதிகம் எனவே அங்கு பிறந்து வாழும் சிங்களவன் அழகாக தமிழ் க‌தைப்பான், அதேபோல் தெற்கில் வாழும் தமிழன் சிங்களத்தில் நன்கு உரையாடுவான். 

இங்கு யாரையும் யாரும் மேலாதிக்கம் செய்யவில்லை, அரசிய ல்வாதி ஊத்தைகள்தான் இந்த மாதிரியான மேலாதிக்கத்தையும் இனவெறியையும் பரப்புகின்றார்கள். மேலும் இனம் என்று வரும்போது எல்லோரும் இனவாதிகள்தான் இதில் தமிழர்கள் சிங்களவர்கள் என வேறுபாடில்லை.

ஓரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் சிறுபான்மையாகவும் இருந்தால் என்ன நடக்கும்?  

இங்கு கருத்தெழுதும் பலர் சிங்கள மக்களுடன் சரியாக ஒன்றிணைந்து வாழவில்லை, அவர்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை. எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களது நியாயமான போராட்டத்திற்கா காரணங்களை அடிமட்ட/பாமர/கிராம‌ சிங்கள மக்களிடம் சரியான முறையில் விளங்கப்படுத்தியுள்ளார்கள்? அல்லது கொண்டு சென்றுளார்கள்?

சிங்களவன் அடிக்கின்றான்/சிங்களவன் இன்வாதி/சிங்களவன் துவேசி
இதுதான் தமிழர்களின் கூப்பாடு. சிங்களவன் கொடியா என கத்தினால், அடோ உம்பகே ரடே உம்படம அனுராதபுரங் எயாட யன்ட பே, பலயங் ஹுத்தோ எனக் நாங்களும் திருப்பி கத்த வேண்டும்.

அதை விட்டிட்டு நாட்ட விட்டு ஓடுகிறது, பிறகு ஜெர்மனி நல்லம் இங்கிலாந்து சரியில்லை என அலட்டுவது. பிரான்சில் ஆங்கிலம் இல்லை என பிள்ளைகள் படிப்பிற்காக இங்கிலாந்து ஓடுவது,பிறகு brit-exit கோசம் போடுவது, போலிஷ்காரர் எல்லம் இங்கு வருகின்றார்கள் இங்கிலாந்து சரியில்லை என கனடா அல்லது அவுஸ் ஓடுவது, இப்படியே எதிலும் திருப்பதியற்று வாழ்க்கை முழுவது நாடோடிபோல் ஓடிக்கொண்டிருப்பர்கள்.

 
   
 

7 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது


 

7 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது

நிச்சயம் அல்ல. இந்த இந்தியன் 'tag' அதிக தலைமுறைகள் நீடிக்காது என்றே தோன்றுகிறது.

தமிழன் என்ற எண்ணமே இன்னமும் இந்தியாவில் ஓரளவேனும் தனித்துவாமாக இருக்க உதவுகிறது.. எந்த உணர்வுமின்றி, விழிப்பின்றியிருந்தால் பீகாரிகள் மாதிரி நிச்சயம் பின் தங்கியிருப்போம்..

பாரிய மனித அழிவிற்கான முதல் காரணி தமிழர்களின் ஒற்றுமையின்மை. கேரளாக்காரன்களால் ஏன் தில்லியில் ஆளுமை செலுத்த முடிகிறதென்றால் அவர்களின் ஒற்றுமையே.அதை நீங்கள் வசிக்கும் கத்தாரிலும் காணலாம்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

நிச்சயம் அல்ல. இந்த இந்தியன் 'tag' அதிக தலைமுறைகள் நீடிக்காது என்றே தோன்றுகிறது.

தமிழன் என்ற எண்ணமே இன்னமும் இந்தியாவில் ஓரளவேனும் தனித்துவாமாக இருக்க உதவுகிறது.. எந்த உணர்வுமின்றி, விழிப்பின்றியிருந்தால் பீகாரிகள் மாதிரி நிச்சயம் பின் தங்கியிருப்போம்..

பாரிய மனித அழிவிற்கான முதல் காரணி தமிழர்களின் ஒற்றுமையின்மை. கேரளாக்காரன்களால் ஏன் தில்லியில் ஆளுமை செலுத்த முடிகிறதென்றால் அவர்களின் ஒற்றுமையே.அதை நீங்கள் வசிக்கும் கத்தாரிலும் காணலாம்..

 

ராச வன்னியன் அண்ணை  இந்திய  தமிழர்களை இந்திய  வேறு மாநிலத்தவர் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை நான் வெளிநாட்டில் இருக்கும் போது பார்த்த ஒன்று உதாரணம் மலையாளி, பஞ்சாபி கேட்டா மதராசி என்பார்கள் ஏனென்றால் வெள்ளையன் இந்தியாவை பிடிக்க அவர்கள் தமிழ் நாட்டில் தானாம் கால் ஊன்றினார்கள் என்று சொன்னான் அது உன்மையா விளக்கம் த‌ரவும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, முனிவர் ஜீ said:

ராச வன்னியன் அண்ணை  இந்திய  தமிழர்களை இந்திய  வேறு மாநிலத்தவர் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை நான் வெளிநாட்டில் இருக்கும் போது பார்த்த ஒன்று உதாரணம் மலையாளி, பஞ்சாபி கேட்டா மதராசி என்பார்கள் ஏனென்றால் வெள்ளையன் இந்தியாவை பிடிக்க அவர்கள் தமிழ் நாட்டில் தானாம் கால் ஊன்றினார்கள் என்று சொன்னான் அது உன்மையா விளக்கம் த‌ரவும் :rolleyes:

இல்லை முனி..

வட இந்தியர்கள், தமிழர்களை அந்நியமாக பார்க்கக் காரணம், நாங்கள் இந்தியை உள்ளே விடவில்லை.. வட இந்தியர்களின் மொழியை, அவர்களின் ஆதிக்கத்தை துரத்திய/எதிர்க்கும் முதல்மாநிலம் இன்னமும் தமிழ்நாடுதான். அத்தோடு சமீபத்திய ராசீவ் காந்தியின் கொலையும், பழங்கால இ(ந்)திகாச கதையான இராவணன் - ராமன் மோதல்களும் காரணம்.

வெள்ளையன் இந்தியாவில் காலூன்றியது கல்கத்தாவில்தான்.. பின்னர்தான் 'இந்தியா' என சொல்லப்படும் பகுதிகளை ஆண்ட சிற்றரசுகளின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி தன் ஆளுமையை தொடங்கினான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

வெள்ளைக்காரன் நாடுகளில் நாங்கள் குடியேறிகள்!

அவர்கள் தங்கள் மொழியை எங்கள் மீது திணிப்பதில்லை! நாங்களாகவே எமது தேவைகளுக்காகப் படிக்கிறோம்! அவுசிலும் ஆங்கிலம் தெரியாத பலர் பல வருடங்களாக வாழுகின்றார்கள்! அவர்கள் மீது மொழி திணிக்கப் படுவதில்லை!

ஆனால் இலங்கையில் நாங்கள் பூர்வீக குடிகள்!

சொந்த மொழியில் எமது தேவைகளை நிறைவு செய்ய வகை செய்ய வேண்டியது எமது அரசின் கடமை!

சிங்கள மொழி எமதினத்தின் மீது பலவந்தமாகத் திணிக்கப் படுகின்றது! அது தான் பிரச்சனையே!

பல மேற்கத்தைய நாடுகளில்...சீனமொழி, இந்தி, உருது, தமிழ் போன்ற மொழிகளில் தொடர்பாடல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது!

சிங்களத்தை விடவும்...தமிழ் அதிக நாடுகளிலும், அதிக மக்களாலும் பேசப்படுகின்றது!

உங்கள் கருத்துப்படி...பார்த்தாலும்..சிங்களத்துக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு! கரையோரச் சிங்களவர்கள் எல்லோரும் ஆதித் தமிழர்களே!

எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது?

 

எல்லா நாய்களும்... தங்கள் மொழியில் குரைக்கும் போது....தமிழ் நாய் மட்டும் எதற்காக இன்னொரு நாயின் மொழியில் குரைக்க வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள்?

யூத நாய்கள்...உலக மொழிகளை அறிந்திருந்தும்...தங்கள் நாட்டில் யூத மொழியிலேயே குரைக்க விரும்புகின்றனவே? அது ஏன்?

எங்களைச் சிங்களத்தில் குரைக்கும் படி கூறும்  வேற்றுமொழி நாய்கள் தமிழில் குரைக்க ஏன் பின்னிற்கின்றன?

 

1548167_orig.jpg

அண்ணை

அ விலிருந்தா??

அது தூங்குபவர்களுக்கு......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.