Jump to content

சிங்களம் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மொழியை ஒருவன் விரும்பி கற்கும் போது....இருக்கும் ஆர்வம் வேறு,
அந்த மொழியையையோ, மதத்தையோ திணிக்கும் போது.... அதில் வெறுப்புத் தான் ஏற்படும்.
அதில்... சிங்களமும், புத்த சமயமும் முதலிடம்.

எத்தனை மொழியென்றாலும் கற்பதில் தப்பேதும் இல்லை . ஆனால் தமிழ் சிறி சொன்னதுபோல சிங்களத்தில் வெறுப்பு வரக்காரணம் சிங்களவர்களின் செயற்பாடே தவிர வேறொன்றும் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் அலுவலக வேலை காரணமாக ஒரு நிறுவனத்தின் தொழிற்நுட்ப திறனையும், அது வழங்கிவரும் சேவையையும் பரிசோதிக்க அபுதாபி செல்லவேண்டியிருந்தது.. அந்த நிறுவனத்தின் சில பிரிவுத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு மதிய உணவு விருந்திற்கு அருகேயுள்ள ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்கள்..

அந்த நிறுவனக் குழுவில் ஒருவர் உத்திரப்பிரதேசம், மற்றொருவர் குஜராத்தி..இன்னும் இரண்டு பேர் எகிப்தியர்கள்..!

உணவின் நடுவே ஒரு எகிப்தியர் ஆரம்பித்தார்.. "நான் இந்தியா உணவான 'ஆலு' மற்றும் 'பலாக்' விரும்பி உண்பேன்..!" என்றார்..

என்னை பார்த்து, "நீங்கள் எப்படி..?" என்றார்.

நமக்குத்தான் இந்தி வராதே! "இல்லை, நீங்கள் கூறும் உணவு வகைகளின் பெயர் நான் அறியவில்லை..!" என்றேன்..

"ஏன் இந்தி தெரியாதா..? அது இந்தியாவின் தேசிய மொழி(?)யாயிற்றே..!" என்றார்..

நான் புன்னகையுடன், "உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான், இந்தியாவிற்கென்று தேசிய மொழியே இல்லை, பேசப்படும் பல்வேறு மொழிகளில் இந்தியும் ஒன்று, எனது மொழி தமிழ்..!" எனக் கூறிவிட்டு உண்ணத் தொடங்கினேன்..

உடனே இரு வட இந்தியர்களும், "யெஸ்.. யெஸ்.. இந்தியாவின் பழமையான மொழி சமஸ்கிருதம், அதிலிருந்து பிறந்ததுதான், இந்தியும், தமிழும்..!" என்றனர்.

உடனே தமிழ் மொழியின் தோன்றலை நான் ஆதாரத்துடன் விளக்கியவுடன், வட இந்தியர்களிடம் பேச்சு மூச்சே இல்லை!

ஏன் கூறுகிறேன் என்றால், பல வட இந்தியர்களுக்கு 'இந்தியா' என்றால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சமஸ்கிருதம், இந்தி மட்டுமே.. அம்மாதிரியே இந்தியாவை விட்டு வெளியுலகிலும் பரப்புரை செய்யப்படுகிறது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

சிங்களவருக்கு தமிழ் தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு யாரும் புகுத்தவில்லை. தமிழர்களும் அப்படித்தான்.புகுத்தி சிங்களம் படிக்க வேண்டிய அவசியம் என்ன? விரும்பினால் யாரும் எந்த மொழியும் படிக்கலாம். இதில் சிங்களம் தெரியாததால் வெட்கித்தலை குனிய என்ன உள்ளது?

கனடாவில் அரச கரும மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் உண்டு. ஆங்கிலம் பேச தெரிந்தவர் பிரெஞ் தெரியாததால் வெட்கி தலை குனியவில்லை. அதே போல் பிரெஞ் தெரிந்தவர் ஆங்கிலம் தெரியவில்லை என வெட்கி தலை குனியவில்லை. இது எமக்கும் பொருந்தும்.எமது தாழ்வு மனப்பான்மை தான் வெட்கித்தலை குனிய  காரணம் என நினைக்கிறேன்.

பச்சை முடிஞ்சது.. Good one.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

சமீபத்தில் அலுவலக வேலை காரணமாக ஒரு நிறுவனத்தின் தொழிற்நுட்ப திறனையும், அது வழங்கிவரும் சேவையையும் பரிசோதிக்க அபுதாபி செல்லவேண்டியிருந்தது.. அந்த நிறுவனத்தின் சில பிரிவுத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு மதிய உணவு விருந்திற்கு அருகேயுள்ள ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்கள்..

அந்த நிறுவனக் குழுவில் ஒருவர் உத்திரப்பிரதேசம், மற்றொருவர் குஜராத்தி..இன்னும் இரண்டு பேர் எகிப்தியர்கள்..!

உணவின் நடுவே ஒரு எகிப்தியர் ஆரம்பித்தார்.. "நான் இந்தியா உணவான 'ஆலு' மற்றும் 'பலாக்' விரும்பி உண்பேன்..!" என்றார்..

என்னை பார்த்து, "நீங்கள் எப்படி..?" என்றார்.

நமக்குத்தான் இந்தி வராதே! "இல்லை, நீங்கள் கூறும் உணவு வகைகளின் பெயர் நான் அறியவில்லை..!" என்றேன்..

"ஏன் இந்தி தெரியாதா..? அது இந்தியாவின் தேசிய மொழி(?)யாயிற்றே..!" என்றார்..

நான் புன்னகையுடன், "உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான், இந்தியாவிற்கென்று தேசிய மொழியே இல்லை, பேசப்படும் பல்வேறு மொழிகளில் இந்தியும் ஒன்று, எனது மொழி தமிழ்..!" எனக் கூறிவிட்டு உண்ணத் தொடங்கினேன்..

உடனே இரு வட இந்தியர்களும், "யெஸ்.. யெஸ்.. இந்தியாவின் பழமையான மொழி சமஸ்கிருதம், அதிலிருந்து பிறந்ததுதான், இந்தியும், தமிழும்..!" என்றனர்.

உடனே தமிழ் மொழியின் தோன்றலை நான் ஆதாரத்துடன் விளக்கியவுடன், வட இந்தியர்களிடம் பேச்சு மூச்சே இல்லை!

ஏன் கூறுகிறேன் என்றால், பல வட இந்தியர்களுக்கு 'இந்தியா' என்றால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சமஸ்கிருதம், இந்தி மட்டுமே.. அம்மாதிரியே இந்தியாவை விட்டு வெளியுலகிலும் பரப்புரை செய்யப்படுகிறது..!

காந்தி நெல்சன் மண்டேலா போன்றோர் பெருத்த தலைவர்கள் ஆனார்களா ?
ஆக்கப்படடார்களா ?
இவர்கள் இருவராலும் இவர்களது நாடு கண்ட நல்ல விடயம் என்ன ?
மூளைச்சலவை ஒரே பொய்யை திருப்பி திருப்பி சொல்லுதல் 
என்பவனாவால் உலகில் பல உண்மைகள் இருந்த இடமே இல்லாமல் போய்விட்ட்து.

நான் ஒரு நாட்டுக்கு பயணம் செய்தால் அந்த பயண நேரத்தில் ஆவது 
அந்த நாட்டை பற்றி வாசிப்பது வழக்கம். அப்படி கவாய் என்று ஒரு அமெரிக்காவின் 
மாநிலமாக பசுவிக் சமுத்திரத்த்தில் இருக்கும் ஒரு தீவு கூட்ட்டத்திட்கு சென்றேன்.

அப்போது அதை வாசிக்கும்போது ....
2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் பிஜி தீவு மக்கள் அங்கே குடியேற தொடங்கினார்கள் என்றும் 
(பொலிசியன்ஸ்) 
பின்பு 1778இல் கப்டன் ஜேம்ஸ் கூக் அதை கண்டு பிடித்தார் என்று இருந்தது.

ஹவாய் இல் இருந்து பிஜி தீவு அமெரிக்காவை விட தொலைவாகவே இருக்கிறது.
அந்த நாட்டு மக்கள் கடல் பயணங்களை இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடங்கி இருக்கிறார்கள் 
மனிதர்கள் இல்லாத மனித வாழ்விட்கு உகந்த இடங்களில் குடியேறி அடுத்தவனை கொல்லாது 
வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இவளவு உண்மையும் ஒரே வரியில் உலகிட்கு மறைக்கப்படுகிறது 

ஜேம்ஸ் கூக் ஹவாய் யை கண்டுபிடித்தார்! 
இந்த ஒரு பொய்யை சொல்லிவந்ததால் .... ஹவாய் இன்று உரியவர்களுக்கு சொந்தமில்லை.

ஹிட்லர் இல்லாது போயிருந்தால் ......
இலங்கை வரலாறு எப்படி இருந்திருக்குமோ யாருக்கும் தெரியாது.

ஆங்கிலம் தெரியாது என்று எங்கள் அப்பப்பா ஆச்சி மாரை 
இங்கிருக்கும் சில தமிழரே சுட்டிருப்பார்கள். 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.