Jump to content

இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள சீன- சிறிலங்கா நெருக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

wang-yi-colombo (3)சிறிலங்காவிற்கு இவ்வாண்டு அதிகளவில் வெளிநாட்டு உதவியை வழங்கிய சீனா, தொடர்ந்தும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு ‘முழுமையான ஒத்துழைப்பை’ வழங்குவேன் என உறுதியளித்துள்ளது. இந்தியாவின் அதிருப்தி வலுவடைந்து வரும் நிலையிலும் சீனா இவ்வாறானதொரு உறுதியை வழங்கியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அண்மையில் மேற்கொண்ட சந்திப்பின் போது, சிறிலங்காவை அபிவிருத்தி செய்வதற்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

ஜூலை 10 அன்று முடிவிற்கு வரும் வகையில் சிறிலங்காவிற்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் ஜி, சிறிசேனவின் ஆட்சியின் போது சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த முதலாவது சீன உயர் மட்ட அதிகாரி ஆவார்.

அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் 2015ல் சிறிலங்காவின் ஆட்சியை ஏற்றுக்கொண்ட பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு  சிறிலங்கா அனுமதி வழங்கியமைக்கு வாங் யி பாராட்டியிருந்தார்.

சிறிலங்காவின் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது தற்போதைய அரசாங்கத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட போதிலும், பதிலீடாக எந்தவொரு நாடும் சிறிலங்காவில் தனது முதலீடுகளை மேற்கொள்ள முன்வரத் தவறியதன் காரணமாக இவ்வாண்டு ஆரம்பத்தில் மீண்டும் துறைமுக நகரத் திட்டப் பணிகளை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் சீனாவை அசட்டை செய்த சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர், இறுதியில் சீனாவை வரவேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வாங் யியுடனான சந்திப்பின் போது, சீனாவின் பொது மற்றும் தனியார் துறைகளின் மேலதிக முதலீடுகளை சிறிலங்கா அதிபர் வரவேற்றிருந்தார். இரண்டு நாடுகளும் இருதரப்பு நலன்களையும் கவனத்திற் கொண்டு இணைந்து செயற்பட வேண்டியதன் தேவையையும் இவர் வலியுறுத்தியிருந்தார்.

‘சீனாவானது சிறிலங்காவுடனான ஒத்துழைப்பிற்கான நேர்மையான, நம்பிக்கைக்குரிய பங்காளி என்பதை சிறிலங்கா மதிப்பீடு செய்ய முடியும். சிறிலங்காவில் சீனாவால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் இதற்கு சான்றுபகர்கின்றன’ என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லு காங், கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

மாறிவரும் அனைத்துலகச் சூழல் என்பதற்கு அப்பால், சீனா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளினதும் மூலோபாயப் பங்களிப்பானது மேலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என காங் சுட்டிக்காட்டினார்.

‘21ம் நூற்றாண்டிற்கான கரையோரப் பட்டுப்பாதைத்’ திட்டத்திற்கு சிறிலங்கா வழங்கி வரும் ஆதரவு தொடர்பாகவும் சிறிலங்காவின் கேந்திர அமைவிட முக்கியத்துவம் தொடர்பாகவும் சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது, யி குறிப்பிட்டிருந்தார்.

‘கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தை’ இணைந்து கட்டியெழுப்புவதன் ஊடாக, சிறிலங்காவின் அபிவிருத்தி இலக்கு மற்றும் எதிர்காலத்தில் இந்திய மாக்கடலில் கப்பல்கள் தரித்து நிற்பதற்கான கேந்திர அமைவிடமாகவும் நிதி மையமாகவும் சிறிலங்காவை மாற்றியமைப்பதற்கு தொடர்ந்தும் சீனா உதவும் எனவும் யி குறிப்பிட்டார்.

சீனாவின் இந்த முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் துணைநிற்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். ‘இந்திய மாக்கடலின் வர்த்தக மையமாக தன்னை மாற்றிக் கொள்வதற்கான சிறிலங்காவின் திட்டத்திற்கு சீனாவும் துணை நிற்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் சிறிலங்காவானது இழந்து போன தனது புராதன வரலாற்றில் குறிப்பிடப்பட்டது போன்று இந்திய மாக்கடலின் வர்த்தக மையமாக மீண்டும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள முடியும். 21ம் நூற்றாண்டிற்கான கரையோரப் பட்டுப் பாதைத் திட்டமானது பாரியதொரு பொருளாதார ஒத்துழைப்பு எனவும் இதன்மூலம் நட்புரிமை, பொருளாதார ஒத்துழைப்பு, சமூக மற்றும் கலாசார பரிமாற்றங்கள் போன்றனவும் மேற்கொள்ளப்பட முடியும்’ என சமரவீர குறிப்பிட்டார்.

இரு நாடுகளிற்கும் இடையில் பலமான நட்புறவைக் கட்டியெழுப்பத்தக்க வகையில் அடிக்கடி இவ்வாறான உயர் மட்டச் சந்திப்புக்களை மேற்கொள்வதெனவும் சிறிலங்கா தலைவர்களும் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சரும் தீர்மானித்தனர். அத்துடன் சீனாவுடன் சுதந்திர வர்த்த உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடுவது தொடர்பாகவும் சிறிலங்கா கலந்துரையாடியது.

வாங் யியின் சிறிலங்காவிற்கான வருகையும், பட்டுப்பாதைத் திட்டம் தொடர்பாக சிறிலங்காவால் சீனாவிற்கு வழங்கப்பட்ட ஆதரவு போன்றன சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறிலங்கா மற்றும் சீன அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் தொடர்பாக இந்தியா விசனமடைந்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். இதேபோன்று ஜூன் மாதம் சிறிலங்கா அதிபர் சிறிசேனவிற்கு இரண்டாவது தடவையாக சீன அதிபரால் தனது நாட்டிற்கு வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.

இதற்கு அப்பால், சீனாவின் கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாக சிறிலங்கா அறிவித்ததானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சூழவும், மூலோபாய முக்கியத்துவம் மிக்க கடல்வழிகளில் உள்ள துறைமுகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே பட்டுப்பாதைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

2016 ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான முதல் காலாண்டில் சிறிலங்கா மீது அதிகளவில் நிதியை முதலீடு செய்த நாடாகத் தொடர்ந்தும் சீனாவே விளங்குவதாக சிறிலங்காவின் நிதி அமைச்சு அண்மையில் அறிவித்தது.

சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட 885 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நிதித் திட்டங்களில் அரைவாசி நிதி சீனாவிடமிருந்தே பெறப்பட்டதாக நிதி அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழிமூலம்         – Asia times
ஆங்கிலத்தில்   – MUNZA MUSHTAQ
மொழியாக்கம்  – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2016/07/22/news/17577

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.