Jump to content

யாழ் உறவை யாழில் கண்டேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

தேன் சரியில்லை அம்மா வேண்டாம். அம்மாவின் முகத்தில் கோபமும் கவலையும் தெரிந்தது.

தொடர் நன்றாகச் செல்கின்றது, பாஞ்ச் !

தேன் விக்கும் அம்மா நல்லவராக இருந்த படியால்.. தப்பித்தீர்கள்!

இதுவே யாழ்ப்பாணம்  சின்னக்கடை...மீன் கடையாக இருந்திருந்தால்....!

நினைக்கவே 'குலைப்பன்' எடுக்குது!

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
8 minutes ago, புங்கையூரன் said:

தொடர் நன்றாகச் செல்கின்றது, பாஞ்ச் !

தேன் விக்கும் அம்மா நல்லவராக இருந்த படியால்.. தப்பித்தீர்கள்!

இதுவே யாழ்ப்பாணம்  சின்னக்கடை...மீன் கடையாக இருந்திருந்தால்....!

நினைக்கவே 'குலைப்பன்' எடுக்குது!

சாவகச்சேரிச் சந்தையில் அரிசி அளந்து விக்கிற கதை தெரியுமா புங்கையூரன் அவர்களே! குலப்பனென்ன கழுத்தில் கயிறுபோடும் அளவிற்கு அங்கிருக்கும் சனத்தின்முன் மானமே போய்விடும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ் தொடருங்கள் நானும்  வாசித்"தேன்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Paanch said:

 

 

 

 

மலர்ந்த அந்த அம்மாவின் முகம் எங்கள் இதயத்தைத் தொட்டது. என் அம்மாவைப் பார்த்ததுபோல் இருக்கிறது என் மனைவி கூறினார்.

 

 

இன்னொரு தாயின் முகத்தில் தன் தாயைக்காணும்  பக்குவம் எல்லோருக்கும் இருக்காது. உங்கள் பயணத்தை தொடருங்கள்  பாஞ்ச அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ,

'பனிச்சங்கேணி தேன்' சாப்பிட்ட மயக்கத்தில் இருக்கும் ஐயாவை எழுப்பி, மீதி அனுபவத்தை எழுத கூட்டி வாருங்கள்...!vil_biereallemand.gif

Link to comment
Share on other sites

மேலும் என் பதிவைத் தொடர ஊக்கம்தந்த ரதி,   அக்னியஷ்த்ரா,   Athavan CH,   Gari,   நந்தன்,   ராசவன்னியன்,   வாத்தியார்,   putthan,   MEERA,   suvy,   ஆகிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் மனதில் உதித்ததை எழுதியபோது எழுந்த உறுத்தல், சில உறவுகளை வெகுண்டெழ வைத்துச் சங்கடங்கள் தோன்றியபோது, அதனைத் தவிர்த்து உதவிட முன்வந்த நெடுக்காலைபோவன் அவர்களுக்கு நன்றியையும் கூறிக்கொண்டு, நெருப்பு நீறுபூத்தாலும், உள்ளே நெருப்பாகவே அணையாது அனல்வீசும் என்பதையும் தெரிவித்து மிகுதியைத் தொடர்கிறேன்.  

 

 

ருட்டுவதற்கு முன்பாக யாழ்வந்து மாமியைக் கண்டதும் பயணக்களைப்பு அத்தனையும் பறந்தது. வயதாகிவிட்டதால் அவருக்கு ஞாபகங்கள் நினைவுக்குவரத் தாமதமாகியது. எங்களைப்பற்றி அவருக்கு திரும்பத் திரும்பச் சொல்லவேண்டிக் கவலை ஏற்பட்டாலும் அவர் வயதை எண்ணி அனுதாபமே ஏற்பட்டது. பல வேலையாட்களை வைத்து மாமா பார்த்துவந்த அரசாங்க ஒப்பந்தவேலையை, மாமா இறந்தபின்பும் தானே நிர்வகித்து, எதிர்வந்த பலபிரச்சனைகளையும் தனது திறனால் கையாண்டு குடும்பத்தையும் பராமரித்து அதிகாரம் செய்துவந்த மாமி, வயதானதும் நலிந்துவிட்டாலும், அதிகாரத்தின் அகங்காரம் நலிந்துவிடவில்லை. மகனுடைய வீட்டில் மாமி தங்கியிருந்தபோதும் மகனுடைய குடும்பமும், வீடும் தன்னுடைய பராமரிப்பில்தான் மிளிர்கிறது என்ற எண்ணம் அவரிடம் ஆழ வேரூன்றி இருப்பது தெரிந்தது. வளவைக் கூட்டித் துப்பரவு செய்கிறேன் என்று, மகன் நாட்டி முளைவிட்ட பூக்கன்றுகள், காய்கறிப் பயிர்களும் அவருக்குப் புல்லாகக் காட்சிதந்து விடுவதால், அவைகளும் புடுங்கப்பட்டுக் குப்பைக்குள் போய்விடுமாம். வளவிற்குள் குந்தியிருந்து எழும்போது அவரைத் தாங்கித் தூக்கிவிடும் பலமானது, மாவிலை, வாழை இலை போன்றவற்றுக்கே உண்டாம். அதனைப் பின்பு நாங்கள் நேரிலும் கண்டு வியந்து சிரித்தோம். அவர் தன்மீது கொண்டுள்ள மிதமிஞ்சிய நம்பிக்கை, அவரை எங்காவது வீழ்த்திப் படுக்கையில் போட்டுவிடுமோ என்ற பயம், கண்ணுக்குள் எண்ணைவிட்டு அவரைப் பாதுகாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது.

கொன்டுசென்ற பரிசுப்பொருட்களை உரியவர்களுக்குக் கொடுத்துவர இரு நாட்கள் பறந்துவிட்டது. அதன்பின்புதான் மைத்துணன் கணனி வைத்திருப்பது ஞாபகத்தில் வந்தது. யாழ் இணையத்தைப் பார்க்கும் ஆவல் எழுந்தது. அது மடிக்கணனி. பத்திரமாகப் பட்டுத்துணியால் போர்த்திக் கிடந்தது. நான் வெளிநாட்டு ஆள் அல்லவா! தொழில்நுட்பத்தில் வெளிநாட்டவர்கள் கில்லாடிகள் என்ற நினைப்பு அவர்களுக்கு. கணனி உடனே என் கைக்கு வந்துவிட்டது. யாழைத்திறந்து பதிவுகளைப் பார்த்துவிட்டு ஏதாவது எழுத முயன்றபோதுதான் தமிழ் எழுத்தைப் பாவிக்கமுடியாத சங்கடம் தெரிந்தது. எனக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தைப் பாவித்து தமிழ் எழுத்துகளைத் தேடிக் கணனியை மீண்டும் பட்டுத்துணிக்குள் மூடிவைக்க விரும்பாததால், யாழுக்கு எழுதும் ஆசை அடக்கம் பெற்றது. அச்சமயத்தில்தான் யாழ் உறவுகள் எவரையாவது சந்திக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

தனது இருப்பு இலங்கை என்று ஜீவன் சிவா தெரிவித்திருந்தது ஞாபகம் வந்தது அத்தோடு அவர் யாழில் நின்று யாழுக்கு எழுதுவதுபோன்றும் தெரிந்தது. ஆகவே அவரைச் சந்திக்கும் ஆவல்கொண்டு எனது தொலைபேசி இலக்கம் தெரிவித்து ஆங்கிலத்தில் தனிமடல் எழுதினேன். ஆகா! என்முயற்சி பலித்தது. நான் ஜீவன் சிவா நீங்கள் பாஞ்தானே. இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி. ஆமாம் நான்தான் பாஞ். இப்போது தெல்லிப்பளையில் நிற்கிறேன் உங்களை எங்கே சந்திக்கலாம்?“ நான் கச்சேரியடியில் இருக்கிறேன் வீட்டிற்கு வரமுடியுமா? மதிய உணவும் அருந்திச் சந்திப்போம். அழைப்பிற்கு நன்றி ஜீவன் சிவா, நான் தற்போது என் மனைவி குடும்பத்தினரின் குலதெய்வமான வீமன்காமம் வீரபத்திரருக்குப் பொங்கல் செய்துகொண்டிருக்கிறோம் உடனே வரமுடியவில்லை. உங்களுடைய தொடர்பு இலக்கம் தற்போது என்னிடம் வந்துள்ளது. நான் பின்பு தொடர்புகொள்கிறேன். நல்லது பாஞ் முதல் சந்திப்பு தொலைபேசியில் சந்தித்து முடிந்தது.

என் எண்ணங்கள் ஜீவன் சிவாவைச் சுற்றிப் பறந்தது. முதன் முதலில் சந்திக்கும் முன்னரே விருந்துக்கு அழைப்பு! அதுதான் தமிழரோடு உடன்பிறந்த பண்பான விருந்தோம்பல். நேற்றுத்தான் கச்சேரியடியில் உள்ள உறவினர்களையும் பார்க்கச் சென்றிருந்தோம், முன்பே தெரிந்திருந்தால் நேற்றே சந்தித்திருக்கலாம். மனம் சற்று வருந்தியது. மறுநாள் தொடர்புகொண்டேன். அளவெட்டி அம்மன்கோவில் தேருக்குச் செல்கிறேன் பின்பு சந்திப்போம் அம்மனுடைய பக்தன்.... நிச்சயம் ஆன்மீகவாதியாக இருக்கவேண்டும் எனவும், ஜீவன் சிவா ஒரு சைவப்பழமாகவும், அவர் ஒரு சைவப்பழத்தின் தோற்றம் கொண்டவர்போலவும் மனம் கற்பனை செய்துகொண்டது.

இன்று சந்திக்க முடியுமா?“ மறுநாள் காலை ஜீவன் சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பு வந்ததும் உடனே என்னால் செல்லமுடியவில்லை. மைத்துணன் உந்துருளியுடன் வெளியே சென்றுவிட்டார். அரச பேரூந்தில் அல்லது தனியார் பேரூந்தில்தான் செல்லவேண்டும். தனியார் உந்து கிழங்கு அடுக்குவதுபோல் பயணிகளை அடுக்கி அடைத்துக்கொண்டு செல்லும். அதில் அதிக வருமானம் பெறுவதற்காக நடத்துனர் பயணியை ஏற்றும்போது, மிகப்பணிவாக, பவ்வியமாக ஏற்றிவிட்டுப் பின் மந்தை மேய்ப்பதுபோல் அதிகாரம் தூள்பறக்கும். பின்னால்போ, திரும்பிநில், இங்காலேவா என்று தாங்கமுடியாது. அதுக்கும்மேல் பயணிகள் அத்தனைபேரின் உயிர்களும் சாரதியின் கையில் இருக்கும். பருத்தித்துறை வீதி வளைவுகளில் அவர் வந்த வேகத்துடன் வெட்டித் திருப்பும்போது சரிந்து நிமிரும் உந்துதானது, நின்று பயணிக்கும் பயணிகளை ஒருவரோடு ஒருவரை மோதவைத்து வேடிக்கை காட்டும். பயணிகளின் அத்தனை பேர்களுடைய உயிர்களும் இயமன் கைக்குள் போய்விடுமோ? என்ற எண்ணத்தைத் தோன்றவைக்கும். அதனைக் கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை. அது அங்குள்ள பயணிகளுக்கும் பழகிவிட்டது, வாயக்குள் முணுமுணுப்பதோடுசரி.

காலையிலேயே அகோர வெயில். யாழ் மத்திசென்று பின் கச்சேரி செல்லவேண்டும். எனது நிலமையைத் தெரிந்துகொண்ட ஜீவன் சிவா, தான் நல்லூர் வருவது சுலபமென்று கூறினார். பரம்பொருளின் பெரும்புகழைப் பாடித் துதிப்பதல்லால் பிதொன்றும் பேசற்க ஆலயத்துள் வசனங்கள் ஞாபகத்தில் வந்தது. அத்துடன் கடும் வெயில் காரணமாகவும், அங்குள்ள குளிரூட்டிய பழமுதிர்சோலை உண்டிச்சாலையில் சந்திப்பதாக ஏற்பாடாகியது. அவர் இளஞ்சிகப்பு நிறத்தில் அங்கி அணிந்து துவிச்சக்கர வண்டியில் வருவதாகவும், அவரைக் கண்டுகொள்வதற்கான தனது அடையாளங்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஜீவன் சிவா வருகிறார் தொடரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பாஞ்சு நீங்க தேனை மட்டுமல்ல எங்க நெஞ்சையும் நக்கீட்டீங்க போங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐயா பாஞ்சு நீங்க தேனை மட்டுமல்ல எங்க நெஞ்சையும் நக்கீட்டீங்க போங்க.

அங்க என்ன தேனா ஊத்தி வச்சாருtw_blush:tw_blush: நெஞ்ச தொட்டிடீங்க என்று சொல்லுங்க ஈழ பிரியா??

பாஞ் ஐயா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பான்ஞ்...எனக்கும் ஊருக்கு ஒருக்கால் போக ஆசை.பார்ப்பம் அடுத்த வருடமாவது சரி வருமா என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சவர்வளே, உங்களது பயண அனுபவங்களைப் படிக்கும்போது நாமும் அதனூடே நகர்வதுபோன்று எழுத்துநடை. ஆங்காங்கே இதயத்துள் ஒருவிதவலி. ஏக்கம் போன்றனவும் வந்து செல்கிறது.
 
தேன் விற்கும் அம்மா, வீதிகளைதழுவிச் செல்லும்போது எழும் மாவீரரின் நினைவலைகள், மாமி, களஉறவான  ஜீவன்சிவாவின் விருந்தோம்பல் உண்மையிலே இன்னும் தமிழரிடையேயான அடிப்பண்புகளைத் தொட்டுச் செல்லும் உணர்வலைகளாகவே என்னுள் படிந்து நகர்கிறது….. 
தொடருங்கள்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பாஞ்ச்!

மிக அழகாக உங்கள் அனுபவப் பகிர்வு நகர்கின்றது!

பச்சை விசயத்தில் 'யாழ்' களம் கொஞ்ச நாளாக அடக்கி வாசிக்கிறது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நன்பரே...!  நன்றாக எழுதிக் கொண்டு போகின்றீர்கள்...! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவைப் பார்க்கும் போது அட நம்மால் போக முடியவில்லையே. துணிவு ஏற்பட்டு என்னால் முடியும் காலம் மிச்சம் மீதி இருப்போரை போய் பார்க்கும் சந்தர்ப்பம் வருமா? என்றுதான் மனம் அங்கலாய்க்கிறது.

தொடருங்கள் பாஞ்ச்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பாஞ்ச்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அண்ணை.....
ஜீவன் சிவாவின் சந்திப்பை, வாசிக்க... ஆவலுடன் இருக்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணக்கட்டுரை எழுதுவது ஒரு கலைதான். நாங்களும் கூடப் பயணிப்பதுபோன்று உணர்வைத் தரும்வகையில் எழுதும் பாஞ்ச் ஐயாவுக்கு பாராட்டுக்கள்.

 

Link to comment
Share on other sites

14 hours ago, கிருபன் said:

பயணக்கட்டுரை எழுதுவது ஒரு கலைதான். நாங்களும் கூடப் பயணிப்பதுபோன்று உணர்வைத் தரும்வகையில் எழுதும் பாஞ்ச் ஐயாவுக்கு பாராட்டுக்கள்.

 

என்னையும் ஒரு எழுத்தாளனாக்கி, உங்களைப்போன்ற உறவுகளையும், ரசிகர்களையும் பெற்றுக்கொள்ள வைத்த யாழ்களத்திற்கு என் நன்றிகள்!!. 

Link to comment
Share on other sites

12 minutes ago, யாயினி said:

ஜீவன் சிவா வருகிறார் தொடரலாம். ........,too slow ?

வணக்கம் யாயினி அவர்களே! வயது அப்படி, உங்களைப்போல் இளமைத் துடிதுடிப்பு அற்றவன். பொறுத்தருள்க. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, யாயினி said:

ஜீவன் சிவா வருகிறார் தொடரலாம். ........,too slow ?

ஜீவன் மிகவும் லேட்டாக வந்ததைச் சொல்லாமல் சொல்கின்றார்  பாஞ் அண்ணை tw_blush:

Link to comment
Share on other sites

மேலும் என் பதிவைத் தொடர ஊக்கம்தந்த  மெசொபொத்தேமியா சுமேரியர்,   பெருமாள் ஆகிய உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துத் தொடர்கிறேன்.

 

நான் உண்டிச்சாலையில் நுளைந்து அமர்ந்ததும், தின்பண்டங்களின் பட்டியலைக் கொண்டுவந்து வைத்த பையன் என்னை நிமிர்ந்து பார்த்தான். எனது தோற்றம்..... தனக்கும் தனியாக ஏதாவது கிடைக்கலாம் என்ற எண்ணத்தை அவனுக்கு வரவழைத்ததோ தெரியவில்லை! குழைந்து நின்றான். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவர்களைக் கண்டுகொள்ளும் திறனை அவர்கள் பெற்றிருப்பது வியக்கவைக்கிறது!! நண்பர் ஒருவர் வரவேண்டும் அவரும் வந்தபின் சொல்கிறேன். நிமிடங்கள் கடந்தன. இருக்கைகள் பல காலியாக இருந்தன, ஆகவே உணவகத்தின் வியாபாரத்திற்கு நான் இடையூறு இல்லை என்பது ஆறுதலாக இருந்தது. சிலர் வந்து விதவிதமான பண்டங்களை வரவழைத்து உண்டு சுவைத்தார்கள். பின் தட்டில் செலுத்திய பணத்தில் திரும்பிய மிகுதியைத் தொடாது, பெரும் தனப் பார்வையைச் சுற்றிலும் வீசிவிட்டுச் சென்றார்கள். சிறுவர்களுடனும் வந்தார்கள். குளிரூட்டிய உணவகமும், குளிர்பானகமும், குளிர்களியும், இனிப்பான தின்பண்டங்களும் அவர்களைக் குதூகலப்படுத்தியதோடு, விரும்பியதை உண்ணும் சந்தர்ப்பமும் கிடைத்ததால், சந்தோச மிகுதியுடன் உண்டு களித்தார்கள். ஓரளவுக்கேனும் கையில் பசை உள்ளவர்களால்தான் அங்கு வந்து உணவருந்த முடியும் என்பது சந்தேகமின்றித் தெரிந்தது. 

நேரம் கடந்தது. ஓசியில், ஏசியில் வந்து குந்தியுள்ளானோ...? கல்லாப்பெட்டியில் இருந்தவரின் பார்வை என்மீது பதிந்துசென்றது. என் தோற்றம் என்ன தெரிவித்ததோ? எதுவும் சொல்லவில்லை. குனிந்து ஏதோ எழுதத் தொடங்கினார். வீபூதிக் குறியோடும், சந்தணப் பொட்டோடும் சிலர் வந்ததைக் கண்டபோது எழமுயன்று ஏமாற்றம் கிடைத்தது. அந்த ஏமாற்றம் அங்கு ஒருவர் துவிச்சக்கரவண்டியில் வந்திறங்கியபோதும் அலட்சியம் தந்தது. ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைப்போன்ற தோற்றத்தில், காய்ந்து கறுத்த உருவம், உருவத்திற்கேற்பப் படியாது நிமிர்ந்து நின்ற கிராப்பு, அழகாகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, தாடி. வந்தவர் இறங்கி வண்டியைத் தாங்குகாலில் நிறுத்தினார். கையில் கைதொலைபேசி துலங்கியது. உயர்ந்தவன், தாழ்ந்தவன். ஏழை, பணக்காரன். வித்தியாசம் எதுவுமின்றி அனைவரையும் சரி சமமாக மதித்து ஒட்டி உறவாடும் ஒன்று என்றால் அது கைதொலைபேசி ஒன்றேதான். தொலைபேசியை எடுத்து அழுத்தி அதனை அவர் காதில் வைத்தபோது, என் தொலைபேசி உறுமியது. வணக்கம்! நான் ஜீவன் சிவா. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?“ வணக்கம்! நான் உணவகத்தின் உள்ளே இருக்கிறேன் வாருங்கள்.

கற்பனை செய்திருந்த உருவம் ஏமாற்றிவிட்டது. யாழ்ப்பாணத்தில், அந்த மண்ணின் பராமரிப்பில் இயற்கையோடு இணைந்து வாழுபவர்களை அங்கு வயல், தோட்டம், சந்தைகளில் அதிகமாகக் காணலாம். அப்படியான ஒரு தோற்றத்தோடு வருகைதந்த ஜீவன் சிவா அவர்களைச் சற்றுக் குனிந்து கைலாகுகொடுத்து வரவேற்றேன். சின்ன உருவம். சிறிது நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். இருங்கள் வரவேற்றுவிட்டு, அருகில் இருந்த உணவுவகைப் பட்டியலை எடுத்து முன்வைத்தேன். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?“ சிவாவை நோக்கினேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பையன் விழுதடித்து ஓடிவந்தான். விருந்துக்கு அழைத்த உறவை வீட்டுக்கு அழைத்து விருந்தளிக்க எனக்கு அங்கு சொந்தமாக வீடில்லை. ஆகையால் பழமுதிர்சோலை உணவகத்தில் அவர் போதும் போதும் என்னும்வரையில் விருந்தளிக்க முடிவுசெய்திருந்தேன். ஒரு காப்பி போதும். இல்லை குளிராக ஏதாவது குளிர்களியுடன்கூடிய சர்பத் அது இது என்று விலைகூடிய பண்டங்களின் பகுதியைக் காட்டினேன். இல்லை இல்லை காப்பிமட்டும் போதும். ஒருமுறை மறுத்தால் மறுமுறை கேட்டுத் திணிக்கும் பழக்கம் எனக்கு யேர்மனியில் வாழ்ந்து அற்றுப்போய்விட்டதால், எனக்கும் ஒரு காப்பி தருமாறு கேட்டுக்கொண்டேன். பையன் முகம் சப்பென்று போய்விட்டது. இதற்காகத்தானா இத்தனைநேரம் ஏசியை ஓசியில் அனுபவித்தீர்கள் என்று அவன் ஏளனம் செய்வதுபோல் இருந்தது.

யாழுக்கு வந்து யாழிலேயே ஒரு யாழுறவைக்கண்ட மகிழ்ச்சி என்னுள்ளே நரம்புகளை மீட்டி யாழாக இசைபாட வைத்தது. காப்பியை உறுஞ்சியபடி எங்கள் அறிமுகம் ஆரம்பமாகி உரையாடல் தொடங்கியது. எங்களைப்பற்றிய விபரங்களைப் பறிமாறிக்கொண்டோம். யாழ்களம்பற்றிப் பேச்சுகள் வந்தபோது, யாழில் கிறுக்குவதைத் தவிர என்னைப்பற்றிச் சொல்ல என்னிடம் எதுவுமே இருக்கவில்லை. ஆனாலும் எனது சில பதிவுகளும், பின்னூட்டங்களும் தன்னை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.  அந்த நேரத்தில்தான், ஜீவன் சிவாவும் புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வருவதைத் தெரிந்துகொண்டேன். ஆச்சரியமாக இருந்தது! மேலைநாட்டில் வாழ்கின்றார் என்பதற்கான எந்தவொரு சிறிய அறிகுறியைத்தானும் அவர் தோற்றமோ! உடை, நடையோவெளிப்படுத்தவில்லை!! விறாந்தையில், ஓலைப்பாயில் படுத்தெழும்பி, விடிந்ததும் வேம்பம் குச்சியை முறித்துப் பல்விளக்கித் தெருவில் நின்று துப்பும் நான்... வெளிநாட்டிலிருந்து வந்தவனில்லை என்று அங்கு சொன்னால்! நம்புவதற்கு யாருமே இல்லை. ஜீவன் சிவா எப்படிப் பிறந்தமண்ணின், குணம், மணம், தோற்றம் எதுவுமே மாறாமல்.... அதிசயித்தேன்...!

அவரது எண்ணங்கள், பேச்சுக்கள் அனைத்திலும், ஏமாற்றமடைந்து விரக்தியிலுள்ள தமிழ்மக்களை, எப்படி மீண்டும் பழைய நிலையில் காணலாம் என்பதிலேயே குறியாக இருந்தது. அரசியல்வாதிகளை அவர் நம்பவில்லை, வெளிநாடுகளையும், அதன் உதவிகளையும் அவர் நம்வில்லை. ஆனாலும் கிடைப்பவற்றிலிருந்து, ஒவ்வொரு தமிழனும் தன்காலில் எழுந்து நிற்பதற்கு வேண்டியவற்றை எப்படிப் பெற்றுக்கொள்ளவது என்பதில் கவனம் இருப்பது தெரிந்தது. நலிந்தவர்களுக்கு அவர் செய்யும் உதவிகளை அடக்கமாகவே செய்துவருவதும் பேச்சுக்களில் தெரிந்தது. அகன்ற குளம் வெட்டிப் பெருமழைக்குக் காத்திருப்பதை விடவும், சிறுதுளி நீர் கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேன்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தார். யாழ்களம் இணைத்துவைத்த உறவுகளில் அனேகமானோர் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பதை இந்த உறவின் சந்திப்பும் உறுதிப்படுத்தியது.

காப்பி குடித்துமுடித்து நான் எழுவதற்கு முன்பாகவே பரபரப்புடன் எழுந்தவர் அதற்குரிய பணத்தைச் செலுத்திவிட்டார். தடுப்பதற்கு வினாடி நேரம்கூடத் தரவில்லை. பையனுக்கு ஏதாவது கொடுப்போம் என்று நான் எண்ணியிருந்ததை அவர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை, பையன் முகத்தைப் பார்க்காமலே உணவகத்தைவிட்டு வெளியேறினேன். உறவைச் சந்தித்த மகிழ்வுடன் வெளியே வந்தபோது அனல்பறக்கும் வெயிலினூடே காற்றும் சிறிது பலமாக வீசியது. சந்தித்த மகிழ்ச்சி மாறுவதற்கு முன்னே பிரிவதற்கான நேரமும் வந்தது. பிரிவதற்காகக் கைலாகு கொடுத்தவேளையில் வீசிய காற்று அவரது துவிச்சக்கர வண்டியைக் கீழே தள்ளி விழுத்தியது. அருகேநின்ற நான் பதறிப்போய் அதனைத் தாங்கிப் பிடிக்கச்செல்லுமுன் வண்டி விழ்ந்துவிட்டது. கவலைவேன்டாம் பாஞ், இனிமேல் அதுவிழாது, விழ்வதற்கும் முடியாது. எந்தப் பதட்டமும் இன்றி புன்சிரிப்போடு கூறினார். எத்தனை பெரியதத்துவம்தான் அதற்குள்...!! தமிழன் விழுந்துவிட்டான். இனிமேல் விழ இடமில்லை எனும்போது.... அடுத்தது முடிவுதானே! ஒரு முடிவு வந்துதான் ஆகவேண்டும். பிறந்தமண்ணில் மக்களோடு மக்களாகப் பலநாட்கள் தங்கி வாழும் ஒருவர்....! விடுமுறையைக் கழிக்க வந்துசெல்லும் ஒருவர்போல் நான்.....!! யாழுறவு ஜீவன் சிவா என்மனதில் உயர்ந்து உறைந்தார்.

 

ஜீவன் சிவா அவர்களைச் சந்தித்த நிகழ்வுபற்றி நான் எழுதியவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால், அல்லது குறைகள் இருந்தால் அவர் அதனைச் சரிசெய்து அறியத்தருவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அங்கு ஒருவர் துவிச்சக்கரவண்டியில் வந்திறங்கியபோதும் அலட்சியம் தந்தது. ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைப்போன்ற தோற்றத்தில், காய்ந்து கறுத்த உருவம், உருவத்திற்கேற்பப் படியாது நிமிர்ந்து நின்ற கிராப்பு, அழகாகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, தாடி. வந்தவர் இறங்கி வண்டியைத் தாங்குகாலில் நிறுத்தினார்.

 தோளில் பை ஏதாவது தொங்க விட்டிருந்தாரா? :cool:

Link to comment
Share on other sites

53 minutes ago, குமாரசாமி said:

 தோளில் பை ஏதாவது தொங்க விட்டிருந்தாரா? :cool:

ஆமா 

கங்காரு மாதிரி வயித்தில் இல்லை, முதுகில்.

அதில் எப்பவும் எனது கேமராவும், தண்ணிப் போத்தலும், கொஞ்சம் முகம் துடைக்கும் கடதாசிகளும் இருக்கும்.

 

2 hours ago, Paanch said:

ஜீவன் சிவா அவர்களைச் சந்தித்த நிகழ்வுபற்றி நான் எழுதியவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால், அல்லது குறைகள் இருந்தால் அவர் அதனைச் சரிசெய்து அறியத்தருவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

நன்றி பாஞ்ச்.

சந்திப்பை சுவையாக எழுதியிருந்தீர்கள். ஆனாலும் நான் 6/8 நிமிடம்தானே பிந்தி வந்தேன். காரணம் மகளின் தொலைபேசி என்றும் கூறியிருந்தேன். அதுக்காக இப்படி வாரக்கூடாது.:grin:

எப்படியாயினும் கருத்துக்களால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் நண்பர்களே என்பதை உங்கள் சந்திப்பு எனக்கு அடித்து சொல்லியதை நான் மறக்கவே மாட்டேன்.

மிகவும் இனிமையான ஒரு மனிதரை சந்தித்தித்தது மிகவும் சந்தோசம் - எனது முகமறிந்த நண்பர் குழாமில்  நீங்களும் சேர்ந்து விட்டீர்கள்.

வாழ்க நீடூழி.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

எப்படியாயினும் கருத்துக்களால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் நண்பர்களே என்பதை உங்கள் சந்திப்பு எனக்கு அடித்து சொல்லியதை நான் மறக்கவே மாட்டேன்.

மிகவும் இனிமையான ஒரு மனிதரை சந்தித்தித்தது மிகவும் சந்தோசம் - எனது முகமறிந்த நண்பர் குழாமில்  நீங்களும் சேர்ந்து விட்டீர்கள்.

வாழ்க நீடூழி.

ஈடிணையில்லாத பரிசு ஒன்று கிடைத்த மகிழ்ச்சி. நன்றி ஜீவன் சிவா.  kiss and thank you smiley

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.