Jump to content

வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!


Recommended Posts

வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!

WINDOW_1.jpg

ன்றைய சூழலில் பொழுதுபோக்கு சாதனம் என்பதைத் தாண்டி, அடிப்படை அத்தியாவசியப் பொருளாக மாறி இருப்பது இரண்டு. ஒன்று, மொபைல். மற்றொன்று, கணினி. மொபைலைப் பற்றிச் சொல்லத்தேவையே இல்லை. அந்த அளவிற்கு நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. கணினி,  ஐடி கம்பெனி முதல் அண்ணாச்சி கடை கணக்குவழக்கு அனைத்து அலுவல்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. 

இந்த கணினிகள்,  பல்வேறு இயங்குதளம் என்று கூறப்படும் Operating system (O.S) யினால் இயங்குகின்றது. அதில் முக்கியமானது  வின்டோஸ் (Windows) இயங்குதளம். இதன் கீழ் Windows 7 Home premium, Windows 7 professional, Windows 7 ultimate, Windows 8 pro, Windows 8.1 pro என பல இருக்கின்றன. அதனுடன் Windows 10  என்னும் இயங்குதளத்தை ரெட்மாண்ட் -  பேஸ்டு நிறுவனம், கடந்த வருடம் ஜீலை 29 ம் நாள் அறிமுகம் செய்தது. இந்த இயங்குதளமானது பல்வேறு கணினிகள், மடிக்கணினிகள், டேப்லட்கள், மற்றும் X - box விளையாட்டு சாதனங்களுக்கும் உகந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், பழைய இயங்குதளமான வின்டோஸ் 7 & 8  போன்றவற்றிலிருந்து, வின்டோஸ் 10 ற்கு இலவசமாக மேம்படுத்திக்கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்தது.

இந்த இலவசமாக மேம்படுத்திக்கொள்ளும் வசதி இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், நாளை முதல் இதன் விலை ரூ.8000/-யை தொடும் என ரெட்மாண்ட் - பேஸ்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நிறுவனம் வின்டோஸ் 10 ஐ மக்களிடத்தில் பெரிய அளவில் கொண்டு சேர்க்க  வேண்டும் என வின்டோஸ் நிறுவனம் உறுதியுடன் இருக்கிறது. அதன் மூத்த இயக்குனர் லிசா குர்ரி பேசுகையில், "இதனை மக்களிடத்தில் சேர்க்க நாங்கள் கடினமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆம், மக்கள் விரும்பும் இயங்குதளத்திற்காக கடுமையாக வேலை பார்க்கிறோம்" என்று கூறியதன் மூலம் அந்நிறுவனத்தின் முனைப்பு தௌிவுறுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த வின்டோஸ் 10 ல்...?,

WINDOW_2.jpg

குரல் சார்ந்த மெய்நிகர் உதவியை Cortana எனும் வசதி செய்கிறது:

முன்பு வின்டோஸ் கைபேசியில் காணப்பட்ட cortana  எனும் உதவியாளர், தற்பொழுது உங்கள் கணினியிலும். இந்த வசதி மூலம் நீங்கள் குரலினால் ஆணையிட்டால், அது அனைத்து தகவல்களையும் சேகரித்துவிடும்.  வானிலை தகவல்கள் முதல் மின்னஞ்சல் அனுப்புவது வரை அனைத்து வேலைகளையும்  இந்த வசதி மூலம் செய்துமுடித்துவிடலாம். மேலும் இதனை விண்டோஸ் மொபைலில் மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு மொபைலுடனும் தொடர்பு கொள்ளும் வசதி இதில் உள்ளது.

செளகரியமானது:

விண்டோஸ் 8 இயங்குதளம் அதன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் மிகவும் அசெளகரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அதன் கடுப்பேற்றும் Menu ஆப்ஷன்தான். Modern UI என்று சொல்லப்படும் இது, தொடுதிரை கணினிகளுக்கு மட்டும் சாதகமாக திகழ்ந்தது. ஆனால், இந்த இயங்குதளத்தில் Menu Option ஐ சற்று எளிதில் கையாளும் வகையில் வடிவமைத்துள்ளனர்.மேலும் நமக்கு தேவையான செயலிகளை ஏற்ற இடத்தில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்பதும் இதன் சிறப்பு.

பாதுகாப்பானது:

விண்டோஸ் 7 இயங்குதளம் வந்து ஏழு ஆண்டுகள் ஆகப்போகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்தும் மக்கள் பெரும்பாலும் விண்டோஸ் 10க்கு மாறிவிட்டார்கள். ஏழு ஆண்டுகள் பழமையான ஒரு இயங்குதளத்தை பயன்படுத்துவது என்பதே, தற்போதைய டெக் உலகில், பாதுகாப்பை குறைக்கும் செயல்தான். Microsoft Hello எனும் வசதி நம் கணினியின் கேமரா மூலம், நம் முகத்தினை அடையாளம் கண்டுகொண்ட பின்புதான் கணினியை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. இதனுடன் Device guard மற்றும் Microsoft passport வசதிகளும் உள்ளன. Device guard என்பது நிறுவனங்கள், தங்கள் தகவல்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தகவல் சுரண்டலையும் தடுக்கின்றது. Microsoft passport ஆனது வலைதளங்களைப் பாதுகாப்புடன் கையாள உதவுகின்றது.

ஒரே திரையில் பல பேர் விளையாடலாம்:

வின்டோஸ் 10 மூலம், பல பேர் தனித்தனியாக  விளையாடும் X -box விளையாட்டுக்களை ஒரு திரையில் இணைத்து சுருக்கிக் கொண்டு வந்துவிடலாம். இது விளையாட்டாளர்களுக்கு நண்பேன்டா!..

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்:

விண்டோஸ் 10 ல் உள்ள Edge எனும் வசதி, பல மடங்கு வேகத்தினை உள்ளடக்கியது. இந்த Chrome ஐ விட 112 மடங்கு வேகமானது. வேகத்துடன், பல விசயங்களையும் நண்பர்களுடன் எளிதில் பகிரும் வசதியும் இதில் உள்ளது. Cortana மூலமும் இதனை உபயோகிக்கலாம்.

WINDOW_3.jpg

2 இன் 1:

வளரும் சந்தையில் டேப்லட்டும், 2 in 1 ஆக பயன்படுத்தப்படும் 'ஃஹைப்ரிட்' கணினிகளுமே பிரசித்தி. இதனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட இந்த இயங்குதளம் விசைப்பலகைக்கும், தொடுதிரைக்கும் ஏற்ற வகையில் எல்லா சூழ்நிலைக்கும் கைகொடுக்கும்.

விர்ச்சுவல் ஸ்கிரீன்:

இந்த வசதி மூலம் பல கணினிகள் பயன்பாட்டை தவிர்க்கலாம். எப்படியென்றால் நம் கணினி திரையினை நம் தேவைக்கு ஏற்ப பல பகுதிகளாய் பிரித்து, மாற்றி அமைத்து, அதில் வேறு வேலையினையும் கையாளலாம். இதனை பயன்படுத்த 'task bar' ல் இருக்கும் 'new desktop' என்பதை click செய்தாலே போதும்.

இலவசமானது:

விண்டோஸ் 10 ற்கு மேம்படுத்திக் கொள்வதினால் வேகமும், பாதுகாப்பும் அதிகரிக்கின்றது மட்டுமல்லாமல் பல வசதிகளைகளைக் கொண்டு, வேலையினை சுலபமாக முடித்துக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பு இலவசமாக கிடைக்கும் போது நமக்கு லாபம் தானே.

இதை விடவும் முக்கியமானதொரு விஷயம், நீங்கள் விண்டோஸ் 10ற்கு அப்கிரேட் செய்து கொண்டாலும், சில மாதங்கள் கழித்து பிடிக்கவில்லையெனில், விண்டோஸ் 7க்கு டவுன்கிரேடு செய்துகொள்ள முடியும். ஆனால், அதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம், உங்களிடம் விண்டோஸ் 10 லைசென்ஸ் இருக்கும். ஆனால், தற்போது அப்டேட் செய்யவில்லை என்றால், மீண்டும் பணம் கொடுத்து அல்லது பைரேட்டட் வெர்ஷனை பயன்படுத்தும் நிலை வரும்.

இது ஏற்கனவே 190 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஆனால் நாளை முதல் இதன் விலை ரூ.8000/- யை நெருங்கும். ஆகவே, இன்றே மேம்படுத்திக்கொள்ளுங்கள்... உலகத்தின் வேகத்துடன் போட்டியிடுங்கள்..

http://www.vikatan.com/news/information-technology/66641-why-should-you-upgrade-to-windows-10.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.