Jump to content

விடைப்பெற்றது பிரபல தேடல் தளம்


Recommended Posts

விடைப்பெற்றது பிரபல தேடல் தளம்

 

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரன்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டொரன்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரன்ட்ஸ் எப்போதும் உங்களை நேசிக்கும்...சென்று வருகிறேன்”  என்ற செய்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

download.jpg

 

http://www.virakesari.lk/article/9864

Link to comment
Share on other sites

டோரென்ட்டுகளின் கூகிள் மூடப்பட்டது. அடுத்து என்ன?

toooo1.jpg

' மக்க கலங்குதப்பா பாடிக்கொண்டே கண்கள் வியர்த்தபடி இருக்கிறார்கள் டோரென்ட்வாசிகள். மூன்று வாரங்களுக்கு முன் உலகின் நம்பர் ஒன் டோரென்ட் தளமான kickass-ஐ தளத்தை முடக்கியதோடு, அதன் உரிமையாளரான அர்டெமை போலாந்தில் கைது செய்தது காவல் துறை. kickass தளம் முடக்கப்போட்டபோதே, வார்னஸ் ப்ரோஸ், 20த் சென்ச்சுரி ஃபாக்ஸ் போன்ற பெரும் ஹாலிவுட் நிறுவனங்கள் விழா எடுத்து கொண்டாடி இருப்பார்கள்.அப்படியும் செய்யாதவர்கள், இப்போது கொண்டாடுவார்கள். தற்போது Torrentz.eu என்ற தளத்தை, அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடையை இழுத்து சாத்தி இருக்கிறார்கள்.

நேற்று வழக்கம் போல்,  Torrentz.eu தளத்திற்கு சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி. 'பல்வேறு தளங்களில் இருந்து தேடி எடுத்து ஃபைல்களைத் தரும் ஒரு இலவச , அதிவேக தளமாக டோரென்ஸ் இருந்தது ' என குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சர்ஸ் பட்டனை க்ளிக் செய்தால், 'டோரென்ட் உங்கள் மீது அன்பாகவே இருக்கும். பிரியாவிடை' என மற்றொரு குறிப்பு இருந்தது.

toooo2.jpg

 

அவ்வளவுக்கும், Torrentz.eu வில் டோரென்ட் ஃபைல்கள் எதுவும் இருக்காது. அப்படியிருந்தும் , டோரென்ட் தளம் பறிபோனது தான், நேற்றைய டெக் உலகின் அதிர்ச்சிகர செய்தி. காரணம், ஒரு குறிப்பிட்ட ஃபைல் இந்த தளத்தில் இருக்கிறதென கண்டுபிடிப்பது டோரென்ட் தளங்களில் அவ்வளவு எளிதானதல்ல. ஒவ்வொன்றையும் kickass(தற்போது மூடப்பட்டுவிட்டது), piratebay, extra torrent, yify, பிட் ஸ்னூப் தளங்களில் சென்று தேட முடியாது. அதைத்தான் தொகுத்து வழங்கியது Torrentz.eu . சுருக்கமாக சொல்வதென்றால், அது டோரென்ட்டுகளின் கூகிள். கூகிள் போல், டோரென்ட் ஃபைல்களை தொகுத்துத் தரும் ஒரு சர்ச் இஞ்சின்.

இது வெறும் பைரசி தளங்கள் தானே?

காலைல டிபன் சாப்பிட்டீர்களா என்பது போல், சகஜமாக மாறிய வார்த்தைகள் திருட்டு விசிடிக்களும், டவுன்லோடு செய்து படம் பார்ப்பதும். திருட்டு  சிடிக்கள் என்பதை 'குடி குடியைக் கெடுக்கும்' என்னும் லேபிளோடு குடிக்கும் குடிமக்களைப் போல , மிக இயல்பாக வாங்கி செல்கின்றனர் மக்கள். அமீர்கானின் முந்தைய படமான PKவை, ஒரு மாநிலத்தின் முதல்வர், ' டவுன்லோடு செய்து பார்த்தேன்.இதற்கு வரிவிலக்கு அளிக்கலாமே' என சில ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு பைரசிகளுக்கு பழகிவிட்டோம். ' அட , நான் எல்லாப் படமுமே, திரையில் தான் பார்ப்பேன் ' என மார்த்தட்டுபவர்கள் கூட, தங்களது மொபைலில் தங்களுக்கே தெரியாமல் பைரசி பாடல்களையும், தங்கள் கணினிகளில் பைரசி மென்பொருள்களையும் பயன்படுத்தி இருப்பார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன்னர், piratebay தளம் முடக்கப்பட்ட போது, அதன் தாக்கம் அதிகளவில் இல்லை. ஆனால், தற்போதைய நிலை வேறு.13 ஆண்டுகளாக கொடிகட்டிப்பறந்த kickass-ம், Torrentz.eu-ம் மூன்று வார இடைவேளையில் மூடப்பட்டு இருக்கிறது.  கபாலி படத்திற்காக tamilgun.com மூடப்பட்டது. அது மூடப்பட்டும். tamilrockers தளத்தில் படம் முதல் நாளே  வெளியானது. தற்போது tamilgun தங்கள் டொமைனை மாற்றி இருக்கிறார்கள். ஆனால், இதே நிலை, தொடர்ந்து நீடிக்காது. இனி, எல்லா தளங்களும் மூடப்படலாம். குறைந்தது, அதன் வீச்சு குறைய வாய்ப்பு இருக்கிறது. திரைப்படம் என்பதைத் தாண்டி, புத்தகங்கள், மென்பொருள்,கேம்ஸ், போன்றவற்றிற்காகவும், அதிகளவில் டோரென்ட்டுகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

toooo3.jpg

 

டோரென்ட் தளங்கள் மூடப்படுவதன் ஒரே நல்ல விஷயம். உலக சினிமா ரசிகர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் , இனி ஃபேஸ்புக்கில், ஈர மனங்களை அள்ளும் இரானிய சினிமா எனவெல்லாம் எழுத முடியாது. புதுப்படங்களை அப்லோடு செய்யும் தளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. இல்லையெனில், பழைய படங்களை வைத்தே ஒப்பேற்ற வேண்டியது தான். இனி, ஒரு படத்திற்கு 480p,720p,1080p, HDRIP,TCRIP,DVDSCR,BLURAY  போன்ற  பல வெர்ஷன் எல்லாம் வராது.இல்லாவிட்டால், ஒரு வழி இருக்கிறது. ஒரிஜினல் டிவிடிக்களை ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து வாங்கி கருத்துக்களை தெரிவிக்கலாம்.

க.மணிவண்ணன்
மாணவ பத்திரிகையாளர்

Kickass முடக்கப்பட்டது எப்படி தெரியுமா?

 

kickass.jpg   


பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது பழமொழி. ஆனால், பலநாள் திருடன், திருடாமல் நியாயமாக ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கியபோது மாட்டிக்கொண்டார் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், இது தான் நடந்து இருக்கிறது கிக்ஆஸ் நிறுவனர் ஆர்டெம் வௌலினுக்கு. நேற்று காப்பிரைட் வழக்கில், அவரை போலாந்தில் வைத்து கைது செய்து இருக்கிறது அமெரிக்க காவல்துறை. 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக காப்பிரைட் ஃபைல்களௌ பகிர்ந்துள்ளதால், அவரைக் கைது செய்திருப்பதாக சொல்கிறார்கள்.


இவரைக் கைது செய்து, இவரின் வலைதளத்தை முடக்கினாலும், சில மணி நேரத்தில், புதிய வலைதளம் ஒன்றை ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில் டோரென்ட்டில் டவுன்லோடு செய்வது டெக்னிக்கலாக குற்றம் கிடையாது.

டோரென்ட் சந்தைகளின் ராஜாவக திகழ்ந்து வருவது கிக்ஆஸ் தளம் kat.cr .2008-ம் ஆண்டு இந்த தளம் தொடங்கப்பட்டாலும், 2015-ம் ஆண்டு தான் ,பைரேட் உலகின் டான் ஆக உருவெடுத்தது கிக்ஆஸ். கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த பைரேட்பே சிக்கியதும் அதே ஆண்டு தான். பைரேட்பேயின், மூன்று ஓனர்கள் கைது செய்து, பைரேட்பேயை முடக்கினார்கள். அதற்குப்பின்னர் பல பெயர்களில், பைரேட் பே வலம் வந்தாலும், முதல் இடத்தை மீண்டும் அதனால் பிடிக்க முடியவில்லை. கிக்ஆஸ் தளத்திற்கு, மாதம் ஒன்றிற்கு, 50 மில்லியன் பார்வையாளர்கள் வருகிறார்கள்.அதிக நபர் பார்க்கும் வலைதளங்கள் பட்டியலில், உலக அளவில், கிக்ஆஸ் 68வது இடத்தில் இருக்கிறது.

பல்வேறு டொமைன்களில் ராஜாவாக சுற்றி வந்த ஒரு நபரைப் பிடிக்க வழிதெரியாமல் அமெரிக்க காவல்துறை விழிபிதுங்கி நின்றதுஆனால்,நேற்று இவரது கைதுக்குப் பின் இருக்கும் கதை சுவாரஸ்யமானது.

டோரென்ட் என்பது ஒரு ஃபைல் ஷேரிங் தலம் என்பதால், அது அப்லோட் செய்பவர்களின் பிரச்னையே அன்றி, அர்டெமின் பிரச்னை அல்ல. ஆனால், அப்படி பதிவேற்றப்பட்ட ஃபைல்கள், காப்பிரைட் சம்பந்தப்பட்டது என பலமுறை சொல்லியும், விளம்பர நோக்கிற்காக, அதை அழிக்காமல், அதை வைத்து பலமடங்கு லாபம் பார்க்க முயற்சி செய்தது தான் பிரச்னை.

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு உளவு ஏஜென்டை வைத்து, கிக்ஆஸ் வலைதளத்தை அணுகுகிறது அமெரிக்க காவல்துறை.ஒரு நாளைக்கு 300 டாலர்கள் என விலைபேச்சி ஆர்டெமுடன், ஒப்பந்தம் செய்கிறது அமெரிக்கா.இதெல்லாம் செய்வதற்கு பின்னால் இருக்கும் காரணம், குறிப்பிட்ட நபரின் விவரங்களைப் பெறத்தான். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், எந்த வங்கிக் கணக்கில் பணம் பெறப்பட்டது என்பதை கண்டு அறிந்தது அமெரிக்க காவல்துறை.அந்த அக்கௌன்ட்டில், 2015 ஆகஸ்ட்டில் இருந்து, மார்ச் 2016 வரை 31 மில்லியன் டாலர்கள், விளம்பரத் தொகையாக பெறப்பட்டு இருந்தது.


இவர்களுக்குக் கிடைத்த ஈ-மெயில் முகவரியான  pr@kat.cr தான், ஃபேஸ்புக்கில் official.KAT.fanclub என்ர பக்கத்தையும் மெயின்டெய்ன் செய்ய, உஷாரானது காவல்துறை. சில வலைதள ட்ரேக்கர்களை வைத்து அர்டெமிற்கு சொந்தமான தளங்களை ( kickasstorrents.com, kat.cr, kickass.to, kat.ph, kastatic.com, thekat.tv and kickass.cr ) டொமைனை ட்ரேக் செய்தார்கள்.இந்தத் தகவல்களை வைத்து இந்த டொமைன்களின் உரிமையாளர், முகவரி, ஈமெயில் ஐடி, மொபைல் எண் போன்றவற்றை வைத்து அது உக்ரைனை சேர்ந்த அர்டெம் வௌலின் என்பவரைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஆப்பிள் மொபைல் வாடிக்கையாளர்கள் ஏதேனும் அப்ளிகேஷன் அல்லது ஃபைல்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால், ஐட்யூன்ஸில் பணம் கட்டித்தான் பெற முடியும். அர்டெம் மாட்டிக்கொண்டது இங்கு தான். உலகிற்கே, பைரேட்டட் , அதாவது திருட்டுத்தனமான ஃபைல்களைத் தரும் வலைதளத்தின் ஓனர், ஐட்யூன்ஸில் அந்த குறிப்பிட்ட வங்கியின் அக்கௌன்ட்டில் இருந்து பணம் செலுத்தி சில அப்ளிகேசன்களை வாங்குகிறார்.

இந்த எல்லா தகவல்களையும் ஒன்றிணைத்து, அர்டெமை கைது செய்து இருக்கிறது அமெரிக்காவின் ஹோம்லாண்டு செக்யூரிட்டி.

http://www.vikatan.com/news/information-technology/66876-torrentz-shuts-down.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.