Jump to content

இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’


Recommended Posts

இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’ 

 

தமிழ் பேசும் மக்­களின் இனிய தோழனாய் அவர் தம் முதன்மைக்­கு­ரலாய் வழி­காட்­டியாய் சிறப்­புற்று விளங்கும் வீர­கே­சரி இன்று (6.08.2016) தனது 86ஆம் அக­வையின் நிறைவில் காலடி எடுத்து வைக்­கின்­றது. இது தமிழ் பேசும் இத­யங்­க­ளுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்­தி­யாகும்.

86-anniversary.jpg

தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தினமும் உலக நடப்­பு­க­ளையும் மற்றும் முக்­கிய விட­யங்­க­ளையும் தரு­வ­தோ­டல்­லாமல் தமிழ்மொழி பண்­பாடு, கலா­சாரம், பொரு­ளா­தாரம், சமூக முன்­னேற்றம் ஆகிய அனைத்துத் துறை­யிலும் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பில் வளர்ந்­தி­ருந்த வர்த்­த­க­ரான ஆவ­ணிப்­பட்டி பெரி. சுப்­பி­ர­மணியம் செட்­டியார் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி புதன்­கி­ழமை வீர­கே­சரியை ஆரம்­பித்தார். அவ­ருக்கு தமி­ழ­கத்தில் இருந்து கொழும்பில் வாழ்ந்­தி­ருந்த எச்.நெல்­லையா என்­ப­வரும் மற்றும் பல பெரி­யார்­களும் பெரிதும் உத­வி­யாக இருந்தனர்.

பாரத தேச­பிதா மகாத்மா காந்­தி­ய­டிகள் அக்­கா­ல­கட்­டத்தில் இலங்கை வந்து சுற்­றுப்­ப­யணம் செய்து உரை­களை ஆற்றிச் சென்ற போதும் அவ்­வி­ட­யங்கள் குறித்து தமிழ் மக்கள் ஏதும் அறி­யா­தி­ருந்த சூழ்­நிலை உண­ரப்­பட்­டதே வீர­கே­சரிப் பத்­தி­ரிகை உரு­வாக பிர­தான உந்­து­த­லாக அமைந்­தி­ருந்­தது.

வீர­கே­ச­ரியின் இலட்­சியம் எது­வாக இருக்கும் என்­ப­தனை சுப்­பி­ர­ம­ணியம் செட்­டியார் வீர­கே­ச­ரியின் முதல் இதழில் திட்­ட­வட்­ட­மா­கவே குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அதை இங்கு குறிப்­பி­டு­வது மிகவும் பொருத்­த­மா­ன­தாகும்.

“எம்மைப் பற்றி நாமே எழுதிக் கொள்­வதில் எமக்கு சிறி­தேனும் விரும்­ப­மில்லை. ஆயினும் புதி­தாகத் தோன்றும் பத்­தி­ரிகை தனது நோக்­கத்தை முதல் வெளி­யீட்டில் தெரி­விக்க வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு செய்­வது உலக வழக்கு. ஆகையால் கீழ்­கண்ட சில­வற்றை எழு­த­ மு­யன்றோம்.

தன்னால் இயன்ற அள­வுக்கு பொது ஜனங்­க­ளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அவா­வினால் தூண்­டப்­பட்டே வீர­கே­சரி தோன்­று­கிறான். அசாத்­தி­ய­மான காரி­யங்­களைச் செய்து முடிக்கும் திறன் படைத்­தவன் என்று வீறு பேசத் தயா­ராக இல்லை. நியாய வாய்ப்பை எட்­டு­ணையும் மீறாமல் நடு­நிலையில் இருந்து உல­கத்தின் முன்­னேற்­றத்­திற்­கான இயக்­கங்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் பரி­வுடன் ஆராய்ந்து பொது­மக்கள் கருத்தை நல்­ல­மு­றையில் உரு­வ­கப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தையே வீர­கே­சரி தன் முதல் கட­னாக கொள்­கின்றான்.

தாராள சிந்­த­னையும் பரந்த நோக்­கமும் சம­ரஸ உணர்வும் பெற்ற வீர­கே­சரி சாதிஇ சமய சண்­டை­களில் கலந்­து­கொள்­ள­மாட்டான். நியா­யமே அவன் வீற்­றி­ருக்கும் பீடம். அவ­னது கருத்­துக்கள் நியா­யத்­தையே அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்கும். மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக் கொண்டு உயர்ந்த நோக்­குடன் வெளி­வரும் வீர­கே­சரி தமிழ் மக்­களின் அன்­பையும் ஆத­ர­வையும் நாடு­கின்றான்.

இவ்­வா­றான ஆசி­ரி­ய­ரது நோக்கு ஒரு தார­க­மந்­தி­ர­மா­கவே கடந்த 86 வரு­டங்­க­ளாக கடைப்­பிக்­கப்­பட்டு வரு­வதை வாச­கர்கள் நன்­கு­ணர்­வார்கள். இத்­த­கை­ய­தொரு தனித்­துவ வர­லாற்­றினை கொண்டு வீர சிங்­க­மென நிமிர்ந்து, இந்­நாட்டின் தமிழ்ப் பேசும் இனத்­துக்கு விசே­ட­மா­கவும் நாட்டு மக்­க­ளுக்குப் பொது­வா­கவும் சேவை புரிந்­து­வரும் வீர­கே­ச­ரியின் வாழ்க்கைப் பயணம் இலே­சா­ன­தல்ல. அவன் சந்­தித்த சோத­னைகள் பலப்­பல. அது­போன்று சாத­னை­களும் ஏராளம் என்­பதில் பெருமை கொள்­ளலாம்.

செட்­டி­யா­ர­வர்கள் குறிப்­பிட்­டது போன்று நடு­நிலை தவ­றாமல் நின்று தமிழ் பேசும் மக்­க­ளுக்­காக பக்­கஞ்­சா­ராது உள்­ளது உள்­ள­படி செய்திச் சேவையை தினமும் வழங்­கி­ய­தோடு மட்­டு­மன்றி அவர்கள் மீது பரிவு கொண்டு பற்­பல அறி­வு­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை வீர­கே­சரி இந்த 86 வருட காலத்தில் அவ்­வப்­போது உரிய காலத்தின் தேவைக்கு இணங்க மேற்­கொண்­டு­வந்­தது யாவரும் அறிந்­ததே.

இதன் பயனாய் பல்­வேறு பத்­தி­ரி­கைகள் தோன்றிச் சேவை புரிந்­ததை மறக்க முடி­யாது. ஜோதிஇ மித்­திரன்இ மித்­திரன் வார­மலர், நவீன விஞ்­ஞானிஇ லஸ்­ஸன வந்­கம, விது­மின உட்­பட சில பத்­தி­ரி­கைகள் 1960 களில் தோற்றம் பெற்றுச் சேவை­பு­ரிந்­தன.

இவை தவிர இந்­நாட்டு எழுத்­தா­ளர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்கும் நோக்கில் வீர­கே­சரி சிறு­கதைப் போட்­டி­களை நடத்­தியும் மற்றும் நட­வ­டிக்­கைகள் மூலமும் செயற்­பட்­டமை என்றும் நினை­வு­கூ­ரத்­தக்­கது. அத்­துடன் வீர­கே­சரி 1970 களில் மேற்­கொண்ட மாதம் ஒரு நாவல் பிர­சு­ர­ திட்டம் அக்­கா­லத்தில் வாச­கர்­களால் மிகவும் வர­வேற்­கப்­பட்ட ஒன்­றாகும். இதன் மூலம் ஆக்க இலக்­கிய கர்த்­தாக்கள் பெரு­ம­திப்பைப் பெற்­றார்கள்.

நாட்டின் அர­சியல் விட­யங்­களை குறிப்­பாக தமிழ் மக்­களின் அர­சியல் உரிமைப் போராட்­டங்­களில் மிகுந்த ஆர்வம் காட்டி உட­னுக்­குடன் செய்­தி­களை வழங்­கி­ய­தோடு மட்­டு­மன்றி காலத்­துக்குக் காலம் எழும் அர­சியல் உரிமைப் போராட்­டங்­களில் அனைத்து அர­சியல் தரப்­பி­ன­ரதும் கருத்­துக்­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் திரட்டி வெளி­யி­டு­வதன் மூலம் அவர்­க­ளுக்கு ஒரு வழி­காட்­டி­யா­கவும் திகழ்ந்து வந்­தி­ருக்­கி­றது. இன்றும் அதன் பணி சோர்­வின்றி தளர்­வின்றித் தொட­ரு­கின்­றது.

இந்த அய­ராத பொது­மக்கள் பணியில் பத்­தி­ரிகை ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் இருந்து பத்­தி­ரிகை நிர்­வா­கி­களும் பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களும் சிறப்­பாகக் கட­மை­யாற்றி பத்­தி­ரி­கையின் பெயரை மக்கள் மத்­தியில் ஆழப்­பதித்­தி­ருக்­கி­றார்கள்.

இந்தவகையில் அன்­றைய கால­கட்­டத்தில் சுப்­பி­ர­மணியம் செட்­டி­யா­ரோடு எச். நெல்­லையா, ஈஸ்­வர ஐயர் போன்­றோரும் 1960 களின் பின் டி.பி.கேசவன், கிருஷ்­ண­மூர்த்தி, ஹரோல்ட்­ பீரிஸ், எம்.ஜி.வென்­சஸ்லாஸ் போன்­றோரும் பெரும் சேவை­யாற்­றினர். இன்­றைய காலக்­கட்­டத்தில் குமா­ர் ­ந­டேசன் முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ராக பெரும் சேவை புரிந்­து­வ­ரு­கின்றார்.

பத்­தி­ரிகை பிர­தம ஆசி­ரி­யர்­க­ளாக கே.பி. ஹரன், கே.வி. எஸ்.வாஸ், கே.சிவப்­பி­ர­காசம், சிவ­னே­சச்­செல்வன், எஸ்.நட­ராஜா ஆகியோர் பணி­பு­ரிந்து வழி­காட்­டி­யி­ருக்­கி­றார்கள். ஈ.வி.டேவிட் ராஜூ, எம்.எஸ்.எம்.கார்­மேகம், இரா­ஜ­கோபால் ஆகி­யோரின் பணியும் இங்கு நினை­வு­கூ­ரத்­தக்­கது.

காலத்­துக்கு காலம் வேலை­நி­றுத்தம் உட்­பட நெருக்­க­டி­களை வீர­கே­சரி எதிர்­நோக்­கிய போதும் முகா­மை­யா­ளர்கள்இ ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊழி­யர்­களின் அய­ராத உழைப்­பினால் வீர­கே­சரி மக்கள் மனதில் அழி­யாத இடத்தைப் பெற்­றது. மிகுந்த செல்­வாக்­குடன் அதன் பணி மேலும் முன்­னோக்கிச் செல்­கின்­றது.

எக்­ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட் என்ற கம்­பனிப் பெய­ருடன் நிறை­வான சேவையை தின­ச­ரி­யா­கவும் ஞாயிறு வார­வெ­ளி­யீட்டின் மூல­மா­கவும் மக்­க­ளுக்கு வழங்கி அரு­மை­யான தோழனாய் பிர­கா­சிக்கும் வீர­கே­சரி, 1990 களில் தகவல் நவீன தொழில்­நுட்­பத்­துக்குள் பிர­வே­சித்­தமை மேலும் பல படிகள் முன்­னேற வழி­வ­குத்­தது. இந்த நவீன வச­தி­களைப் பயன்­ப­டுத்தி வீரகேசரி ஸ்தாபனம் பல பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டு வருகின்றமை பெருமைக்­குரியது.

“விடிந்தால் வீரகேசரி” என்று காத்திருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு இத்தாபனம் மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சோதிட கேசரி, கலைக்கேசரி, சுட்டிகேசரி, ஜீனியஸ் என்பவற்றை பிரசுரித்து வழங்கி அவர்தம் ஆற்றலையும் வளர்த்து வருகின்றது.

தமிழ் பேசும் மக்களின் குரலாய் விளங்கும் வீரகேசரியின் பயணமும் மிக மிக நீண்டது. ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி பெருவிருட்சமாய் விளங்கும் வீரகேசரி மேலும் நூற்றாண்டுகள் காலம் நிலைத்து நிற்க தமிழ் பேசும் மக்கள் என்றும் துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

http://www.virakesari.lk/article/9863

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.