Jump to content

Recommended Posts

 

காற்றின் சுழிகளில் திருகி 

வெற்றிட நிறையில் தோற்று

நீரின் பாயத்தில் பயணிக்கும் 

உதிர்ந்த பழுப்பு நிறச்சருகின் 

புறப்பரப்பின் கீழே நிறப்பிரிகையடையும் 

சூரிய பிரவாகத்தின் ஒளிக் கீற்றில் 

மெல்லப் படரும் வைகறையின்

நிறத்தில் நெளியும் மஞ்சள் 

நதியின் இரு கரைகளிலும்

வானேகி வளர்ந்த தென்னைமரங்கள் கடந்து தொடுவா னளவு 

பச்சையம் விரித்துக் கிடந்த 

பூமியின் உழவு மாடுகளை 

விற்ற கோடை நாளொன்றில்

அப்பாவின் முகத்தில் வழிந்த மூதாதையரின் கண்ணீரை 

கழுவிச் சென்ற மழையில் 

முதன் முதலாய் 

நனைய பிடிக்க வில்லை.....

 

~ராஜன் விசுவா

10.4.16

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராஜன் விஷ்வா said:

பூமியின் உழவு மாடுகளை 

விற்ற கோடை நாளொன்றில்

அப்பாவின் முகத்தில் வழிந்த மூதாதையரின் கண்ணீரை 

கழுவிச் சென்ற மழையில் 

முதன் முதலாய் 

நனைய பிடிக்க வில்லை.....

~ராஜன் விசுவா

10.4.16

நீண்ட நாட்களின் பின்.... நல்ல ஒரு கவிதையுடன் வந்த,  ராஜன் விஷ்வாவுக்கு வணக்கம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க நிறைய அர்த்தங்களை உள்ளடக்கிய அழகான கவிதை ....!

உழவு மாடுகள் அவைகள் கூட குடும்பத்துடன் குடும்பமாய் பல்கிப் பெருகி இணைந்து வாழ்ந்து வருபவை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்வா! நல்ல கவிதை....தொடர்ந்து எழுதுங்கள்.  grinsende-smilies-0023.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2016 at 11:20 PM, ராஜன் விஷ்வா said:

காற்றின் சுழிகளில் திருகி 

வெற்றிட நிறையில் தோற்று

நீரின் பாயத்தில் பயணிக்கும் 

உதிர்ந்த பழுப்பு நிறச்சருகின் 

நாம் வாழ நினைக்கும் வாழ்வு என்பது...வேறு!

ஆனால் நாம் வாழுகின்ற வாழ்வு ...வேறு!

அழகாகச் சொல்கின்றன ..உங்கள் கவி வரிகள்!

தொடருங்கள் விஷ்வா!

ஏன் இப்போதெல்லாம் யாழ் களப் பக்கம் வருவதில்லை...விஷ்வா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.