Jump to content

மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு;இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு;

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன

105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல்

மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது.

இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது.

எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து பெற்றோலிய வள அமைச்சர் ஏ. எச்.எம். பௌசி தெரி வித்தார்.

புதுடில்லியில் நடைபெறும் "பெற் றோரெக்' மாநாட்டை முன்னிட்டு தகவல் வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் கடற் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகள் குறித்த ஆய்வு மற்றும் கணிப்பீட்டுப் பணிகளை நோர்வேயைச் சேர்ந்த நோப்பெக் (Nணிணீஞுடு) நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

நோர்வே நிறுவனத்திடம்

விலை கொடுத்து வாங்கப்பட்டது

நோர்வே நிறுவனத்திடமிருந்து 105 லட்சம் டொலர்கள் செலுத்தி, ஆய்வு மற்றும் கணிப்பீட்டுத் தரவுகளை இலங்கை அரசாங்கம் வாங்கிவிட்டது.

அந்த விவரங்களில் அடங்கியுள்ள செயற்பாட்டு விவரங்களுக்கு அர்த்தம் கண்டு வேலைத் திட்டங்களை வகுத்துத்

தரும் பணி இப்போது ஆஸ்திரேலியாவின் ""ஸ்பெக்ராம்'' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களையும் அமைச் சர் பௌசி இங்கு வெளியிட்டார்.

இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விஸ்தரிக்கவும், நாளாந்தம் 100,000 பரல் எண்ணையைச் சுத்திகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும

Link to comment
Share on other sites

அதை விற்கவோ கொடுக்கவோ இலங்கை அரசுக்கு என்ன உரிமை.தமிழீழ அரசுக்கே அவ்வுரிமை வீணாக சீனாவையும் இந்தியாவையும் மாட்டும் நடக்கும் செய்ற்பாடு இது

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்.......... எல்லாம் ஒவ்வொரு பக்கத்தாலை போகுது போல கிடக்குது!!!!

நாங்களோ "இளவு காத்த கிளி" .....

சீச்சீ .... "ஐயர் வரும் மட்டும் அமாவாசை காத்திருக்கும்"!!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

மன்னாரில் எண்ணை அகழ்வு: இந்தியா- சீனாவுக்கு அழைப்பு.

சிறிலங்கா அரசாங்கம் தன்வசம் உள்ள 8 எண்ணைப் படிவுகளை அகழும் பணிகளை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக தலா ஒவ்வொரு படிவுகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 6 படிவுகளும் 3 மாதங்களில் வழங்கப்படும் எனவும் சிறிலங்காவின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் எண்ணெய்ப் படிவுகளை அகழும் பணிகளை நோர்வேயை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்றே மேற்கொண்டு வந்தது. எனினும் பின்னர் சிலங்கா அரசு எண்ணெய்ப்படிவுத் தகவல்களை ஆய்வு செய்யும் பொறுப்பை அவுஸ்திரேலியாவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியிருந்தது.

மேலும் தன்னிடம் இருந்த எண்ணைப்படிவுகள் தொடர்பான தரவுகளில் இரு தொகுதிகளை ஏற்கனவே பிரிட்டிஸ் காஸ், இந்தியன் இயற்கை வாயு மற்றம் எண்ணை நிறுவனங்களுக்கு சிறீலங்கா விற்றுவிட்டது.

கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற பெற்றோலியத் தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய சிறிலங்காவின் தொடரூந்து, போக்குவரத்து மற்றும் எரிபொருள் வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இந்த தகவல்களை தெரிவித்தார்.

நோர்வே நாட்டின் ரி.ஜி.எஸ் நோபெக் என்னும் நிறுவனம் ஆராய்வுகளை மேற்கொண்டு மன்னார் பகுதியில் எண்ணெய்ப் படிவுகள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டறிந்தது.

எனவே முதலில் அகழ்வுப் பணிகளை செய்வதற்கு நோர்வே நாட்டு ரி.ஜி.எஸ் நோபெக் நிறுவனத்தையே கேட்டிருந்தோம். எனினும் பின்னா 10.5 மில்லியன் டொலர்களுக்கு அவர்களிடம் உள்ள தகவல்களை வாங்கி அவுஸ்திரேலியாவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளோம்.

நாம் தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளோம். அதிக மனித வலுவையும் தரவுகளையும் ஈடுபடுத்த வேண்டும். இரு தகவல் தொகுதிகள் பிரித்தானியா எரிவாயு, இந்தியன் இயற்கை வாயு மற்றம் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள ஒரு நாளைக்கு 50,000 பரல்கள் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளை 100,000 பரல்களாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் சிறிலங்காவில் அகழப்படும் எண்ணெயின் தரம் எத்தகையது என தற்போது கூறமுடியாது எனவும் எனினும் இது சிறிலங்காவை பொருளாதார வழிகளில் உயர்த்த உதவும் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை நோக்கினால் அவற்றிடம் வேறு வளங்களோ அல்லது மக்களை கவரும் பிரதேசங்களோ இல்லை. ஆனால் அவர்கள் செழிப்பாக இருப்பதற்கு அந்த நாடுகள் கொண்டுள்ள எண்ணெய் வளங்கள் தான் காரணம் என அது மேலும் தெரிவித்துள்ளது.

-Puthinam-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
    • திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.