Jump to content

வாகரை நிலப்பரப்பை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தன.


Recommended Posts

2 சபேசன் மார்

வேல்ஸ் இருந்து அருஸ்

கனடா இருக்கினம் 2...3 பேர் TVI இல வருவினம்

tamilnews24.com இல நிலவன் எண்டு ஒருத்தர்

தமிழ்சசி blog

இன்னும் கொஞ்சப்பேர் இப்ப பேர்கள் வருகுது இல்லை

உவங்களை எப்பிடி சொன்னாலும் திருத்த முடியாது.

1 தரமா 2 தரமா கேவலம் கெட்ட ***.

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் தங்களது பலம்/பலவீனத்தையும், எதிரியின் பலம்/பலவீனத்தையும் நன்று அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால்த்தான் புலிகள் வாகரையை விட்டு வெளியேறியிருக்கிறார்கள், சிங்கள இராணுவத்தால் வாகரைக்குள் உள்நுளைய முடிந்துள்ளது.

அரசாங்கத்துக்கு புலிகள் செத்தாலும் பொதுமக்கள் மடிந்தாலும் ஒன்றே. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு அப்படியா??!

Link to comment
Share on other sites

குறுக்கால போவாருக்கு 2 கவலைகள்.

1 - வாகரையை இராணுவம் கைப்பற்றியபோது புலிகளுக்கு ஆள், ஆயுத இழப்புக்கள் ஏற்படாமல் இருந்தது.

2 - புலிகள் உடனே யுத்தத்தைத் தொடங்காமல் இருப்பது. (இராணுவம் புலிகளை அழித்துவிட வேண்டுமென்ற நப்பாசை)

மிஸ்டர் குறுக்ஸ், தொடருங்கள் உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை.

Link to comment
Share on other sites

என்ன குறுக்ஸ்,

ஓரேயடியாக குழப்பிறீங்களே?

தம்பட்டம் அடிக்க வேண்டாம் என்று இப்ப சொல்லுற நீங்களே, நேற்றைக்கு நீட்டி முழங்கவேணும் அப்பதான் நல்லது என்று சொன்னீங்களே!

கிழக்கில் இருந்து வரும் செய்திகளால் மக்கள் சோர்ந்திருக்கும் பொழுது அவர்களிற்கு உற்சாக மூட்டி தேசியத்தைப் பலப்படுத்துவது தேசிய ஊடகங்களின் கடமை அதைத்தான் சங்கதி கொஞ்சம் செய்கிறது. பதிவு இன்னும் நல்லா செய்கிறது.

புதினம் இப்ப கொஞ்ச நாளா நல்லாயில்லை. அவை கிட்டமுட்ட தமிழ்நெற் கணக்குக்கு வந்திட்டினம்.

அவர்களை முந்திரிக் கொட்டை என்றனீர் ஒரு செய்தித்தளம் நடத்திக் காட்டும் பாப்பம். நடத்தினா அதில இருக்கிற கஸ்டங்கள் தெரியும். உம்மடை ஈழம்போறத்திலேயே ஒருபகுதியில நடத்தும் பாப்பம் பதிவை விட திறமா. எல்லாரும் தன்னாவலர்களாக தேசியத்துக்கு சேவை செய்ய வருவதை குற்றம் குறை பிடிக்க வேண்டாம். அவர்களிற்கு செந்த பிழைப்பை பாக்கத்தெரியாதா ஒரு பிஎம்டபிள்யு ஓடித்திரியாமல் ஏன் இதுகளை செய்கிறார்கள் என்று சிந்தித்துப் பாக்க வேண்டும்.

போராட்டகாலத்தில் ஆதாரமற்ற செய்தி நிதானமற்ற செய்தி என்று ஒண்டு இல்லை. தேசியத்தை எது பலப்படுத்தும் போல் இருக்கோ மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் போல் இருக்கோ அது எல்லாம் ஏற்புடையது. தமிழீழம் கிடைத்தா பிறகு நிதானம் ஆதாரம் எல்லாத்தோடையம் செய்திகள் வரும் இப்பது இது தான் மக்கள் எதிர்பார்ப்பாத்து ஏங்குவது. இதுகளை விளங்கிக் கொள்ள ஒரு ஆழமான அரசியல் அறிவு வேணும்.

மக்களுக்காக எண்டு சொல்லி பிரச்சார யுத்தத்தை அவிழ்த்து விடுறதால சாதகங்கள் இருக்கோ இல்லையோ பாதகங்கள் நிறைய இருக்கு.

இப்ப ஒரு பேச்சுக்கு பதிவில "திருமலை கடற்படைத்தளம் மீது தாக்குதல், 5 டோரா நிர்மூலம்" என்றவுடன் யாரும் அதை நம்பப்போறதில்லை. உடனேயே எல்லோரும் தமிழ்.நெட் இற்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் ஓடிப் போறம் உறுதிப்படுத்துறத்திற்காக.

இந்த ஊடகங்கள் சிந்திக்கத்தெரியாத அல்லது இண்டைக்கு சொன்னதை இண்டைக்கே மறக்கிற பாமர மக்களுக்காகவே நடத்தப்படுகிறது?

செய்திகளை உள்ளது உள்ளபடி (ஓரளவிற்காவது) சொல்லி மக்களின் நம்பிக்கையை வெல்லுறதில தான் ஊடகத்தின் வெற்றி தங்கியுள்ளது.

ஆகவே தயவுசெய்து சுடச்சுட செய்திகள் வேண்டாம், சுடாத செய்திகள் தாருங்கள்!

Link to comment
Share on other sites

மனிதன் ஒரு வயசுக்கு வந்தால் பிறகு வலர்வது இல்லை எப்படி சாப்பிட்டலும்

அப்பிடி எண்டால் தேஞ்சும் போறதில்லை சரிதானே..??? ஆளும் வழரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி... அப்பிடி வருவதுதான் உயர்ச்சி.. ஒருவேளை வளர்ந்தது போதும் எண்டு இப்ப எல்லாம் நீங்கள் சாப்பிடுறது இல்லையோ...???

Link to comment
Share on other sites

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு,

குறுக்கால போறவர்க்கு எது அழகென்று தெரியுமோ?

குறுக்கால போன, சீக்கால தான் போவனும்.

Link to comment
Share on other sites

2 சபேசன் மார்

வேல்ஸ் இருந்து அருஸ்

கனடா இருக்கினம் 2...3 பேர் TVI இல வருவினம்

tamilnews24.com இல நிலவன் எண்டு ஒருத்தர்

தமிழ்சசி blog

இன்னும் கொஞ்சப்பேர் இப்ப பேர்கள் வருகுது இல்லை

உவங்களை எப்பிடி சொன்னாலும் திருத்த முடியாது.

1 தரமா 2 தரமா கேவலம் கெட்ட ***.

அது சரி நீங்கள் எப்போ திருந்த போறியள் எண்டு சொல்லுங்கோவன்...! பிழை பிடிச்சு பண்டிதர் ஆகினவை தமிழிலை கனபேர் அது போல நீங்களும் ஆகலாம் எண்டு நினைப்போ...!

Link to comment
Share on other sites

சாணக்கியன்! நீங்கள் இணைத்த குறுக்காலபோவானின் கருத்து அவர் நக்கலாக எழுதியது என்று நான் நினைக்கிறேன். அது அவருடைய உண்மையான கருத்து அல்ல.

ஆற்றாமையின் வெளிப்பாடு அது.

சிறிலங்காவின் இன அழிப்பை சர்வதேசத்திடம் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்.

நாம் செய்கின்ற பரப்புரைகள் வெளிநாடுகளில் சில ஆதரவு சக்திகளை வென்றெடுப்பதற்கு பயன்பட்டால், அதுவே மிகப் பெரிய பலனாக இருக்கும். ஆனால் அவ்வாறான பரப்புரைகள் இங்கு மேற்கொள்ளப்படுவதில்லை.

நான் பலமுறை கத்தியும் எழுதியும் பார்த்து விட்டேன். எந்தப் பலனும் இல்லை. தனிமனிதனாக என்னால் செய்யக்கூடியதை செய்கிறேன்.

பரப்புரையில் இரண்டு பகுதி உண்டு!

ஒன்று வெளிநாட்டவர் மத்தியில் மேற்கொள்வது. மற்றது எம்மவர் மத்தியில் மேற்கொள்வது.

உண்மையில் இன்றைக்கு இந்த இரண்டுமே நடைபெறுவதில்லை.

புலம்பெயர்ந்த எமது மக்கள் மத்தியில் பரப்புரை என்பது கொஞ்சம் கூட இல்லை. நிதி கொடுத்தால், அவன் ஆதரவாளன், இல்லையென்றால் இல்லை.

நிதி கொடுப்பவனும் போகவிட்டு திட்டலாம். நிதி கொடுக்காதவனும் "நெக்ரோ" குடிப்பதை நிறுத்தி ஆதரவு தரலாம்.

2000 ஐரோ வாங்கிய வீடுகளில் அதன் பிறகு இன்றுவரை மீண்டும் யாரும் போகவில்லை. ஒரு சுகம் விசாரிப்பதற்கு என்றாலும் போய் வரலாம்.

இந்த நிலையில் எமது மக்கள் சினிமாப் படம் பார்க்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

ஹீரோ தொடர்ந்து அடிவாங்கினால் எழுந்து போய்விடுவார்கள். "போகாதீர்கள், ஹீரோ பலமாகத்தான் இருக்கிறார், கிளைமாக்ஸில் திருப்பிக் கொடுப்பார்" என்று சொல்லி பார்வையாளர்களை உட்கார வைக்க வேண்டி இருக்கிறது. (ஹீரோ பலமாக இருக்கிறார், திருப்பி அடி கொடுப்பார் என்பது உண்மையும் கூட)

Link to comment
Share on other sites

சபேசன் சொன்னதில் முக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம், புலத்திலுள்ள சாதாரண மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள இடைவெளி.

Link to comment
Share on other sites

எங்கள் மீது நடத்தப்படும் இத்தை படுகொலைகள் அநியாயங்கள், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான ஆக்கிரமிப்புகள் இராணுவ நடவடிக்கைகள் பொருளாதாரத் தடைகள் எல்லாவற்றையும் அனுசரணையாளர்களும் சர்வதேசம் பார்த்துக் கொண்டு ஏன் இருக்கிறது?

சமாதானம் என்ற மாயiயில் எமது போராட்டத்தின் வீச்சை குறைக்க முடியவில்லை வன்முறையில் குறைக்க சிறீலங்கா முயற்சிக்கிறது வெற்றியானால் நல்லம் என்று பாத்துக் கொண்டிருக்கிறது சர்வதேசம். அதற்கு ஏற்றவாறு புலிகள் நடந்து கொள்கிறார்கள். இன்னும் பலமாக இருக்கிறம் சிங்களவன் எவ்வளவு அடிச்சாலும் எல்லாத்தையும் வைச்சிருக்கிறம் இன்னும் சிங்களவனுக்கு குடுத்து அடிக்கச் சொல்லும் இழப்புகள் எதுவும் எங்களுக்கு இல்லை என்று விளக்கம் குடுக்கிறியளா?

வலியவன் வெல்வான் எனும் தத்துவத்தை கொண்டு சிந்திச்சால் புரியலாம்... நீங்கள் எல்லாம் அற்ப பதர்கள் பெருமலை இந்தியாவை எதிர்த்த போதுதான் நீங்கள் உலகத்துக்கே அறிமுகமானீர்கள்... அதுக்கு முன்னரும் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், அனாதியாக்கபட்டார்கள், அடித்து துரத்தப்பட்டார்கள், இடம் பெயர வைக்கப்பாட்கள்.. அப்போ எல்லாம் கூட இலங்கை அரசுதான் பலமாக இருந்தது... பலமானவர்களை ஆத்தரிப்பதுதான் உலக நியதி வரலாறு... இப்போதும் இலங்கை தாந்தான் பலமான அமைப்பு எண்று சொல்லிக்கொள்கிறது,நடவடிக்கை எடுக்கிறது.... உண்மையில் அப்படி இருந்தால் புலிகளை அளிகவோ பலவீனப்படுத்தவே நடவடிக்கை எடுக்க நினைக்க மாட்டார்கள்... 600 மில்லியன் மக்கள் இருக்கும் உலகத்தில் உங்களின் சனத்தொகை குறையிறதால உலகில் வேற எவருக்கும் நட்டம் கிடையாது... அதுக்கா எவரும் குரல் குடுக்கப்போறதும் இல்லை...

நீங்கள் பலமாக இருக்க வேணும் எது செய்தாலும் பலமானவர்களாக செய்ய வேண்டும்.. கிழக்கில் செஞ்சிலுவை சங்கத்துடனும் ஜுனிசெப் போடும் மக்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வாங்கியபின் அவர்களிடம் கையளிக்க பட்டு இருக்கிறது வாகரை இதை செய்திகளில் படிக்காத்து உங்களின் தவறு... இளந்திரேயன் அவர்கள் கிழக்கில் புலிகள் கொரில்லா தாக்குதல் முறைக்கு ஏற்றவாறு திரும்பும் முடிவை எடுத்துள்ளோம் எண்று அறிவித்ததின் ஒரு வாரத்தின் பின்னர் இந்த வாகரை விடுவிக்க பட்டது... அப்பிடியானால் நன்கு ஆலோசித்துத்தான் மக்களின் இளப்பை குறைக்க எடுக்கப்பட்ட முடிவு என்பதை விளங்கிக்கொள்ள முடியும்...

சாதாரணமானத் போல இராணுவத்தின் காவலரண்கள் முன்னகர்த்தப்பட வில்லை புதிதாக காவரண்கள் அமைத்து பாதுகாக்கும் அளவுக்கு கள நிலமையை இராணுவத்தினர் கொண்டு வரும் அளவுக்கு... இங்கு செலவளிக்கப்படப்போகும் இராணுவ வலு என்பது புலிகளால் கட்டாயமாக ஆராயப்பட்டு இருக்கும்.. புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கிலான இந்த படை எடுப்பின் நோக்கம் நிறைவேற்ற படவில்லை என்பதை இராணுவ ஆய்வாளர்கள் கொழும்பில் இருந்து அட்டகாசமாய் சொல்லி இருக்கிறார்கள்.... உங்களின் விருப்பு எழுத்தாளர் இக்பால் கூட எழுத்தி இருக்கிறார்... நேற்றய கொழும்பு பத்திரிகையை புரட்டினால் புரியும்..

Link to comment
Share on other sites

நிதி கொடுப்பவனும் போகவிட்டு திட்டலாம். நிதி கொடுக்காதவனும் "நெக்ரோ" குடிப்பதை நிறுத்தி ஆதரவு தரலாம்.

2000 ஐரோ வாங்கிய வீடுகளில் அதன் பிறகு இன்றுவரை மீண்டும் யாரும் போகவில்லை. ஒரு சுகம் விசாரிப்பதற்கு என்றாலும் போய் வரலாம்.

புலம்பெயர் நாட்டில் முழுநேர உறுப்பினர்கள் தொகை மிக குறைவு... வீடு வீடாக போய் காசு தாங்கோ எண்டு கேட்ப்பவர்களில் பல பேர் உதவியாளர்கள், ஆதரவாளர்கள், அவர்களுக்கும் காசு கொடுப்போருக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை... எல்லாரும் ஒண்றுதான்...

Link to comment
Share on other sites

சாணக்கியன்! நீங்கள் இணைத்த குறுக்காலபோவானின் கருத்து அவர் நக்கலாக எழுதியது என்று நான் நினைக்கிறேன். அது அவருடைய உண்மையான கருத்து அல்ல.
ஓகோ...அப்படியென்டால் சரி.

மன்னிக்கவும் குறுக்காலபோவான்!

புலம்பெயர்ந்த எமது மக்கள் மத்தியில் பரப்புரை என்பது கொஞ்சம் கூட இல்லை. நிதி கொடுத்தால், அவன் ஆதரவாளன், இல்லையென்றால் இல்லை.

இல்லையென்றால் அவன் துரோகி என்று பகைத்துக் கொள்ளாமல் அவர்கள் கூறும் நியாயங்களை ஆத்திரப்படாமல் கேட்க எம்மவர்கள் தயாராயிருக்க வேண்டும். சிலர் நேரடியாக போராட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மக்களுக்காக என்று கூறி, மக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே தெரிவு புலிகளே என்று தெளிவுபடுத்தி அனைவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழருக்கு மட்டுமல்ல சில சிங்களவருக்கும் புலிகளே ஹீரோ. இவர்கள் மாறி மாறி வந்த அரசாங்களில் அவற்றின் பொய் வாக்குறுதிகளை நம்பி சலிப்புற்றவர்கள்.

Link to comment
Share on other sites

ஆகா ஒருத்தர் சொல்லுறார்

புலி பலமாக இருக்கு என்று தொடர்ச்சியாக பிரமிப்பு ஊட்டினால் தான் புலம் பெயர்ந்த தமிழ் மக்களே ஆதரவு தருவார்கள் என்று.

மற்றவர் சொல்லுறார் வலியவன் தான் வெல்லுவான் அவன் பக்கம் தான் சர்வதேச சாயும் எனவே நாங்கள் பலமாக இருப்பதான பிரமிப்பை எழுத்து மூலம் காட்டிறம். என்னத்துக்கு எண்டா சர்வதேசத்தின் அங்கீகரத்திற்கு

சபேசன்,

இராணுவ ஆய்வு எப்படி எம்மவர் மத்தியில் பரப்புரையாக இருக்கும்? புலிகள் பலமாக இருக்கிறார்கள் என்ற தொடர்ச்சியான இராணுவ பன்னாடை ஆய்வால் தான் புலம்பெயர்ந்தவர்களை போராட்டத்தின் பால் கவர்ந்து வைத்திருக்கலாம் என்றால் அது அடிப்படையில் ஒரு அரசியல் தெளிவின்மை தானே?

எத்தனை பன்னாடைத்தனமான இராணுவ ஆய்வுகள் எழுதினாலும் அந்த மோசமான பலவீனத்தை திருத்த முடியுமா?

இலங்கையின் இன அழிப்பை சர்வதேசத்திடம் அம்பலப்படுத்த தேவையில்லை என்றால் அப்படியான வேண்டு கோள்கள் ஏன் தாயகத்தில் இருந்து வெளிப்படையாக புலம்பெயர்ந்த மக்களை நோக்கி பல தடவை வந்தது இன்னமும் வந்து கொண்டிருக்கிறது?

சர்வதேசத்திற்கு அதிகார மட்டங்களில் தெரிந்திருக்கு. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மக்களிற்கு மனிதஉரிமை தன்னாவலர் அமைப்புகளிற்கு சாதாரண மக்களிற்கு அறிவுறுத்த எவ்வளவோ இருக்கு. பலஸ்தீன போராட்டம் பற்றி இருக்கிற தெளிவு எமது போராட்டம் பற்றி இல்லை.

இவைதான் எமக்கு இன்று புலத்தில் இருந்து செய்ய வேண்டிய கடமை. புலத்திலுள்ளவர்களை உணர வைக்க வேண்டியதும் இவை தான். இராணுவ ஆய்வு புலிகள் பலமாக இருக்கிறார்கள் எல்லாம் பதுக்கி வைத்திருக்கிறார் அது வைத்திருக்கிறார்கள் இது வைத்திருக்கிறார்கள் என்றது அல்ல.

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாரும் இப்படியே 'ஆய்வு' சண்டை பிடித்துகொண்டிருங்கோ! தலைவருக்கு அதுக்குள்ள வயசாகி விடும், தமிழீழமும் கிடைத்த மாதிரி தான்!

Link to comment
Share on other sites

இலங்கையின் இன அழிப்பை சர்வதேசத்திடம் அம்பலப்படுத்த தேவையில்லை என்றால் அப்படியான வேண்டு கோள்கள் ஏன் தாயகத்தில் இருந்து வெளிப்படையாக புலம்பெயர்ந்த மக்களை நோக்கி பல தடவை வந்தது இன்னமும் வந்து கொண்டிருக்கிறது?

அப்படியான கட்டுரைகள் ஏன்வரவில்லை... :icon_idea::D:D இது அறியாமை...!

லண்டனில் பல போராட்டங்கள்கூட நடந்தேறி இருக்கிறது...

ஊடகம் என்பது லாடம் கட்டின குதிரை இல்லை ஒரே வளியில் போறதுக்கு... பல கோணங்களை கொண்ட இலக்குகளையும் கொண்ட பல்கோணி..... முக்கியமானதுகளை எல்லாம் தூரவீச்சோடு செய்ய பட வேண்டும்... இண்று தேவை இல்லாத்தாக சொல்லப்படும் விடயம் நாளை மிக முக்கியனானதாக இருக்கும்... போராட்டதின் மீதான நம்பகத்தன்மையை எல்லா வளிகளிலும் கட்டி எழுப்புதல் காலவோட்டத்துக்கு மிக முக்கியமானது... ஊடகத்தில் எது முக்கியமானது என்பது தெரிவுக்கு உள்ளானது அல்ல... எல்லாம் முக்கியமானது... அதில் இதை செய் அதை செய்யாதே எண்று நாட்டாமை செய்பவன் அடி முட்டாள்...

Link to comment
Share on other sites

அரசியல் பொறுப்பாளர் உப்பிடித் தான் தலைவர் தானெ முடிவெடுக்க வெண்டும்

எதுக்கும் அந்தரப்படக் குடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகரை விடுபட்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அது எதிர்பார்த்தது தானே?

வாகரையை இராணுவம் கைப்பற்ற முடியாது என்ற கோணத்தில் எழுதிக்கொண்டிருந்த எங்கள் 'ஆய்வாளர்களை :huh: 'ச் சொல்ல வேணும். முழுக்க முழுக்க அரசபடைகளுக்குச் சாதகமான நிலப்பரப்புத்தான் வாகரை. எப்பாடு பட்டாவது வாகரையைப் பிடிப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்ட படைகளை எதிர்த்து வீம்பாக நிற்பது வடிகட்டின முட்டாள்தனம். பின்வாங்குவதைத்தவிர வேறு தெரிவே புலிகளுக்கில்லை.

வாகரையை இராணுவம் கைப்பற்ற முடியாது என்று எழுதியவர்கள் வேறேதாவது உள்நோக்கத்தோடு எழுதினார்களா தெரியாது. ஆனால் உண்மையில் அப்படித்தான் அவர்கள் நம்பியிருந்தால் இராணுவ ரீதியாகவோ புவியியல் ரீதியாகவோ ஒரு "வளாயும்" விளங்காதவர்கள் என்றுதான் அர்த்தம்.

இது தந்திரோபாய பின்வாங்கல்தான். 'தக்கவைக்க முடியாத' ஓரிடத்துக்காக தொடர்ந்து சண்டையிட்டு இழப்பைச் சந்திப்பதைவிட பின்வாங்கி பலத்தைத் தக்கவைப்பது மேல் என்று தந்திரமாக முடிவெடுத்துப் பின்வாங்கியதால் இது தந்திரோபாயப் பின்வாங்கல்.

ஆனால் சில கோமாளிகள் சொல்வது போல், எதிர்த்தாக்குதல் நடத்தி வாகரையைக் காப்பாற்றியிருக்க முடிந்திருந்தும் அது வேண்டாமென்று பின்வாங்கினார்கள் என்ற கருத்துத் தவறு. வாகரை மட்டுமன்றி கிழக்கில் இன்னும் பல இடங்கள் "மூர்க்கமான தாக்குதலை" எதிர்கொண்டு தக்கவைக்க முடியாதவைதாம். அதற்கான இராணுவ, புவியியல் சூழல் கிழக்கில் இல்லை.

இத்தகைய நடவடிக்கைகளால் புலிகளுக்கு ஏதும் நட்டமில்லை, ஆனால் தமிழ்மக்கள்மேல் சொல்லொன்னாத் துயரங்கள் விதைக்கப்படுகின்றன. அதுதான் சிங்கள அரசின் நோக்கமும். நீண்டகால மூலோபாயத்தின் அடிப்படையில் இத்தகைய நிலக்கைப்பற்றல்கள் தமக்குப் பாதகமானவை என்று தெரிந்திருந்தாலும் இவற்றைச் செய்தே ஆகவேண்டிய நிலைக்குள் சிங்கள அரசு தள்ளப்பட்டுள்ளது.

__________________________________________

மிகையொலி விமானங்களைச் சுட்டுவீழ்த்த முடிந்திருந்தும் இன்னும் புலிகள் அதைச்செய்யாமலிருப்பதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று கனவுகாணும் பழக்கம் இன்னும் குறையவில்லைப்போலுள்ளது. வன்னியில எங்காவது குளம் குட்டையில விழுந்து இவர்களை அந்தக் கிபிர்தான் காப்பாற்றவேண்டும்.

__________________________________________

குறுக்காலபோவான்,

ஒருத்தர் பகிடி விட்டிட்டு 'எட நான் விட்டது பகிடி, எல்லாரும் சிரியுங்கோ' எண்டு சொல்லிறமாதிரியான நிலைக்கு நீரும் வந்திட்டீர் கண்டீரோ?

இனி நீர் நக்கலா எழுதினால், அதுக்குக் கீழ 'இது நக்கல்' எண்டு ஒரு வரியை எழுதிப்போடும். இல்லாட்டி அதைத்தூக்கிக் கொண்டு ஆரேன் கேள்விகேட்டுக்கொண்டு வருவினம். :huh:

__________________________________________

அதுசரி,

முந்தநாள் பருத்தித்துறையில கப்பல் ஏதோ எரிஞ்சதாம். எரிஞ்சு முடிஞ்சுதோ அல்லது ஆரேன் ஊதி நூத்துப்போட்டினமோ?

Link to comment
Share on other sites

கபரணை முகமாலை மூதூர் தாக்குதல்களில் இராணுவத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. போரிடும் முனை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. இதை நிவர்த்தி செய்ய மாதங்கள் எடுக்கும். மகிந்தவின் எல்லாத்திட்டமும் தவிடு பொடி...

ஆனா அதுக்கு எல்லாத்துக்கும் பிறகு நடந்த வாகரையை ஆக்கிரமிப்பிலும் கடும் இழப்புகளை இராணுவத்துக்கு குடுத்திருக்கு.

அதாவது ஏற்கனவே பலவீனமான இராணுவத்திற்கு கடும் இழப்புகளை குடுத்திருக்கிறியள்.

ஆச்சரியத்தக்க வகையில் பாரிய எதிர்ப்புகள் இல்லாது புலிகள் பின்வாங்கிவிட்டார்கள் புலிகள் பலம் பேணப்படுகிறது என்றியள்.

பிறகு குத்துக்கரணம் அடிச்சு கடும்மையான இழப்புகளோடுதான் இராணுவம் வாகரையை பிடிச்சது என்றியள்.

லங்கா புவத்தின்ரை வியாதி உங்களுக்கு தொத்திவிட்டுது போலை கிடக்கு.

மொத்தத்தில என்ன சொல்ல வாறியள்?

சிங்களவன் தான முன்வந்து புலிகள் ஓடுகிறார்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று செய்யிற பிரச்சாரத்துக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்யிறம் எண்டோ?

சிங்களவனுக்கு இருக்கிற சின்ன சின்ன சந்தேகங்களுக்கு விளக்கம் குடுக்கிறியளோ?

இன்னும் பலமாக இருக்கிறம் ஊர் உலகத்தில எடுக்கக்கூடிய உதவிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து எங்களோடு மோது. நாங்கள் மோதிப்பாக்கத்தான் போராட்டம் தொடங்கினாங்கள் எண்டா?

விமானம் இருக்கு நீண்டு வீச்சு எல்லை எறிகணை இருக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை இருக்கு வேறு என்ன கோவணம் இருக்கு தலையில கட்ட எண்டு எழுதுங்கோவன்

எங்கள் மீது நடத்தப்படும் இத்தை படுகொலைகள் அநியாயங்கள், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான ஆக்கிரமிப்புகள் இராணுவ நடவடிக்கைகள் பொருளாதாரத் தடைகள் எல்லாவற்றையும் அனுசரணையாளர்களும் சர்வதேசம் பார்த்துக் கொண்டு ஏன் இருக்கிறது?

சமாதானம் என்ற மாயiயில் எமது போராட்டத்தின் வீச்சை குறைக்க முடியவில்லை வன்முறையில் குறைக்க சிறீலங்கா முயற்சிக்கிறது வெற்றியானால் நல்லம் என்று பாத்துக் கொண்டிருக்கிறது சர்வதேசம். அதற்கு ஏற்றவாறு புலிகள் நடந்து கொள்கிறார்கள். இன்னும் பலமாக இருக்கிறம் சிங்களவன் எவ்வளவு அடிச்சாலும் எல்லாத்தையும் வைச்சிருக்கிறம் இன்னும் சிங்களவனுக்கு குடுத்து அடிக்கச் சொல்லும் இழப்புகள் எதுவும் எங்களுக்கு இல்லை என்று விளக்கம் குடுக்கிறியளா?

வெளிநாட்டில இருக்கிற ****களிட்டை இராணுவ ஆய்வு செய்யச் சொல்லி யாரும் கேட்டவையோ? எங்களிடம் திருப்பி திருப்பி கேட்க்கப்படுகிற கடமை என்ன? சிறீலங்காவின் இன அழிப்பை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்துங்கோ எமது சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்துக்குரிய கருத்தியல் தளத்தை உருவாக்க முயற்சியுங்கோ என்று தானே.

**** உந்த "புலிகளின் பலம் இன்னும் பேணப்படுகிறது" என்ற விளக்குமாத்து இராணுவ ஆய்வு எப்படி அதுக்கு உதவும்? நாங்கள் போராட வெளிக்கிட்டது பலமாக இருக்க முடியும் அடிக்க முடியும் எண்டதாலா இல்லாட்டி நாம் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதாலா? நாம் பலமாக இருக்கிறம் என்று எழுதி அங்கீகாரம் வேண்டிவிடலாமா? இல்லை நாங்கள் பலவீனமாகிவிட்டால் எமது போராட்டம் நியாயம் தார்மீகம் அற்றது ஆகிவிடுமா?

சிறீலங்காவும் சர்வதேசமும் எங்களை இராணுவரீதியில் பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தத்தான் முயற்சிக்கிறார்கள் என்று தெரியுது எல்லா. சதி செய்து பிளவு ஏற்படுத்தப்பாக்கிறார்கள். சிறீலங்காவுக்கு உதவிகளை அள்ளிக் கொடுக்கிறார்கள். தடை செய்து அரசியல் இராஜதந்திர பொருளாதார அழுத்தத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். பிறகு என்ன மயிருக்கு எப்ப பாத்தால் இழவு விழுவார் நாங்கள் பலமாக இருக்கிறம் இன்னும் ஏதோ எல்லாம் வைச்சிருக்கும். அடிச்சாலும் எல்லாத்தை கொண்டுபோய் ஒளிச்சு வைச்சிருக்கிறம் என்று வே* ஆட்ட எழுத்து எழுதுறியள்.

2 நாள் போகவில்லை ஆய்வார்கள் எல்லாரும் மாறி மாறி தங்கடை சூ*தை திறக்க வெளிக்கிட்டிட்டினம்.

எப்ப நீங்கள் எல்லாம் திருந்தப் போறியள்? ****ளே உங்களுக்கு எத்தினை வயசு?

**** சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது -- மோகன்

you fu******* idi** watch your mother fu*********** language.

Link to comment
Share on other sites

இது தந்திரோபாய பின்வாங்கல்தான். 'தக்கவைக்க முடியாத' ஓரிடத்துக்காக தொடர்ந்து சண்டையிட்டு இழப்பைச் சந்திப்பதைவிட பின்வாங்கி பலத்தைத் தக்கவைப்பது மேல் என்று தந்திரமாக முடிவெடுத்துப் பின்வாங்கியதால் இது தந்திரோபாயப் பின்வாங்கல்.

ஆனால் சில கோமாளிகள் சொல்வது போல், எதிர்த்தாக்குதல் நடத்தி வாகரையைக் காப்பாற்றியிருக்க முடிந்திருந்தும் அது வேண்டாமென்று பின்வாங்கினார்கள் என்ற கருத்துத் தவறு. வாகரை மட்டுமன்றி கிழக்கில் இன்னும் பல இடங்கள் "மூர்க்கமான தாக்குதலை" எதிர்கொண்டு தக்கவைக்க முடியாதவைதாம். அதற்கான இராணுவ, புவியியல் சூழல் கிழக்கில் இல்லை.

கிழக்கு பற்றி சொல்வதில் எந்த உண்மையும் இல்லை... இரு தரப்புக்கும் சமனான சந்தர்பங்கள் கொண்ட பகுதிதான் கிழக்கு அதிலும் கனகரக ஆயுத தொகுதிகளின் பாவனைக்கு மிகவும் உகந்த பிரதேசம்... கனக ரக வாகனங்களுக்கு உகந்த பிரதேசம் அல்ல...

இராணுவம் புலிகளின் பலத்தை அளிக வேணும் எண்றும் வடக்கில் இருந்து புலிகளின் வளங்கள் வடக்கில் இருந்து கிழக்குக்கு நகர்த்த வைப்பதுக்காக திட்டமிட்ட தாக்குதல் இது... இதை புலிகள் எதிர் கொள்ள வேண்டிய விதம் எதுவோ அப்படியே எதிர் கொண்டனர்..

இத்தகைய நடவடிக்கைகளால் புலிகளுக்கு ஏதும் நட்டமில்லை, ஆனால் தமிழ்மக்கள்மேல் சொல்லொன்னாத் துயரங்கள் விதைக்கப்படுகின்றன. அதுதான் சிங்கள அரசின் நோக்கமும். நீண்டகால மூலோபாயத்தின் அடிப்படையில் இத்தகைய நிலக்கைப்பற்றல்கள் தமக்குப் பாதகமானவை என்று தெரிந்திருந்தாலும் இவற்றைச் செய்தே ஆகவேண்டிய நிலைக்குள் சிங்கள அரசு தள்ளப்பட்டுள்ளது.

இது மட்டும்தான் உண்மையானது... மக்களை பாதுகாக்க வேணும் எண்ற நோக்கமும். அதோடு இராணுவ தாக்குதல் தொகுதி ஒண்றை ஓரிடத்தில் முடக்க பட்ட செய்தியைத்தான் சிங்களமும் சில தமிழரும் கொண்டாடுகிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு ஆய்வு ஒன்றைப் படிச்சன். அதன்படி கிழக்கில் பின்வாங்கியது போராட்டத்திற்கு பின்னடைவைத் தரும் என்ற மாதிரி இருந்தது. எனினும் புலிகள் இதனை நன்குணர்ந்துள்ளனர். சறுக்கல்கள் வந்தாலும் போராட்டத்தை முன்னகர்த்த முயற்சிகள் தொடர்ந்தும் நடைபெறும். இதை உணர்ந்து உதவுவதை விட்டுவிட்டு பினாத்திக் கொண்டிருப்பது வீண்வேலை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.