Jump to content

ஐயோ அம்மா அருள் புரியுங்க தாயே


Recommended Posts

  • Replies 86
  • Created
  • Last Reply

ஐயே இது என்ன மனுசரின்ட காலில்ல மனுசன் விழுறது

உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கிறது.

இதுதான் 'பய' பக்தி.

இந்த முந்நாள் நடிகையிடம் பணமும் அதிகாரமும் உள்ளவரை இவர் கடவுள் போன்றவர்.

தன்னிடம் பணியாதவரை ஒரு கை பார்த்துவிடுவார். பணிபவரை இரு கைகளாலும் ஆசீர்வதிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா வறுமைக்கோட்டின் கீழ இருக்கிற நாடு என்டு சொல்லீனம். பாத்தா அப்படி தெரியேலையே. எங்கயே அரிசி மலிவாக கிடைக்குது போல.

Link to comment
Share on other sites

இப்படி இந்த ஆண்கள் இந்த பெண்மணியின் காலில் விழுவதை நான் உள்ளுர ரசிக்கிறேன்.

ஏனுங்கண்ணா, பொண்ணு கால்ல பசங்க விழுந்து சமத்துவத்தத் தாண்டி மேல போய்டானுங்கண்ணா? இல்ல, இந்த பசங்கள்ளாம், தன்மானம், சுயமரியாதை, இத்தியாதி... எல்லாத்தையும் அந்த பொண்ணு காலடீல கொணாந்து கொட்டீட்டானுங்கண்ணா ?

Link to comment
Share on other sites

பயபக்தியுடன் பத்தினி தெய்வத்தை கும்பிடுகிறார் வேட்டி கட்டினவர் என்ன கொடுமையப்ப்பா இது

211.jpg

Link to comment
Share on other sites

ஜெயலலிதா நடிகையாக இருந்த பொழுது அவர் ஆண்களால் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சினிமாத்துறை என்று அல்ல அரசியல்துறை சார்ந்தவர்களாலும் பல தொல்லைகளுக்கு உள்ளானவர். எம்ஜிஆருடன் அவர் நெருக்கமாக இருந்ததும் ஒரு பாதுகாப்புக்காக என்று பலர் சொல்வார்கள்.

(பல ஆண்டுகளுக்கு முன்பு மூப்பனார் வீட்டுத் திருமணம் ஒன்றில் நடிகையாக இருந்த ஜெயலலிதா நடன நிகழ்ச்சி செய்திருக்கிறார். பின்பு அதே மூப்பனார் கூட்டணிக்காக ஜெயலலிதாவின் பின்னும் முன்னும் அலைந்தார்.)

இப்படி நடிகையாக இருந்து ஆண்களால் அடக்கப்பட்ட, கசக்கப்பட்ட ஒரு பெண் அதிகாரம் வந்ததும், ஆண்களை காலில் விழ வைத்துப்பார்ப்பது எனக்கு பெரிய தவறாகப்படவில்லை.

Link to comment
Share on other sites

எமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பவர் ஒருவர் முன்னால் பயபக்தியுடன் நிற்பதில் தவறு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!

Link to comment
Share on other sites

மானம் கெட்ட தமிழன் எங்கேயோ ஒருந்து வந்த வேற்று மொழி மாநில பெண்ணிடம் விழுந்து கிடப்பது அசிங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வறுமைக்கோட்டின் கீழ இருக்கிற நாடு என்டு சொல்லீனம். பாத்தா அப்படி தெரியேலையே. எங்கயே அரிசி மலிவாக கிடைக்குது போல.

அரிசி வியாபாரத்துக்கு அம்மணியின் போட்டோவை போட்டால் தப்பே இல்லை

Link to comment
Share on other sites

எமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பவர் ஒருவர் முன்னால் பயபக்தியுடன் நிற்பதில் தவறு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!

ம் அது உண்மை ஆனால் ஏன் ஜெயலலிதாவை???????????????????????????????????????????

Link to comment
Share on other sites

ம் அது உண்மை ஆனால் ஏன் ஜெயலலிதாவை???????????????????????????????????????????

ஈழத்தமிழரின் அன்புக்குப் பாத்த்திரமாக தமிழீழத்தேசியத்தலைவர் உள்ளது போல் செல்வி ஜெயலலிதாவை தமிழக மக்கள் மரியாதை செய்ய மாட்டார்கள் என்று உங்களால் கூற முடியுமா? கலைஞர் கருணா நிதியை விட செல்வி ஜெயலலிதாவையே தமிழக மக்கள் கூடுதலாக விரும்புகின்றார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு மிகுந்த ஆதரவு அளிக்கவில்லை என்பதற்காக தமிழக மக்கள் அவரிடம் கொண்டுள்ள மரியாதையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. செல்வி ஜெயலலிதாவை வழிகாட்டியாகப் பின்பற்றும் ஆயிரம் ஆயிரம் தமிழக மக்கள் இருக்கின்றார்கள் என்பது தமிழகம் அறிந்த உண்மை.

மற்றும்படி செல்வி ஜெயலலிதாவை நான் தலையில் வைத்துக் கொண்டாடுவதாக மட்டும் தயவு செய்து நினைக்க வேண்டாம்!

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை

தலைவரை காலில் விழுந்து கும்பிடுவதை நிச்சயம் விரும்பமாட்டார் என்பது நிச்சயம் .தன் காலில விழுந்து கும்பிடச்சொல்லுவது ஒருவித அகங்காரம்

மனிதனின் காலில் விழுந்து இன்னொருவன் வால் பிடிக்கத்தேவையில்லை என்பது என் கருத்து

Link to comment
Share on other sites

ஈழவன்,

உங்கள் கருத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் ஒரு விடயத்தை நீங்கள் தவறாகப் புரிந்து வைத்துள்ளீர்களோ என நான் சந்தேகிக்கின்றேன்.

அதாவது பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்பது தமிழரின் ஒரு நீண்ட காலப்பண்பாடு. ஈழத்தமிழரை விட தமிழகத்தமிழர்கள் இப்பண்பாட்டை கூடுதலாக பின்பற்றி வருவதாக நான் நினைக்கின்றேன். ஏனென்றால் எனது அப்பா, அம்மாவிடம் நான் சில தடவைகள் முசுப்பாத்திக்கு விழுந்ததை தவிர வேறு ஒருவர் காலில் விழுந்து வணங்கியதாக எனக்கு நினைவில்லை. எனென்றால் இவ்வாறான நடைமுறைகள் எனக்கு சொல்லித் தரப்படவில்லை. ஆனால் இதை என்னில் உள்ள ஒரு குறைபாடாகவே நான் கருதுகின்றேன்.

ஏனென்றால் பெரியவர்கள், அறிஞர்கள், தலைவர்களிடம் வீழ்ந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவதால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. மாறாக எமக்கு தன் நம்பிக்கை பெருகும். எமது ஆணவம் எம்மை விட்டு அகழும். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து!

Link to comment
Share on other sites

மாப்பிளை உங்களின் கருத்துடன் எனக்கு உடன்பாடே ஆனால் நான் இரண்டாவதா இணைத்த படத்தில் எப்படி கூனி குறுகி கதைகிறார் பாருங்க உண்மையான தலைவன் இவற்றை விரும்பமாட்டான் என்பது என் கருத்து

இதை விடக்கொடுமை ஜெயலலிதாவிடம் அவரை விட மூத்தவர்கள் காலில விழுறது.

நான் யாரினது காலிலும் இதுவரை விழுந்தது இல்லை என் பெற்றோரிடமும் கூட என் பெற்றோரும் அதனை விரும்பவில்லை

என்னை பொறுத்தவரையில் இன்னொருவனின் காலை பிடிச்சு இன்னொருவன் வாழதேவையில்லை என்பதே

Link to comment
Share on other sites

"தன் காலில விழுந்து கும்பிடச்சொல்லுவது ஒருவித அகங்காரம் "

யெயலலிதாவுக்கு நிறையவே அகங்காரம் உண்டு. ர்ழவன் உங்கள்கருத்தே என் கருத்தும்

சிவா

Link to comment
Share on other sites

ஈழவன்,

செல்வி ஜெயலலிதா தன்னிலும் வயதில் மூத்தவர்கள் அவருக்கு முன்னால் கைகட்டி வணங்கி நிற்பதை விரும்புவாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஏழ்மையில் வாடும், ஒடுக்கப்பட்ட மக்கள் அவரை சந்திக்கும் போது அவருக்கு முன்னால் அடங்கி ஒடுங்கி நிற்பத்தற்கு செல்வி ஜெயலலிதா என்னதான் செய்திட முடியும்? எமக்கு இது அநாகரிகமாகத் தெரிந்தாலும் அவ்வேழை மக்களிற்கு அவர் கடவுளாகத்தென்பட்டால் கூட ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

நாம் ஈழத்தமிழராக இருப்பதால் இதைப் பார்ப்பதற்கு எமக்கு சங்கடமாக இருந்தாலும் தமிழகத் தமிழர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் எப்போதாவது ஜெயா தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்தது உண்டா? பார்த்திருந்தால் தினமும் செல்வி ஜெயலலிதாவை தரிசிக்க கட்சி ஆதர்வாளர்கள், தொண்டர்கள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள், எமது மனதைக் கொள்ளை கொண்ட தமிழகக் கலைஞர்கள் என பலரும் அவரிடம் வருகைதந்து ஆசீர்வாதம் வாங்குவதை அறிந்திருப்பீர்கள்.

இன்னொருவன் காலைப் பிடிச்சு இன்னொருவன் வாழத்தேவையில்லை என்பதில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் இன்று உலகில் இதுவா நடக்கின்றது? நாம் வாழும் மிகவும் வளர்ச்சி பெற்ற மேலைத் தேய நாடுகளில் கூட காலைப் பிடிக்கும் களாச்சாரத்தை நீங்கள் தாராளமாகக் காணாலாம். தமிழகம் மட்டும் இதற்கு எவ்வாறு விதிவிலக்காக இருக்க முடியும்?

Link to comment
Share on other sites

நானும்தான் பாக்கிறன் நம்ம கால்ல யாராவது விழுகிறார்களா? என்று..... விழுந்தால் ஆசீர்வாதம் கொடுத்த பெருமை நம்மைச் சேருமில்லையா?....

கால்ல விழுந்து தொழுகை செய்யாட்டாலும் பரவாயில்லை வாலைப் பிடிச்சு சுழட்டி விசுக்காதீங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் இது ரொம்ப ஓவர் :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது பரவாயில்லை, சிட்னியில சில ஆண்கள் கல்யாணத்தின் பின்பு, மனைவியிடம் உப்பிடித்தான் பயந்து போய் (திட்டு, அடி தாங்காமல்) காலில் விழுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானம் கெட்ட தமிழன் எங்கேயோ ஒருந்து வந்த வேற்று மொழி மாநில பெண்ணிடம் விழுந்து கிடப்பது அசிங்கம்.

வேற்று மொழி பேசலாம் வேற்று மாநிலத்தில் பிறந்திருக்கலாம்..ஆனால் மரபு வாழ்வியல் அறநெறி நின்றால் அவர்கள் எல்லாம் தமிழர்கள்.

என்ன புதிசா இருக்கு என்று நினைக்காதேங்கோ இதுதான் இப்ப முற்போக்கான கோட்பாடு. அம்மா வழி முற்போக்கு வழி..! பெரியார் வழி..! :huh::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது பரவாயில்லை, சிட்னியில சில ஆண்கள் கல்யாணத்தின் பின்பு, மனைவியிடம் உப்பிடித்தான் பயந்து போய் (திட்டு, அடி தாங்காமல்) காலில் விழுகிறார்கள்.

நாட்டில மட்டுமா வீடுகளிலும் ராச்சியம் அவைட கையிலதானே. விழுந்து கும்பிட்டு.. தான் காரியம் சாதிக்கனும் என்றிருக்காக்கும். என்ன நல்ல உடற்பயிற்சி ஆண்களுக்கு..! :huh::huh:

Link to comment
Share on other sites

கல்வி அறிவின் வளர்ச்சியில் இப்படியான செயல்கள் கானாமல் போய் விடும்...என்ன இருந்தாலும் இலங்கை தெற்காசியாவின் சமூக நல வல்லரசு..இலங்கையின் கல்வியறிவு வீதம் 94% ..தமிழகத்திலோ எமது சகோதரத் தமிழர்களின் தற்போதய நிலைதான் இது...ஏனெனில் ஒரு சாரார் ப்ணத்திலும் கல்வியறிவிலும் அதிக உயர் நிலையை அடைய மறு சாரார் ( பெரும்பாலனவர் ) தாழத்தப்பட்டவராகவும் கல்வியறிவு குறைந்தவராகவும் உளனர்.. அதனால் அத்தகய தாழ்த்தப்பட்ட மக்கள் பண மற்றும் கல்வியில் வலிமையானவரை கண்டதும்..பயப்படுகின்றனர் அல்லது மரியாதை செலுத்துகினறனர்.. இதெல்லாம் இருக்க்க தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் எம்மை விட ( எமது தரப்பிலும் சிங்கள தரப்பிலும் உள்ள சுதந்திரத்தை விட ) அதிகமாக உள்ளது என்பது நான் விசேடமாக கண்டு வியந்த ஒரு விடயம்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.