Jump to content

பாடலாசிரியர் நா.முத்துகுமார் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி


Recommended Posts

article_1471157037-CpzI0iHVIAELbIs.jpg

வியட்நாம் வீடு சுந்தரம், பஞ்சு அருணாச்சலம், ஜோதிலட்சுமி ஆகிய திரையுலக பிரமுகர்கள் மறைவு அடுத்தடுத்து நடந்ததால் அந்த அதிர்ச்சியில் இன்னும் மீளாத கோலிவூட் திரையுலகினர்களுக்கு இன்று காலை மேலும் ஒரு அதிர்ச்சியாக இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்ததாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமாருக்கு இன்று கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

41 வயதே ஆன கவிஞர் நா.முத்துகுமார் தங்க மீன்கள் திரைப்படத்துக்காக எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலுக்கும், 'சைவம்' திரைப்படத்துக்காக எழுதிய 'அழகே அழகே எதுவும் அழகே' என்ற பாடலுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/179407/ப-டல-ச-ர-யர-ந-ம-த-த-க-ம-ர-மரணம-த-ர-ய-லக-னர-அத-ர-ச-ச-

Link to comment
Share on other sites

ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே...!- நாமுத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். "மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு" என்று சொன்னவர், "வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு" என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். "உன் சொந்த ஊர் எது தம்பி," என்று ஒருமுறை கேட்டேன். "காஞ்சி அண்ணா," என்று சொன்னார். "அண்ணாவே காஞ்சிதான்," என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். "சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு" என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும். நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன். -

வைரமுத்து

http://tamil.filmibeat.com/news/vairamuthu-s-tribute-na-muthukkumar-041689.html?utm_source=spikeD&utm_medium=CD&utm_campaign=adgebra

Link to comment
Share on other sites

பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மரணமும் அதிர்வுகளும் ஒரே பார்வையில்

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார்இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41.சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறைவென்றவர் கவிஞர் முத்துக்குமார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் ஜூலை 12, 1975-ம்ஆண்டு பிறந்தவர் நா முத்துக்குமார். காஞ்சிபுரம் பச்சையப்பன்கல்லூரியில் கல்விப் படிப்பை முடித்தவர், ஆரம்பநாட்களிலிருந்தே எழுவதில் நாட்டம் கொண்டார். பிரபலஇயக்குநர் மறைந்த பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள்உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான்மூலம் வீரநடை படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.அதன் பிறகு ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்கள் அத்தனைப்பேருடனும் பணியாற்றியவர் நா முத்துக்குமார். இளையராஜா, ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார்,ஹாரிஸ் ஜெயராஜ் என அத்தனைப் பேருடனும் மிகவும்நட்பாகவும் இணக்கமாகவும் இருந்தவர் நா முத்துக்குமார்.குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷுக்கு மிகநெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார். யுவன் சங்கர் ராஜாஇசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய 'ஆனந்தயாழை மீட்டுகிறாய்... ' பாடலுக்கு முதல் தேசிய விருதினைவென்றார்.

அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்றஅழகே அழகே... பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினைவென்றார். தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின்முதன்மை பாடலாசிரியராகத் திகழ்ந்தார் நா முத்துக்குமார்.சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றவர், அங்கு ஹார்வர்டுபல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கானநிதி திரட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பொறுப்பைநிறைவேற்றினார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார்,இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். நா முத்துக்குமாருக்குமனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

முத்துக்குமாரின் தன் நலம்பேணாத்தற்கொலையால் கோபமே: கமல் ஹாஸன் 
 

இன்று மாரடைப்பால் மரணம் அடைந்த கவிஞர் நா.முத்துக்குமார் மீது கோபமே என கமல் ஹாஸன் ட்விட்டரில்தெரிவித்துள்ளார். இரண்டு முறை தேசிய விருது வாங்கியபாடலாசிரியரும், கவிஞருமான நா. முத்துக்குமார் இன்றுமாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். 41 வயதில்முத்துக்குமார் மரணம் அடைந்துள்ளது திரையுலகினரைபேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மரணம் அடையும் வயதா இது, அதற்குள் உங்களுக்கு என்னஅவசரம் என்று இயக்குனர் பாண்டிராஜ் உள்பட பல திரையுலகபிரபலங்கள் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில்கூறியிருப்பதாவது, நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்பேணாத்தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்குநன்றி.

உங்களை மிஸ் பண்ணுகிறேன் என் நண்பரே. நீங்கள் விட்டுச்சென்ற வார்த்தைகளுக்காக நன்றி. நாங்கள் உங்கள்கவிதைகளை ரசிப்பதில் பாதி அளவாவது நீங்கள் வாழ்க்கையைரசித்தீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே...!-நாமுத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்துஇரங்கல்

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும்எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்கஇயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன்பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர்.அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம்களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த்திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். "மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு" என்றுசொன்னவர், "வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு"என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 

தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்கவேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்றுஇளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதேஎன்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதேஎன்று வேதனைப்படுகிறேன். "உன் சொந்த ஊர் எது தம்பி,"என்று ஒருமுறை கேட்டேன். "காஞ்சி அண்ணா," என்றுசொன்னார். "அண்ணாவே காஞ்சிதான்," என்றேன். கோவையில்நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின்கவிதைபாட வந்தார். "சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீபிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு" என்று அவரை அறிமுகம்செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையேகவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர்பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலைஉலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லைஎன்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.

நா. முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியும், வருத்தமும் தருகிறது..கருணாநிதி இரங்கல்

கவிஞர் நா. முத்துக்குமாரின் மறைவு அதிர்ச்சி தருவதாக திமுகதலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். நா.முத்துக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கை: திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர்நா.முத்துக்குமார் அவர்கள் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.
 

தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரைபதித்த கவிஞர் முத்துக்குமார் "தங்கமீன்கள்" என்றதிரைப்படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்"" என்றபாடலுக்காகவும் "சைவம்" திரைப்படத்தில் "அழகே அழகே"என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற கவிஞர். என்மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தம்பிநா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரதுகுடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

முத்துக்குமார் இறந்ததை நம்பவே முடியவில்லை.. ஜி.விபிரகாஷ்; இதயமே நொறுங்கி விட்டது.. அதர்வா

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம் திரையுலகைஉலுக்கிப் போட்டுள்ளது. யாராலும் அவரது மரணத்தை நம்பமுடியவில்லை. முத்துக்குமார் இறந்து விட்டாரா என்றுதான்அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். நா. முத்துக்குமாரின்மரணச் செய்தி பரவிய வேகத்தில் அவரது மரணத்திற்குஇரங்கல்கள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் பலரும்டிவிட்டர், பேஸ்புக்கில் தங்களது சோகத்தையும்,அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவருடன்பணிபுரிந்த பலரும் அவரது மரணத்தால் பெரும்சோகமாகியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்உள்ளனர்.

நம்ப முடியவில்லை -ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் நா. முத்துக்குமாருடன் நெருக்கமாக பழகி வந்தவர்.இருவரது கூட்டில் வெளியான பாடல்கள் பல சூப்பர் ஹிட்ஆகியுள்ளன. முத்துக்குமாரின் மறைவு குறித்து பிரகாஷ்வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்ப முடியவில்லை.எனது படங்களில் மட்டும் 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு கடவுள்தான் பலம் தரவேண்டும் என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

அதிர்ச்சியாக இருக்கிறது - நடிகர் பிரசன்னா நடிகர் பிரசன்னாவெளியிட்டுள்ள டிவிட்டில், அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும்சோகமாக இருக்கிறது. மிக மிக அவசரமான மரமம் இது. அவரைஅத்தனை பேரும் மிஸ் செய்வோம்.

ஷாக்கிங் செய்தி இது...சரத்குமார் நடிகர் சரத்குமார்வெளியிட்டுள்ள செய்தியில் கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நம்முடன்இல்லை என்பது அதிர்ச்சி தருகிறது. ஒரு நல்ல ஆத்மாவை நாம்இழந்துள்ளோம் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

அதிர்ச்சி தருகிறது.. நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடிகர் கணேஷ்வெங்கட்ராம் வெளியிட்டுள்ள செய்தியில், அதிர்ச்சி தருகிறது.பெரும் வேதனையாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு எனதுஆழ்ந்த இரங்கல்கள்.

உங்களை மிஸ் பண்ணுவோம்... நடிகர் சதீஷ் நடிகர் சதீஷ்வெளியிட்டுள்ள டிவிட்டில், நா. முத்துக்குமார் சாரின் மரணச்செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்துக்கு எனதுஇரங்கல்கள். அவரை அனைவரும் மிஸ் செய்வோம் என்றுகூறியுள்ளார்.

நம்பவே முடியவில்லை.. நடிகர் சித்தார்த் நடிகர் சித்தார்த்வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்பவே முடியவில்லை.சாகும் வயதா இது. கடவுல் அவரது குடும்பத்துக்குப் பலம்தரட்டும். மிகப் பெரிய இழப்பு. மிக மிக சோகமான நாள் இன்றுஎன்று வேதனையை வெளியிட்டுள்ளார்.

மிகப் பெரிய இழப்பு... பாடகி சின்மயி பாடகி சின்மயிவெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்கு மிகப் பெரிய மிகமோசமான இழப்பாகும் இது. மிக மிக துரிதமான மரணம் என்றுவேதனை தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய இழப்பு..ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்குஇன்னொரு மிகப் பெரிய இழப்பு. அவரது மரணச் செய்தி அதிர்ச்சிதருகிறது. என்ன ஒரு திறமையான பாடலாசிரியர் என்றுகூறியுள்ளார்.

 

இதயம் உடைந்து சிதறியது போல உள்ளது... நடிகர் அதர்வாநடிகர் அதர்வா வெளியிட்டுள்ள செய்தியில், இதயமே சுக்குநூறாக நொறுங்குவது போல உள்ளது. நா. முத்துக்குமார் சாரின்மரணத்தை நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா சாந்திஅடையட்டும். அவரது குடும்பத்துக்கு அனைத்துப் பலமும்கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார் அதர்வா.

அத்தனை பேரையும் அழ வைத்து விட்டுப் போய் விட்டாயேமுத்துக்குமார்! 

மரணம் இயற்கைதான்... ஆனால் முத்துக்குமாரின் மரணத்தைமனம் ஏற்க முடியவில்லை. அழுது புலம்புகிறது. எத்தனையோஇழப்புகளை சந்தித்து விட்ட போதிலும் முத்துக்குமார் இல்லைஎன்ற செய்தி மனதை அழுத்திப் பிசைகிறது. செய்திகேள்விப்பட்ட ஒவ்வொருவரையும் அழ வைத்து விட்டார்முத்துக்குமார். அத்தனை பேரும் பெரும் அதிர்ச்சியில்மூழ்கியுள்ளனர். மொத்தமாக அத்தனை பேரையும் துயரத்தில்ஆழ்த்தியிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். அத்தனை பேரின்செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர் முத்துக்குமார். இவரதுஎழுத்துகளுக்கு எல்லாத் தரப்பிலும் ரசிகர்கள். வயதுவித்தியாசம் இல்லாமல் ரசித்து மகிழ வைத்தது இவரதுஎழுத்துக்கள்.

எல்லோருக்கும் செல்லப்பிள்ளை எல்லோரிடமும் சிரித்த முகம்.கேட்கும் பாடலை உடனே தருவது. வார்த்தைகளில் ஜாலம்காட்டாமல் உயிர்ப்போடு ஒவ்வொரு வரியையும் எழுதுவது.

சமூகத்திற்காகவும் குரல் கொடுத்த பெரிய மனிதன்சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாமல், சமூகஅவலங்களுக்காகவும் தனது தமிழ் மூலம் குரல் கொடுப்பது..நிச்சயம் முத்துக்குமார் மிகப் பெரிய மனிதன்.

தந்தை - மகளின் தேசிய கீதம் ஒவ்வொரு தந்தை - மகளுக்கும்,தேசிய கீதமாகவே மாறிப் போய் விட்டது, இவருக்கு முதல்தேசிய விருதை வாங்கி கொடுத்த ஆனந்த யாழை மீட்டுகிறாய்பாடல்.

மீள முடியாத சோகம் சைவம் படத்தில் 2வது முறையாக இவர்விருது வாங்கியபோது ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் மகிழ்ந்துகளித்தது. எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்றேதெரியவில்லை.

மீள முடியாத சோகம் சைவம் படத்தில் 2வது முறையாக இவர்விருது வாங்கியபோது ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் மகிழ்ந்துகளித்தது. எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்றேதெரியவில்லை.

அநியாயமான மரணம் உடல் நிலையை சரியாக பார்த்துக்கொள்ளாமல் இப்படி எல்லோரையும் பரிதவிக்க விட்டு போய்விட்டார் முத்துக்குமார். திரையுலகுக்கு பேரிழப்பு என்றுவெறுமனே சொல்லி விட முடியாது. ஒட்டுமொத்த தமிழுக்கும்இவரது மரணம் மிகப் பெரிய இழப்பு.. காரணம், முத்துக்குமார்நல்ல கவிஞர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. நிச்சயம்அநியாயமான மரணம்... !

போய் வா என் தம்பி.. தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்.. நா.முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணத்திற்கு நாம் தமிழர்கட்சித் தலைவர் சீமான் இரங்கலும், வேதனையும்தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளவரை, மொழி உள்ளவரைமுத்துக்குமாரும் நிலைத்திருப்பார் என்று அவர் புகழாரம்சூட்டியுள்ளார் சீமான். சீமான் இயக்கிய வீர நடை படம்மூலமாகத்தான் பாடலாசிரியராக தமிழ்த் திரையுலகில்அறிமுகமானார் நா. முத்துக்குமார். அன்று தொடங்கிய அவரதுபாட்டு வரிசை நிற்காமல் தொய்வில்லாமல் தமிழ்நெஞ்சங்களை தாலாட்டி வந்தது. இன்று நின்று போய் விட்டது.முத்துக்குமார் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்து அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் ஆருயிர்த் தம்பி எனது ஆருயிர் தம்பியும் புகழ்பெற்றதிரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைவுற்றசெய்திகேட்டு ஆழ்ந்த மனத் துயரில் சிக்கித் தவிக்கிறேன். என்தம்பி முத்துக்குமார் தமிழ்த் தேசிய இனத்தின் மாபெரும்இளங்கவி. ஏறத்தாழ 1,500க்கு மேல் எழுதி திரைப்பட பாடல்களைதன் அழகு தமிழால் உயிர்ப்பிக்கச் செய்த மாபெரும்திறமையாளன்.

கவிஞன் மட்டுமல்ல, மிகச் சிறந்த தமிழுணர்வாளன் என் தம்பிநா.முத்துக்குமார் அவர்களின் ஆழ்ந்த மொழி நுட்புலமும், சிறந்தசொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகுதமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும்அவனது திறமையைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன்.அந்த வியப்புதான் என் தம்பி முத்துக்குமாரை நான் இயக்கியவீரநடை' திரைப்படத்தின் பாடலாசிரியராக அறிமுகம்செய்யத்தூண்டியது. வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல்மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்றஅநீதிகளைக் கண்டு தன் வார்த்தை சவுக்கினை எடுத்துவிளாசுகிற கலகக்காரனாக என் தம்பி முத்துக்குமார் திகழ்ந்தான்.

தமிழனை தலைநிமிரச் செய்த என் தம்பி அரசியல் களத்தில்நான் முன்னெடுத்த எல்லா முயற்சிகளிலும், அவனது வாழ்த்துஅழகு தமிழ் கவிதையாய் வந்துகொண்டே இருந்தது. தேசியவிருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுதமிழனின் திறமையை தலைநிமிரச் செய்த என் தம்பி இன்றுமறைந்துபோனது தனிப்பட்ட அளவில், வாழ்நாளில் நான்அடைந்திருக்கிற பெருந்துயர். வார்த்தைகளால் விவரிக்கமுடியாத மாபெரும் இழப்பொன்றை தமிழ்த்தேசிய இனத்தின்படைப்புலகம் இன்று அடைந்திருக்கிறது.

புகழ் வணக்கம் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரில் ஒருவனாக நின்று துயரில்நானும் பங்கேற்கிறேன். விழிகள் முழுக்க நிரம்பி ததும்பும்கண்ணீர்தாரைகளால் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களுக்குபுகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

என்றென்றும் என் தம்பியின் நினைவுகளுடன் என்றென்றும் என்தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் நினைவுகளோடும், அவன்ஆழ்மனதில் கிளர்ந்து கொண்டிருந்த தமிழின விடுதலை என்கிறகனவுகளோடும், அவன் அண்ணனாகிய நிச்சயம் பயணிப்பேன்என அவனிடத்தில் நான் உறுதிகூறுகிறேன்

போய் வா தம்பி போய் வா என் தம்பி! இம் மொழியுள்ளவரைஉன் கவி இருக்கும். தமிழ் உள்ளவரை நீயிருப்பாய் என்று தனதுஅறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134930/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.