Jump to content

விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாக இருந்த கொமடோர் அஜித் போயகொடவின் அனுபவங்கள்


Recommended Posts

விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாக இருந்த கொமடோர் அஜித் போயகொடவின் அனுபவங்கள்

எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையில் ஒரு தலைவராகச் செயற்பட்ட கரிகாலன் எம்முடன் உரையாடுவதற்காக அங்கு வந்திருந்தார். சிறையிலிருந்த எம்மை விடுதலை செய்வதற்கு அவர்களுக்கு நாங்கள் உதவவேண்டும் என கரிகாலன் எம்மிடம் கேட்டார்.  கைதிகளை விடுவிப்பதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதுமாறு கரிகாலன் எம்மிடம் தெரிவித்தார்.

உண்மையில் இந்த உரையாடல் முழுவதையும் என்னால் பூரணமாக நினைவுபடுத்த முடியாவிட்டாலும் கூட, இதுவே அதன் சாராம்சமாக இருந்தது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், அரசாங்கத்துடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தலில் தாம் ஈடுபடுவோம் எனவும் கரிகாலன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மூன்று புலி உறுப்பினர்களை விடுதலை செய்யப்பட்டால் 24 பேரைக் கொண்ட எமது குழுவைத் தாம் விடுவிப்பதாகவும் புலிகள் தெரிவித்தனர். இதற்கான கடிதத்தை எழுதுவதில் நாமும் ஆர்வம் கொண்டோம். ஏனெனில் எம்மை விடுதலை செய்வதற்கான எவ்வித நகர்வுகளும் இடம்பெறவில்லை என்பதை நாம் கண்டுணர்ந்தோம். அமைதித் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் மட்டுமே நாங்கள் விடுவிக்கப்படுவோம் என்பதை மட்டுமே எம்மால் கற்பனை செய்ய முடிந்தது. இதனால் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுத நாம் சம்மதித்தோம்.

நாங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எழுதிய கடிதம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்காக அப்போதைய அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் வழங்கப்பட்ட பதிலானது இவ்வாறான ஒரு குழு கைது செய்யப்பட்ட விவகாரம் தனக்குத் தெரியாது என்பது போல் அமைந்திருந்தது.

இந்தக் கைதிகள் மரணித்த வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கருதியதாகக் கூறுமாறு பாதுகாப்புச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும், புத்தக விற்பனையாளரான விஜித யாப்பா, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக Newsweek மற்றும் National Geographic ஆகியவற்றின் பிரதிகளை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

A Long Watch

அரசாங்கத்தின் பதிலானது இரக்கமற்றதாகவும் அலட்சியம் நிறைந்ததாகவும் இருந்ததை நினைத்து நான் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். இராணுவ வீரர்கள் பிற வீரர்கள் இல்லாதவிடத்து அந்த இடத்தை நிரப்பீடு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறார்கள். உலகில் உள்ள எந்தவொரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் அவர்களது ஓய்வின் பின்னரும் இன்றும் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர் என்பதைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

முன்னாள் அல்லது சேவையிலிருந்த இராணுவ வீரர்களால் இழைக்கப்பட்ட குற்றச் செயற்பாடுகள் தொடர்பான புள்ளிவிபரங்களை எடுத்துப் பாருங்கள். சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவரிடம் அவரது அரசாங்கம் அவரது விடுதலைக்காக எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறினால் அதன் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பதைக் கேட்டுப்பாருங்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு சமரசத்தையும் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை என்பதற்கான சமிக்கையை அரசாங்கம் அனுப்பியது.

உண்மையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மூன்று புலி உறுப்பினர்களும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். ஏனெனில் இவர்களை சட்டரீதியாகத் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என்பதனால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

நாங்கள் பெரியமடுவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, முல்லைத்தீவில் யுத்தம் இடம்பெற்றது. வழமைபோன்று எமது சிறைக் காவலர்கள் மகிழ்ச்சியுடன் யுத்தத்தில் வெற்றி பெற்றதைக் கூறினார்கள். முல்லைத்தீவிலிருந்த இராணுவ முகாமைப் புலிகள் முற்றுமுழுதாக அழித்தனர். இதில் 1200 இராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் தரப்பில் யுத்த ரீதியான வெற்றிகள் கிடைத்த வேளைகளில் அவர்கள் பேசுவதற்குத் தயாராக இருந்தனர். அவர்களது தரப்பில் இழப்புக்கள் ஏற்பட்ட வேளையில், அவர்கள் அமைதியுடன் இருந்தனர்.

பெரியமடுவில் நாங்கள் இருந்தபோது ஒருநாள், தமிழீழ விடுதலைப் புலிகள் வெலிஓயா முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இவர்களது தாக்குதல் திட்டங்கள் தொடர்பான தகவலை சிறிலங்கா இராணுவம் முன்னரே அறிந்து கொண்டனர். இதனால் புலிகள் தமது முகாமிற்குள் நுழையும் வரை காத்திருந்த இராணுவத்தினர் அவர்கள் மீது எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இருநூறு அல்லது முந்நூறு வரையான பெண் போராளிகள் கொல்லப்பட்டனர் என நான் நினைக்கிறேன்.

இதனால் புலிகள் எம்மீது தமது அதிருப்தியை காண்பித்தனர். அதாவது எமக்கான உணவு நேரந் தவறி வழங்கப்பட்டது. அத்துடன் உணவு ருசியற்றதாகவும் காணப்பட்டது. எமது சிறையில் மேலும் சிறைக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எம்மை வந்து பார்க்கும் வரை புலிகளின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை எங்களால் அறியமுடியவில்லை. அதன் பின்னர் நாங்கள் செய்தித்தாள்களை வாசித்து உண்மை நிலையை அறிந்து கொண்டோம்.

ஆனால் பொதுவாக புலிகளின் சிறைக்காவலர்கள் எம்முடன் மிகவும் நட்புடன் பழகுவார்கள். நாங்களும் ஒரு குழுவாக சிறையில் இருந்ததால் தனிமை என்ற உணர்வைப் பெற்றிருக்கவில்லை. மூத்த மற்றும் வயது கூடியவர் என்ற வகையில் அந்தக் குழுவைத் தலைமை தாங்கும் பொறுப்பும் எனக்கு ஒப்படைக்கப்பட்டது.

நான் ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டது போன்ற உணர்வைக் கொண்டிருந்தேன். தற்போது எனக்கு அதிக வேலை இருந்தது. அது மட்டுமே எனது மனதை ஆக்கிரமித்திருந்தது. இது என்னை மனதளவில் பல்வேறு மாற்றத்திற்கு உட்படுத்தியிருந்தது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எம்மைப் பார்க்க வருகின்ற நாட்கள் தவிர்ந்த மற்றைய நாட்களில் எனது குழுவைச் சேர்ந்த அனைவரையும் சந்திப்பதற்கான அனுமதி எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் சிலவேளைகளில் எமக்கு அருகிலுள்ள சிறைக கூண்டுகளிலிருந்து மற்றைய சிறைக் கைதிகள் பேசுவது எமக்குக் கேட்கும். எம்மைக் கண்காணிப்பதற்கு எமக்கு அருகில் எவரும் இல்லை என்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் சிறைக்கம்பிகளின் ஊடாக நாங்கள் உரையாடுவோம்.

எம்மைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட சிறைக் காவலர்கள் எம்மீது நம்பிக்கை கொண்டிருந்தனர் என நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் எமது சிறைக்கூண்டுகளைத் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டேயிருப்பார்கள். இது நாங்கள் சிறைக்கைதிகள் என்பதைத் தொடர்ந்தும் நினைவுபடுத்துவதாக இருக்கும்.

எமக்குப் பரிச்சயமான புலி உறுப்பினர்களையும் நாங்கள் பார்க்க முடிந்தது. நாம் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கு கபிலன் என்பவர் பொறுப்பாக இருந்தார். ஆனால் அவர் அரிதாகவே எம்மை வந்து பார்ப்பார். நாங்கள் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தோம். செல்வரட்ணம் என்பவர் எம்மை ஒவ்வொரு நாளும் வந்து பார்ப்பார். எமக்குக் காவலாக இருந்தவர்களில் சிலர் இளவயதினர். அவர்களுக்கு பதினெட்டு வயது கூட இருக்காது என நான் நினைக்கிறேன். அவர்கள் எம்மீது சிறிது நம்பிக்கை கொண்டிருந்தனர். அதேபோன்று நாங்களும் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் எப்போதும் எமது சிறைக்கூண்டின் வாசலில் ஆயுதம் தரித்த ஒரு காவலாளி நிற்பார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறான விரிவான சிறை வலைப்பின்னலைக் கொண்டிருந்தனரா என்பது ஒரு ஆச்சரியப்படத்தக்க விடயமாகும். இந்த சிறைகள் பல்வேறு நோக்கங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதாவது புலிகள் தமது தேசத்துரோகிகளைத் தடுத்து வைப்பதற்காகவும், அமைப்பிற்குள் பிரச்சினைக்கு உள்ளாகும் புலி உறுப்பினர்களைத் தடுத்து வைப்பதற்காகவும், ஒழுக்கத் தவறாக நடந்து கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வேற்று ஆயுதக்குழுக்களுடன் தொடர்பைப் பேணுபவர்கள் போன்ற பல்வேறு தரப்பினர்களையும் அடைத்து வைப்பதற்காகவே புலிகள் இவ்வாறான சிறைகளை உருவாக்கியிருந்தனர்.

நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையின் மூலையிலிருந்த சிறைக்கூண்டில் பெரிய உருவத்தைக் கொண்ட மனிதர் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு அமைப்பொன்றின் தலைவர் போன்றிருந்தார். நான் அவர் யார் என வினவியபோதும் எவரும் எனக்குப் பதிலளிக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். பின்னர் ஒருநாள் அவர் அங்கிருந்து வேறிடம் சென்றுவிட்டார்.

நாங்கள் பெரியமடுவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சிறிலங்கா உலகக் கிண்ணக் கோப்பையை வென்றெடுத்திருந்தது. இதனை எமக்குக் காவலாளியாக இருந்த புலி உறுப்பினர் ஒருவரே தெரிவித்திருந்தார். அவர்களும் சிறிலங்கா வெற்றி பெற்றதை நினைத்து ஆச்சரியம் அடைந்திருந்தனர். துடுப்பாட்டம் என்ற வகையில் புலிகள் அமைப்பினரும் விதிவிலக்காக இருந்தனர்.

அவர்கள் இதனை சிறிலங்கா அணி என அழைக்கவில்லை. அவர்கள் ஒருபோதும் நாட்டின் புதிய பெயரைப் பயன்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் சிறிலங்காவின் துடுப்பாட்ட அணிக்கு ஆதரவளித்தனர். அவர்கள் சனத் ஜெயசூரிய மற்றும் அர்ஜுன ரணதுங்கவின் மிகப் பெரும் ரசிகர்களாக இருந்தனர். முத்தையா முரளிதரன் என்கின்ற தமிழர் ஒருவர் புதிதாக சிறிலங்கா துடுப்பாட்ட அணியில் இணைந்துள்ளமை தமக்குப் பெருமையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தம்மிடம் இருந்த சிறிய வானொலியில் உலகக் கோப்பை அணியின் இறுதி நாள் நேரடி வர்ணனையைக் கேட்பதற்கு புலிகளின் சிறைக் காவலர்கள் எம்மை அனுமதித்தனர். உண்மையில் அவர்கள் வைத்திருந்த வானொலியின் ஒலிபரப்பை எம்மால் சரியாகக் கேட்க முடியவில்லை. ஆனாலும் அந்தத் தருணம் உண்மையில் மறக்க முடியாத ஒன்றாகும். அதற்கு முன்னர் சிறிலங்கா ஒருபோதும் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு ஒருபோதும் தெரிவாகியிருக்கவில்லை. எங்களில் பெரும்பாலானவர்கள் துடுப்பாட்ட வீரர்களாக இருந்தோம். சிறிலங்கா உலகக் கோப்பையை வென்றெடுத்த போது, சிறைக் காவலர்கள் எம்முடன் இணைந்து ஆரவாரித்தனர்.

ஆனால் அதன் பின்னர் பல நாட்கள் வழமைபோன்று கழிந்தது. பின்னர் ஒருநாள் காவலாளிகள் எம்மிடம் வந்து புறப்படுவதற்குத் தயாராகுங்கள் எனக் கூறினார்கள். நாங்களும் புறப்பட்டோம். ட்ரக் வண்டி ஒன்றில் நாங்கள் ஏற்றப்பட்டோம். பின்னர் நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.

குறிப்பு –

( 1994 ஆண்டு மன்னார் – சிலாவத்துறையில் சாகரவர்த்தன ரோந்துக் கப்பல் மீதான தாக்குதலில், அதன் கட்டளை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட  கடற்புலிகளால் போர்க்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்தார். ஆறு ஆண்டுகளின் பின்னர், 2002 ஆம் ஆண்டு அவர், போர்க்கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். போர்க்கைதியாக புலிகளிடம் இருந்த அனுபவங்களை கொமடோர் அஜித் போயகொட, எழுத்தாளர் சுனிலா கலப்பதி மூலம், “A Long Watch – War Captivity and return in sri lanka“ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.இந்த நூலின் ஒரு பகுதியே இது.)

ஆங்கிலத்தில்  – அஜித் போயகொட ( சுனிலா கலப்பதி)
வழிமூலம்        – dailyo
மொழியாக்கம் – நித்தியபாரதி

http://thuliyam.com/?p=37659

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

AJITH BOYAGODAஎங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையில் ஒரு தலைவராகச் செயற்பட்ட கரிகாலன் எம்முடன் உரையாடுவதற்காக அங்கு வந்திருந்தார். சிறையிலிருந்த எம்மை விடுதலை செய்வதற்கு அவர்களுக்கு நாங்கள் உதவவேண்டும் என கரிகாலன் எம்மிடம் கேட்டார்.  கைதிகளை விடுவிப்பதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதுமாறு கரிகாலன் எம்மிடம் தெரிவித்தார்.

உண்மையில் இந்த உரையாடல் முழுவதையும் என்னால் பூரணமாக நினைவுபடுத்த முடியாவிட்டாலும் கூட, இதுவே அதன் சாராம்சமாக இருந்தது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், அரசாங்கத்துடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தலில் தாம் ஈடுபடுவோம் எனவும் கரிகாலன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மூன்று புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டால் 24 பேரைக் கொண்ட எமது குழுவைத் தாம் விடுவிப்பதாகவும் புலிகள் தெரிவித்தனர். இதற்கான கடிதத்தை எழுதுவதில் நாமும் ஆர்வம் கொண்டோம். ஏனெனில் எம்மை விடுதலை செய்வதற்கான எவ்வித நகர்வுகளும் இடம்பெறவில்லை என்பதை நாம் கண்டுணர்ந்தோம். அமைதித் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் மட்டுமே நாங்கள் விடுவிக்கப்படுவோம் என்பதை மட்டுமே எம்மால் கற்பனை செய்ய முடிந்தது. இதனால் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுத நாம் சம்மதித்தோம்.

நாங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எழுதிய கடிதம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்காக அப்போதைய அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் வழங்கப்பட்ட பதிலானது இவ்வாறான ஒரு குழு கைது செய்யப்பட்ட விவகாரம் தனக்குத் தெரியாது என்பது போல் அமைந்திருந்தது.

இந்தக் கைதிகள் மரணித்த வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கருதியதாகக் கூறுமாறு பாதுகாப்புச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும், புத்தக விற்பனையாளரான விஜித யாப்பா, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக Newsweek மற்றும் National Geographic ஆகியவற்றின் பிரதிகளை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். A Long Watch

அரசாங்கத்தின் பதிலானது இரக்கமற்றதாகவும் அலட்சியம் நிறைந்ததாகவும் இருந்ததை நினைத்து நான் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். இராணுவ வீரர்கள் பிற வீரர்கள் இல்லாதவிடத்து அந்த இடத்தை நிரப்பீடு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறார்கள். உலகில் உள்ள எந்தவொரு ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் அவர்களது ஓய்வின் பின்னரும் இன்றும் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றனர் என்பதைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

முன்னாள் அல்லது சேவையிலிருந்த இராணுவ வீரர்களால் இழைக்கப்பட்ட குற்றச் செயற்பாடுகள் தொடர்பான புள்ளிவிபரங்களை எடுத்துப் பாருங்கள். சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவரிடம் அவரது அரசாங்கம் அவரது விடுதலைக்காக எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறினால் அதன் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பதைக் கேட்டுப்பாருங்கள். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு சமரசத்தையும் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை என்பதற்கான சமிக்கையை அரசாங்கம் அனுப்பியது.

உண்மையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மூன்று புலி உறுப்பினர்களும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். ஏனெனில் இவர்களை சட்டரீதியாகத் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என்பதனால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

நாங்கள் பெரியமடுவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, முல்லைத்தீவில் யுத்தம் இடம்பெற்றது. வழமைபோன்று எமது சிறைக் காவலர்கள் மகிழ்ச்சியுடன் யுத்தத்தில் வெற்றி பெற்றதைக் கூறினார்கள். முல்லைத்தீவிலிருந்த இராணுவ முகாமைப் புலிகள் முற்றுமுழுதாக அழித்தனர். இதில் 1200 இராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் தரப்பில் யுத்த ரீதியான வெற்றிகள் கிடைத்த வேளைகளில் அவர்கள் பேசுவதற்குத் தயாராக இருந்தனர். அவர்களது தரப்பில் இழப்புக்கள் ஏற்பட்ட வேளையில், அவர்கள் அமைதியுடன் இருந்தனர்.

பெரியமடுவில் நாங்கள் இருந்தபோது ஒருநாள், தமிழீழ விடுதலைப் புலிகள் வெலிஓயா முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இவர்களது தாக்குதல் திட்டங்கள் தொடர்பான தகவலை சிறிலங்கா இராணுவம் முன்னரே அறிந்து கொண்டது. இதனால் புலிகள் தமது முகாமிற்குள் நுழையும் வரை காத்திருந்த இராணுவத்தினர் அவர்கள் மீது எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இருநூறு அல்லது முந்நூறு வரையான பெண் போராளிகள் கொல்லப்பட்டனர் என நான் நினைக்கிறேன்.

இதனால் புலிகள் எம்மீது தமது அதிருப்தியை காண்பித்தனர். அதாவது எமக்கான உணவு நேரந் தவறி வழங்கப்பட்டது. அத்துடன் உணவு ருசியற்றதாகவும் காணப்பட்டது. எமது சிறையில் மேலும் சிறைக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எம்மை வந்து பார்க்கும் வரை புலிகளின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை எங்களால் அறியமுடியவில்லை. அதன் பின்னர் நாங்கள் செய்தித்தாள்களை வாசித்து உண்மை நிலையை அறிந்து கொண்டோம்.

ஆனால் பொதுவாக புலிகளின் சிறைக்காவலர்கள் எம்முடன் மிகவும் நட்புடன் பழகுவார்கள். நாங்களும் ஒரு குழுவாக சிறையில் இருந்ததால் தனிமை என்ற உணர்வைப் பெற்றிருக்கவில்லை. மூத்த மற்றும் வயது கூடியவர் என்ற வகையில் அந்தக் குழுவைத் தலைமை தாங்கும் பொறுப்பும் எனக்கு ஒப்படைக்கப்பட்டது.

நான் ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டது போன்ற உணர்வைக் கொண்டிருந்தேன். தற்போது எனக்கு அதிக வேலை இருந்தது. அது மட்டுமே எனது மனதை ஆக்கிரமித்திருந்தது. இது என்னை மனதளவில் பல்வேறு மாற்றத்திற்கு உட்படுத்தியிருந்தது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எம்மைப் பார்க்க வருகின்ற நாட்கள் தவிர்ந்த மற்றைய நாட்களில் எனது குழுவைச் சேர்ந்த அனைவரையும் சந்திப்பதற்கான அனுமதி எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் சிலவேளைகளில் எமக்கு அருகிலுள்ள சிறைக் கூண்டுகளிலிருந்து மற்றைய சிறைக் கைதிகள் பேசுவது எமக்குக் கேட்கும். எம்மைக் கண்காணிப்பதற்கு எமக்கு அருகில் எவரும் இல்லை என்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் சிறைக்கம்பிகளின் ஊடாக உரையாடுவோம்.

எம்மைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட சிறைக் காவலர்கள் எம்மீது நம்பிக்கை கொண்டிருந்தனர் என நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் எமது சிறைக்கூண்டுகளைத் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டேயிருப்பார்கள். இது நாங்கள் சிறைக்கைதிகள் என்பதைத் தொடர்ந்தும் நினைவுபடுத்துவதாக இருக்கும்.

எமக்குப் பரிச்சயமான புலி உறுப்பினர்களையும் நாங்கள் பார்க்க முடிந்தது. நாம் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கு கபிலன் என்பவர் பொறுப்பாக இருந்தார். ஆனால் அவர் அரிதாகவே எம்மை வந்து பார்ப்பார். நாங்கள் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தோம். செல்வரட்ணம் என்பவர் எம்மை ஒவ்வொரு நாளும் வந்து பார்ப்பார். எமக்குக் காவலாக இருந்தவர்களில் சிலர் இளவயதினர். அவர்களுக்கு பதினெட்டு வயது கூட இருக்காது என நான் நினைக்கிறேன். அவர்கள் எம்மீது சிறிது நம்பிக்கை கொண்டிருந்தனர். அதேபோன்று நாங்களும் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் எப்போதும் எமது சிறைக்கூண்டின் வாசலில் ஆயுதம் தரித்த ஒரு காவலாளி நிற்பார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறான விரிவான சிறை வலைப்பின்னலைக் கொண்டிருந்தனரா என்பது ஒரு ஆச்சரியப்படத்தக்க விடயமாகும். இந்த சிறைகள் பல்வேறு நோக்கங்களுடன் அமைக்கப்பட்டிருந்தன. அதாவது புலிகள் தமது தேசத்துரோகிகளைத் தடுத்து வைப்பதற்காகவும், அமைப்பிற்குள் பிரச்சினைக்கு உள்ளாகும் புலி உறுப்பினர்களைத் தடுத்து வைப்பதற்காகவும், ஒழுக்கத் தவறாக நடந்து கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வேற்று ஆயுதக்குழுக்களுடன் தொடர்பைப் பேணுபவர்கள் போன்ற பல்வேறு தரப்பினர்களையும் அடைத்து வைப்பதற்காகவே இவ்வாறான சிறைகளை உருவாக்கியிருந்தனர்.

நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையின் மூலையிலிருந்த சிறைக்கூண்டில் பெரிய உருவத்தைக் கொண்ட மனிதர் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு அமைப்பொன்றின் தலைவர் போன்றிருந்தார். நான் அவர் யார் என வினவியபோதும் எவரும் எனக்குப் பதிலளிக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். பின்னர் ஒருநாள் அவர் அங்கிருந்து வேறிடம் சென்றுவிட்டார்.

நாங்கள் பெரியமடுவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சிறிலங்கா உலகக் கிண்ணக் கோப்பையை வென்றெடுத்திருந்தது. இதனை எமக்குக் காவலாளியாக இருந்த புலி உறுப்பினர் ஒருவரே தெரிவித்திருந்தார். அவர்களும் சிறிலங்கா வெற்றி பெற்றதை நினைத்து ஆச்சரியம் அடைந்திருந்தனர். துடுப்பாட்டம் என்ற வகையில் புலிகள் அமைப்பினரும் விதிவிலக்காக இருந்தனர்.

அவர்கள் இதனை சிறிலங்கா அணி என அழைக்கவில்லை. அவர்கள் ஒருபோதும் நாட்டின் புதிய பெயரைப் பயன்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் சிறிலங்காவின் துடுப்பாட்ட அணிக்கு ஆதரவளித்தனர். அவர்கள் சனத் ஜெயசூரிய மற்றும் அர்ஜுன ரணதுங்கவின் மிகப் பெரும் ரசிகர்களாக இருந்தனர். முத்தையா முரளிதரன் என்கின்ற தமிழர் ஒருவர் புதிதாக சிறிலங்கா துடுப்பாட்ட அணியில் இணைந்துள்ளமை தமக்குப் பெருமையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தம்மிடம் இருந்த சிறிய வானொலியில் உலகக் கோப்பை அணியின் இறுதி நாள் நேரடி வர்ணனையைக் கேட்பதற்கு புலிகளின் சிறைக் காவலர்கள் எம்மை அனுமதித்தனர். உண்மையில் அவர்கள் வைத்திருந்த வானொலியின் ஒலிபரப்பை எம்மால் சரியாகக் கேட்க முடியவில்லை. ஆனாலும் அந்தத் தருணம் உண்மையில் மறக்க முடியாத ஒன்றாகும். அதற்கு முன்னர் சிறிலங்கா ஒருபோதும் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு ஒருபோதும் தெரிவாகியிருக்கவில்லை. எங்களில் பெரும்பாலானவர்கள் துடுப்பாட்ட வீரர்களாக இருந்தோம். சிறிலங்கா உலகக் கோப்பையை வென்றெடுத்த போது, சிறைக் காவலர்கள் எம்முடன் இணைந்து ஆரவாரித்தனர்.

ஆனால் அதன் பின்னர் பல நாட்கள் வழமைபோன்று கழிந்தது. பின்னர் ஒருநாள் காவலாளிகள் எம்மிடம் வந்து புறப்படுவதற்குத் தயாராகுங்கள் எனக் கூறினார்கள். நாங்களும் புறப்பட்டோம். ட்ரக் வண்டி ஒன்றில் நாங்கள் ஏற்றப்பட்டோம். பின்னர் நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.

குறிப்பு –

( 1994 ஆண்டு மன்னார் – சிலாவத்துறையில் சாகரவர்த்தன ரோந்துக் கப்பல் மீதான தாக்குதலில், அதன் கட்டளை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட  கடற்புலிகளால் போர்க்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்தார். ஆறு ஆண்டுகளின் பின்னர், 2002 ஆம் ஆண்டு அவர், போர்க்கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். போர்க்கைதியாக புலிகளிடம் இருந்த அனுபவங்களை கொமடோர் அஜித் போயகொட, எழுத்தாளர் சுனிலா கலப்பதி மூலம், “A Long Watch – War Captivity and return in sri lanka“ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.இந்த நூலின் ஒரு பகுதியே இது.)

ஆங்கிலத்தில்  – அஜித் போயகொட ( சுனிலா கலப்பதி)
வழிமூலம்        – dailyo
மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2016/08/14/news/17955

Link to comment
Share on other sites

விடுவிக்கபட்ட நேரம் புலி ஆலாபனை இப்ப புலி இல்லை சுருதி பல இடங்களில் மாறுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சுனாமி நடந்த போது 
ஒரு லொறியில் பல பொருட்களை ஏற்றி சென்றார் 
இராணுவம் ஒருநாள் தடுத்து வைத்திருந்தது 
மறுநாள் அனுமதி கிடைத்தது.

கொண்டு சென்று கிளிநொச்சியில் புலிகளிடம் கையளித்து வந்தார்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.