Jump to content

கவிஞர் நா. முத்துக்குமார் மறைவு


Recommended Posts

கவிஞரும் தமிழ் பற்றாளருமான நா.முத்துக்குமார் அவர்களின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே...! ஆழ்ந்த இரங்கல்கள்....!

என்ன நடந்தது பகலவன் ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13912392_1059005054167585_44224141431584

முதன் முறை 
என் வாழ்வில்
மரணத்தைப்பார்க்கிறேன்
கனவுடன் சூதாடி 
கடைசியில் தோற்கிறேன் 
-நா. முத்துக்குமார்

 

ஆழ்ந்த இரங்கல்கள்....!

Link to comment
Share on other sites

மழை மட்டுமா அழகு மரணம் கூட தான் அழகு  என்று சொல்லாமல் சொல்லிவிட்டு  சென்று விட்டார் கவிஞர் முத்துகுமார் அவர்கள். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

“நா” முத்து
“பா”க்களின் சொத்து..!!
------------------------------------

நீ வாழ்வதற்கும்
உன்னை வாழ்த்துவதற்கும்
“பூமாலை”யல்லவா
தோள் மீது வீழ்ந்தது

இன்று
உலகைவிட்டு
உன்னை பிரிக்க
“மஞ்சள் காமாலை”யல்லவா
உயிர் மீது வீழ்ந்து சாய்த்தது..!

நீ
இயற்கையின் அழகினை
வடித்திடும் கவியே கற்கண்டு

இன்று
இயற்கை எய்திய செய்திகேட்டு
இயற்கையே வடிக்கின்றது
உதிரத்தின் சொற்கொண்டு..!

வாழும் நாளிருக்க
இன்னும் எழுதவே
இளமையிருக்க….
வழமை ஏனோ
சனியனின கால்களில்
உன் சரித்திரத்தை
சறுக்கி வீழ்த்தியது..?

உலகின் அழுக்குகளையும்
உலகின் அழுகைகளையும்
“அழகு” வரிகளிலேயே
சுத்தப்படுத்தியவன்

இன்று உன்னை
கால(ம்)ன் அசுத்தப்படுத்திவிட்டது..!

பாரதம் என்றும்
மௌனித்ததில்லை
இன்று பாரே
மரணித்துவிட்டது
உன் உயிர்பிரிந்த செய்தி
உயிரைப் பிழிந்து
உணர்வுக்குள் உதிரம்
கொதித்து எழுவதனால்…!

உனக்கு
மரணம் கிடையாது
இப்போது நீ
உறங்கிக்கொண்டிரு
நாங்கள் உன்னை
சுவாசித்துக்கொண்டிருக்கின்றோம்..!

நீ
பெற்றது இரண்டு
தேசிய விருதுகள் அல்ல
ஈழத்தமிழர்களின்
தேசிய விருதோடு மூன்று..!!

நா.முத்து
“பா”க்களின் சொத்து
நீ அழிந்திடும் ஓவியமல்ல
காலத்தால் என்றும்
அழியாத காவியம்..!!

திரையுலகின்
திரண்ட பே(மூ)ச்சோடு
உன் ஆத்மா சாந்தியடையட்டும்.

------------------
கலைஞர்.ஏ.ஓ.அனல்
2016.08.14.

 
Link to comment
Share on other sites

 

 
மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு கடந்த 2015...

மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு புதியதலைமுறை சார்பில் இலக்கியத்திற்கான சாதனை தமிழன் விருது வழங்கப்பட்டதன் வீடியோ காட்சி

Posted by புதிய தலைமுறை on Sonntag, 14. August 2016

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14azhagey-azhagey1.jpg

ஆனந்த யாழை நீ மீட்டிய வேளை

அண்ணாந்து பார்த்தது மனம்

உள்ளப் பூட்டுகள் உடைத்துன உயிரைக்கரைத்தன

காலத்தால் ஆழியாத உன் பாட்டுகள்

தமிழ் உன்னை நயந்ததும்

தமிழாய் நீ நயந்ததும்

இனி கிடைக்காதென்றான பின்னால்

இன்னும் ஏற்க மறுக்கிறது இதயம்

கூற்றுவனுக்கென்ன கூட்டிச் சென்றுவிட்டான்.

காதினிக்க உன் மொழியைக் கேட்டவர்கள் நாங்களல்லவா

உன் எண்ணம் கொண்டு - இன்னும்

எழுதக் காத்திருக்கிறது தமிழ்  …

ஏமாற்றிப் போகிறது விதி

ஆனந்த யாழே ,

உன் ஆன்மா சாந்தி பெறட்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இந்த செய்தி வாசித்தேன். எழுத வார்த்தைகள் இல்லை. தமிழுக்காக போராடி வாழ்ந்த கவிஞனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13902676_10208278750980930_5729422932502

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரும் தமிழ் உணர்வாளருமான நா முத்துக்குமாரின் மறைவுக்கு எனது அஞ்சலிகளும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

என்னவொரு அருமைஞான கவிஞன், கனவிலும் கூட அவனின் பாடல் வரிகளை மனம் மீட்டிக்கொண்டே இருக்கும்....தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் பேரிழப்பு...... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரும் தமிழ் உணர்வாளருமான நா முத்துக்குமாரின் மறைவுக்கு எனது அஞ்சலிகளும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...அவரது இறப்புக்கு பின்னர் தான் நான் விரும்பின பெரும்பாலான பாடல்கள் இவர் தான் எழுதினார் எனத் தெரிந்து கொண்டேன்...இவரின் இழப்பின் துயரில் இருந்து அவரது உற்றார்,உறவினர்,நண்பர்கள்,சகோதரங்கள்,குழந்தைகள் மீண்டாலும்,அவரது மனைவிக்கு மட்டும் மீள முடியாத் துயராய் அமையும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.