Jump to content

0.8.16 மற்றும் 17.8.16 ஆனந்த விகடன் இதழ்களில் எனது இரு கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10.8.16 மற்றும் 17.8.16 ஆனந்த விகடன் இதழ்களில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 

சமக் குறியீடு

 

நெடுஞ்சாலையோர பெரும் உணவகம் முன்

நடந்துவரும் என்னை அழைக்கும்முன்

நீ சற்று யோசித்திருக்க வேண்டும்.

விசிலூதி என்னை உண்ண அழைத்தது

உன் தவறுதான்.

பணம் இல்லை என்பதை மறந்து பசி வந்தது

என் தவறுதான்

பசியோடு வருகிறவனை விசிலூதி அழைக்க

உன்னைப் பணித்திருப்பது அவன் தவறுதான்.

இதில் யார் தவறு பெரியதென்ற வாதம் தவிர்த்து,

நம் தவறுகளுக்கிடையே சமக் குறியிட்டு

என்னை வெளியேற அனுமதி அய்யனே.

-சேயோன் யாழ்வேந்தன்

(ஆனந்த விகடன் 10.8.16)

 

சேகரிப்பு

 

நண்பர்களின் கிண்டல்கள் பற்றி

கிஞ்சித்தும் கவலைப்படாமல்

எதையாவது சேகரித்துக்கொண்டே இருப்பது

சேகரின் பால்ய பழக்கம்

விதவிதமான இறகுகளை, இலைகளை,

மலர்களை, முட்களை,

கிளிஞ்சல்களை, வளையல் துண்டுகளைச்

சேகரிக்கும் சேகர்

பின்னாளில் விதவிதமான

அழைப்பிதழ்களைச் சேகரிக்க ஆரம்பித்தான்.

திருமணமானமாகி வெகுநாட்களுக்குப் பிறகு

தனியே வெறுங்கையோடு எதிரில்வந்த சேகர்

இப்போது விதவிதமான ஞாபகங்களைச்

சேகரிப்பவன்போல் தோன்றினான்.

-சேயோன் யாழ்வேந்தன்

(ஆனந்த விகடன் 17.8.16)

நன்றி: ஆனந்த விகடன்

 

(நன்றி: ஆனந்த விகடன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/17/2016 at 1:11 AM, Ahasthiyan said:

 

பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள் 

 

நன்றி தோழர்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.