Jump to content

கலைஞனின் அறிமுகம்..


Recommended Posts

யாழ்கள நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் விருந்தினருக்கு எனது அன்பு கலந்த வணக்கம்!

முதலில் என்னை அறிமுகம் செய்யாது யாழ் களத்தினுள் திறந்த வீட்டினுள் மாடு புகுந்த மாதிரி நுழைந்து கருத்துக்களை எழுதத்தொடங்கி விட்டேன். இப்போது நேரம் கிடைத்துள்ளதால் என்னை அறிமுகம் செய்கின்றேன்.

முதலில் மாப்பிளை என்ற எனது பெயரை யாராவது தவறுதலாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இது எம்மிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் சொல்லாக இருப்பதால் இச்சொல்லை எனது யாழ் கள அடையாமாகத் தேர்ந்தெடுத்தேன். தவிர, மற்றும்படி மாப்பிளைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. நான் யாழ் களத்தை சுமார் மூன்று ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன். நேரம் கிடைக்காதனாலும், மற்றும் தமிழில் எழுதுவது சிரமாக இருந்ததாலும் யாழ் களத்தில் என்னால் உறுப்பினராக இணைந்து கொள்ள முடியவில்லை. எனினும் சிறிது காலத்திற்கு முன் 'அருள்01' எனும் அடையாளத்தில் யாழ் களத்தில் நுழைந்தேன். தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அப்பெயரில் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை.

எனக்கு ஊர் என்று சொல்லிக் கொள்வதற்கு தமிழீழத்தில் பல இடங்கள் உண்டு. நான் பிறந்த காலம் தொட்டு அகதியாக அலைவதால் தனிப்பட்ட ஒரு ஊரின் பெயரை எனது சொந்த ஊரென்று என்னால் இங்கு குறிப்பிட முடியவில்லை.

படிப்பு மற்றும் தொழில் ரீதியாக நான் கம்பியூட்டர், தொடர்பாடல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது துறையில் நான் நல்ல வளர்ச்சி பெற்று எனக்குப் புகலிடம் தந்த தந்தை நாட்டிற்கும், தமிழீழ தாய் நாட்டிற்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்பது எனது பேரவா!

நான் மியூசிக், பியானோ, ஆங்கிலப் பாடல்களை எனது இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்து பயில்கின்றேன். சில பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். ஆனால் தொழில் ரீதியாக இவற்றைச் செய்யும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை.

யாழ் களத்தில் எனக்கு பிடித்தமான விடயம் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தமிழீழ உறவுகள் தம்மிடையே கருத்துக்களை பகிர்ந்து ஒவ்வொரு தினத்தையும் உற்சாகமாக வரவேற்பது தான்! உங்கள் கருத்துப் பகிர்வுப் போராட்டத்தில் நானும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

ஏறக்குறைய பத்து வருடங்களின் பின் தமிழில் நான் எழுதுவதால் ஏறாளமான எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் எனது ஆக்கங்களில் இருக்கக் கூடும். காலப்போக்கில் அவை மெல்ல, மெல்ல மறையும் என இப்போதைக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன். ஏதாவது மோசமான பிழைகளை எனது ஆக்கங்களில் கண்டால் தனிப்பட்ட மடலில் 'மாப்பிளைக்கு' தயவு செய்து தெரிவிக்கவும். உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

நன்றி! வணக்கம்!

குறிப்பு: நான் எனது மாப்பிளை என்ற லொள்ளுப் பெயரை கலைஞன் என்று மாற்றிவிட்டேன், மாப்பு/மாப்பி/மாப்ஸ் என அன்புடன் நம்மை அழைக்கவிரும்புவர்கள் தொடர்ந்தும் என்னை அவ்வாறே அழைக்கவும். கலைஞன் என்று அழைக்க விரும்புபவர்கள் கலைஞன் என்று அழைக்கவும். பலருக்கு முக்கியமாக புதியவர்கள், உறுப்பினர்கள் அல்லாத விருந்தினர்களிற்கு சில வேளைகளில் மாப்பிளை எனும் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எனது பெயரை கலைஞன் என மாற்றிவிட்டேன், நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ யாழ்களத்தின் மாப்பிள்ளையாய் வந்திருக்கிறிங்க.ம்...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மியூசிக், பியானோ, ஆங்கிலப் பாடல்களை எனது இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்து பயில்கின்றேன். சில பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். ஆனால் தொழில் ரீதியாக இவற்றைச் செய்யும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை.

உங்க பாட்டுக்களை எங்களுக்கும் கேட்க வழி செய்யலாமே

Link to comment
Share on other sites

சகோதரி கறுப்பி,

எனது பாடல்களை எடுத்து விடுவதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எனது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் என்னை அறிந்தவர்கள் பலர் யாழ் களத்தை பார்வையிடுவதை நான் அறிவேன். இவர்களில் சிலர் யாழ் களத்தில் ஏற்கனவே அங்கத்துவர்களாக இருக்கின்றார்களோ தெரியாது. எனது சரக்கை அவிழ்த்து விட்டுப்பின் அவர்களிடம் தர்ம அடி வாங்க வேண்டாம் என்று தான் பார்க்கின்றேன். காலம் கனிந்தால் நிச்சயமாக எனது பாடல்கள் யாழ் களத்தில் ஒலிப்பதற்கு முயற்சி செய்வேன். சுத்திச் சுத்தி சுப்பற்ற கொள்ளையுக்க என்று தமிழில் கூறுவார்கள். நீங்களும் எனக்கு ஏதாவது தூரத்து உறவோ தெரியாது. எதற்கும் நான் மிகுந்த அவதானமாகத்தான் இருக்க வேண்டும். எனது உடம்பு தர்ம அடிக்கெல்லாம் தாங்காதப்பா! :icon_idea:

Link to comment
Share on other sites

அய்யா ஆதிவாசி,

உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி! நீங்கள் உங்கள் காலில் விழுந்து ஒருவரும் ஆசீர்வாதம் வாங்கவில்லை என்று ஆதங்கத்துடன் "ஐயோ அம்மா அருள் புரியுங்க தாயே" தலைப்பில் எழுதியுள்ளீர்கள். இதோ உங்கள் முன் இந்த மாப்பிளை காலில் பணிந்து விழுந்து ஆசீர்வாதம் கேட்கின்றேன். என்னை எங்கே ஒருக்கால் வாழ்த்தி விடுங்கள் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருமையா மாப்பிளை வாரும்.வந்தவுடனேயே உம்மடை சரித்திரம் எல்லாம் சொல்லிப்போட்டீர்.நல்ல விசயம் கண்டியோ.அது சரி தண்ணி கிண்ணி அடிக்கிறபழக்கம் இருக்கோ?ஏனெண்டால் குமர்ப்பிள்ளையளும் நடமாடுகிற இடம் இது.அதுதான் கொஞ்சம் அவதானமாய் என்ன ராசா................. B)

Link to comment
Share on other sites

அண்ணா குமாரசாமி,

உங்கள் வரவேற்புக்கு நன்றி. உங்களுடன் கள்ளுக் கொட்டிலுக்கு வந்து வாழ்க்கையின் தத்துவங்களை அறிய முடியாமைக்கு எனது மன வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனென்றால், குடிக்காண்மையை(கள்ளுண்ணாமை) நான் ஒரு கொள்கையாக பின்பற்றி வருகின்றேன். (அதற்காக குடிப்பவர்களை நான் குறைத்து மதிப்பதாக விளங்கிக் கொள்ள வேண்டாம்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருமையா மாப்பிளை வாரும்.வந்தவுடனேயே உம்மடை சரித்திரம் எல்லாம் சொல்லிப்போட்டீர்.நல்ல விசயம் கண்டியோ.அது சரி தண்ணி கிண்ணி அடிக்கிறபழக்கம் இருக்கோ?ஏனெண்டால் குமர்ப்பிள்ளையளும் நடமாடுகிற இடம் இது.அதுதான் கொஞ்சம் அவதானமாய் என்ன ராசா................. B)

ஏனுங்கோ குமாரசாமி சார் அதுதான் நீங்க களப்பக்கம் வராமல் காணமல் போறிங்களா

Link to comment
Share on other sites

அன்புள்ள சுட்டி,

என்னை மாமா என்று கூப்பிட்டு வரவேற்றதற்கு மிகவும் நன்றி! ஆமாம், நீங்கள் மருமகனா அல்லது மருமகளா? எனக்கு நிறைய மருமக்கள் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் , மாப்பிள்ளை. மிக நிண்ட அறிமுகம். யாரும் இவ்வறு நீண்ட அறிமுகத்தை இதுவரை தந்ததில்லை.

உங்கள் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

குலகாடான்(அல்லது குளகாடான்?),

உங்கள் வரவேற்புக்கும், வாழ்த்துக்களிற்கும் மிகவும் நன்றி!

Link to comment
Share on other sites

வணக்கம் மாப்பிளே

நீண்ட அறிமுகத்துடன் வந்திருக்கிறியள் வாருங்கோ வரவேற்கிறம்.

Link to comment
Share on other sites

வணக்கம் மாப்பிள்ளை, அருமையான அறிமுகம்..வாருங்கள் வாருங்கள் :D

Link to comment
Share on other sites

அய்யா ஆதிவாசி,

உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி! நீங்கள் உங்கள் காலில் விழுந்து ஒருவரும் ஆசீர்வாதம் வாங்கவில்லை என்று ஆதங்கத்துடன் "ஐயோ அம்மா அருள் புரியுங்க தாயே" தலைப்பில் எழுதியுள்ளீர்கள். இதோ உங்கள் முன் இந்த மாப்பிளை காலில் பணிந்து விழுந்து ஆசீர்வாதம் கேட்கின்றேன். என்னை எங்கே ஒருக்கால் வாழ்த்தி விடுங்கள் பார்க்கலாம்?

அடேய் மாப்ளே!

நாம ஒருக்காலால் வாழ்த்த முடியாதப்பா...

இரண்டு கைகள் இருக்கின்றன வாழ்த்துகிறேன். அப்பிடியே தொலைவில் நின்று பெற்றுக் கொள்ளுப்பா!(அண்மிக்கவிட்டா நமக்கெல்லே ஆபத்து) B)

Link to comment
Share on other sites

அய்யா ஆதிவாசி,

உங்கள் வரவேற்புக்கும், வாழ்த்துக்களிற்கும் மிகவும் நன்றி! (உங்களுக்கு பல கோடி புண்ணியம்! :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ மாப்பிள்ளை.என்ன வீட்டோட மாப்பிளையா :P எதுக்கம் ஒரு வணக்கம் சொல்லி வைப்போம். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை நீர் கொஞ்சம் விவரமான ஆள் போல இருக்கு! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.  
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.