Jump to content

கலைஞனின் அறிமுகம்..


Recommended Posts

யாழ்கள நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் விருந்தினருக்கு எனது அன்பு கலந்த வணக்கம்!

முதலில் என்னை அறிமுகம் செய்யாது யாழ் களத்தினுள் திறந்த வீட்டினுள் மாடு புகுந்த மாதிரி நுழைந்து கருத்துக்களை எழுதத்தொடங்கி விட்டேன். இப்போது நேரம் கிடைத்துள்ளதால் என்னை அறிமுகம் செய்கின்றேன்.

முதலில் மாப்பிளை என்ற எனது பெயரை யாராவது தவறுதலாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இது எம்மிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் சொல்லாக இருப்பதால் இச்சொல்லை எனது யாழ் கள அடையாமாகத் தேர்ந்தெடுத்தேன். தவிர, மற்றும்படி மாப்பிளைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. நான் யாழ் களத்தை சுமார் மூன்று ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன். நேரம் கிடைக்காதனாலும், மற்றும் தமிழில் எழுதுவது சிரமாக இருந்ததாலும் யாழ் களத்தில் என்னால் உறுப்பினராக இணைந்து கொள்ள முடியவில்லை. எனினும் சிறிது காலத்திற்கு முன் 'அருள்01' எனும் அடையாளத்தில் யாழ் களத்தில் நுழைந்தேன். தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அப்பெயரில் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை.

எனக்கு ஊர் என்று சொல்லிக் கொள்வதற்கு தமிழீழத்தில் பல இடங்கள் உண்டு. நான் பிறந்த காலம் தொட்டு அகதியாக அலைவதால் தனிப்பட்ட ஒரு ஊரின் பெயரை எனது சொந்த ஊரென்று என்னால் இங்கு குறிப்பிட முடியவில்லை.

படிப்பு மற்றும் தொழில் ரீதியாக நான் கம்பியூட்டர், தொடர்பாடல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது துறையில் நான் நல்ல வளர்ச்சி பெற்று எனக்குப் புகலிடம் தந்த தந்தை நாட்டிற்கும், தமிழீழ தாய் நாட்டிற்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்பது எனது பேரவா!

நான் மியூசிக், பியானோ, ஆங்கிலப் பாடல்களை எனது இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்து பயில்கின்றேன். சில பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். ஆனால் தொழில் ரீதியாக இவற்றைச் செய்யும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை.

யாழ் களத்தில் எனக்கு பிடித்தமான விடயம் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தமிழீழ உறவுகள் தம்மிடையே கருத்துக்களை பகிர்ந்து ஒவ்வொரு தினத்தையும் உற்சாகமாக வரவேற்பது தான்! உங்கள் கருத்துப் பகிர்வுப் போராட்டத்தில் நானும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

ஏறக்குறைய பத்து வருடங்களின் பின் தமிழில் நான் எழுதுவதால் ஏறாளமான எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் எனது ஆக்கங்களில் இருக்கக் கூடும். காலப்போக்கில் அவை மெல்ல, மெல்ல மறையும் என இப்போதைக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன். ஏதாவது மோசமான பிழைகளை எனது ஆக்கங்களில் கண்டால் தனிப்பட்ட மடலில் 'மாப்பிளைக்கு' தயவு செய்து தெரிவிக்கவும். உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

நன்றி! வணக்கம்!

குறிப்பு: நான் எனது மாப்பிளை என்ற லொள்ளுப் பெயரை கலைஞன் என்று மாற்றிவிட்டேன், மாப்பு/மாப்பி/மாப்ஸ் என அன்புடன் நம்மை அழைக்கவிரும்புவர்கள் தொடர்ந்தும் என்னை அவ்வாறே அழைக்கவும். கலைஞன் என்று அழைக்க விரும்புபவர்கள் கலைஞன் என்று அழைக்கவும். பலருக்கு முக்கியமாக புதியவர்கள், உறுப்பினர்கள் அல்லாத விருந்தினர்களிற்கு சில வேளைகளில் மாப்பிளை எனும் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எனது பெயரை கலைஞன் என மாற்றிவிட்டேன், நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ யாழ்களத்தின் மாப்பிள்ளையாய் வந்திருக்கிறிங்க.ம்...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மியூசிக், பியானோ, ஆங்கிலப் பாடல்களை எனது இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்து பயில்கின்றேன். சில பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். ஆனால் தொழில் ரீதியாக இவற்றைச் செய்யும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை.

உங்க பாட்டுக்களை எங்களுக்கும் கேட்க வழி செய்யலாமே

Link to comment
Share on other sites

சகோதரி கறுப்பி,

எனது பாடல்களை எடுத்து விடுவதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எனது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் என்னை அறிந்தவர்கள் பலர் யாழ் களத்தை பார்வையிடுவதை நான் அறிவேன். இவர்களில் சிலர் யாழ் களத்தில் ஏற்கனவே அங்கத்துவர்களாக இருக்கின்றார்களோ தெரியாது. எனது சரக்கை அவிழ்த்து விட்டுப்பின் அவர்களிடம் தர்ம அடி வாங்க வேண்டாம் என்று தான் பார்க்கின்றேன். காலம் கனிந்தால் நிச்சயமாக எனது பாடல்கள் யாழ் களத்தில் ஒலிப்பதற்கு முயற்சி செய்வேன். சுத்திச் சுத்தி சுப்பற்ற கொள்ளையுக்க என்று தமிழில் கூறுவார்கள். நீங்களும் எனக்கு ஏதாவது தூரத்து உறவோ தெரியாது. எதற்கும் நான் மிகுந்த அவதானமாகத்தான் இருக்க வேண்டும். எனது உடம்பு தர்ம அடிக்கெல்லாம் தாங்காதப்பா! :icon_idea:

Link to comment
Share on other sites

அய்யா ஆதிவாசி,

உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி! நீங்கள் உங்கள் காலில் விழுந்து ஒருவரும் ஆசீர்வாதம் வாங்கவில்லை என்று ஆதங்கத்துடன் "ஐயோ அம்மா அருள் புரியுங்க தாயே" தலைப்பில் எழுதியுள்ளீர்கள். இதோ உங்கள் முன் இந்த மாப்பிளை காலில் பணிந்து விழுந்து ஆசீர்வாதம் கேட்கின்றேன். என்னை எங்கே ஒருக்கால் வாழ்த்தி விடுங்கள் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருமையா மாப்பிளை வாரும்.வந்தவுடனேயே உம்மடை சரித்திரம் எல்லாம் சொல்லிப்போட்டீர்.நல்ல விசயம் கண்டியோ.அது சரி தண்ணி கிண்ணி அடிக்கிறபழக்கம் இருக்கோ?ஏனெண்டால் குமர்ப்பிள்ளையளும் நடமாடுகிற இடம் இது.அதுதான் கொஞ்சம் அவதானமாய் என்ன ராசா................. B)

Link to comment
Share on other sites

அண்ணா குமாரசாமி,

உங்கள் வரவேற்புக்கு நன்றி. உங்களுடன் கள்ளுக் கொட்டிலுக்கு வந்து வாழ்க்கையின் தத்துவங்களை அறிய முடியாமைக்கு எனது மன வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனென்றால், குடிக்காண்மையை(கள்ளுண்ணாமை) நான் ஒரு கொள்கையாக பின்பற்றி வருகின்றேன். (அதற்காக குடிப்பவர்களை நான் குறைத்து மதிப்பதாக விளங்கிக் கொள்ள வேண்டாம்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருமையா மாப்பிளை வாரும்.வந்தவுடனேயே உம்மடை சரித்திரம் எல்லாம் சொல்லிப்போட்டீர்.நல்ல விசயம் கண்டியோ.அது சரி தண்ணி கிண்ணி அடிக்கிறபழக்கம் இருக்கோ?ஏனெண்டால் குமர்ப்பிள்ளையளும் நடமாடுகிற இடம் இது.அதுதான் கொஞ்சம் அவதானமாய் என்ன ராசா................. B)

ஏனுங்கோ குமாரசாமி சார் அதுதான் நீங்க களப்பக்கம் வராமல் காணமல் போறிங்களா

Link to comment
Share on other sites

அன்புள்ள சுட்டி,

என்னை மாமா என்று கூப்பிட்டு வரவேற்றதற்கு மிகவும் நன்றி! ஆமாம், நீங்கள் மருமகனா அல்லது மருமகளா? எனக்கு நிறைய மருமக்கள் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் , மாப்பிள்ளை. மிக நிண்ட அறிமுகம். யாரும் இவ்வறு நீண்ட அறிமுகத்தை இதுவரை தந்ததில்லை.

உங்கள் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

குலகாடான்(அல்லது குளகாடான்?),

உங்கள் வரவேற்புக்கும், வாழ்த்துக்களிற்கும் மிகவும் நன்றி!

Link to comment
Share on other sites

வணக்கம் மாப்பிளே

நீண்ட அறிமுகத்துடன் வந்திருக்கிறியள் வாருங்கோ வரவேற்கிறம்.

Link to comment
Share on other sites

வணக்கம் மாப்பிள்ளை, அருமையான அறிமுகம்..வாருங்கள் வாருங்கள் :D

Link to comment
Share on other sites

அய்யா ஆதிவாசி,

உங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி! நீங்கள் உங்கள் காலில் விழுந்து ஒருவரும் ஆசீர்வாதம் வாங்கவில்லை என்று ஆதங்கத்துடன் "ஐயோ அம்மா அருள் புரியுங்க தாயே" தலைப்பில் எழுதியுள்ளீர்கள். இதோ உங்கள் முன் இந்த மாப்பிளை காலில் பணிந்து விழுந்து ஆசீர்வாதம் கேட்கின்றேன். என்னை எங்கே ஒருக்கால் வாழ்த்தி விடுங்கள் பார்க்கலாம்?

அடேய் மாப்ளே!

நாம ஒருக்காலால் வாழ்த்த முடியாதப்பா...

இரண்டு கைகள் இருக்கின்றன வாழ்த்துகிறேன். அப்பிடியே தொலைவில் நின்று பெற்றுக் கொள்ளுப்பா!(அண்மிக்கவிட்டா நமக்கெல்லே ஆபத்து) B)

Link to comment
Share on other sites

அய்யா ஆதிவாசி,

உங்கள் வரவேற்புக்கும், வாழ்த்துக்களிற்கும் மிகவும் நன்றி! (உங்களுக்கு பல கோடி புண்ணியம்! :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ மாப்பிள்ளை.என்ன வீட்டோட மாப்பிளையா :P எதுக்கம் ஒரு வணக்கம் சொல்லி வைப்போம். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை நீர் கொஞ்சம் விவரமான ஆள் போல இருக்கு! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.