Jump to content

நடை


Recommended Posts

எட்டுமணிக்கு முந்திய காலைப்பொழுது. தினம் விரியும் காட்சிகள் அப்படியே விரிந்து கொண்டிருக்கின்றன. பத்து நிமிட நடையில் மூன்று நடைபாதை நித்திரைகொள்ளிகள். காட்டுக்குள் காட்டெருமைகள் குழாமாய் நீரிற்கு ஓடுவதைப்போல் அலுவலகம் நோக்கி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நடைபாதை நித்திரைகொள்ளிகளை மிதித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் மேற்படி மூன்று இடங்களிலும்; காட்டருவி கிளையாய்ப் பிரிந்து பின் மறுபடி சேர்ந்து ஓடுவதைப்போல அலுவலக பயணிகள் விலகி இணைந்து நடந்து கொண்டிருந்தார்கள். நடைபாதை மனிதரை மிதித்துவிடக்கூடாது என்ற சிரத்தையில் நமக்கு அழுக்காகுமோ என்ற கவனமும் அவர்களிற்குள்ளாக இருந்ததாகவே பட்டது. அழுக்கு எனும்போது அது மனவெளியில் நடைபாதை மனிதன் சித்தரிக்கும் அந்தஸ்த்து இழப்பு சார்ந்து நிகழும் பயங்களுமாக இருக்கக்கூடும். 

ஒரு குழந்தையினை வளர்ப்பதற்கு ஒரு கிராமம் தேவை என்பது நடைமுறையாகையில், நடைபாதைக்கு வரும் ஒரு மனிதனின் கிராமம் தொலைந்தமை உணரப்படுவது உழைச்சல் தருகிறது. சிங்கம் கடிக்கையில் மல்லுக்கு நின்று ஒருவாறு சிங்கத்தை வென்று தப்பி வந்ததால் காட்டெருமைக்கு உயிர் இன்னமும் இருக்கிறது. ஆனால், நீருக்கு ஒடும் குழாத்தோடு சேர்ந்து தானும் ஓட வலுவில்லை. அங்கங்கு வெளித்தெரியும் சில ரணங்கள். தெரியாது பல ரணங்கள். மூசியபடி மாடு நகராது நிற்கிறது.

—-

மதியம் மனிதர்கள் மீண்டும் தெருவிற்கு வந்துவிடுகிறார்கள். கட்டிடங்களிற்குள் இருப்பதற்காய் நாளாந்தம் மல்லுக்கட்டும் மனிதன் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திறந்தவெளிக்கே ஓடிக்கொண்டிருக்கிறான். ஒரு மணிநேரத்திற்குப் பொருத்தமான நடைபாதையினை மனத்தில் ஏற்றிவிட்டுக் கால்கலைள இயல்பாய் விடுகிறேன். 

ஒரு தெருவிளக்கின் மாற்றம் பார்த்துச் சந்தியில் நிற்கையில் ஒரு மனிதன் வந்து பக்கத்தில் நின்று முகம்பார்க்கிறான். முறுவலி;க்கிறான் பின் நகர்ந்துசெல்கிறான். காலையில் பயணத்தின் போது ஒலித்திருந்த வானொலியில் எதிர்பார்க்காச் செவ்வி ஒன்று வந்து போயிருந்தது. ஏறத்தாள இருபது வருடங்கள் முன்னர் ஒரு அகால மரணத்தோடு துண்டிக்கப்பட்ட வாழ்வின் ஒரு கூறு வானொலி ஊடு பேசிச்சென்றிருந்தது. தெருவில் சிரித்த மனிதனிற்கும் வானொலியில் வந்துபோன கூறிற்கும் சம்பந்தம் ஏதுமிருந்தால் அது நானறியாதது. எனினும் அன்றைய நாளிற்கு அந்த இரண்டும் பின்னணி இசையினை வழங்கியதாய்ப்பட்டது. ஒன்று முன்னறிமுகமற்றது மற்றையது அறிந்து பிரிந்தது. இரண்டும் என்னிடம் பேசின. இரண்டுமே தாம் பேசியது எனக்குக் கேட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளத் தேவையற்றனவாய், தமது பேச்சை நானும் கேட்கிறேன் என்ற பிரஞ்ஞையே அற்றவர்களாகப் பேசிச்சொன்றன. இரு பேச்சும் எனக்குள் பதிந்து விரிந்தன.

எட்டுக்கோடியினை அண்மிக்கும் மனிதர் தொகையில் முகங்கள் அதிகமாகிவிட்டன. புறாக்கூட்டம் போன்று மனிதக்கூட்டம். முகங்களைப் பார்ப்பதற்கும் புரிவதற்கும் அவகாசமில்லை. பிரபஞ்சத்தில் வேறேதும் உயிரனங்கள் உள்ளனவா என்பதைத் தேடியலைகிறான் மனிதன். பக்கத்தில் நிற்பவன் பேசுவதையே கேட்கமுடியாதவனிற்குப் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருந்து இனம்புரியாக் கதைகள் வரின் அது புரியும் என்ற நம்பிக்கை அவன் கண்டுபிடித்து வைத்திருக்கும் கருவிகளின் சக்த்தியின் நம்பிக்கையால் மட்டும் பிறக்கிறது. சுற்றுலாக்களிற்குச்; செல்பவன் கூட கருவிகளில் காட்சிகளைப் பதிந்து செல்ல நினைக்கிறானே அன்றி மனிதனாய் ஒரு காட்சியை வாங்கி விரிய மறந்துபோகிறான். நடைபாதை நித்திரைகொள்ளிகள் வயதுவேறுபாடின்றி உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

காதிற்குக் கேட்காத கதைகளையும் உடல் உள்வாங்கிக்கொண்டே இருக்கிறது. அலைவரிசைகள் ஏராளம் ஏதேதோ கதைபேசியபடி அதிர்ந்திருக்கின்றன. கேட்பதற்கு நாதியற்றவனாய் மனிதன் கருவிகளிடம் சரணாகதியாகி வாழாதிருக்கிறான். அதனால் பொழுதைப்போக்கச் சிரமப்பட்டவனாய் போதையினை வேலை வடிவிலோ வேறேதின் வடிவிலோ தேடியலைந்துகொண்டிருக்கிறான்.


நோர்வேயின் ஒன்டால்ஸ்னஸ் பிரதேசத்தின் ற்றோல்ஸ்ற்றீகன் மலையில் ஏறிக்கொண்டிருக்கிறேன். மலையேறுவதைக் கயிறுகளோடும், படிகளோடும் மட்டும் நினைத்திருந்த எனக்கு, கரடுமுரடான பாறாங்கற்களிலும், சிறுசெடிகளும் கூளாங்கலும் எனச் சறுக்கும் மலையில் பாதுகாப்பு ஏதுமின்றி, உருண்டு விழுந்தால் இறப்பு நிச்சயம் என ஏறிக்கொண்டிருந்தமை மனதைக் குவியப்படுத்தியது. மூச்சுவாங்கியது. ஒரு மணிநேரம் ஏறி ஒரு தற்காலிக சமாந்தரத்தை அடைந்தபோது அங்கு செம்மரி ஆடுகள் மேய்ந்து நின்றன. அதுவரை குளிர்மட்டும் தெரிந்த மனதிற்குள் குளிர்ச்சி பிறந்தது. ஆடுகளைப் பிரிய மனமின்றிப் பிரிந்து இன்னமும் இருமணிநேரம் ஏறியபோது மேலும் ஒரு தற்காலிக சமாந்தரம் ஆனால் பெரிய நிலப்பரப்பு. மலை இன்னமும் உயர்ந்துகொண்டிருந்தது. தற்காலிக சமாந்தரத்தில் பனி இருந்தது. 
ஒரு பெரிய குளம் இருந்தது. சுத்தமான காற்றுப் போதையேற்றியது. பாறாங்கல்லில் பூ இருந்தது. வானம் தெளிவாய் இருக்க, சுற்றிப் பார்த்தபோது நான் சந்திரனில் நிற்கின் இப்படி இருக்குமோ என்று தோன்றியது. சந்திரனில் பூபும் செம்மரியும் இருப்பதாய்ச் சொல்லவில்லை மனிதன் அமைத்த கட்டிடம் ஒன்று கூட இல்லை. மலைக்கு மனிதன் வந்து போனதால் நிகழ்ந்த மாற்றமின்றிப் பிறவனைத்தும் இம்மலையில் இயற்கைக்பிரகாரமிருந்தன. மலை என் கர்வங்களை உடைத்துப் பணிய வைத்தது. மனமாரப் பணிந்து நிற்கையில் எழும் பிரமாண்டம் கட்டற்றது. மலைக்குத் தியானம் செய்யப் போகும் கதைகளை ஏராளம் கேட்டதுண்டு. மலைக்கு வந்தால் பின் தனியாகத் தியானம் செய்ய எவரிற்கும் தோன்றாது. மலையே தியானம்.

எற்றுவால் வெற்றிக் கோபுரத்தின் உச்சியில் நின்று பாரீசைப் பார்த்து நிற்கிறேன். இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது பாரீசில் இருந்து மாமா அனுப்பிய போஸ்ற்காட்டில் இருந்த படத்தை அப்படியே நேரே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மணிநேரம் தொலைந்தது தெரியாது தொலைந்து போகிறது. ச்சாஸ் அலிசேயில் மனித வெள்ளத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு கபேயில் அமர்;ந்து கோப்பியைப் பருகிக்கொண்டு மணிக்கணக்கில் மனிதரைப் பார்க்கிறேன். எத்தனை ஆனந்தம் முகங்களில். எத்தனை பேச்சுக்கள். நோற்றடாம் தேவாலயத்தின் பிரமிப்பில் இருந்து மீழ்வதற்காய் சீன் நதியோரம் சென்று அமர்ந்துகொள்கிறேன். இருமணிநேரம் கரைந்தது தெரியாது கரைந்து போகிறது. உறங்கி எழுந்து பதினான்காம் லூயி தொட்டு நெப்போலியன் வரை நடந்து திரிந்த வேர்சாய் கோட்டையில் தொலைந்து போகிறேன். ஒரு நாள் கரைந்து போகிறது. 'பாணில்லை என்றால் கேக்கை உண்ணட்டுமே' என்று சொன்ன மேரி அன்ற்றுனற் வாழ்ந்த அரண்மனையினைப் பார்க்கவேண்டும் என்று பட்டதால் சென்று நின்று அவள் எப்படி அதைச் சொல்லியிருப்பாள் என நினைப் பார்த்துக் கொண்டேன். ல்லூவ் அருங்காட்சியகம் முழுவதும் சரித்திரம் நேரக்குடுவையில் வைத்து என்னை அழைத்துத் திரிந்தது. போதை இறங்கும் என நினைத்து ற்றூவலறீஸ் பூங்காவிற்குள்ளால் நடந்து கால்போன போக்கில் திரிந்து பாரீசை அணுவணுவாய் ரசிக்கிறேன். போதை ஏறிக்கொண்டேயிருக்கிறது.

பாரீசின் வெள்ளையன் பாதைகளில் திரிந்துகொண்டிருக்கையில் தமிழன் தொணதொணத்தான். லாசப்பல் சென்றேன். ஆசியாவிற்கு வெளியே அதிக தமிழர் வாழும் கனடாவில் வாழும் எனக்கும் கூட லாசப்பல் ஊரைக் காட்டத் தவறவில்லை. நடந்து திரிந்தபடி அப்பக்கடைக்கு முன்னால் இருந்த பாரத் கபே என்ற தமிழ் உணவகத்திற்குள் நுழைந்தேன். அருமையான சாப்பாடு, அற்புதனமான உபசரிப்பு. மகிழ்வாய் எழுகையில், பரிமாறியவர், இதற்கு முன் நான அறிந்திராதவர் வந்து 'சாப்பிட்டாச்சா, சந்தோசம். போட்டுவாங்கோ' என்றோர். எத்தைனையோ தேசங்களில் எத்தனையோ உணவகங்களைக் கடந்து எனக்குள் மேற்படி வாசகம் நெகிழ்தலைப் பரப்பியது. அடையாளம் சார்ந்து நினைக்கத் தோன்றியது. அறிந்தவர் தெரிந்தவரை எல்லாம் பாரீஸ் போனால் பாரத் கபேக்குப் போங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

மனதில் ஏற்றிய பாதையின் ஒரு மணிநேர முடிவாய்க் கால்கள் அலுவலகத்தை அண்மித்தன. நோர்வேயின் மலைகளில், பாரீசின் வனப்பில் அலைந்த எனது மனநிலைகளை அப்படியே ரொறன்ரோவின் மத்தியில் நடந்துகொண்டிருந்தபடி அள்ளிப் பருக முடிந்தமை புத்துணர்ச்சி தந்தன. காலையில் கேட்ட வானொலிச் செவ்வியின் பேச்சு, சந்தியில் நின்று பார்த்துக் கடந்து போன மனிதனின் பேச்சு, நடைபாதை நித்திரைகொள்ளிகளைக் கடந்து போன மனிதரின் பயங்கள், உலகெங்கும் எனக்குள் பதிந்த பதிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாக ஆனால் தனித்தனித் தெளிவாக நாடுகளின் எல்லைகளைத் தாண்டி உணரமுடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Innumoruvan said:

பாரீசின் வெள்ளையன் பாதைகளில் திரிந்துகொண்டிருக்கையில் தமிழன் தொணதொணத்தான். லாசப்பல் சென்றேன். ஆசியாவிற்கு வெளியே அதிக தமிழர் வாழும் கனடாவில் வாழும் எனக்கும் கூட லாசப்பல் ஊரைக் காட்டத் தவறவில்லை. நடந்து திரிந்தபடி அப்பக்கடைக்கு முன்னால் இருந்த பாரத் கபே என்ற தமிழ் உணவகத்திற்குள் நுழைந்தேன். அருமையான சாப்பாடு, அற்புதனமான உபசரிப்பு. மகிழ்வாய் எழுகையில், பரிமாறியவர், இதற்கு முன் நான அறிந்திராதவர் வந்து 'சாப்பிட்டாச்சா, சந்தோசம். போட்டுவாங்கோ' என்றோர். எத்தைனையோ தேசங்களில் எத்தனையோ உணவகங்களைக் கடந்து எனக்குள் மேற்படி வாசகம் நெகிழ்தலைப் பரப்பியது. அடையாளம் சார்ந்து நினைக்கத் தோன்றியது. அறிந்தவர் தெரிந்தவரை எல்லாம் பாரீஸ் போனால் பாரத் கபேக்குப் போங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு தொலைபேசி  எடுத்திருந்தால்

ஓடி வந்திருப்பேன்

கடை முதலாளிமார் எனது உறவுகள்தான்

இதை நிச்சயம் அவர்களுக்கு காட்டுவேன்.

நன்றி விளம்பரத்துக்கும் கதைக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் ஜரோப்பா டூர் வந்து போயிருக்கார் போல.பரத் கபேயை ரொம்பத் தான் புகழுகிறார்.கொஞ்ச காலத்திற்கு முன்பு பிரான்சில் இருப்பவர்கள் சொன்னார்கள் அந்த உண்வகத்தினர் தமிழாட்கள் போனால் வடிவாய் கவனிக்க மாட்டினமாம் என்று ஒரு வேளை இன்னுமொருவனைப் பார்த்தால்...

பி.கு; முகத்தை ஒருத்தருக்கும் காட்டாதீங்கோ.காட்டினால் தில் குறைந்து விடும். அனுபவ பதிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

இன்னுமொருவன் எங்கெல்லாமோ சுற்றியலைந்து வந்து பரத் கபேயில் ஒரு மனிதனைக் கண்டு களித்தார். அழகான அனுபவக் கதை, கதை கவிதை வடிவிலும் வடிந்து கருத்தைக் கவருகிறது. வாழ்த்துக்கள்!! 

Link to comment
Share on other sites

நன்றி விசுகு, ரதி, புங்கையூரான் மற்றும் பான்ச் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

நண்பர் எண்ணிக்கை வைத்துப் பார்க்கையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் வகை தான் என்னையும் உள்ளடக்கும். ஆத்மார்த்தமற்ற உறவுகளில் நேரம் செலவிடுவதில்லை. வுhழ்வில் இரண்டே நண்பர்கள் தான். ஒருவர் அகாலமான காலகட்டத்தில் தான் இரண்டாவது நட்புக் கிடைத்தது. எனவே ஒரே ஒரு நட்பு தான் வாழ்வில் இருந்திருக்கிறது. ஏகப்பட்ட தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நட்பு என்பது ஒன்று தான்.

பொதுவில் பிற இடங்களிற்குச் செல்லும் போது ஹோட்டலில் நிற்பது தான் வழமை. இம்முறை என்னைச் சற்று மாற்றவேண்டும் என்ற முயற்சியில் உறவுக்காரர்--ஆனால் நான் இதற்குமுன்னர் சந்தித்திராதவர்-வீட்டில் நின்றேன். நான் வெளியே கிழம்பித் திரிந்த நேரங்கள் போக அவர்கள் வீட்டில் நின்றபோது, உண்மையிலேயே நெகிழச்செய்து விட்டார்கள். இதற்கு முன்னால் நான் பார்த்தே இராதவர்கள நான் கிழம்பும்போது ஏதோ சிறுபராயம் முதல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் போன்றதொரு அன்னியோன்னியத்தை உணரவைத்துவிட்டார்கள். 

வட அமெரிக்க வாழ்வு முறைக்கும் ஐரோப்பாவிற்கும் நிறையவே வித்தியாசங்களை உணர முடிந்தது (இது பற்றி ஒரு பதிவு போட நினைத்து பின் விட்டுவிட்டேன்). ஈழத்தில் பதின்ம வயதில் விட்டுப் பிரிந்த நடைமுறைகள் ஐரோப்பாவில் மீளக் காணமுடிந்தது (ஈழத்தைக் காட்டிலும் வட அமெரிக்காவில் நிலமை வெகு சிறப்பாக உள்ளது—எனது அபிப்பிராயம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மனிதர்களை அவதானிப்பது ஒரு பொழுதுபோக்கு. இலண்டனில் உள்ள பிரபலமான trafalgar சதுக்கத்தில் இருந்து விதவிதமான மனிதர்களை பார்ப்பது பிடிக்கும். எனினும் இதனை என்னுடன் வேலை செய்த பின்லாந்துக்காரன் ஒருவனுக்கு ஒருமுறை சொன்னபோது ஒரு மாதிரியாகப் பார்த்தான்!

இலண்டனில் இருந்தாலும் பாரிஸ் வீதிகளில் நடப்பதுதான் பிடித்தமானது. இன்னுமொருவனின் அனுபவம் எழுத்தில் மிகவும் அழகாக வந்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.