Jump to content

பதவிப் போட்டியினால் பிளவடையும் கெல உறுமய


Recommended Posts

சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவியை யார் ஏற்றுக்கொள்வது என்ற பிரச்சினையால் ஜாதிக கெல உறுமயவிற்குள் பாரிய விரிசல் வீழ்ந்துள்ளது.

அரசிற்கு ஆதரவு வழங்குவதற்கு பதிலாக அரசினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவி தொடர்பாக கெல உறுமயவின் சோபித தேரர், ரத்தன தேரர், சம்பிக்க ரணவக்க, உதய கமன்பில ஆகியோரைக் கொண்ட குழு, அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபச்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இந்த சந்திப்பில் கலாச்சார அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசு சம்மதித்திருந்தது. அதனை ரத்தன தேரர் ஏற்றுக்கொண்ட வேளை ஏனைய மூன்று உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

பின்னர் சோபித தேரர், ரணவக்க, கமன்பில ஆகியோர் இயற்கை வளத்துறை அமைச்சுப் பொறுப்பை தரும்படி அரசை கேட்டிருந்தனர்.

அரசு, அந்த அமைச்சுப் பொறுப்பில் இருந்து எண்ணெய் அகழ்வுத்துறையை நீக்கிவிட்டு வழங்குவதற்கு சம்மதித்தது. இந்த தீர்மானம் ரத்தன தேரர் அற்ற சமயத்தில் எடுக்கப்பட்டதுடன் ரணவக்க அந்த பொறுப்பை ஏற்கவும் தீர்மானிக்கப்பட்டது.

சம்பிக்க ரணவக்க, சோபித தேரரின் பதவி விலகலை தொடர்ந்து தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றவர் என்பதால் இந்த தீர்மானத்தை ரத்தன தேரர் கடுமையாக எதிர்த்தார்.

ஆனால் இயற்கை வளத்துறை அமைச்சுப் பதவி கிடைக்காது விட்டால் கலாச்சார அமைச்சுப் பதவிக்கு சோபித தேரரை நியமிக்கும் படி ரணவக்க மற்றும் கமன்பில ஆகியோர் கட்சிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த இழுபறி நிலையில் ரணவக்கவின் நாடாளுமன்ற பிரவேசமும் கெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுவால் தடுக்கப்பட்டள்ளது.

இந்த விவகாரம் எந்த அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்க முடியாத வகையில் கட்சியில் பாரிய பிளவை எற்படுத்தியுள்ளது. எனினும் அமைச்சுப் பொறுப்பை அரசு தருமானால் தானே அதற்கான பிரதிநிதி என கெல உறுமயாவின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ரத்தன தேரர் கட்சி உறுப்பினர்களுக்கு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.eelampage.com/?cn=30574

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.