Jump to content

நூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல்

 

 

 

 

‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் முன்வைப்பதில் ஆளுக்காள் இதுவரைக்கும் சளைக்கவுமில்லை; இன்னமும் களைக்கவுமில்லை. எது எவ்வாறாயினும், நந்திக்கடலில் நடந்துமுடிந்த அவலத்தின் காரணங்களை ஒரு சாமானியனின் நோக்கில், நறுக்கென்று சொல்லிவிடும் சாமர்த்தியம், நான்கே நான்கெழுத்து வார்த்தை ஒன்றிடம் உண்டு. அதுதான் ‘துரோகம்!’

துரோகத்தின் ஒட்டுமொத்த விளைச்சலான முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஈழப்போரினால், ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களுக்கு இன்னல்களைத் தவிர இலாபமேதும் கிட்டியதில்லை. ஆயினும் இப்போரின் மூலமாக ஒருசில நல்ல இலக்கியங்களாவது வந்து கிடைத்திருக்கின்றனவே என எண்ணி ஓரளவு மனதைச் சமாதானப் படுத்திக்கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட காலம்வரை இருபக்கச் சமச்சீர்க் கொடுக்குப் பிடிகளுக்கிடையிலிருந்து இலக்கியம் படைக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலருக்கும் இருந்து வந்தது. ஒருபக்கக் கெடுபிடிகள் ஓய்ந்து தளர்ந்துள்ள போதிலும், மறுபக்க அச்சுறுத்தல்கள் முற்றாக மறைந்தமைக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், தமிழிலக்கிய வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், போரிலக்கியத்திற்குப் புதியதொரு பரிமாணம் ஈழப்போரினால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மையைத் தமிழிலக்கியத் துறைசார் விற்பன்னர்கள், விமர்சகர்கள் பலரும் ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். இத்தகையதொரு பின்னணியிலேயே சமகால ஈழத் தமிழிலக்கிய முன்னோடிகளுள் ஒருவராக மதிக்கப்படும் அமரர் செங்கை ஆழியான் அவர்களது போர்க்காலப் படைப்பான ’விடியலைத் தேடி’ எனும் நாவலை அணுக விழைகிறேன். 2011இல் எழுதப்பட்ட, 67 பக்கங்களைக் கொண்ட இந்நாவல் குறித்து – “ ‘விடியலைத் தேடி’ என்ற இச்சிறு நாவல் தமிழரின் சமகாலத்தைச் சித்தரிக்கும் ஓர் அரசியல் கதையாகும்” என்று தமது முன்னுரையை செங்கை ஆழியான் ஆரம்பிக்கிறார். அதனைத் தொடர்ந்து, சுதந்திரத்தின் பின்னரான பொன் இராமநாதன், பொன் அருணாசலம் போன்றோரது இணக்க அரசியலும், ஜி.ஜி. பொன்னம்பலம், சி. சுந்தரலிங்கம் போன்றோரது இணக்கமும் பிணக்கமும் இணைந்து-பிணைந்த அரசியலும், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோரது அஹிம்சை அரசியலும், ஆயுதம் ஏந்திய பிரபாகரன் குழுவினரின் ஆயுதப் போராட்ட அரசியலும் பேரினவாதத்திற்கெதிராகப் போராடிப் பூஜ்யமான கதையைச் சொல்லிச் செல்லும் அவர், “இன்று மீண்டும் அன்றைய ஆரம்ப கட்டத்திற்கு வந்துள்ளோம். இவற்றை இந்த நாவல் பேசுகின்றது” என்றும், “நம்பி ஏமாந்த தமிழினத்தின் சோக வரலாற்றை இந்த நாவல் ஆவணப்படுத்துகின்றது” என்றும் அந்த முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மன்னார் மாவட்ட மாந்தைப் பட்டினத்தின் முண்டைப்பிட்டிக்கும் வெள்ளாங்குளத்துக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள பாலியாற்றங்கரையில் அமைந்திருக்கும் சுங்கன்குழி கிராமத்திலிருந்தே இந்நாவல் சூல்கொள்ள ஆரம்பிக்கிறது. அமைதியும் அழகும் நிறைந்த சிறியதொரு கிராமம், அது. மொத்தம் சுமார் 56 பேரைக் கொண்ட, எட்டே எட்டுக் குடும்பங்கள்தான் அங்கு வசிக்கின்றன. கிராமத்தின் தலைமகனான அம்பலவாணரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைக் கொண்ட நாலு குடும்பங்கள்; மிகுதி நான்கும் அவரது உறவினர்களது குடும்பங்கள். தந்தைவழிச் சமூகத்தின் அச்சொட்டான உதாரணமாகத் திகழும் சுங்கன்குழியில் அம்பலவாணர் வைத்ததுதான் சட்டம். அவரது சம்மதமின்றி அயலிலுள்ள ஒரு சின்ன ஆட்டுக் குட்டியும் அங்கு சத்தமிட முடியாது!

இராணுவத்தின் ஆக்குரோஷம் மிக்க பன்முனைத் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் விடுதலைப்புலிகள் பின்வாங்க ஆரம்பித்தபோது, “பொடியள் செப்பமாக அடிச்சு விரட்டி விடுவான்கள்” என்ற அம்பலவாணரின் உறுதியான நம்பிக்கை சிதைந்துபோகிறது. முழுச் சுங்கன்குழி கிராமமும் அவரது முன்நடத்தலுடன் பூநகரியை நோக்கி இடம்பெயர்கிறது. பின்னர் முரசுமோட்டைக்கும் அங்கிருந்து புதுக்குடியிருப்புக்கும், ஈற்றில் நந்திக்கடல் பகுதியின் கெப்பப்புலவுக்கும் போய்ச் சேர்ந்தபோது, அம்பலவாணர் தமது உறவினர்களில் 22 பேரைப் போருக்குப் பறிகொடுத்திருந்தார். பொடியளின் சாகசம் பொய்யாய்க் கனவாய்ப் போன தருணம், அவரது குடும்பத்தவர் 56 பேரில் 20 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இடையில் நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை, ஆறாத கவலையுடனும் தீராத வெஞ்சினத்துடனும் இந்த நாவல் விபரிக்கிறது! போரில் பொங்கிப் பெருகிய குருதியாற்றின் பாய்ச்சலுடன் கலந்திணைந்து, அம்பாலவாணரின் குடும்பக் கதையொன்றையும் நாவல் கூட்டியள்ளிச் செல்கிறது!

அம்பலவாணரின் பேரன் சசிதரன், விடுதலைப் புலிகளுடன் இணைந்து, கோண்டாவில் முகாமில் பத்திரிகை வெளியீட்டுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் சந்தித்த மரகதத்திடம் மனதைப் பறிகொடுக்கிறான். யாழ் குடாநாட்டின் மீதான ஆக்கிரமிப்பை இலங்கை இராணுவம் தீவிரப்படுத்தவே, வலிகாமம் முழுவதும் வன்னியை நோக்கி இடம்பெயர ஆரம்பிக்கிறது. மரகதமும் குடும்பத்தவர்களும் மூட்டை முடிச்சுக்களுடன், நாவற்குழிப் பாலம் கடந்து, கிளாலி ஊடாகக் கிளிநொச்சி சென்று, அங்கிருந்து திருவையாறு போய்ச்சேரும் அச்சம் மலிந்த பயணத்தைக் கிளைக் கதையாக இந்நாவல் கூறிச் செல்கிறது.

இயக்கத்தினரால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்ட மரகதம், ஒரு கட்டத்தில் இன விடுதலைக்காகத் தன்னைப் பூரணமாக அர்ப்பணிக்க முடிவெடுத்ததன் மூலம், சசிதரனின் சபலத்துக்கு முற்றுப் புள்ளி இடுகிறாள். கலா என்ற மாற்றுப் பெயருடன் இயக்கத்தில் உயர்பதவி பெறுகிறாள். “இன்றைக்கு நாங்கள் எல்லாத்திலும் இருக்கிறம். எதுவும் செய்யமுடியும். பெண்களின் மகத்தான சக்தியை நீங்க அறியவில்லை. எங்களால ஆக்கவும் அழிக்கவும் முடியும்… இலேசாக எண்ணிவிடாதையுங்கோ..” (பக். 17) எனும் வார்த்தைகள் மூலம் புதிய தலைமுறைப் பெண்களின் துணிச்சலையும் பரந்துபட்ட பார்வையையும் அவள் துல்லியமாக வெளிப்படுத்துகிறாள். சசிதரனை அவனது மாமி மகள் வசந்தியுடன் இணைத்து வைப்பதற்கென அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு உதவிய கலா, யுத்தத்தில் மடிந்து போகிறாள். ஓங்கி முழங்கிய விடுதலை யுத்தம், தற்காப்பு யுத்தமாகிப் பின்னர் உக்கிரமிழந்து ஒருபக்க இனவழிப்பாக உருவெடுக்கிறது. சரணாகதி வேண்டி வெள்ளைக் கொடியேந்தி வந்த விடுதலைப்புலி வீரர்களோடு சசிதரனும் சுட்டு வீழ்த்தப்படுகிறான். வரலாறு காணாத துன்பங்களையும் துரோகங்களையும் அழியாத கறைகளாகக் கொண்ட அத்தியாயம் ஒன்று, வன்னி மண்ணில் வரையப்படுகிறது. எஞ்சியிருந்த குடும்பத்தவர், உறவினருடன் மெனிக் ஃபார்ம் இடைத் தங்கல் முகாமில் சிலகாலம் தங்கியிருந்து, கடைசியில் மீண்டும் சுங்கன்குழி போய்ச் சேரும் அம்பலவாணரின் குடும்பத்துக்கு, அங்கொரு அதிர்ச்சி காத்துக்கிடப்பதாகக் கூறி, ‘விடியலை நோக்கி’ என்ற இந்த நாவல் முடிவுக்கு வருகிறது!

செங்கை ஆழியான் ஒரு புவியியலாளர். மேலும், அவர் ஓர் அரச நிர்வாகத்துறை அலுவலர். அந்தவகையில் வட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தவர். அவ்வப்பிரதேசங்களில் வதியும் மக்களது கிராமிய மொழி வழக்குகளும், வாழ்க்கை முறைகளும், உற்பத்தி உறவு முறைகளும், உணவு-உடை உள்ளடங்கலான பண்பாட்டு அம்சங்களும், புவியியல் சார்ந்த விபரணைகளும் அவரது நாவல்களில் மிக எளிமையாகவும் நுணுக்கமாகவும் அழகாகவும் சித்திரிக்கப்படுவதற்கு இவை பிரதான காரணங்கள். அம்பலவாணரது மூன்றாவது மகள் பாக்கியலட்சுமியின் கணவன் மருதநாயகம், சுங்கன்குழி கிராமத்திற்குப் பின்னாலுள்ள பாலியாற்றங்கரையை அண்டியிருக்கும் அடர்ந்த காட்டுக்குள் வேட்டை நாயுடன் உடும்பு வேட்டைக்குச் செல்கின்ற காட்சி – வன்னிக் காட்டுப்புற ஆன்மாவைக் கையோடு காவிச் செல்கின்ற காட்சி – செங்கை ஆழியானுக்கே வாலாயமான நேரடி அனுபவ வார்ப்பு! இதுபோன்ற அனுகூலங்களுடன் கூடிய, அவரது ஆற்றலின் பலாபலன்களை வாசகர்கள் இந்நாவலின் பல இடங்களில் அனுபவிக்கலாம். 

சுமார் 50 நாவல்களை ஈழத்தமிழ் வாசகர்களுக்குத் தந்த பெருமைக்குரிய எழுத்தாளரான செங்கை ஆழியான், அன்றாட வாழ்வில் தாம் கண்டவற்றை உடனடியாகக் கதையாக்கும் வல்லபம் கொண்டவர். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் கைவராத கலை. ஆனால் இந்த வலிமை இவரை மேலோட்டமான மெல்லுணர்வுகளுக்கும் இலட்சியங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் ஒரு படைப்பாளி என்ற வகைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருந்தது. பங்காளராக இல்லாமல் பார்வையாளராக இருந்து இலக்கியம் படைக்கும் அவரது பல ஆக்கங்களில் சமூக முக்கியத்துவம் சமரசம் செய்யப்பட்டிருப்பதான ஒரு அபிப்பிராயம் பல விமர்சகர்கள் மத்தியில் நிலவி வந்துள்ளது. 
மேலும், செங்கை ஆழியான் தமது பல்கலைக்கழக நாட்களில் பேராசிரியர் கைலாசபதியிடம் கல்விகற்றதன் பயனாக, தமது எழுத்தூழியத்தின் ஆரம்ப காலத்தில் இடதுசாரிச் சிந்தனையால் கவரப்பட்டிருந்தார். ஆயினும், கடந்த நூற்றாண்டின் அறுபதுகளுக்குப் பின்னரான சுமார் 3 தசாப்தகாலமாக ஈழத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த முற்போக்கு அணியுடன் அவர் தம்மை இணைத்துக் கொண்டவரல்ல. அதேவேளை அவர் ஒரு தீவிரத் தமிழ்த் தேசியவாதியுமல்ல. பதிலாக, தமது சகோதரர் புதுமைலோலனின் பாதிப்புகள் காரணமாக, ஒரு மிதவாதத் தமிழ்த் தேசியவாதியாகவும் தமிழ்ப் பற்றாளனாகவும் தம்மை இனங்காட்டிக்கொண்ட அவர், பெரும்பாலும் யாழ் இலக்கிய வட்டத்தினருடனேயே தமது ஊடாட்டங்களை வைத்திருந்தார்.

இவ்வகையில் ஒரு சித்தாந்தச் சார்புநிலைப்பட்ட படைப்பாளியாக அவர் தம்மை மாற்றிக்கொள்ளாத போதிலும், தாம் வாழ்ந்த சமூகத்தில் கண்டவற்றை – கேட்டவற்றை – உணர்ந்தவற்றை யதார்த்தப் பண்புடன் கூடிய படைப்புக்களாக உருவாக்கினார். மிக நீண்ட காலமாகக் கதை சொல்லும் மரபாக இருந்துவரும் யதார்த்தவாத அடிப்படையிலேயே தமது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டார். யதார்த்தவாதத்தின் தொடர்ச்சியாக மேற்கிளம்பிய இயல்புவாத அல்லது நவீனத்துவ அல்லது பின்நவீனத்துவப் பண்புகள் எவற்றையும் தமது படைப்புகளில் அவர் ஒருபோதும் பரீட்சித்துப் பார்த்தவரல்ல. 

கல்கி, சாண்டில்யன், அகிலன், நா. பார்த்தசாரதி போன்ற தமிழக எழுத்தாளர்கள் எவ்வாறு மெல்லுணர்வுகளைத் தீண்டி, இலட்சிய வேட்கைகளை விதைத்து, ஒரு புதிய தலைமுறை வாசகர்களைத் தம்வசப்படுத்தினார்களோ, அவ்வாறே ஈழத்தில் ஒரு வாசகர் பரம்பரையைச் செங்கை ஆழியான் தமதாக்கி வைத்திருந்தார். காட்டாறு, வாடைக்காற்று, கிடுகுவேலி, இரவின் முடிவு போன்ற அவரது நாவல்கள் பல பரந்துபட்ட வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணம். அந்தவகையில், போர்க்கால வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு, அக்கால வாழ்க்கையை யதார்த்தப் பண்புகளுடன்கூடிய ஒரு படைப்பாக்கும் பணியினை ‘விடியலைத் தேடி’ நாவலூடாக அவர் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார். 

தான் வாழும் சமூகத்து மக்களுக்குத் தேவை என்று ஒரு படைப்பாளி கருதும் செய்தியைத் தனது படைப்பில் சொல்வதற்கு, அப்படைப்பாளிக்குப் பூரண சுதந்திரமும் உரிமையும் உண்டு. ஆயினும் இந்த உரிமையும் சுதந்திரமும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களுக்கு 2009 மே 18 வரை கிடைக்கவில்லை. அதன் பின்னர் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்ட படைப்பளிகளுள் செங்கை ஆழியானும் ஒருவராவார். விடுதலைப் புலிகளின் தோல்வியை வரவேற்று ‘ருத்திரதாண்டவம்’ என்னும் நாவலை 2012இல் அவர் எழுதியிருக்கின்றார். அதற்கு முன்னதாக 2011இல் விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டதுதான் ‘விடியலைத் தேடி.’ எனும் இந்த நாவல். பேரினவாத்திற்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்கள் யாவும் பூச்சியமாயின என்றும், அதற்கான முழுப் பொறுப்பும் விடுதலைப் புலிகளையே சாரும் என்றும் கூறும் செங்கை ஆழியான், தமது கண்டனங்களையும் அவற்றிற்கான காரணங்களையும் இந்நாவலில் அடுக்கிக்கொண்டே போகிறார். “எத்தனை சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அத்தனை பேச்சுவார்த்தைச் சந்தர்ப்பங்களையும் பிரபாகரனின் பிடிவாதம் வீணாக்கியது” (பக். 56) என்று வெளிப்படையாகக் கூறும் செங்கை ஆழியான், ஈழத்தில் தமிழ் பேசும் மக்களது ஒரு குறிப்பிட்டகால வாழ்வினை உண்மைத் தன்மையுடனும் நம்பகத் தன்மையுடனும் நாவலாக்கித் தரவேண்டும் என்ற வேட்கையுடன் இந்த நாவலை எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

Novellus என்ற இலத்தீன் சொல்லே ஆங்கிலத்தில் Novel ஆகியது. அதனைத் தமிழில் நாம் நாவல் என அழைக்கிறோம். Novellus என்பது இலத்தீன் மொழியில் ‘இளமையும் புதுமையும்’ எனப் பொருள்படும் ஒரு சொற்பதமாகும். செங்கை ஆழியானின் ‘விடியலைத் தேடி’ எனும் நாவலில் இப்பொருண்மை பெரிதும் எய்தப்பட்டதாகச் சொல்லமுடியாது. புதுமையான உருவகங்களோ படிமங்களோ இன்றி, ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக – நேர்கோட்டுத் தன்மை கொண்டதாக இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழ் இலக்கிய உலகில் இடம்பெறும் மிகச் சிறிய நாவல்களுள் ஒன்றான ‘விடியலைத் தேடி,’ சுங்கன்குழி கிராம மக்களது வாழ்வில் வீசிய காலச் சூறாவளியைச் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொல்லும் ஒரு புனைவு. இலங்கைவாழ் தமிழினத்தின் ஒரு குறிப்பிட்ட கால அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களின் முக்கியமான ஒரு பதிவு. தமிழர்தம் உரிமைகளை வென்றெடுக்கவென மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் பலவும் கைகூடாத நிலையில், ஆயுதப் பலத்தினைப் பிரயோகித்து அவ்வுரிமைகளைப் பறித்தெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் படுதோல்வியில் முடிந்தமைக்கான காரண காரியங்களைச் சொல்லும் கதை. அவ்வகையில், ஈழத் தமிழர்மீது திணிக்கப்பட்டுவந்த வாழ்வின் குரூரங்களை எதிர்த்துக் குரலெழுப்புவதற்குத் தேவையான ஆத்ம பலத்தையும் எழுத்தாற்றலையும் கொண்ட அமரர் செங்கை ஆழியானின் ‘விடிவைத் தேடி’ நாவலுக்கென்று, ஒரு வரலாற்றுப் பெறுமதியும் முக்கியத்துவமும் உண்டு என்பதையும், அவரது படைப்பிலக்கிய முயற்சியில் இந்நாவல் ஒரு முன்னோக்கிய பாய்ச்சல் என்பதையும் வாசகர்களால் எளிதில் இனங்கண்டுகொள்ள முடியும்!

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3530:2016-09-03-00-02-42&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.