Jump to content

ஜெமோவும் சமந்தாவும் - பரதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

August 6th 2016 .Saturday . யாழ்ப்பாணம் .
காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தோட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மோட்டார்சயிக்கில் வந்து நிற்கின்றது .
முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,
“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" .
நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .
காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .
“நம்பி ,என்னடா இந்த நேரம் ? “
“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் "
“ அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார் "
“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் "
“உனக்கு எப்ப நியுஸ் வந்தது "
“ தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம் .பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம் "
“ உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல "
“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல்
அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன "
மனைவியிடம் உமா இறந்த செய்தியை சொல்லிவிட்டு கோண்டாவில் சந்தியை நோக்கி இறைச்சி வாங்க சயிக்களை உழக்குகின்றான் வசந்தன் .
காலை காற்று முகத்தில் வீச பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வந்துபோகின்றது ,
வசந்தனுக்கு நம்பியுடன் தனக்கான உறவை நினைக்க வியப்பாக இருந்தது.
ஆறாம் வகுப்பில் உரும்பிராயில் ஒன்றாக படித்தது ,
பின் எட்டாம் வகுப்பில் யாழ் இந்துவில் படித்தது,
பின்னர் 80 ஆம் ஆண்டு பிரான்சில் சந்தித்து ஒன்றாக தண்ணி அடித்தது ,
84 ஆம் ஆண்டு தான் இயக்கத்தில் போய் சேர்ந்து புதுக்கோட்டை பயிற்சி முகாமிற்கு சென்ற போது நம்பி அங்கு கிணறு வெட்டிக்கொண்டு நின்றது ,
இயக்கத்தில் இருக்கும் போது முதல் முதல் நம்பியுடன் தான் களவாக "கீதாஞ்சலி ' படம் உதயம் தியேட்டரில் பார்த்தது,
இயக்கம் முரண்பாடுகளால் நிரம்பியிருந்த நேரம் ஓடி சென்ற தோழரை தேடி பம்பாயிற்கு வேறு சிலருடன் நம்பியை அனுப்பியதற்காக உமாவுடன் வாக்குவாதப்பட்டது
கடைசியில் இலங்கை -இந்திய ஒப்பந்தத்துடன் மற்றைய அமைப்புகளுக்கு கிடைத்த அதிகாரம் போல எதுவித பங்கும் அதில் கிடைக்காமல் இந்தியாவால் கைவிடப்பட்டு கப்பலில் உமா உட்பட அனைத்து உறுப்பினர்களும் மன்னாரில் இறக்கிவிடப்பட்ட போது நம்பியுடன் தான் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தான் வசந்தன் .
அதன் பின் அரசியலில் இருந்து ஒதுங்கிய வசந்தன் மக்கள் வங்கியில் வேலையும் எடுத்து ரேவதியை கல்யாணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தந்தையும் ஆகிவிட்டான் .
கிரேக்க கப்பலில் வேலை கிடைத்து நம்பியும் பத்துவருடங்கள் உலகம் எல்லாம் சுற்றி நல்ல பணத்துடன் நாடு திரும்பி ஊரெழுவில் செட்டிலாக்விட்டான் .
மன்னார், வவுனியாவில் இருந்து அரசியல் செய்த அவன் சார்ந்த அமைப்பு இரண்டு தடவைகள் மட்டும் சில உறுப்பினர்களை வெல்லவைத்தது .அதன் பின் உமாவும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் .
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை முதல் இரண்டு தடவைகளும் திலீபன் தலைமையிலான புலிகளின் அரசியல் கட்சியாலும் பின்னர் மூன்று தடவைகள் மாவையின் தலைமையிலான கூட்டணியாலும் ஆட்சி செய்யப்பட்டு கடைசியாக நடந்த தேர்தலில் மீண்டும் புலிகளின் அரசியல் கட்சி வெற்றியடைந்ததால் நம்பியின் கடைசி தம்பி திலீபன் தான் இப்போ மாகாண முதலமைச்சர் .

August 6 2016 Friday . Toronto
வெள்ளிகிழமை வேலைமுடிய வீடு திரும்பும் சந்தோசமே தனிதான் என்று மனதில் நினைத்தபடி காரை கராஜில் தரித்துவிட்டு வீட்டுக்கதவைத்திறந்தால் ,
“என்னப்பா இப்படி வெய்யில் விடாமல் அடிக்குது "
சமையலறையில் இருந்தபடியே மனைவியின் குரல் வருது .
தோட்டத்திற்கு தண்ணி அடிக்கசொல்லி மனுசி சொல்லாமல் சொல்லுது, உண்மையில் விடாமல் ஒருமாதமாக அடிக்கும் இந்த வெய்யில் டொராண்டோவிற்கு புதிதுதான் .
“அப்பா பிளீஸ் சாப்பிட்டிட்டு விட்டு கணணி முன் குந்தியிருந்து அவனவன் வேலை வெட்டி இல்லாமல் எழுதும் பதிவுகளுக்கு ஒரு விரலால் கீபோர்டை குத்திக்கொண்டு இருக்காமல் ஒரு நடை போட்டுவந்து தோட்டத்திற்கு தண்ணியை அடியுங்கோ "
மனுசிக்கு தெரியும் கணணி முன் குந்தினால் வசந்தன்அ சையமாட்டார் என்று, எனவே வாரவிடுமுறையை சண்டையுடன் தொடங்காமல் மனுசி சொல்வதை கேட்பம் என்று நல்ல பிள்ளையாக அனைத்து அலுவல்களையும் முடித்துவிட்டு கணணி முன் வந்து குந்துகின்றான் வசந்தன் .
முப்பது வருடங்களுக்கு முதல் கனடா வந்த வசந்தன் வாழ்கையில் ஓரளவு செட்டிலாகிவிட்டான் .இரண்டு வளர்ந்த பெடியங்கள் மூத்தவன் ஆதவன் படிப்பை முடித்துவிட்டு வேலைசெய்கின்றான் சின்னவன் பிரணவன் பல்கலைக் கழகத்தில் கடைசி வருடம் படிக்கின்றான் . மனைவி ரேவதி வேலை வீடு பிள்ளைகள் என்று வாழ்பவள் .
கனடா வந்த புதிதில் கணனிக்கும் வசந்தன் செய்யும் வேலைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லாததால் கணணியை கண்ணால் கண்டதுடன் சரி என்று இருந்தவனுக்கு தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் வேலையே நிரந்தராமக வைத்திருக்க அடிப்படை கணணி பற்றிய அறிவு தேவைப்பட்டது .
வேலைக்கு தேவை என்று கணணியை தொட்ட வசந்தன் இப்போ கணணியுடன் தான் வாழ்க்கை . கணனியில் அரசியல் ,விளையாட்டு ,சினிமா ,இலக்கியம் என்று மெல்ல மெல்ல வாசிக்க தொடங்கி இப்போ முகபுத்தகம் ,யுடியுப் ,டுவிட்டர் என்று ஒரே பிஸி .
பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் , தான் டிவி பார்க்கவும் நண்பிகளுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசவும் இடைஞ்சல் இல்லாமல் இருந்தால் காணும் என்று ரேவதியும் வசந்தனை தொந்தரவு செய்வதில்லை .
கணணி முன் குந்திய வசந்தன் முக புத்தகத்தை திறந்தால் பக்கம் பக்கமாக ஜெயமோகன் தடம் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி பற்றி திட்டி பதிவுகள்வ வந்துகொண்டேயிருக்க வசந்தனுக்கு வெறுப்பேறி விட்டது.
முகபுத்தகதை விட்டு வேறு தமிழ் இணையங்களுக்கு போனால் அங்கும் அதே பிரச்சனை தொடருது .
புலம்பெயந்த அநேக தமிழர்கள் போல வசந்தனுக்கும் இலங்கை அரசியல் என்றால் காணும், மணிகணக்காக அவனவன் எழுதும் கருத்துகளை வாசித்துக்கொண்டே இருப்பான் .விடுதலை என்று தொடங்கிய விடுதலை போராட்டம் திசை மாறி யுத்தம் வருடக்கணக்காக இழுபட்டு தமிழர்கள் வாழ்வில் அனைத்துவித நாசங்களையும் அந்த யுத்தம் செய்துவிட்டு போய்விட்டது என்று முற்றிலும் நம்புவவன் வசந்தன் .
தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று எவ்வளவு அழிவுகள் வந்தால் என்ன எவ்வளவு வருடங்கள் சென்றால் என்ன என்று கோர யுத்தத்தை ஆதரித்தவர்கள் யுத்தம் அவர்களின் எதிர்பாப்பை ஏமாற்றி தோல்வியில் முடிந்தபின் யுத்தம் விட்டுசென்ற அழிவுகளை மீள் கட்டியெழுப்புவதை விட்டு யுத்தம் தோற்றத்திற்கு இல்லாத காரணங்களை தேடுவதிலும் தம்முடன் உடன்படாதவர்களை திட்டி தீர்ப்பதிலுமே குறியாக இருப்பதை நினைத்து,
எதிர்பார்ப்புகள் சாத்தியமாகாமல் போகும் போது இவ்வாறு ஏற்படுவது மனித இயல்புதான் என்ற புரிதல் வசந்தனுக்கு இருந்தது .
இருந்தாலும் இந்த ஜெமோ விடயம் சற்று ஒவராகவே பட வெறுப்பின் உச்சத்திற்கு போய் மனுசியின் அண்ணர் ஜெர்மனியில் இருந்து கொண்டுவந்த கொனியாக்கை பச்சையாக அடித்துவிட்டு படுக்கபோய்விட்டான் .
கட்டை டெனிம் காற்சட்டையுடன் பட்டன் பூட்டாமல் திறந்துவிட்ட சேர்ட்டை நுனியில் முடிந்து விட்டபடி சமந்தா காலால் மண்ணை எத்தியபடி வசந்தனை நோக்கி வருகின்றார் . அட சமந்தா பாட்டுடன் வருகின்றார் என்ன பாட்டு என்று தெரிந்தால் சேர்ந்தேபாடலாம் என்று யோசிக்க
“என்னை நினைச்சோ நித்திரை வராமல் கிடந்து கட்டிலில் உருளுகின்றீர்கள் "
“அது போன வருடம் இப்ப கீர்த்தி சுரேஷ் என்று வாயில் வந்ததை மெல்ல முழுங்கிவிட்டு இல்லை சமந்தா இது வேற பிரச்சனை "
“அப்படி என்ன பிரச்சனை "
“முகபுத்தகத்தை சும்மா பிரட்டி பார்த்துவிட்டு படுக்க போவம் என்றால் அவனவன் வந்து ஜெமோ வை திட்டி முகப் புத்தகம் நிரம்பி வழியுது "
“ஜெமோ ? யார் அது ?”
“உங்கட ஆள்தான் ,கமலின்ரை பாபனாசம் படத்திற்கு வசனம் எழுதியவர் "
“ அவரை யார்? ஏன் திட்டுகின்றார்கள் "
"எங்கட ஆட்கள் தான் . இலங்கை தமிழர்கள் . படத்திற்கு வசனம் எழுதுவதை விட்டுவிட்டு எங்கட இனப்பிரச்சனைக்கு வசனம் எழுதினதால் வந்த பிரச்சனை "
“எனக்கு எதுவும் தெரியாது , முடிஞ்சா ஒரு பாட்டு சீனுக்கு உங்களோட ஆடலாம் "
“பாட்டு ஒண்டும் வேண்டாம் , நான் விடிய முகபுத்தத்தை திறந்தால் ஜெமோ பற்றிய பதிவு எனது கண்ணில படக்கூ டாது. அதுக்கு ஒரு உதவி செய்தால் காணும் "
“ம்ம்ம்ம்ம்ம் சொல்லுங்கோ "
“24 படத்தில சூர்யா உங்களை லவ் பண்ண ஒரு கடிகாரத்தை வைத்து நேரத்தை முன்னால பின்னால ஓடவிடுவார் அல்லோ அந்த கடிகாரத்தை சூரியாவிடம் இருந்து மெல்ல அடிச்சு கொண்டுவந்தா காணும் "
“அது என்னால ஏலாது ,வேணுமென்றால் என்ன நேரத்திற்கு மணிக் கூ ட்டை மாத்தவேண்டும் எண்டு சொல்லுங்கோ சூரியாவிற்கு தெரியாமல் மெல்ல மாத்திவிடுகின்றேன் . இது ஒருமுறை மட்டும் தான் எனவே நேரத்தை சரியா சொல்லுங்கோ "
“ஒரு செக்கன் நில்லுங்கோ சொல்லுறன் "
ஜெமோ எப்போ ஈழப்பிரச்சனையில் வாயை திறந்து முதன் முதலில் வாங்கி கட்டிகொண்டார் என்று யோசிக்க ,
இந்தியன் ஆமி இலங்கைக்கு போய் செய்த வெறியாட்டத்தை நியாயப்படுத்தியதுதான் நினைவு வருகின்றது வசந்ததனுக்கு ,
சிங்கள அரசு தமிழர்களுக்கு எதையும் தராது என்ற நிலை தொடர இலங்கைக்குள் தனது மூக்கை நுழைக்க சந்தர்ப்பம் பார்த்துகொண்டிருந்த இந்தியா இலங்கை தமிழர்களின் உரிமைக்காக என்று தமிழர்களை பகடைகாய்களாக்கி முதல் அடியை வைக்க முனைந்த அந்த காலகட்டம் . சிங்கள அரசு ஓரளவு அடிபணிந்த அந்த நேரம் தான் இலங்கை தமிழர்களுக்கான ஒரு விடிவும் கிடைத்திருக்கவேண்டிய காலம் அது .
1 - "On April 2nd., 1985 Customs officials seized a container as big as a train car that was unloaded from a ship at the Madras Port. When they examined it they were in for a rude shock. It contained at least 1,400 rifles of 1945 model, 300 sten guns, 5 wireless sets of Japanese origin and an electronic radio set with an amplifier. The Captain and the crew had no idea about the contents in the container, which had been marked "used newspapers". The arms bought for 3 lakhs US Dollars from a Taiwanese Arms agent were meant for the PLOT."
நேரத்தை மாற்றி இந்த ஆயுதங்களை பிடிபாடாமல் செய்யாலாமா ? ஏற்கனவே உள்முரண்பாடுகள் நிரம்பி வழியுது .ஆளுக்கு ஆள் சுடுபடுவது மாத்திரம் இல்லை மற்ற இயக்கங்களையும் அழிக்க முனைவார்கள் . இவர்களை நம்பி நேரத்தை மாற்ற சமந்தாவை கேட்க வேண்டாம் .
2- Thimpu Talks In July–August 1985
It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:
recognition of the Tamils of Ceylon as a nation
recognition of the existence of an identified homeland for the Tamils of Ceylon
recognition of the right of self determination of the Tamil nation
recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils of Ceylon
நேரத்தை பின் கொண்டுபோய் இந்த பேச்சுவார்த்தையை வெற்றிபெறவைக்கலாம் ஆனால் இது தமிழர்களுக்கான
தீர்வு இல்லை இது தமிழர்களுக்கான தீர்வின் அடிப்படை நியாயங்கள் மட்டுமே .இதன் பின்னரும் கூ ட இந்திய ஆர்மி இலங்கை செல்ல வேண்டி வந்திருக்கும் . இதுவும் வேண்டாம் .
3 - July 1987 Delhi
இலங்கை -இந்திய ஒப்பந்தம் தயார் .
சென்னையில் அனைத்து இயக்க பிரதிநிதிகள் ,கூ ட்டணி தலைவர்களுக்கு ஒப்பந்தந்ததின் சாரம் தனித்தனியே கொடுக்கப்படுகின்றது .அனைவரும் தமக்கு திருப்தி என்கின்றார்கள் .நாட்டில் இருக்கும் பிரபாகரன் ,சென்னையில் இறங்கி தமது பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு டெல்கியில் பாலசிங்கத்துடன் அசோகா கொட்டேலில் நிற்கின்றார் .இது இலங்கை -இந்திய ஒப்பந்தம் தங்கள் தரப்பு சம்பந்த படாத தீர்வு எதிலும் தனக்கு சம்மதம் இல்லை என்கின்றார் . எம்ஜிஆரை இந்திய தரப்பு டெல்கிக்கு வரவழை த்து பிரபாகரனை இணங்கவைக்க முயற்சித்தும் பிரபாகரன் தனது முடிவை மாத்த மறுத்துவிட்டார் . எவரது ஒப்புதல் பற்றியும் தனக்கு அக்கறையில்லை ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டு அமுலுக்கு வரும் என்று ராஜீவ் அறிவிக்கின்றார் .
இதுதான் சரியான நேரம் . 25 July 1987.
சமந்தாவிடம் வசந்தன் நேரத்தை சொன்னவுடனே சமந்தா மறைந்துவிட்டார் .
டெல்லி அசோகா கொட்டேல் லோபியில் இந்தியபிரதமர் ராஜீவ்காந்தி வலதுகையால் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் கையையும் இடது கையால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கையை உயர்தியபடியும் நிற்கின்றார் .
July 29 1987 வரலாற்று சிறப்பு மிக்க இலங்கை -இந்திய ஒப்பந்தம் இலங்கையில் கையெழுத்தாகின்றது .
பத்மநாதன் தலைமையில் பன்னிரெண்டு அங்கத்தவர்கள் கொண்ட வடக்கு -கிழக்கு இணைத்த ஒரே இடைகால நிர்வாகம் .
இரண்டு முஸ்லிம்களை உள்ளடக்கி ஏழு விடுதலைப்புலிகள் ,தமிழர் விடுதலை கூட்டணி மூன்று பேர்கள் .ஈ பி ஆர் எல் எப் இரண்டுபேர்கள் .
சரித்திர புகழ் பெற்ற வாக்குபதிவில் வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு மாகாணம் உருவாகின்றது .பிரபாகரனின் ஆசியுடன் அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபன் முதல்வர் ஆகின்றார் .
தமிழ் நாட்டில் இருந்து அனைத்து இயக்கங்களும் அகதிகளும் இலங்கைக்கு கப்பலில் அனுப்பபடுகின்றார்கள்

சமந்தா -என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா !!!

 
Parathan Navaratnam's photo.
Parathan Navaratnam's photo.
 

 

 

 

 

 

 

 

 

எழுத்து - பரதன்

மூலம் - பதிவு இணையம்

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் கண்டுபிடிச்சிட்டியள் tw_blush:

Link to comment
Share on other sites

செம கதை ஒன்று நீண்டநாளுக்குப் பிறகு, எங்க அர்ஜுன் அண்ணை 

கையை கொடுங்கோ 

Link to comment
Share on other sites

மேல  என்ன  எழுதி  இருக்கு  புரில்ல :rolleyes:

Link to comment
Share on other sites

18 hours ago, அஞ்சரன் said:

மேல  என்ன  எழுதி  இருக்கு  புரில்ல :rolleyes:

ஒரு அதிகார வர்க்கம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு மறு தரப்பை விளையாட்டுக்கு அழைத்தபோது, கையறு நிலையிலிருந்த மறு தரப்பு ஆட்டத்தை தொடர வேண்டிய நிப்பந்தத்தின் பொருட்டு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்குத் தள்ளப்படுக்குறது . பிரெஞ்சு தத்துவ மேதை Jean Baudrillard.

மேலே உள்ளதை நீங்களே பதிந்துவிட்டு....... அதற்கும் மேல் உள்ளது புரியவில்லை என்றால் எப்படி....... ???? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் ..... அந்தக் கடிகாரத்தை  3 , மாசி  1948 க்கு சுத்தி விட்டிருக்கலாம் ....., நாடும் நல்லா இருந்திருக்கும் ......!

நிஜம் தோய்ந்த கற்பனை நல்லாயிருக்கு சகோதரி....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை..

அதை வடித்த விதமும் அருமை

ஆனால் கருவில்...

இன்னும் 40 ஆண்டு கால கனவுலகிலிருந்து திரும்பாமை தெரிகிறது...

 

போராட்டம் என்றால் யாரோ வைத்துக்கொண்டு பிச்சை போடுவதற்கு தயாராக இருந்தது போலவும்

அதை போராளிகள் தான் தட்டிவிட்டது போலவும்

நாலு அரசியல் புத்தகம்

அத்துடன் சோறு...

இவற்றுடன் போராட்டம் வெல்லும் என்ற மாயை இன்றும் மாறியதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.