Jump to content

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்


Recommended Posts

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்

3legi_PTI.JPG

"ச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இது சட்டத்தின் வழிப்பட்ட தீர்ப்பல்ல. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின்  அடிப்படையில் தீர்ப்பு சொல்லாமல், குத்துமதிப்பாக, பஞ்சாயத்து  செய்வது போல் இத்தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. கர்நாடகாவின் நீலிக்கண்ணீரை கண்டு மனம் உருகி, தமிழ்நாட்டிற்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர்  தந்தால் போதும் என்ற ரீதியில் உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பு," என தமிழக விவசாயிகள் கவலைப்பட்டுக்கொண்டிருக்க... அந்த தண்ணீரை கூட திறந்து விடக்கூடாது என அடம்பிடிக்கிறது கர்நாடகா.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஆகஸ்ட் இறுதிக்குள் காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டிஎம்சி நீரை கர்நாடக அரசு வழங்காததையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் “தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி நீரை செப்டம்பர் 5ம் தேதி முதல் அடுத்த 10 தினங்களுக்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு காவிரியில் வினாடிக்கு 15,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளது.

1Pro_PTI.JPG

கர்நாடகாவில் பதற்றம்

தமிழகத்திற்கு சட்டப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நீரை நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றதற்காக  இரண்டு நாட்களாக பற்றி எரிந்துகொண்டிருக்கிறது கர்நாடகம்.  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்பதற்காக சாலை மறியல், கடையடைப்பு என  கர்நாடகத்தினர் கையிலெடுத்திருக்கும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பதவி விலக சொல்கிறார்கள்... தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கொளுத்துகிறார்கள்... பிரதமர் மோடிக்கு எதிராகவும் போராடுகிறார்கள்... உச்சநீதிமன்றத்தை சாடுகிறார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது துவங்கிய இந்த போராட்டம், தண்ணீர் திறப்பதாக அறிவித்ததில் உச்சம் பெற்றிருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினரும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினரும் தெடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தண்ணீர் திறந்து விடுவதாக அறிவிப்பு வெளியிட்ட அன்று, மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாண்டியா மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

10rally2_EPS.jpg

வாகன போக்குவரத்து நிறுத்தம்

மாண்டியாவை சேர்ந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் ஆகியோரின் உருவப்படங்களையும் கொளுத்தினார்கள். அப்போது உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷம் போட்டபடி கிருஷ்ணராஜ சாகர் அணையை நோக்கி பேரணியாகச் சென்றதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மைசூருவில் காவிரியில் இறங்கி போராட சென்ற விவசாயிகளை போலீஸார் தடுத்ததால் இரண்டு விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். அணையில் குதித்து தற்கொலை செய்வோம் என மிரட்டினார்கள். அதுமட்டுமல்லாது சாம்ராஜ்நகர், ராம்நகர், பெங்களூரு ஆகிய இடங்களிலும் பெரும் போராட்டம் வெடித்தது.

போராட்டத்தால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும்  உடனடியாக நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து கர்நாடகாத்திற்கு இயக்கப்பட்ட அனைத்துப் பேருந்துகளும் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்துப்போனார்கள். தமிழக பதிவுஎண் கொண்ட லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களும் கூட முன்னெச்சரிக்கையுடன் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.  உச்சகட்டமாக பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் தமிழ்த் திரைப்படங்களைக்கூட  திரையிடக்கூடாது என கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த...  உடனடியாக தமிழ்த்திரைப்படங்களின் காட்சி ரத்து செய்யப்பட்டன.

9block_PTI.JPG

அச்சத்தில் கர்நாடகா வாழ் தமிழர்கள்

கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 9ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 700-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த போராட்டத்தால் கர்நாடகவாழ்  தமிழர்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.  “காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசின் முடிவுக்கு கர்நாடக தமிழர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது எங்களை வேதனைக்குள்ளாக்குகிறது பெங்களூரு,கோலார் தங்கவயல்,மாண்டியா, உள்ளிட்ட இடங்களில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள் தமிழ் அமைப்பினர்.

கனத்த இதயத்துடன் தண்ணீர் திறக்கப்படுகிறது என்று இரங்கல் அறிவிப்பைப்போலத்தான் கர்நாடக முதல்வர் சித்தராமையா  தண்ணீர் திறப்பு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதை கூட கர்நாடக மக்கள் அதை ஏற்பதாக இல்லை.  மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்ததால், உடனடியாக அவசர அமைச்சரவை கூட்டம் மற்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டார் சித்தராமையா. அதில், நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், குமாரசாமி உட்பட அனைத்துக்கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

160907180400_cauvery1_640x360__nocredit.

தண்ணீர் திறப்பு ஏன்? - சித்தராமையா

கூட்டத்தின் முடிவில் சித்தராமையா, ‘‘கர்நாடகாவில் இந்த ஆண்டில் பருவமழை பொய்த்ததால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இருப்பினும் ஆகஸ்ட் மாதம் இறுதிவரை தமிழகத்துக்கு காவிரியில் 33 டிஎம்சி நீரை வழங்கி இருக்கிறோம். கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாததால் தமிழகத்துக்கு கூடுதலாக நீர் தர முடியாத சூழல் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம். கர்நாடகாவின் அனைத்து சிரமங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை மதிக்கும் வகையில் தமிழகத்துக்கு காவிரி நீரை முறைப்படி திறந்துவிட்டுள்ளோம். அதேபோல, கர்நாடக விவசாயிகளுக்கும் பாசனத்துக்கும், குடிநீருக்கும் காவிரி நீரை திறந்துவிட முடிவு செய்துள்ளோம். எனவே கர்நாடக மக்கள் எதற்கும் கவலைப்படாமல், பொறுமையாக இருக்க வேண்டும்.  இது தொடர்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்," என்று மக்களுக்கு பதில் அளித்துள்ளார். இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் நிச்சயம் மத்திய அரசிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

4men_PTI.JPG

என்ன செய்யப்போகிறது தமிழகம்?

உண்மையில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பெரும் பாதிப்பை சந்திப்பது தமிழகம் தான். பங்கீடு அடிப்படையில் தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. சட்டப்படி கொடுக்க வேண்டிய அளவில் இருந்து மிக குறைந்த அளவு தண்ணீரை தான் திறக்கச்சொல்லி இருக்கிறது. ஆனால் உரிய நீரை திறக்கக் கோரி தமிழகத்தில் மக்கள் திரள் போராட்டங்கள் நடக்கவில்லை... அனைத்துக்கட்சி கூட்டங்கள் கூட்டப்படவில்லை. சட்டத்துக்கும், விதிகளுக்கும் புறம்பான போராட்டத்தை கர்நாடகாவில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடத்தி வருகின்றன. அதற்கு மக்கள் பெருமளவில் திரள்கிறார்கள். சட்ட விதிகளுக்குட்பட்டு, நம் உரிமைகளை கேட்டு பெற தமிழக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைவதாக தெரியவில்லை.
இன்றும் கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்கிறது. ரயிலை மறிக்கிறார்கள். பஸ்சை அடித்து உடைக்கிறார்கள். தமிழ்  சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்கிறார்கள். ஆனால் நாம் இதையெல்லாம் செய்ய வேண்டியதில்லை. செய்யவும் கூடாது. ஆனால் நம் கோரிக்கையை, நம் தேவையை நாம் ஒரே குரலில் எழுப்ப வேண்டும். முதலில் அதற்கு நாம் தயாராக வேண்டும்.

http://www.vikatan.com/news/india/68135-karnataka-protest-against-release-of-cauvery-water-to-tamil-nadu.art

Link to comment
Share on other sites

சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள்

எங்க பார் அதே நினைப்பு...

மக்களது அவலங்களுக்குள்ளும்

அரசியல் பேசவும்

பழி உணர்வுகளை கொட்டவும் சிலரால் மட்டுமே முடியும்...

 

Link to comment
Share on other sites

 

 

தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துருக்கள் சிங்களம் போலவே இருக்கக் காரணம் என்ன? Rolleyes.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அஞ்சரன் said:

சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .

இன்னும்.....இன்னும் மேலை எதிர் பார்க்கிறம்.....உண்மையிலையே நீங்க ஒரு சிற்பி மாதிரி.. free laughing emoticon

Link to comment
Share on other sites

 

 

 

14222104_848290538603975_836850545612988

14203272_1402409786440226_36078203439673

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழகம் கொந்தளித்து சிலர் உயிர்த்தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு எத்தகய இடர்கள் ஏற்பட்டாலும் ஈழத்தில் அதற்கான எந்தச் சலனமும் ஏற்படுவதில்லையே. ஏன்? எதற்காக.......??

Link to comment
Share on other sites

9 minutes ago, Paanch said:

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழகம் கொந்தளித்து சிலர் உயிர்த்தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு எத்தகய இடர்கள் ஏற்பட்டாலும் ஈழத்தில் அதற்கான எந்தச் சலனமும் ஏற்படுவதில்லையே. ஏன்? எதற்காக.......??

ரொம்ப சிம்பிள் 

அதுதான் நம்ம டிசைன் 
மாத்தவா முடியும்

தமிழக தமிழர்களை விட்டுவிடுவோம்.
எமது மலையக தமிழருக்கு
என்ன செய்தோம்.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

இன்னும்.....இன்னும் மேலை எதிர் பார்க்கிறம்.....உண்மையிலையே நீங்க ஒரு சிற்பி மாதிரி.. free laughing emoticon

ஒரு  தலைவரை  காப்பாற்ற  முடியவில்லை  இப்ப  இருக்கும்  தலிவரையும்  கொடுத்துப்போட்டு  தமிழின  தலைவருக்கு  நாங்க  எங்க  போறது  என்ற   பயம்  தான்  சாமி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிவிவ் பெட்சன் போட்ட பிறகு கண்டம்ட் பெட்டிசன்  போட முடியுமா.. ஈழதோழர்கள் விளக்கதிற்காக .. ஒருவன் கோர்ட்டில் மீண்டும் மறுபரிசிலனை செய்யுங்கள்  என்பது ரிவிவ் பெட்சன் .. நீதிமன்ற ஆணையெ ஒருவன் மதிக்க மறுக்கிறான் என்பது கண்டம்ட் ஆப்த  கோர்ட்டு ..கிந்திய அரசியல் அமைப்பு சட்ட அமைப்பு படி ரிவிவ் பெட்டிசன் போட்ட பிறகு  கண்டம்ட் ஆப்த கோர்ட் வழக்கை போட முடியாது.. அதாவது கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு தண்ணிர் திறந்து விடவில்லை என்றால் . நீங்க ஏன் ரிவிவ் பெட்சனுக்கு போறீங்க முதலில்யே  .கண்டம்ட ஆப் த கோர்ட் ( நீதி மன்ற அவமதிப்பு )  போகணும்.. தவிச்ச தமிழன் வாயிக்கு முதலில்  தண்ணி அப்புறம் மீதி ....! சில அடிப்படை கூட தெரியாதா உங்களுக்கு எல்லாம் ..? இதெல்லாம் அரசியல் ... ஏன்டா நீஙக் எல்லாம் பி.எ.பில் .. எம் . ஏ. பில்  .. படிச்சிருக்கீங்க ...  ஜல்லிகட்டு வழக்கு வரும் போது பீட்டா கூட்டா அமைப்பின்  5   வழக்கு அறிஞர்களெல்லாம் திறமையாக வாதிடும் போது  தமிழ்நாட்டின் சார்பில் வாதம் செய்யும் வழக்கறிஞர எங்கே ? என்று ஜட்ஜ் கேட்ட போது... தூங்கி கொண்டு இருந்த வழக்கறிஞர  தண்ணீர் தெளித்து எழுப்பி கூட்டி வந்தால் என்ன வாதிடுவார்..?ஜல்லிகட்டு போய்விட்டது!!!!    அம்மாவை  கவுரவம் பட ஸ்டையில் எதிரும் புதிருமாக  நின்று வாதாடி  வெளியே கொண்டுவருவதற்கு  பாடுபட்ட பெருமக்கள் .. இதற்கும் வாதாட வேண்டியதுதானே..? ஏன் இப்படி ஒரு வழக்கு தொடர்ந்ந்தால் உடனே  தீர்ப்பு வந்துவிடும்  அது வேணாம்  நம்ம அரசியல் ரம்மிக்காக நாங்க ஜெயிச்சுட்டோம் நாங்க ஜெயிச்சுட்டுட்டோம்  என்னால் முகத்தை கழுவதற்கு தண்ணீர் இதோ வந்து விட்டது பார் .. உங்க .. கழுவதற்கு இதோ தண்ணீர் உண்மையில் இது 15 டி.எம்.சி எதற்குமே ???


டிஸ்கி:


 இதற்கு ஒரே தீர்வு  இந்த இரண்டு திருட்டு கழங்களின் பிடியில்  இருந்து விடுபட்டு உண்மையான தமிழன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அதுவும்  சட்ட நுணுக்கங்கள் தெரிந்த ..யாருக்கும் விலை போகாத ... மக்களுக்காக....தமிழன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்

டிஸ்கிக்கு டிஸ்கி :

தனிபட்ட முறைய்யில் என்னை தாக்க விரும்பும் பெருமக்கள் .. ஏதோ 6/2 (1+2) = ? மாதிரி  குதர்க்கமாக  குதரவேண்டாம் ... பல கில்மாக்கல் எனக்கும் தெரியும்  e=mc*2  தனிபட முறையில் மின்னஞ்சல் அனுப்பவும் ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அஞ்சரன் said:

ஒரு  தலைவரை  காப்பாற்ற  முடியவில்லை  இப்ப  இருக்கும்  தலிவரையும்  கொடுத்துப்போட்டு  தமிழின  தலைவருக்கு  நாங்க  எங்க  போறது  என்ற   பயம்  தான்  சாமி .

vadivelu happycrying GIF - vadivelu happycrying tamil GIFs  உதை கேட்டதோடை எனக்கு ஆனந்தகண்ணீர் ஆறாய் ஓடுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அஞ்சரன் said:

சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .

மகிழ்ச்சி வாழ்க  வளமுடன்
இந்தப்பிரச்சனைக்கும் நம்ம தலைவர் தான் வரணுமா 

Link to comment
Share on other sites

23 hours ago, குமாரசாமி said:

vadivelu happycrying GIF - vadivelu happycrying tamil GIFs  உதை கேட்டதோடை எனக்கு ஆனந்தகண்ணீர் ஆறாய் ஓடுது..

நீங்க  சொன்னதை  தானே  நானு  எழுதின  பிறகு  எதுக்கு  பீல்  பண்ணிட்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2016 at 11:07 PM, Paanch said:

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழகம் கொந்தளித்து சிலர் உயிர்த்தியாகம் செய்த வரலாறுகளும் உண்டு. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு எத்தகய இடர்கள் ஏற்பட்டாலும் ஈழத்தில் அதற்கான எந்தச் சலனமும் ஏற்படுவதில்லையே. ஏன்? எதற்காக.......??

அதை யாழிலும் காணலாம்தானே? :)

 

Link to comment
Share on other sites

7 minutes ago, ராசவன்னியன் said:

அதை யாழிலும் காணலாம்தானே? :)

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனாலும் உறவுகளான தமிழர்கள் யாழ்கள கருத்துகளில் மட்டுமன்றி திண்ணையிலும் கிளர்ந்தெழுந்ததைக் கண்டோமல்லவா. :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ராசவன்னியன் said:

அதை யாழிலும் காணலாம்தானே? :)

எதை அடிப்படையாக கொண்டு கொந்தளிக்க சொல்கிறீர்கள் வன்னியரே ....?
இறங்கி சில நிமிடத்தில் தமிழ்நாட்டு தமிழனிடமிருக்கும் திராவிடன்,தென்னிந்தியன் மற்றும்  இந்தியன் எட்டிப்பார்த்துவிடுவான் .
பிறகென்ன செய்வது ...நாங்கள் இந்தியர்கள் எங்கள் அரசியலை நாங்களே பார்த்துகொள்வோம் என்று பாடமெடுக்க தொடங்கிவிடுவினம் 

இந்த நிலையை அவர்களே விரும்பி வரவழைத்து கொண்டபின்னர் என்ன செய்வது ....பரிதாபப்படத்தான் முடியும். ஈழத்தமிழர் மீது அடிமைத்தனம் திணிக்கப்பட்டது 
தமிழ்நாட்டு தமிழர்களுக்கோ தமக்கென்று ஒரு தகுதி வாய்ந்த அரசை நிறுவும் ஜனநாயக பொதுவெளியை வைத்துகொண்டே இலவசங்களுக்கும் பணத்திட்க்கும் டாஸ்மாக்கிட்க்கும் சோரம் போய் தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுகொண்டிருக்கின்றனர்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி என்றால் ஏதாவது நடக்கும்

ஆட்சியை அண்டை மாநிலக்காரர்களிடம் கொடுத்துவிட்டு நல்லது நடக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

அதை யாழிலும் காணலாம்தானே? :)

 

புரிதல் இல்லாத ஒருசிலரால் (தமிழகம், ஈழம், மலேசியா, கனடா எங்கினும்) அவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.. பெரும்பான்மையோர் விளக்கம் தரும்போது ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

14237479_365400737182015_920527568519949

14344893_365400767182012_277313857269475

14324417_365400930515329_425668501509946

14311263_365400997181989_533361505980601

14249974_365401043848651_607506610105234

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.