Jump to content

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??


Recommended Posts

உங்கள் ஆதரவிற்கு நன்றி ஜெனரல் அவர்களே!! :lol:

பார்போம் மற்றவர்கள் இதை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று அவர்களும் சம்மதித்தால் புது திரியை நீங்களே உங்கள் தலைமையில் தொடங்கி வையுங்கள்.............. ;)

Link to comment
Share on other sites

  • Replies 281
  • Created
  • Last Reply

உண்மையில் நிருவாகம் விரும்பினால் - மனம் வைத்தால் இதை செய்ய முடியும். அதாவது தற்போது கண்ணாடியில் உள்ள விமர்சனங்களை அந்த தலைப்பில் வைத்த்துக்கொண்டு, கண்ணாடிகளை மட்டும் புதிய ஒரு திரிக்கு நகர்த்திவிடுதலே இலகுவானது.

நாம் எங்கள் எண்ணப்படி தற்போது புதிய தலைப்பை திறந்து பிரயோசனம் இல்லை. நாம் புதிதாக கண்ணாடிக்கு விமர்சனம் எழுத என்று ஒரு தலைப்பை திறந்தாலும் ஏற்கனவே அங்கு உள்ள கருத்துக்கள் அப்படியே இருக்கத்தானே போகின்றன?

Link to comment
Share on other sites

ஜெனரல் அவர்களே நமது பாரிய திட்டம் வெற்றி பெற்றுவிட்டது அந்த சந்தர்பத்தில் நான் இருக்கவில்லை என்பது மட்டும் தான் குறை ஆனால் நீங்க சரியாக வழி நடத்தி சென்று இருப்பீங்க தானே.................எமது ஒரு இலக்கு முடிந்துவிட்டது அடுத்த இலக்கை நோக்கிய எமது திட்டம் பயணிக்க வேண்டும்.................எந்த இலக்கிலும் வெற்றி எமகே தான் ஜெனரல் அவர்களே........ :P :P

Link to comment
Share on other sites

நாம் எங்கள் எண்ணப்படி தற்போது புதிய தலைப்பை திறந்து பிரயோசனம் இல்லை. நாம் புதிதாக கண்ணாடிக்கு விமர்சனம் எழுத என்று ஒரு தலைப்பை திறந்தாலும் ஏற்கனவே அங்கு உள்ள கருத்துக்கள் அப்படியே இருக்கத்தானே போகின்றன?

ஜம்மு நம்ம கோரிக்கை நிறைவேறி விட்டதல்லவா?

Link to comment
Share on other sites

2 உயர்மட்ட ஜெனரல்மார் வைத்து கோரிக்கை நிறைவேற்றாவிடில் பிறகு நடக்கிறது தெரியும் தானே ஜெனரல் நான் சொல்லுறது சரி தானே.............. :mellow::huh:

Link to comment
Share on other sites

எங்கள் இருவரையும் - இரண்டு ஜெனரல்களையும் யாழ் களத்தில் தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் இடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? :mellow:

-----------------------------------------------------------------------------------------------------------------

முற்றம், விம்பகம் போன்ற பகுதிகளிற்கு நான் போவதே இல்லை. எப்பாவது அருமையாகப் போவேன். மற்றவர்கள் போகின்றார்களா என்று தெரியாது... யாழ் கருத்தாடல் தளத்தை மட்டுமே பலரும் விரும்பி வாசிக்கின்றார்களோ? ஏனென்றால் அங்கு ஒருவரும் பதில் கருத்து எழுதுவதில்லையே!

முற்றம், விம்பகம் பகுதிகளை யாழ் கருத்தாடல் தளத்துடன் இணைத்தால் என்ன? இதன் மூலம் பலரின் பார்வைக்கு இவை உள்ளாக கூடும் என்பதோடு கொமண்ட்ஸ் - பதில் கருத்துக்களும் அதிக அளவில் வரும்..

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அல்லது இவ்வாறு இணைப்பது நடைமுறை சாத்தியம் அற்றதா? அதாவது தொழில்நுட்ப சிக்கல்கள் இருத்தல்...

Link to comment
Share on other sites

ஜெனரல் அவர்களே நீங்க பேச்சுக்கு சொன்னாலெ பலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திடுவார்கள் கவனம்........ஆனா அதுவும் நல்ல விசயமா தான் இருக்கு அதற்கு பரீசீலனை செய்வோம், :mellow:

ஜெனரலில் இன்றைய புதிய திட்டத்திற்கான முழு ஆதரவையும் நான் வழங்குகிறேன்...........இதனை நிர்வாகம் கவனத்தில் எடுத்து கொள்ளுமாறு இத்தால் பணிவன்படுடன் கேட்டு கொள்கிறேன்.......... :huh:

Link to comment
Share on other sites

உங்கள் தொடர்ந்த ஆரதவுக்கு நன்றி! :P

---------------------------------------------------------------------------------------------------------------------

கேள்விகள்:

1. யாழில் ஒரு கருத்தை எழுதும் போது அதிகப்படியாக எத்தனை முகக்குறிகளை பயன்படுத்தமுடியும்? சிலவேளைகளில் முகக்குறிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது என்று எச்சரிக்கை வருகின்றதே? ஏன்?

2. யாழில் புதிய தலைப்பு ஒன்றை ஆரம்பிக்கும் போது Topic Description என்ற பகுதியில் அதிகம் எழுதும்போது பெட்டிகள் வருகின்றதே ஏன்? அதாவது Topic Description என்ற பகுதியில் குறிப்பிட்டளவு எழுத்துக்களிற்கு மேல் எழுதும்போது பெட்டிகள் வருகின்றன. அப்படியாயின் நாம் இதில் எழுதக்கூடிய அதிகப்படியான சொற்களின் எண்ணிக்கை எத்தினை?

யாருக்காவது பதில் தெரிந்தால் விளக்குங்கள்..

நன்றி! தாங்க்ஸுங்கோ

Link to comment
Share on other sites

முற்றம், விம்பகம் போன்ற பகுதிகளிற்கு நான் போவதே இல்லை. எப்பாவது அருமையாகப் போவேன். மற்றவர்கள் போகின்றார்களா என்று தெரியாது... யாழ் கருத்தாடல் தளத்தை மட்டுமே பலரும் விரும்பி வாசிக்கின்றார்களோ? ஏனென்றால் அங்கு ஒருவரும் பதில் கருத்து எழுதுவதில்லையே!

முற்றம், விம்பகம் பகுதிகளை யாழ் கருத்தாடல் தளத்துடன் இணைத்தால் என்ன? இதன் மூலம் பலரின் பார்வைக்கு இவை உள்ளாக கூடும் என்பதோடு கொமண்ட்ஸ் - பதில் கருத்துக்களும் அதிக அளவில் வரும்..

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அல்லது இவ்வாறு இணைப்பது நடைமுறை சாத்தியம் அற்றதா? அதாவது தொழில்நுட்ப சிக்கல்கள் இருத்தல்...

கலைஞன், முற்றம் பகுதியில் தற்போது எதுவித விடயங்களும் இணைப்பதில்லை. வரும் விடயங்களையும் களத்தில் இணைத்து வருகின்றோம். அங்கு இணைக்கப்பட்ட விடயங்கள் அப்படியே இருக்குமே தரவிர புதிதாக எதுவித விடயங்களும் இணைக்கும் திட்டம் தற்போது இல்லை.

தற்போதுள்ள விம்பகம் பகுதி சில காரணங்களால் சில விடயங்கள் செயலிழந்து விட்டன. எனினும் அதனை தற்போது புதிய பகுதிக்கு மாற்றியுள்ளோம். அது முழுமை பெற்றதும் பார்வைக்கு விடலாம் என இருக்கின்றோம். நீங்கள் குறிப்பிட்டது போன்று அதனை கருத்துக்களத்துடன் இணைக்க முடியும். ஆனால் சில பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக அவ்வாறு இணைப்பதைத் தவிர்த்துள்ளோம்.

1. யாழில் ஒரு கருத்தை எழுதும் போது அதிகப்படியாக எத்தனை முகக்குறிகளை பயன்படுத்தமுடியும்? சிலவேளைகளில் முகக்குறிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது என்று எச்சரிக்கை வருகின்றதே? ஏன்?

ஆகக் கூடியது 10 முகக்குறிகளே இணைக்க முடியும்.

2. யாழில் புதிய தலைப்பு ஒன்றை ஆரம்பிக்கும் போது Topic Description என்ற பகுதியில் அதிகம் எழுதும்போது பெட்டிகள் வருகின்றதே ஏன்? அதாவது Topic Description என்ற பகுதியில் குறிப்பிட்டளவு எழுத்துக்களிற்கு மேல் எழுதும்போது பெட்டிகள் வருகின்றன. அப்படியாயின் நாம் இதில் எழுதக்கூடிய அதிகப்படியான சொற்களின் எண்ணிக்கை எத்தினை?

இதில் எண்ணிக்கை குறிப்பிடுவது கடினம். ஏனெனில் தமிழில் யுனிக்கோட் அமைப்பில் எழுதும் போது எழுத்துக்கள் குறைவாகத் தெரிந்தாலும் அதன் பின்னால் நிறைய code கள் உருவாக்கப்படுகின்றது.

உதாரணமாக:

இதில் எண்ணிக்கை குறிப்பிடுவது கடினம்.

என்பது யுனிக்கோட் அமைப்பில் பின்வருமாறு பதிவில் வைக்கப்படுகின்றது.

uc.jpg

ஆனால் ஆங்கிலத்தில் அப்படியல்ல.

Link to comment
Share on other sites

ஐயா மோகன், உங்கள் விரிவான தகவல்களிற்கு மிக்க நன்றி!

எனக்கு என்னவோ முற்றம், விம்பகம் பகுதிகளை பிரதான கருத்தாடல் தளத்துடன் நீங்கள் இணைப்பது நல்லதாகபடுகின்றது.

மேலும், அந்தப் பகுதிகளில் கருத்து எழுதுவதற்கு வேறு ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் பாவிப்பதும் சரியாக தெரியவில்லை. தொழில்நுட்ப சிக்கல்கள், பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், இந்தப் பிரச்சனைகள் எதிர்காலத்தில் தவிர்க்கப் படக்கூடியதாய் இருக்கும்போது பிரதான கருத்தாடல் தளத்துடன் இவற்றை இணைப்பது பல நன்மைகளை கொண்டுவரும் என்று நினைக்கின்றேன்.

சிறந்த நல்ல படைப்புக்கள் எல்லாம் அந்தப் பகுதிகளில் உள்ளன. ஆனால், ஒருவரும் அங்கு அதிகளவில் போகாத காரணத்தால் நானும் போவதில்லை. இதனால், படைப்பாளிகளை நாங்கள் ஊக்குவிக்க, மற்றும் எங்கள் பின்னூட்டல்களை, விமர்சனங்களை அவர்களிற்கு கொடுக்க எம்மால் முடியாமல் போகின்றது.

உதாரணமாக, பவித்திரா என்பவர் அருமையான பல கவிதைகளை அங்கு எழுதி உள்ளார். ஆனால், எமக்கு அந்தப் பகுதிக்கு போவதற்கு ஆர்வம் வராத காரணத்தால் ஒன்றும் எழுதுவதில்லை.

நான் சில காலத்திற்கு முற்றம், விம்பகம் பகுதிகளில் கருத்து - கொமண்ட்ஸ் எழுதுவதற்கு யூசர் நேம் ஒன்றை உருவாக்கினேன். அது இப்போது என்னவென்றே எனக்கு மறந்து போச்சு!

நன்றி!

Link to comment
Share on other sites

ஜெனரல் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.............இதற்கு பூரண ஆதரவை நல்குகிறேன்............... :icon_idea:

அத்துடன் எனக்கு ஒரு சந்தேகம் ஜெனரல் அவர்களே அதாவது எச்சரிக்கை வழங்கபடுகிறது கள உறுப்பினர்களுக்கு...............வழங்

Link to comment
Share on other sites

மட்டறுத்துனர்கள், அல்லது நிருவாகிகள் ஏதாவது பிழை செய்வது போல் இருந்தாலே புதிய தலைப்பு ஒன்றை திறந்து நியாயம் கேட்க டன், நெடுக்காலபோவான், புசுக்குட்டி... இப்படி வீரர்கள் பலர் ஆயத்தமாக இருக்கும் விசயம் உங்களுக்கு தெரியாதோ? ;)

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் - ஒருவர் யாழில் தடை செய்யப்பட்டால் அவரது status.. தமிழில் எப்படி சொல்லுவது -- நிலை - தடைசெய்யப்பட்டோர் என்று காட்டப்படும் இல்லையா? இல்லாதுவிடின் கருத்துக்கள உறவுகள் அல்லது கருத்துக்கள உறுப்பினர்கள் அல்லது validating இப்படி காட்டப்படும்.

ஆனால், நேற்று என்று நினைக்கின்றேன், காவல்துறை கவிதைப் பூங்காட்டு பகுதியில் வன்னிமைந்தன் எழுதியதாக சொல்லி ஒரு கவிதையை ஒட்டி இருந்தார். அங்கு அவர் வன்னிமைந்தன் தான் யாழில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தனக்கு தனிமடல் அனுப்பி இருந்தார் என்று கூறி இருந்தார். உடனே, நான் வன்னிமைந்தனின் புரபைலுக்கு போய் அவரது யாழ் status ஐ பார்த்தேன். அதில் கருத்துக்கள உறவுகள் என்று இருந்தது. அப்படியாயின் காவல்துறை வன்னிமைந்தன் யாழில் தடை செய்யப்பட்டு உள்ளதாக கூறியது தவறா? எங்கே பிழை நடந்தது என்று விளங்கவில்லை..

இதுதான் அந்த லிங்க்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=338492

Link to comment
Share on other sites

validating இது நீங்கள் உங்கள் கடவுசோல்லையோ அல்லது மின்னஞ்சல் முகவரியை மாற்றுவதன் மூலம் validating இப்படி வரும். வேணும்னா செய்து பாருங்கோ.

Link to comment
Share on other sites

ஜெனரல் அவர்களே நீங்கள் சொல்வது சரி தான் பிழை விட்டா கேட்க பல வீரர்கள் இருகிறார்கள் அப்ப சரி..... ;)

தடைசெய்யபட்டோர் என்று காட்டபடுமா அப்படி இருக்காது என்று நினைகிறேன் இதுவரை தடைசெய்யபட்டோர் ஒருத்தரையும் அவ்வாறு பார்த்ததாக ஞாபகம் இல்லை.............வலிடேட்டிங் நிலா அக்கா சொன்ன காரணம் தான் அதற்காக நீங்க மாற்றி பார்க்க வேண்டாம்........... ;)

நீங்கள் லிங் தந்தா பிறகு தான் பார்தேன்.............அவர் தடைசெய்யபட்டவரா அப்படி இல்லை என்று நினைகிறேன்.......... :icon_idea:

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன் தடை செய்யபப்டுள்ளதாகவும் அவர் கவிதையை தனிமட்லில் அனுப்பி இருந்ததாகவும் காவல்துறை என்ற உறுப்பினர் சொல்லி இருக்கிறார். அப்போ வன்னி மைந்தனால் யாழுக்குள் நுழைய முடியும். யாழில் கருத்துக்கள் எழுத முடியவில்லை. அபப்டித்தானே. ஆனால் அவரின் தகுதி "கருத்துக்கள உறவுகள்" என்று தான் இருக்குது கலைஞன் அண்ணா சொன்னது போல.

தடை செய்யப்பட்டால் அவரின் தகுதி என்னவாக மாறும்?

Link to comment
Share on other sites

தடை செய்யப்பட்டு இருந்தால் தடைசெய்யப்பட்டோர் என்று எழுதப்பட்டு இருக்கும்! நான் இதை எங்கோ பார்த்துள்ளேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு யோசனை:

குமுதம் சஞ்சிகையில் பார்த்து இருப்பீங்கள் பிரார்த்தனை என்று ஒரு பகுதி உள்ளது. இதுபோல் யாழிலும் பிரார்த்தனை பகுதி ஒன்றை உருவாக்குவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

அதாவது பிரார்த்தனைக்காக இரண்டு கருத்தாடல் தலைப்புக்களை ஆரம்பிக்கலாம்..

ஒன்று குறிப்பிட்ட சிலருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வது போல செய்யலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒருவருக்கு உடல் சுகம் அடைந்து பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று..

மற்றது, தினமும் எமது அலுவல்களை ஆரம்பிக்க முன் பிரார்த்தனை செய்வது போல் யாழுக்கு தினமும் நாம் வந்ததும் முதலாவதாக ஒரு பிரார்த்தனை கருத்து ஒன்றை எழுதிவிட்டு எமது கருத்தாடலை ஆரம்பிக்கலாம். இதற்கு என்று இன்னொரு தலைப்பை உருவாக்கலாம்.

இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

அதாவது யாழில் பிரார்த்தனை செய்தல்??

ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான கடவுளை பிரார்த்தித்து கருத்து எழுதலாம்..

உதாரணமாக இன்று முதலாவது கருத்தை பிரார்த்தனை பகுதிக்கு நான் சென்று அதில் ஒரு வேதவாக்கியத்தை அல்லது தேவாரம் ஒன்றை எழுதிவிட்டு மிகுதி களத்தில் இறங்கலாம். அதாவது ஆண்டவனை பிரார்த்தித்தபின் கருத்தாடலில் ஈடுபடல். ஸ்கூலில் பிரார்த்தனை செய்தபின் பாடம் துவங்கிவது மாதிரி. இதன் மூலம் பல மன உலைச்சல்கள் தவிர்க்கப் படக்கூடியதாக இருப்பதோடு, வீண் சச்சரவுகள் குறையும் என்று நினைக்கின்றேன். மூளையும் - மனமும் கொஞ்சம் சாந்தி அடையும்..

உங்கள் விருப்பம் என்ன மாதிரி?

Link to comment
Share on other sites

கலைஞன் அண்ணாஅ நீங்கள் சொல்வது நல்ல ஒரு ஐடியா என்பது என் அபிப்பிராயம். அதை நடைமுறைப்படுத்துவது சிறந்தது.ஆனால் நாம் அப்படி கடவுள் பிரார்த்தனை செய்யும் போது யாழில் சிலர் கடவுளே இல்லை என வாதாடுபவர்கள் நையாண்டி பண்ணுவார்களே. அல்லது அதைக் குழப்ப முனைவார்களே. உது பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

கலைஞனின் பிரார்த்தனை பகுதி யோசனை ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

பிரார்த்தனைப் பகுதி என்று ஒன்றை திறந்தால் நிறைய பிரச்சனைகள் வரும். யாழ் களத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் சைவர்கள். ஆகவே இங்கே சைவம் சார்ந்த பிரார்த்தனைகளே இடம்பெறும். அது யாழ் களத்திற்கு தேவையற்ற முத்திரையை கொடுக்கும்.

அத்துடன் கடவுள் இல்லை என்று வாதிடுகின்ற யாழ் கள உறவுகளின் மனதை புண்படுத்துகின்ற ஒரு பகுதியாகவும் இருக்கும்.

கடவுள் இல்லை என்று வாதிடுபவர்களின் கருத்துக்கு தனிப் பகுதியை ஒதுக்குவது என்பது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாததோ, அதே போன்று பிரார்த்தனைப் பகுதியும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

கடவுளை பிரார்த்திக்காது, மதபோதகரை அழைத்து மந்திரம் சொல்லியோ ஜெபித்தோ ஆரம்பிக்கப்படாத தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என்பன மேற்கு நாடுகளில் கண்டுள்ள வளர்ச்சியை பாருங்கள்

நம்பர் பார்த்து, திசை பார்த்து, நாள் பார்த்து பூசை செய்து ஆரம்பித்து தினமும் பிரர்த்தனையும் செய்கின்ற எம்மவர்களின் நிறுவனங்கள் பல வீழ்ச்சி அடைவதையும் பாருங்கள்.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதே நல்லது. வேண்டும் என்றால் தன்னம்பிக்கைப் பகுதி என்று ஒன்றை உருவாக்குவது நல்லது.

Link to comment
Share on other sites

ஜெனரல் அவர்களே உங்கள் முயற்சி நல்லபடியாக அமைய வாழ்த்துகள்....................... :D

ஆனால் எனக்கு இதில் உண்மயாக நம்பிக்கை இல்லை இப்ப தான் போதிமரத்தில தேறிவருகிறேன் பிறகு நம்பிக்கை வந்தா நிச்சயம் இணைகிறேன்..........ஆனால் நக்கல் எல்லாம் பண்ணமாட்டென் என்பதை தெரிவித்து கொள்கிறேன்........... :lol:

சபேசன் மாமா சொல்வது போல தன்னம்பிக்கை பகுதி மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைகிறேன் ஜெனரல் அவர்களே.............. :D

Link to comment
Share on other sites

வெண்ணிலா, சபேசன், ஜமுனா உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

நீங்கள் இன்னும் இதை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்..

அதாவது இப்போது மெய்யெனப்படுவது பகுதியில் பல தலைப்புக்களில் பல விசயங்கள் இருப்பது மாதிரி, தமிழும் நயமும் பகுதியில் சமய இலக்கியம் எனும் தலைப்பில் ஒரு விசயம் இருப்பது மாதிரி...

இனிய பொழுது பகுதியில் "இன்றைய பிரார்த்தனை" என்று ஒரு தலைப்பில் ஒரு திரியை உருவாக்குவம் என்று நினைக்கின்றேன்.

இதில் தினமும் நான் யாழில் கருத்து எழுதும் போது முதலாவதாக ஒரு பிரார்த்தனை ஒன்றை எழுதிவிட்டு - ஒரு வேதவாக்கியத்தை, தேவாரத்தை எழுதிவிட்டு பின் மிகுதி களத்தில் இறங்கலாம் என்று யோசித்தேன். மற்றவர்களும் தமது கருத்தாடலை ஆரம்பிக்கும் போது முதலாவது ஒரு பிரார்த்தனை கருத்தை இதில் எழுதிவிட்டு பின் மற்றைய பகுதிகளிற்கு செல்லலாம்.

நான் பிரார்த்தனை எழுதும் போது வெறும் இந்துக்களின் பிரார்த்தனையை மட்டும் எழுதாது தினமும் கீழ்வரும் விசயங்களில் பிராத்தனை கருத்தை எழுதுவேன்.

உதாரணமாக கிறீஸ்தவர்களின் பைபிளில் இருந்து ஒரு கருத்து, இந்துக்களின் பிரார்த்தனை கருத்து ஒன்று, மாவீரரை நினைவுகூறும் போற்றும் கருத்து ஒன்று, மற்றும் தமிழ்தாயை நினைவுகூறும் கருத்து ஒன்று.. மற்றும் பெற்றோரை போற்றுதல்.. இப்படி அனைத்தும் கலந்து தினமும் ஒரு பதிவை இடுவேன்.

இதைப்போல் மற்றவர்களும் பிரார்த்தனை கருத்துக்களை எழுதலாம்..

பிரார்த்தனை கருத்து தவிர வேறு ஒரு பதிவும் இங்கு இடப்படமுடியாது!

இந்துக்களாக இருந்தாலும் சரி, கிறீஸ்தவர்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, கடவுளை நம்புவர்களாக இருந்தாலும் சரி, கடவுளை நம்பாதவர்களாக இருந்தாலும் சரி.. ஒரு வேலையை தினமும் ஆரம்பிக்கும்போது ஒரு பிரார்தனையை அல்லது தியானத்தை, அல்லது மன ஒருங்கமைப்பை மேற்கொள்வோம் தானே? இதுபோல் யாழிலும் தினமும் முதலாவதாக எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும் என நினைத்து ஒரு கருத்தை எழுதிவிட்டு பின் கருத்தாடல் செய்வதில் என்ன தவறு உள்ளது?

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விருப்பமானால் இந்தப்பகுதியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் - ஒரு பொன்மொழியை - ஒரு பதிவை இட்டபின் தமது கருத்தாடலை ஆரம்பிக்கலாம்.

எல்லாரும் இதை பின்பற்றவேண்டும் என்று இல்லை..

பிரார்த்தனை தவிர வேறு ஏதாவது அரட்டைகளோ அல்லது ஒருவர் எழுதிய கருத்துக்கு பதில் அளிப்பதோ இந்தப் பகுதியில் தவிர்க்கப்படும்.

தினமும் நான் சுமார் 10 - 20 கருத்துகள் யாழில் எழுதுகின்றேன். இதில் ஆரம்ப கருத்தாக ஒரு பிரார்த்தனை இடம்பெறுவதில் என்ன தவறு உள்ளது?

இதன் மூலம் எம்மை நாம் யாழில் கொஞ்சம் கட்டுப்பாடாக வைத்திருக்க, மற்றும் ஒரு புரிந்துணர்வு, அமைதி ஏற்பட வழி சமைக்கும் என்று நினைக்கின்றேன்.

இப்ப, யாழில் அரட்டைப்பகுதி உள்ளது, டைகர் வானொலி பகுதி உள்ளது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகுதி உள்ளது, காணவில்லை பகுதி உள்ளது, காணாமல் போகின்றோம் பகுதி உள்ளது, பாட்டுக்குப் பாட்டு, கவிதை அந்தாதி, நெடுக்காலபோவானின் கிரீன்பிரிகேட்.. இப்படி பல பகுதிகள் உள்ளன. இதுபோல் இது பிரார்த்தனை பகுதி. இதில் இந்த தலைப்பில் உள்ள விதிகளிற்கு கட்டுப்பட்டவர்கள் கருத்து எழுதமுடியும். இதன்மூலம் என்ன சிக்கல் வரும் என்று விளங்கவில்லை.

நான் தினமும் பிரார்த்தனை கருத்தை எழுதும் போது அனைவருக்கும் பொதுவான வகையிலேயே எழுதுவேன். தனிப்பட்ட ஒரு மதத்தையோ அல்லது குழுவினரையோ மட்டும் பிரதிநிதித்துவம் செய்யமாட்டேன்.

மேலும், யாழில் சைவர்களே அதிகளவில் என்று கூறுகின்றீர்கள். ஆனால், ஆறுமுகநாவலர் என்பவர் சைவசமய தீட்சை பெற்றவர்கள் மட்டுமே சைவர்கள் என்று கூறுகின்றார். யாழில் எத்தனை பேர் தீட்சை பெற்று உள்ளார்கள்? நான் பெறவில்லை... யாழில் பெரும்பாலானோர் சைவர்கள் என்று கூறுவது தவறு...

இதுபோல் இனியபொழுது பகுதியில் கூட்டுப்பிரார்த்தனை என்று ஒரு திரியை ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கின்றேன். இதுபற்றி பின்னர் விளக்குகின்றேன்..

பிரார்த்தனை செய்வதால் யாழுக்கு எதுவித தீங்கும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக நன்மைகளே ஏற்படும். மேலும் விருப்பம் இல்லாதவர்கள் இந்த திரியில் வாசிக்கவோ, எழுதவோ தேவையில்லை.

இப்ப கோயில்கள், தேவாலயங்கள், யோகா நிலையங்கள், தியானம் செய்யும் பட்டறைகள், உடற்பயிற்சி நிலையங்கள் ஒரு நகரில் இருக்கின்றன. ஆனால், எல்லாவற்றுக்கும் எல்லாரும் போய் வருகின்றார்களா? கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் கோயிலுக்கு போக தேவையில்லை. அதற்காக நீ கோயிலுக்கு போகாதே என்று ஒருவரை தடுக்க முடியுமா? விருப்பம் உள்ளவர்கள் விருப்பமான இடங்களிற்கு போய்வரமுடியும் தானே?

அதுபோல் பிரார்த்தனை பகுதிக்கு வந்து கருத்து எழுதவிரும்புபவர்கள் அங்கு வந்து எழுதட்டும். அங்கு வந்து வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்கட்டும். இது எந்த ஒரு தனிப்பட்ட மதம் சார்பான பகுதி அல்ல. மேலும், நான் எந்த ஒரு தனிப்பட்ட மதம் சார்ந்தவனும் அல்ல.

நீங்கள் விருப்பமானால் 'கடவுள் இல்லை!' இப்படி ஒரு தலைப்பில் யாழில் ஒரு திரியை தொடங்கலாம் தானே? இதற்கு ஏதாவது தடை இல்லையே! இதுபோலவே 'இன்றைய பிரார்த்தனை' என்று ஒரு திரியை - தலைப்பை தொடங்கலாம் என்று யோசிக்கின்றேன்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் கிறிஸ்துமஸ், தீபாவளி, நவராத்திரி, மற்றும் விரதங்கள் இவைபற்றி கூட எதுவுமே யாழில் எழுதக்கூடாது என்று சொல்வது போல் இருக்கின்றதே??

பிரார்த்தனை என்ற பொருளில் திரி - ஒரு தலைப்பு தொடங்குவதால் யாழ் இணையம் எந்தவிதத்திலும் ஏதாவது மதம்சார்பானது அல்லது ஒரு குறிப்பிட்ட கொள்கை உடைய குழுவினர் சார்பானது என்ற எண்ணம் மற்றவர்களிடையே தோன்றும் என்று நான் நினைக்கவில்லை..

நன்றி!

Link to comment
Share on other sites

கலைஞனின் கருத்தை ஆதரிக்கின்றேன்.அதாவது எந்த ஒரு கருத்தும் மற்றவர்களை பாதிக்காத வரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞனின் வாதம் சரியானது இந்த தலைப்பை தொடக்கினால் தங்களுடைய பரப்புரைகள்

நிர்வணமாகிவிடும் என்பதால் சிலர் அஞ்சுகிறார்கள்...இதற்கெல்லாம

Link to comment
Share on other sites

நான் கலைஞன் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டேன்.

செய்திகளுக்கு, புலத்திற்கு, உலகநடப்பிற்கு, துயர்பகிர்வதற்கு என்று தனிப் பகுதிகள் இருப்பது போன்று பிரார்த்தனைக்கும் ஒரு தனிப்பகுதி இருக்க வேண்டும் என்று கலைஞன் விரும்புவதாக நான் புரிந்து கொண்டேன்.

ஏதோ ஒரு பகுதியில் பிரார்த்தனைக்கு ஒரு தலைப்பு தொடங்குவதற்கு யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள்.

ஒரு தலைப்பை தொடங்குவதற்கு எதற்கு கருத்துக் கேட்கிறீர்கள். பேசாமல் ஆரம்பிக்க வேண்டியதுதானே?

நீங்கள் கருத்துக் கேட்டதுதான் குழப்பத்திற்கு காரணம்.

பிரார்த்தனைப் பகுதிக்கு குறிப்பிட்டளவு கள உறுப்பினர்கள் நிச்சயமாக ஆதரவு வழங்குவார்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

தன்னை நம்பாது, இல்லாத ஏதோ ஒன்றை நம்பி தான் செய்கின்ற நன்மை, தீமை அனைத்திற்கும் அதுதான் காரணம் என்று நினைக்கின்ற சமூகம் எம்முடையது.

பாடாசாலைக்கு போனாலும் பிரார்த்தனை, கடை திறந்தாலும் பிரார்த்தனை, கூட்டம் ஆரம்பித்தாலும் பிரார்த்தனை என்று பிரார்த்தித்து பிரார்த்தித்தே இன்று உலகில் மிகச் சிறந்த இனமாக எமது தமிழினம் இருக்கிறது. பிரார்த்தனை செய்யாது தொழில்களையும் கல்வியையும் ஆரம்பித்து பாழாய் போய் நிற்கின்ற மற்றைய இனங்கள் எல்லாம் தமிழர்களின் அதி உச்ச வளர்ச்சியைப் பார்த்து திகைத்துப் போய்நிற்கின்றன

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈபிடிபியும் தமிழர்களுக்கு விடிவு வேண்டி பிரார்த்தனை நடத்தியது. சில மாதங்களுக்கு முன்பு அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட தேசியச் செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காக எம்மவர்களும் பிரார்த்தனை நடத்தினார்கள்.

பிரார்த்தனை என்று வந்துவிட்டால் தமிழர்களுக்குள் எந்த வேறுபாடும் இருக்காது.

ஆகவே கலைஞனே! தயங்காது உங்களின் பிரார்த்தனையை ஆரம்பியுங்கள்

காவல்துறை!

நீங்கள் வன்னிமைந்தனின் கருத்தை இங்கே கொட்டியிருக்கிறீர்கள். உங்களுக்கும் அது ஏற்புடையாக இருப்பதானால்தான் அதை செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இங்கே கலைஞன் பிரார்த்தனை செய்வதால் எங்களுடைய பகுத்தறிவுப் பரப்புரை எப்படி நிர்வாணமாகிவிடும் என்று விளங்கப்படுத்துவீர்களா? தயவு செய்து கவிதை என்று இங்கே எதையும் தராது, உரைநடைத் தமிழிலேயே உங்கள் விளக்கத்தை எழுதுங்கள்.

பிரார்த்தனைப் பகுதியில் "அப்புசாமி! இஞ்சை பகுத்தறிவுக் கருத்து எழுதுற ஆக்களை இல்லாமல் செய்துவிடு" என்று நீங்கள் பிரார்த்தனை செய்தால் அப்புசாமி வந்து எங்களை இல்லாமல் செய்துவிடும் என்பது போன்றும் அதற்கு நான் பயந்து இங்கே பிரார்த்தனைப் பகுதியை எதிர்க்கிறேன் என்பது போன்றும் நீங்கள் தந்த கருத்துக்கள் இருக்கின்றன.

பதிலுக்கு தயவு செய்து கவிதையோடு வரவேண்டாம். உண்மையில் நான் இப்படியான "கவிதைகளுக்குத்தான்" அஞ்சுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடாசாலைக்கு போனாலும் பிரார்த்தனை, கடை திறந்தாலும் பிரார்த்தனை, கூட்டம் ஆரம்பித்தாலும் பிரார்த்தனை என்று பிரார்த்தித்து பிரார்த்தித்தே இன்று உலகில் மிகச் சிறந்த இனமாக எமது தமிழினம் இருக்கிறது. பிரார்த்தனை செய்யாது தொழில்களையும் கல்வியையும் ஆரம்பித்து பாழாய் போய் நிற்கின்ற மற்றைய இனங்கள் எல்லாம் தமிழர்களின் அதி உச்ச வளர்ச்சியைப் பார்த்து திகைத்துப் போய்நிற்கின்றன

:):):lol::o:unsure:

Link to comment
Share on other sites

குமாரசாமி!

இது உங்களுக்கு விளங்கவில்லையா?

இன்றைக்கு ஐரோப்பாவை பாருங்கள். எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறது. எல்லோரும் பட்டினி கிடந்த சாகிறார்கள். கல்வி அறிவு என்பதே இல்லை.

ஆனால் தமிழர்களைப் பாருங்கள். கல்வியை பிரார்த்தனையோடு ஆரம்பித்தார்கள். கல்விக்கு என்று ஒரு கடவுளை வணங்கி தமது கல்வியை ஆரம்பித்ததன் விளைவு, இன்றைக்கு எல்லோரும் சிறந்த கல்விமான்களாக இருக்கிறார்கள்.

எந்தத் தொழிலை ஆரம்பித்தாலும் பிரார்த்தனையோடு ஆரம்பித்து, அதுவும் செல்வத்திற்கு என்று ஒரு கடவுளை வணங்கி, தினமும் பிரார்த்தனை செய்ததன் விளைவு, இன்றைக்கு அனைத்து தமிழர்களும் பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். தமிழர்களின் அனைத்து தொழில் நிறுவனங்களும் கொடி கட்டிப் பறக்கின்றன.

பிரார்த்தனையால் பெற்ற பயனைப் பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.