Jump to content

பார் போற்றும் பாவேந்தர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட கலைஞர்
பாரதிதாசனார் பற்றி பார்ப்போம்.


பார் போற்றும் பாவேந்தர்


"மகாகவி பாரதி நமக்களித்த ஒப்பற்ற உயர்ந்த
முதல் பாடலே பாரதிதாசன்"

என்கிறார் நீதியரசர் மகாராசன்.

தமது ஆசான் பாரதியாரை அடியொற்றியே
பாவேந்தரும்,"எளிய சொற்கள், எளிய சொற்றொடரழகு,
எளிய சந்தம்,மக்கள் மனதில் பதியும்படியான இசை" என்றவாறாக பாடல்களை உருவாக்கினார்.

அவர் காலத்தின் திரைப்படங்களின் பிற்போக்கினை கண்டித்து ,கவிதையிலேயே ஒரு விமர்சனம்
எழுதியுள்ளார் புரட்சிக்கவிஞர்.

சினிமா பாடல்கள் எழுதுவதில் இவருக்கு
ஆர்வமிருந்ததில்லை. சினிமா பாடல்கள் எழுதும்படி வேண்டுபபவரிடம்
"சினிமாப் பாட்டுத்தானே,அது கிடக்கட்டும்,எழுதினாப்போச்சு "
என்று கூறிவிட்டு, இலக்கியம் சம்பந்தமாக பேசுவதில்தான் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பாராம்.

பாவேந்தர் தமது சுயமரியாதை நண்பர்களான;
ஜெகதீசன், கண்ணன், G.K.வேலுமணி, வா.ரா.--
ஆகியோரின் ஊக்குவிப்பின் பேரிலேயே சினிமா
உலகில் புகுந்தார். அப்படி திரையுலகிற்கு வந்தாலும், எழுத்தாக்கங்களில் தமது முற்போக்கு கருத்தினை புகுத்தி, மக்கள் மனதில் பதிய வைப்பதிலேயே குறியாயிருந்தார்.

மஹாராஜா,பிராணநாதா,ஸகி - ஆகியசொற்களை
மன்னர் மன்னன், அத்தான், தோழி -
என்று எளிதில் விளங்கும் அழகிய
தமிழ்ச் சொற்களாக்கினார்.

எது கைக்கு வருகிறதோ அதுவே எதுகை
என்றில்லாமல்,இலக்கிய-இலக்கண மணம்
கமழும் பாடல்களை உருவாக்கினார்.
எடுத்துக்காட்டாக "தமிழுக்கும் அமுதென்று பேர் "
என்ற பாடலில் அடி தோறும் எதுகை, மோனை
எடுப்பாக அமைய எழுதினார்.அடியின் ஈற்றுச்
சீர்களை; பேர், நேர், நீர், ஊர், வேர், பால், வேல்,
வான், தேன், தோள், வாள் - என்று அடி இயைபுத்
தொடையில் அமைத்தார். இலக்கண விதிகளுக்கு
உட்பட்டு கருத்தும் சொற்களும் சிந்தாமல்
சிந்தடியில் எழுதிய பாடலிது.

தமது ஆசானாகிய பாரதியைப் பற்றிய திரைப்
படம் ஒன்று உருவாக்க வேண்டுமென்ற இவரது
எண்ணம் நிறைவேறவே இல்லை.

மற்ற கவிஞர்களின் மீது அன்பும் அக்கறையும்
கொண்டிருந்தார். உடுமலை நாராயணகவி
பாவேந்தரை அண்ணா என்று உரிமையுடன்
அழைப்பார். பட்டுக்கோட்டையாரின் மீதும்
பாவேந்தர் மிக்க பாசம் கொண்டிருந்தார்.


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

Link to comment
Share on other sites

சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு

திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
சங்கே சங்கே முழங்கு


வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பார் போற்றும் பாவேந்தர் - 2


T.K.S.சகோதரர்கள் நால்வரும் நடித்த
பாலாமணி (அல்லது) பக்காத்திருடன்
என்ற படத்தின் 17 பாடல்களையும்
பாவேந்தர் எழுதினார்.

சங்கு சுப்பிரமணியம் என்பவர் ராமானுஜராக நடித்த ஸ்ரீராமானுஜர் என்ற படத்தின் 10 பாடல்களையும் பாவேந்தர் எழுதினார்.

நாதஸ்வர வித்வான் T.N.ராஜரத்தினம் பிள்ளை
காளமேகமாக நடித்த காளமேகம் என்ற படத்தின்
கதை-வசனத்துடன், படத்தின் 21 பாடல்களில்
19 பாடல்களை பாவேந்தர் எழுதினார்.

1946 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட சுபத்ரா
என்ற படத்திற்கு வசனம்;
1949 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட பொன்முடி
என்ற படத்திற்கு கதை-வசனம்;
1952 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட வளையாபதி
என்ற படத்திற்கு வசனம் - எழுதியுள்ளார்.

வளையாபதி படத்திற்காக பாவேந்தர் எழுதிய
"கமழ்ந்திடும் பூவிலெல்லாம்" என்ற பாடல்
பதிவானபோது, "கமழ்ந்திடும்" என்ற சொல்
பதிவின்போது தெளிவாக இல்லை என்பதால்,
அச்சொல்லுக்குப் பதிலாக "குலுங்கிடும்" என்ற
சொல்லை பயன்படுத்த பாவேந்தரிடம்
அனுமதி கேட்டனர். பவேந்தர் கோபமாக
"படுபவரை மாற்று, இல்லை என்றால் பதியும்
எந்திரத்தை மாற்று, பாட்டை மாற்ற முடியாது"
என்று சொன்னாராம். பின்பு சேலம்-ஸ்ரீரங்க
பாளையம் ஐயர் என்பவரின் வேண்டுகோளின்படி
சொல்லை மாற்றிக்கொடுத்தார் பாவேந்தர்.

"வாழ்க வாழ்க வாழ்கவே" என்ற பாவேந்தரின் பாடல்
பராசக்தி படத்தின் முகப்பு(TITLE) பாடலாக இடம்பெற்றது.
இப்பாடலுக்கு கவிஞர் சன்மானம் எதுவும் பெறவில்லை.

பாவேந்தரின் இசையமுது தொகுப்பில்
"பெற்றோர் ஆவல்" என்ற தலைப்பில் உள்ள
"துன்பம் நேர்கையில்" என்ற பாடல் ஓர் இரவுபடத்தில் காதலர் பாடும் பாடலாக மாற்றி
பயன் படுத்தப்பட்டது.

பாவேந்தரின் இசையமுது தொகுப்பில்
சிறுவர் தொகுப்பில் இன்பம் என்ற தலைப்பில்
உள்ள "பசியென்று வந்தால்" என்ற பாடல்
பணம் படத்திற்காக பயன் படுத்தப்பட்டது.


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார் போற்றும் பாவேந்தர் - 3


பாவேந்தரின் இசையமுது தொகுப்பில்
உள்ள "ஆலைத் தொழிலாளி" (ஆலையின்
சங்கே நீ ஊதாயோ) என்ற பாடல்
ரத்தக் கண்ணீர் படத்திற்காக பயன் படுத்தப்
பட்டது

ரங்கோன் ராதா படத்தில் கையாளப்பட்ட,
பாவேந்தரின் "தலைவாரி பூச்சூடி" என்ற
பாடல் படத்தில் இடம்பெறவில்லை.
ஆனால் இசைத்தட்டில் மட்டுமே வெளியிடப்
பட்டது.

M.N.நம்பியார் நாயகனாகவும், B.S.சரோஜா
நாயகியாகவும் நடித்த "கல்யாணி" என்ற
படத்தில் வரும் "அதோ பாரடி" என்ற இவரின்
பாடல், மனநிலை பாதிக்கப்பட்ட கணவணை
உயர்வாக எண்ணி மனைவி பாடுவதாக
அமைந்த பாடலாகும்.

"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" படத்தில்
இடம்பெற்ற "வெண்ணிலாவும் வானும்போலே"
என்ற பாவேந்தரின் பாடல், தண்டபாணி
தேசிகரால் இசையமைக்கப்பட்டு, தமிழிசை
மேடைகளில் பாடப்பட்ட பாடலாகும்.
தண்டபாணி தேசிகரின் இசைமெட்டை
(அவர் அனுமதியுடன்) எளிமைப்படுத்தி,
பாவேந்தரிடம் பாடிக்காட்டி அவரது
இசைவைப் பெற்று, T.G.லிங்கப்பா
இசையமைத்த பாடலிது.

1954 ஆம் ஆண்டில் ரஞ்சனும் S.வரலட்சுமியும்
நடித்த "என் மகள்" என்ற படத்தில்,
"எங்கள்...வாழ்வும்.......எங்கள்.....வளமும்
மங்காத..தமிழ்என்று..சங்கே......முழங்கு"

என்ற பாவேந்தரின் பாடல் இடம்பெற்றது.
இதே பாடல் 11 ஆண்டுகட்கு பின்பு 1965
ஆம் ஆண்டில் "கலங்கரை விளக்கம்"
படத்திலும் பயன்படுத்தப்பட்டது.

இவரின் "புதியதோர் உலகம் செய்வோம்"
என்ற பாடல் 1966 ஆம் ஆண்டில்
"சந்திரோதயம்" படத்திற்காக கையாளப்பட்டது.
இதே பாடல் 9 ஆண்டுகட்கு பின்பு 1975 ஆம்
ஆண்டில் "பல்லாண்டு வாழ்க" படத்திலும்
கையாளப்பட்டது.

பாவேந்தரின் "எங்கெங்கும் காணினும் சக்தியடா"
என்ற பாடல் "நம்ம வீட்டுத் தெய்வம்" படத்திற்காக
கையாளப்பட்டது. பாவேந்தரின் ஆசான் பாரதியார்
கட்டளையின் பேரில், சில அறிஞர்களின்
முன்னிலையில் அப்பொழுதே பாவேந்தரால்
எழுதப்பட்ட பாடலிது.1934 ஆம் ஆண்டில்
மணிக்கொடி என்ற சஞ்சிகையில் இந்தப்பாடல்
பிரசுரமானது.

உழைப்பின் உயர்வை உணர்த்தும் "சித்திரச்
சோலைகளே" என்ற இவரின் பாடல், 10
பாராக்களைக் கொண்டதாகும். இதில் 4
பாராக்களே "நான் ஏன் பிறந்தேன்" படத்தில்
பயன்படுத்தப்பட்டது.

தாயைப்பார்த்து மகன் பாடுவதாக அமைந்திருந்த
"அம்மா உந்தன் கைவளை" என்ற இவரின் பாடல்,
"நிஜங்கள்" படத்தில் தாயைப்பார்த்து மகள் பாடுவதாக
அமைக்கப்பட்டது.


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பார் போற்றும் பாவேந்தர் - 4


படங்களில் பாவேந்தர் பாடல்கள்

படம்
பாடல்.............குரல்


பாலாமணி (அல்லது) பக்காத்திருடன்-1937
1.கார்குகா சண்முகா
2.திருவருள்நீ
3.சந்தோஷ வாழ்வினைப்
4.மண் பெண் பொன்
5.நில்லாத இந்த வாழ்வு
6.திருமண விஷயமாய்
7.சகலமும் முடிந்ததினி
8.காத்தருள் புரிதெவி
9.வாசத்தென்றல் வீசுதே
10.வதியெலாம் மாமலைபோல்
11.சிந்தை நோக
12காதலெலாம் அவன்
13.சதா சோகம் தாளேனே
14.தேவி நான் பாவியைப்
15.பணமே உனதொரு
16.கண்டு உன்னில்
17.பாவையே உன்மீதில்

காளமேகம்-1940
18.வானஜோதி
19.தகதக தேஜோந்மய
20.பூலோகம் எல்லாம்
21.எனதாசைக் குகந்தவன் நீ
22.வருவதாய் உரைத்துச்
23.பாடுறேன் நானே
24.மதமா? காதலா?
25.ஆடிடும் மயில்மிசை
26.தாயே அருள்வாய்
27.பத்தினித்தனம் புரிஞ்சி
28.இருகாதலர் சீர்சொல்லி
29.எளியேனையாள் உலகநாயகி
30.என்ன உதாரம் தேவி
31.கொஞ்சும் கிளிகள்
32.உனைப்பற்றிய கவி
33.சுகித்திட வாராயோ
34.சீருள்ள வெண்குடை
35.நாதா ப்ரியமான
36.வாழ்க்கை உடம்பினில்

ஸ்ரீராமானுஜர்1938
37.வாழிய எழில்
38.கேட்பதெல்லாம்
39.யோகி தேகநிலை
40.ஓர் அணுவினை மேரு
41.கோவிந்த ராஜா ஹரி
42.வாராயோ கண்ணா
43.மாதவனே கருணாகரனே
44.மனிதர்கள் சமமே
45.வந்தால் வரட்டும்
46.எப்பக்கஞ் சாமி விலகச்


(தொடரும்)


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து
  •  

பார் போற்றும் பாவேந்தர் - 5


படங்களில் பாவேந்தர் பாடல்கள்


படம்
பாடல்.............குரல்

ஓர் இரவு - 1951
47.துன்பம் நேர்கையில்
..........................M.S.ராஜேஸ்வரி, வர்மா

வளையாபதி - 1952
48.குலுங்கிடும் பூவிலெல்லாம்
........................................T.M.S., K.ஜமுனாராணி
49.குளிர் தாமரை மலர்ப்பொய்கை
...........................................T.M.S., K.ஜமுனாரணி

பராசக்தி - 1952
50.வாழ்க வாழ்க வாழ்கவே
...................................M.L.வசந்தகுமாரி

என்தங்கை - 1952
51.காதல் வாழ்விலே

பணம் - 1952
52.பசியென்று வந்தால் ஒருபிடிசோறு

கல்யாணி - 1952
53.அதோ பாரடி அவரே என்கணவர்

அந்தமான் கைதி - 1952
54.அந்த வாழ்வுதான் எந்தநாள்

பூங்கோதை - 1953
55.தாயகமே வாழ்க தாயகமே

திரும்பிப்பார் - 1953
56.பாண்டியன் என்சொல்லை

ரத்தக்கண்ணீர் - 1954
57.ஆலையின் சங்கே நீ ஊதாயோ

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 1954
58.வெண்ணிலாவும் வானும் போலே
..................................ராதா(R).ஜெயலஷ்மி

என் மகள் - 1954
59.சங்கே முழங்கு

கோமதியின் காதலன் - 1955
60.நீலவான் ஆடைக்குள் உடல்

நானே ராஜா - 1956
61.பொன்மேனி காட்டி உனை - ஜிக்கி
62.ஆடற் கலைக்கழகு தேடப்பிறந்த
........................P.லீலா, M.L.வசந்தகுமாரி

ரங்கோன் ராதா - 1956
63.தலைவாரி பூச்சுடி உனை - P.பானுமதி

குலதெய்வம் - 1956
64.(இன்ப வருக்கமெல்லாம்)வெட்கமில்லை
........................................C.S.ஜெயராமன்

பெற்ற மனம் - 1960
65.ஒரேஒரு பைசா தருவது பெரிசா
..........................சூலமங்கலம் ராஜலட்சுமி
66.புதியதோர் உலகம் செய்வோம்
..........................சீர்காழி கோவிந்தராஜன்
67.பாடிப்பாடி வாடி வானம்பாடி
..................................J.P.சந்திரபாபு
68.மனதிற்குகந்த மயிலே
..................................J.P.சந்திரபாபு

கலங்கரை விளக்கம் - 1965
69.சங்கே முழங்கு சங்கே முழங்கு
சீர்காழி கோவிந்தராஜன், P.சுசீலா, குழுவினர்

பஞ்சவர்ணக்கிளி - 1965
70.தமிழுக்கும் அமுதென்று பேர் - P.சுசீலா

சந்திரோதயம் - 1966
71.புதியதோர் உலகம் செய்வோம்
................சீர்காழி கோவிந்தராஜன்

மணிமகுடம் - 1966
72.(சிரம் அறுத்தல்)வலியோர் சிலர் - T.M.S.

நம்மவீட்டுத் தெய்வம் - 1970
73.எங்கெங்கு காணினும் சக்தியடா
..........................T.M.சௌந்தரராஜன், குழுவினர்

நான் ஏன் பிறந்தேன் - 1972
74.சித்திரச் சோலைகளே - T.M.S.

பல்லாண்டு வாழ்க - 1975
75.புதியோர் உலகம் செய்வோம்
T.M.சௌந்தரராஜன், வாணிஜெயராம், குழுவினர்

கண்ணன் ஒரு கைக்குழந்தை - 1978
76.காலை இளம்பரிதியில்(குறும் பாடல்)
.........................S.P.பாலசுப்பிரமணியம்

நிஜங்கள் - 1982
77.அம்மா உந்தன் கைவளையாய்
.........................வாணிஜெயராம்

புரட்சிக்காரன் - 2000
78.தூங்கும் புலியை பறைகொண்டு - நித்யஸ்ரீ

எத்தனை கோணம் எத்தனை பார்வை
79.புகழ் சேர்க்கும் (குறும் பாடல்)
...............................மலேசியா வாசுதேவன்


என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.