Jump to content

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறை: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்


Recommended Posts

களத்தில் கைகொடுக்கும் கர்நாடகத் தமிழ்ச் சங்கங்கள்!

Cauvery%20Row%20001.png

கர்நாடகம் பற்றி எரிகிறது... தமிழர்கள் மீது தாக்குதல்... வாகனங்கள் தீ வைத்து எரிப்பு என்றெல்லாம் வந்து கொண்டிருக்கும் செய்திகளைப் பார்த்து, உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் பதைபதைக்க ஆரம்பித்துள்ளனர். இத்தகைய சூழலில், தமிழர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளன. அதிலும் சொந்தப் பகையைத் தீர்த்துக்கொள்வதுபோல இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தமிழர்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், கன்னடர்களின் வாகனங்களும்கூட பெங்களூருவில் எரிக்கப்பட்டிருப்பதே இதற்கு உதாரணம். எனவே, எதைக் கண்டும் பதற்றமடைந்து செய்திகளை பரப்பிவிடாதீர்கள் என்று வேண்டுகோள்களை முன்வைக்கின்றனர் பெங்களூருவைச் சேர்ந்த தமிழர்கள்.

இதற்கிடையில், மைசூர் தமிழச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கு.புகழேந்தி விடுத்திருக்கும் செய்தியில், ''நேற்று (12.9.2016) காலையிலிருந்து இரவு 11 மணி வரை கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தோம். பெரிதாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை. எந்த மாவட்டத்திலும் தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையிலோ குழுவாகவோ வந்து தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. எந்த ஒரு தமிழரும் பயப்படத் தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அதேசமயம், ஏதாவது ஓர் ஆபத்து ஏற்பட்டாலும் அது எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் உடனே கண்ட்ரோல் ரூம் தொலைபேசி எண் 100&க்கு தொடர்பு கொள்ளவும். மைசூர் தமிழ்ச்சங்கத்தையும் தொடர்பு கொள்ளலாம். உடனடியாக கர்நாடக காவல்துறை மூலம் உரிய பாதுகாப்புக் கொடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார். மேலும், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகளின் எண்களையும் பகிர்ந்திருக்கிறார். உதவி தேவைப்படுபவர்கள் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இதோ அந்த எண்கள்...
 
மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்.
கு.புகழேந்தி.
94480 54831.
94489 05831.
0821 2343426.
பெங்களூர் தமிழ்ச் சங்கம்.
லேண்ட் லைன் - 080 25510062.
தலைவர், கோ.தாமோதரன் - 98450 33166.
தி.கோ.தாமோதரன் - 94494 85903.  
சிக்கமகளூர் தமிழ்ச்சங்கம்.
தலைவர், ஆறுமுகம் - 90364 74224.
துணைத் தலைவர், குமார் - 99643 58993.
ஹாசன் தமிழ்ச் சங்கம்.
தேவசேனாதிபதி - 94488 45681.
அனூர் தமிழ்ச் சங்கம்.
தலைவர், அரசப்பன் - 99720 42935.
கொள்ளேகால் தமிழ்ச் சங்கம்.
நல்லசாமி - 98869 18029.
சதாசிவம் - 97319 35325.
கந்தசாமி - 96636 77655.
குண்டல் பேட்டைத் தமிழ்ச் சங்கம்.
வீ.பாலகிருஷ்ணன் - 94801 69132.
கண்ணன்.[வேலுச்சாமி] 94491 77151.
சாமராஜ நகர் தாலுக்கா தமிழ்ச்சங்கம்.
சின்னசாமி - 94485 95956.
ஜெகதீஷ் - 94491 61772.
ஆனந்த் - 90363 94238
தங்கவேல்- 94488 71818
உன்சூர் தமிழ்ச் சங்கம்.
சின்னசாமி - 99450 46727.
வேலு - 96204 84120.
முருகன் - 94487 37069.
மணி- 94499 93229.
ஹெக்கட தேவன கோட்டை (ஹெச்டி கோட்) தமிழ்ச் சங்கம்.
நகுல்சாமி - 94495 32255.
தேவராஜன் - 94490 02205.
பழனிச்சாமி - 97410 63117.
பெரியசாமி - 99863 30781.
நஞ்சன்கூடு தமிழ்ச் சங்கம்.
தலைவர், சீனிவாசன் - 81055 17263.

http://www.vikatan.com/news/india/68320-helplines-for-karnataka-tamilians-by-tamil-organizations.art

Link to comment
Share on other sites

கர்நாடகாவில் தொடரும் பதட்டம்: வன்முறையாளர்களை சுட உத்தரவு

 

பெங்களூரு: காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் இன்றும் பதட்டம் நீடிக்கிறது. இரு மாநில போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் பெங்களூருவில் ஒரு தமிழக பதிவெண் கொண்ட வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. கலவரம் நீடிக்கும் பட்சத்தில் ராணுவம் வரவழைக்கப்படலாம் என தெரிகிறது. காவிரி விவகாரம் மற்றும் கலவரம் ஆகியன குறித்து மாநில முதல்வர் சித்தராமையா இன்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். இ்நத கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

டிவி சேனல்களுக்கு போலீசார் அறிவுரை : பெங்களூருவில் நடக்கும் கலவரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலோ அல்லது கலவரத்தை தூண்டும் வகையிலோ எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்ப வேண்டாம் என அனைத்து டிவி சேனல்கள், கேபிள் டிவிகளுக்கு ஐதராபாத் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

 

இந்நிலையில்,கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பஸ் போக்குவரத்து இயக்கப்படவில்லை. மைசூரு சிட்டியிலிருந்து ஸ்ரீரங்கபேட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படவில்லை. அதேபோல், கோலார், பெங்களூரு, சாம்ராஜ்நகர் மற்றும் மைசூரு புறநகர் பகுதிகளிலிருந்தும் இன்றும் தமிழகம் நோக்கி பஸ்கள் இயக்கப்படவில்லை. பெங்களூருவில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

பெங்களூருவில் 12 முதல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம்.டுவிட்டரில் @BlrCityPolice ல் செய்தி அனுப்பலாம். 9480801000 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மக்கள் தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம் என பெங்களூரு போலீசார் கூறியுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1605736

Link to comment
Share on other sites

கர்நாடகா வன்முறையில் 1,000 கோடி இழப்பு..! பரிதவிக்கும் லாரி உரிமையாளர்கள்

cauver-protest-bangalore354-12-147367299

சேலம் : "காவிரி பிரச்னையால் கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் 70க்கும் அதிகமான தமிழக லாரிகள் அடித்து சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது," என  லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

சேலத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி கூறியதாவது.

காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகம் முதலில் ஆர்ப்பாட்டம், போராட்டத்தை தான் நடத்தி வந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அது திடீரென கலவரமாக வெடித்தது. இதில் தமிழக பதிவு எண் உள்ள வாகனங்களை சிலர் தாக்கத்துவங்கினர். தமிழக பதிவு எண்ணோடு இருக்கும் அனைத்து வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டு, தீயிட்டும் கொளுத்தப்பட்டது. நாங்கள் கலவரத்தின் போது அங்கு செல்லவில்லை. ஆனால் ஏற்கனவே கர்நாடகாவுக்கு சரக்குகளுடன் சென்ற லாரிகள் அங்கு இருந்தன. அந்த மாநிலத்தின் வழியாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கு லாரிகள் செல்வதால் நிறைய லாரிகள் அங்கிருந்தன.

950.jpg

இந்த சூழலில் நேற்று (12ம் தேதி) கலவரத்தின் போது  மட்டும் 70க்கும் அதிகமான லாரிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை மத்திய பேரிடர் மேலாண்மை வாரியம் ஏற்று, இழப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும். இன்னும் கர்நாடகாவில் எங்களுடைய சரக்கு வாகனங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றுக்கு கர்நாடக அரசும், கர்நாடக காவல்துறையும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பாதுகாப்புக்காக மத்திய அரசு உடனே துணை ராணுவத்தை அனுப்பி கர்நாடகா கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/68324-during-protests-over-cauvery-dispute-tn-lorry-owners-loss-exceeded-rs1000-crore.art

Link to comment
Share on other sites

 
 
gallerye_232326693_1605873.jpg

பெங்களூரு: காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகா முழுவதும் நேற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
 

 

Tamil_News_large_1605873_318_219.jpg

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடந்ததால், பெரும்பாலான தமிழர்கள்,
வீடுகளுக்குள்ளேயே பீதியுடன் முடங்கி கிடக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த, டில்லியிலிருந்து கர்நாடகாவுக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

'காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என்ற, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து, கர்நாடகா முழுவதும், நேற்று முன்தினம் பெரும் கலவரம் வெடித்தது;
தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன; தமிழக பதிவெண் உடைய வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.கலவரத்தை கட்டுப்படுத்த, பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய மாவட்டங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு அமலில் இருந்தாலும், பெங்களூரு ஹெக்கனஹள்ளி பகுதியில் நேற்று, போராட்டக்காரர்கள் வீதியில் குவிந்ததால், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போலீசார் அவர்களை கலைத்தனர்.
இதனால், பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றும் பதற்றம் நீடித்தது. பஸ், மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பெங்களூரு, சித்ரதுர்கா, மைசூரு ரோடு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், தமிழக பதிவு எண் உடைய லாரிகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. மாண்டியாவிலும், விவசாயிகள், கன்னட அமைப்பினர் ஆங்காங்கே
கூடியதால், பதற்றமான நிலை காணப்பட்டது.

மைசூருவில் புகழ்பெற்ற லலித் மகாலில், ராகவா லாரன்ஸ், பானுப்ரியா நடிக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு நேற்று நடந்தது. அப்போது, கர்நாடக ரக் ஷண வேதிகே அமைப்பை சேர்ந்தவர்கள், உள்ளே புகுந்து, ரகளையில் ஈடுபட்டனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில, அ.தி.மு.க., பொருளாளர் ராஜேந்திரன் வீடு, வணிக வளாகம், நிறுவனங்கள் மீது கல்வீச்சு நடந்தது. மாகடி ரோட்டில் தமிழருக்கு சொந்தமான பிரியாணி கடை அடித்து நொறுக்கப்பட்டது. மாண்டியா, ஆனேகல் பகுதியில் தமிழ் நாளிதழ்கள்

தீ வைத்து எரிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும், 13 இடங்களில் தடியடி நடத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட, 335 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

தமிழர்கள் வீடுகளுக்குள் முடக்கம்




பெங்களூருவில் வசிக்கும் தமிழ் குடும்பங்களிடையே கடும் பீதி நிலவுகிறது. 'எப்போது என்ன நடக்குமோ...' என்ற அச்சத்துடனேயே வாழ்க்கை நடத்துகின்றனர்; தமிழில் பேச தயங்குகின்றனர்.தமிழகத்தின், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், திருப்பூர் உட்பட வெவ்வேறு பகுதிகளில் இருந்தும்,பிழைப்பு தேடி, வந்துள்ள தமிழ் குடும்பங்கள், பெங்களூருவில் பல பகுதிகளில் வசிக்கின்றனர்; அவர்கள் யாரும் நேற்று வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.அதேபோல், மைசூரு, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், ஹனுார், ஷிவமொகா, மாண்டியா, சிக்மகளூரு உட்பட பல பகுதிகளில், தமிழர்கள் வெளியில் செல்லாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
 

துணை ராணுவம் குவிப்பு

 



வன்முறை தொடர்வதால், டில்லியிலிருந்து கூடுதலாக, 10 கம்பெனி துணை ராணுவத்தினர், பாதுகாப்புக்காக வரவழைக்கப் பட்டுள்ளனர்; இவர்கள், இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று மாலை, கர்நாடகா போலீஸ், டி.ஜி.பி., ஓம் பிரகாஷ், நகர போலீஸ் கமிஷனர் மேகரிக் உட்பட உயர் அதிகாரிகள், பாதுகாப்பு பணிகளை பார்வை
யிட்டனர். வன்முறை காரணமாக பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால், வாகன எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 

 

கருணாநிதி மகள் வீடு முற்றுகை


 



பெங்களூரு ரூரல் கனகபுரா பகுதியில் உள்ள வதெராஹள்ளியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் செல்விக்கு சொந்தமான பண்ணை வீட்டை, சமதா சைனிக் தளம் அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அவரது வீட்டின் முன், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

 

தொடர் ஆலோசனை கூட்டம்


பெங்களூருவில் நடக்கும் வன்முறை சம்பவங்களால், சர்வதேச அளவில், கர்நாடகா மாநிலத்தின், 'இமேஜ்' கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முதல்வர் சித்தராமையா, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, நேற்று காலை, 9:00 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்
களுடன் ஆலோசனை

 

நடத்தினார்.இதைத் தொடர்ந்து, காலை 11:30க்கு, அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். மதியம், 2:30க்கு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

ரயில் ஓடாது!



கன்னட அமைப்புகள் சார்பில், செப்., 14ல், 'பந்த்' நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறான தகவல்; அப்படி எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை. செப்., 15ல், கர்நாடகா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நாகராஜ், கன்னட சலுவளி கட்சி தலைவர்.
 

குறை கூற கூடாது


பெங்களூருவில் நடந்த அசம்பாவிதங்களை வைத்து, போலீசாரை குறை கூற கூடாது. இனி, இதுபோன்ற அசம்பாவிதம் நிகழாமல், போலீசார் எச்சரிக்கையாக இருப்பர். ௧6 இடங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, நிலைமையை பொறுத்து, வாபஸ் வாங்குவது குறித்து, நகர போலீஸ் கமிஷனர் தீர்மானிப்பார்.ஓம் பிரகாஷ் , கர்நாடக மாநில டி.ஜி.பி.,
 

'சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்'

 



கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியதாவது:கர்நாடகாவில் நடந்த வன்முறை சம்பவங்கள், எனக்கு வருத்தமளிக்கிறது. யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. பொதுச் சொத்துகளை சேதப்படுத்த கூடாது. குமார் என்ற இளைஞர் இறந்துள்ளதாக தெரிகிறது; அவர், போலீசார் தடியடி அல்லது துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை. மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
தமிழர் உட்பட வேறு மொழி பேசுபவர்களின் உயிர், உடல் நலனுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு அவரும், உறுதியளித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
தண்ணீர் குறைவாக இருந்தாலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் வழங்கி வருகிறோம். 2017 ஜூன் வரை, குடிநீருக்கு தண்ணீர் வழங்கப்படும்.
காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் மீண்டும் நடக்கவுள்ளது. அப்போது, அரசின் நிலையை எடுத்து கூறுவேன். பிரதமர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க கேட்டுள்ளோம். ஓரிரு நாட்களில் அனுமதி கிடைத்துவிடும். தமிழர்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம். வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1605873

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

selfie.jpg

ஒரு அழிவைக்கூட செல்பி எடுத்து பெருமிதம் கொள்கின்றது ஒரு கேவலம் கெட்ட இனம்...
நெருப்புடா.........மகிழ்ச்சிடா tw_angry:

Link to comment
Share on other sites

 

''என்னை கன்னடம் பேச சொன்னார்கள், லாரியை உடைத்தார்கள்''...அன்று கர்நாடகாவில் என்ன தான் நடந்தது? தாக்கப்பட்ட லாரி ட்ரைவரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
 

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

 

இன்று கர்நாடகாவில் தமிழனுக்கு ஏற்பட்ட மற்றுமொரு அவல காணொளி ...

கோபண்ணா (காங்.): சில விரும்பத்தகாத சம்பவங்கள் கர்நாடகாவில் நடந்திருக்கின்றன. தமிழக மக்கள் இதைப் பெரிதுபடுத்தக்கூடாது..

கே.டி.ராகவன் (பாஜக): இந்த மாதிரியான காணொளிகளை ஊடகங்கள் வெளியிடாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

பேராசிரியர் தீரன் (அதிமுக): மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தண்னீர் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் உச்ச நீதி மன்றத்தில் மேற்கொண்டிருக்கிறார்கள். காணொளின்னா என்னென்றே தெரியாது நமக்கு.. tw_blush:

சரவணன் (திமுக): காவிரி பிரச்சினையில் தலைவர் கலைஞர் அவர்களையே குற்றம் சாட்டும் ஊடகங்களுக்கு ஜெயலலிதாவை கேள்வி கேட்க திராணி இருக்கா?!

மக்கள்: உங்க மேல நமக்கு பயங்கர வெறி.. ஆனாலும் அடுத்த தேர்தல்ல உங்களுக்கே போட்ருவோம்.. tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழ்நாடு அரசு கன்டமெண்டு ஆப் த கோர்ட்டு (நீதிமன்ற அவமதிப்பு) வழக்குக்கு இப்போ போக முடியாது... தமிழ் ஈன தலைவரும் போகவில்லை ..மைசூர் மகாராணியும் போகவில்லை.. புதுச்சேரி.. கேரளா ,, போல மறுசீராய்வு மனு போட்டாச்சு.. ஒரு வேளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒரு 3000 டிம்சிக்கு என்று அப்படி போட்டாலும் அவனுங்க திறந்துவிட்டா... அவுங்களே ஒத்துகிட்டாங்க  பாருங்க ...என்று  பாலி நாரிமன் தலைமையில் வாதாட  ஒரு கோஸ்டி.. முச்சந்தியில் நிற்கின்ற காரணம் ..ரெடியாகவே இருக்கு.. இது காலத்திற்கும் தலைவலியாக மாறிவிடும்... ( தமிழகத்திற்கு ஒரு துளி தண்ணீர் கூட தர முடியாது - எம்.பி. பாட்டீல் திட்டவட்டம் ..)   அதனால் தான் இந்த ஈத்தறைகள் இவ்வளவு சவுண்டு விடுகிதுகள்...

டிஸ்கி :

வழக்கு என்றால் அரசு தான் எடுத்து செல்லவேண்டும் என்பதில்லை.. எதிர்கட்சிகளும் எடுத்து செல்லலாம் .. அவர்களுக்கு முழு அதிகாரமும் உண்டு.. இதே ஜெயலலிதா.. எதிர் கட்சியாக இருக்கும் போதுதான் கச்சதீவு மீட்பு குறித்து வழக்கு போட்டார்.. அதை சுப்ரீம் கோர்ட் எடுத்து கொண்டது.. எதிர்கட்சி தலைவர் என்றமுறையில் சுப்ரீம் கோர்ட் எடுத்து கொண்டது.. இன்றைய எதிர் கட்சி தலைவர் கருநாகமும் ஸ்டாலினூம்  காவிரி விவகாரம் குறித்து கேஸ்  பைல் செய்வார்களா ? இல்லை 3 hrs உண்ணாவிரதம் இருப்பார்களா ..?  கடிதம் எழுதி ஒப்பாரி வைப்பார்களா? இந்த இரண்டு திருட்டு திராவிட கட்சிகளின் மீதும் நமக்கு நம்பிக்கை இல்லை .. ஒன்று வெள்ளம் அதிகமாக வந்தால் ஸ்டிக்கர் பாய்ஸ் ஸ்டிக்கர் ஒட்டுறாங்க .. இவுங்க அதெபடி அவுங்க பேர ஸ்டிக்கர் ஒட்டலாம்.. !!  என்று  எதிர் வரிசையில் ஒரே களேபரம்!!.. ஆக மொத்தம் மக்கள் .. ??  வரும் அக்டோபர் மாதம் வெள்ளம் வந்தால் நடுதெருவில் போய் ..பிச்சை எடுங்கள் .!!!   காசு வாங்கிட்டு மறுபடியும் ஒட்டு போடுங்க .... !! வெள்ளம் வந்தது என்றால் எவனா இளிச்ச்வாயான் சோறு போடுவான்..!!... மறுபடியும் ஒட்டு போடுங்க .... !!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.9.2016 at 7:08 PM, நவீனன் said:

 

இன்று கர்நாடகாவில் தமிழனுக்கு ஏற்பட்ட மற்றுமொரு அவல காணொளி ...

நாய்க்கூட்டங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.