Jump to content

கோபாலபுரத்தில் சாய்பாபா... அதிசயம் நிகழ்ந்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த சாய்பாபா, காரிலிருந்து இறங்கி வீல் சேரில் அமர்ந்து, முதல்வரின் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்."

எனக்கு இந்த செய்தியிலை சுவாரசியமாய் பட்டது இதுதான். யார் யாருக்கு எல்லாம் நோய்களை மாற்றியதாக கதைவிட்டார்கள். கடைசியிலை மூப்பு ஆனனானப்பட்டவரையும் ஆட்கொண்டு விட்டது. இவரும் ஒரு மனிதர்தான் என்ற வகையில் சந்திப்பில் தவறில்லை. ஏன்தான் அந்த மனிசி காலிலை விழுந்து கருணாநிதிக்கு சங்கடத்தை ஏற்படுத்திச்சோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தி.க தோன்றி நாத்திகம் பேச என்று ஆரம்பித்தார்களோ அன்று பிடித்தது தமிழ்நாட்டுக்கு சனி. கடவுள் பயம் ஒன்று எல்லோரிடமும் இருந்தது என்று ஈ வே.ரா பெரியார் ராமர் சிலைக்கு செருப்பால் அடித்து காட்டினாரோ அன்றிலிருந்து மக்களுக்கு பயம் போய்விட்டது. கடவுளாவது ஒன்றாவது எனநினைக்கஆரம்பித்தார்கள் அதன் பின்தான்தமிழ்நாட்டில் ஆரம்பித்தது கொலை கொள்ளை வழிப்பறி பதுக்கல் கலப்படம் பித்தலாட்டம் மற்றும் அனைத்தும். ஆன்மீகம் கண்டிப்பாக மக்களுக்கு தேவை

ஆகா என்ன தத்துவம் ..

ஈ.வே.ரா. எண்டால் யாரெண்டே தெரியாத வடநாடு அமைதிப்பூங்காகத்தானே இருக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் ஆன்மிகம்... பாபாவின் கம்யூனிஸம்!

இதோ, பரபரவென நடந்து முடிந்துவிட்டது சத்ய சாய்பாபா & கருணாநிதி சந்திப்பு. பழுத்த பகுத்தறிவுவாதியான கருணாநிதியை அவரது வீட்டுக்கே போய் சாய்பாபா சந்திப்பார் என்று நாலு நாட்களுக்கு முன் யாராவது சொல்லியிருந்தால், அதை யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

போனார்... பார்த்தார்... அன்பைப் பொழிந்தார்... முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் குனிந்து கால் தொட்டு வணங்கியபோது கனிவோடு ஆசீர்வதித்தார். அதை முதல்வரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

p1gc1.jpg

சென்னையின் தாகம் தீர்க்கும் கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தை முழுமைப்படுத்து வதற்காக 200 கோடி ரூபாய் வரை சத்யசாயி அறக்கட்டளையிலிருந்து பாபா தந்ததற்குப் பாராட்டி நடந்த விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றார் கருணாநிதி. அடுத்து, சென்னையின் அழகைக் கெடுக்கும் கூவத்தையே, சென்னை நகரின் அழகுச் சின்னமாக மாற்றிட, தயங்காமல் பாபாவிடம் நிதி உதவி கேட்டார்.

‘‘1,000 கோடி ரூபாய் இருந்தால் மட்டும் கூவம் சுத்தமாகிவிடாது. இதற்காக மத்திய அரசு பல நூறு கோடி ரூபாயைத் தமிழகத்துக்குத் தந்திருக்கிறது. கடந்த ஆட்சியின்போது மட்டும் 188 கோடி ரூபாய் கூவத்துக்காகச் செலவிடபட்டதாக சட்டசபையிலேயே அறிவிக்கப் பட்டது. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று முக்கிய நீர்வழித் தடங்களை கழிவு நீராக்கி வைத்திருக்கின்றன தொழிற்சாலைகள். யாரிடம் பணம் வாங்கி கூவத்தைச் சுத்தப் படுத்தினாலும், மீண்டும் கழிவு நீரை அதிலேயே விட்டால் எல்லாப் பணமும் விரயம்தான். மறுசுழற்சி முறையில் நீரை தொழிற் சாலைகள் சுத்தப்படுத்து வதை கட்டாயப்படுத்து வதும், நீர்வழித் தடங்களை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்பு களை நீக்குவதும்தான் நிரந்தரத் தீர்வாக இருக்கும். அதுவரை பாபாவாலும் கூட கூவத்தைக் காப் பாற்ற முடியாது’’ என்கிறார் தமிழகப் பொதுப் பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.எஸ்.குப்புராஜ்.

இந்தியாவே நன்கு அறிந்த நாத்திகவாதியும் உலகம் முழுவதும் பிரபலமான ஆத்திகவாதியும் ஒரு மேடையில் பரஸ்பரம் பாராட்டிக்கொள்ளும்போது... இருதரப்பு நம்பிக்கை கொண்டவர்களுக்கு என்னவிதமான நெருடல்கள் எழுந்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஆனால், முதல்வர் கருணாநிதி அந்த விழா மேடையிலேயே அதற்குப் பொருத்தமான ஒரு விளக்கம் தந்தார்

‘‘கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா என்பது பிரச்னை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நான் நடக்கிறேனா என்பதுதான் பிரச்னை. நான் அப்படி நடந்துகொண்டால் கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள்!" என்பதுதான் அந்த விளக்கம்.

சாய்பாபா மட்டுமல்ல... சில நாட்களுக்கு முன் ஜக்கி வாசுதேவ் அமைப்பின் சார்பில் நடந்த மரக் கன்றுகள் நடும் விழாவுக்கு முதல்வர் கருணாநிதி முழுமனதாக ஆதரவு தந்தார். தன் வீட்டு வாசலிலேயே அவர்கள் மரக்கன்று நடுவதற்கு மகிழ்ச்சிகரமான ஒத்துழைப்பை அளித் தார். அடுத்தடுத்து ஜக்கியின் Ôஇஷா யோகாÕ அமைப்பு நடத்தப்போகும் பொதுச் சேவைத் திட்டங்களுக்கு அரசின் முழு ஒத்துழைப்பு உண்டென்று சொல்லியிருக்கிறாராம்.

கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதி யில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்.

p2md5.jpg

"மனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்த லாமா?" என்பதுதான் முதல்வர் கருணாநிதி தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்ட கேள்வி.

"ஆன்மா என்பது மனம்... அந்த ஆன்மாவை மகிழ்ச்சிப்படுத்தும் துறைதான் ஆன்மிகம். அதற்கு மேல் அதற்கு நான் அர்த்தம் பார்க்கவில்லை. மக்கள் சேவைக்கு ஆன்மிகம் என்று ஒரு பெயர் இருக்குமானால், அது எனக்கு ஒவ்வாத ஒன்றல்ல..!" என்றும் சொன்னாராம் முதல்வர்.

முதல்வருக்கு மிக நெருக்கமானவர்கள் இந்த ஆன்மிக விளக்கம் குறித்துச் சொல்வதோடு, ÔÔதுறவியான பாபா கிட்டத்தட்ட கம்யூனிஸத் தைதானே பின்பற்று கிறார்?ÕÕ என்கிறார் கள். "இருப்பவனிட மிருந்து எடுத்து இல்லாதவனுக்குக் கொடுப்பதுதான் கம்யூனிஸம். 'பணக் காரர்களே! நீங்கள் சினிமாவுக்கும் பொழுது போக்குக்கும் செலவழிக்கும் பணத்தை ஏழைகளுக்காகச் செலவிடுங்கள்' என்றுதான் நன்றி அறிவிப்பு விழா மேடையில் பாபா சொல்லியிருக்கிறார். அவரது அறக் கட்டளையே, உலகம் முழுவதும் உள்ள பெரும் செல்வந்தர்களைப் பக்தர்களாகப் பெற்று, அவர்கள் மூலம் வரும் நன்கொடைகளை வைத்துதான் ஏழைகளுக்குச் சேவை செய்து வருகிறது" என்று தி.மு.க. தரப்பிலிருந்தே உற்சாகமாக விளக்கம் தருகிறார்கள்.

p2axd3.jpg

சரி, மாறுபட்ட - முரண்பட்ட இந்த இருவரின் சந்திப்பு பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

முதல்வரின் பகுத்தறிவு வாரிசான கவிஞர் கனிமொழி சொல்லும்போது, 'தன்னிலிருந்து நேர் எதிரான மாற்றுக் கருத்து கொண்ட ஒருவருடன் அப்பா மேடை ஏற ஒப்புக்கிட்டதே எனக்கு முதல் ஆச்சர்யம். நானும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு இதுவரை போனதில்லை. வேடிக்கை பார்க்கலாமேனு போனேன். பாபா கோபாலபுரம் வந்தபோது நான் போகலை. அவங்க ரெண்டு பேரும் பேசினது பத்தி மத்தவங்க பரவசமா சொன்னப்ப, ‘ஐயோ, மிஸ் பண்ணிட்டோமே’னு நினைச்சேன்.

நிகழ்ச்சியில் எனக்கு வேறு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் வாசல்ல நின்னு எல்லாரையும் வரவேற்கிறார். இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பாபாவின் பக்கத்தில் சகஜமாக சாய்ந்து உட்காராமல், ஸீட் நுனியில் பவ்யமாக உட்காருகிறார். கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியோ எல்லார் முன்னாலேயும் பாபாவின் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறார். இரண்டு மாநில கவர்னர்கள், மூன்று மாநில முதலமைச்சர்கள், பல மத்திய, மாநில அமைச்சர்கள்னு மொத்த இந்தியாவோட அதிகாரமட்டமும் கலந்துக்கிட்ட நிகழ்ச்சி அது. பெரும்பாலான வி.ஐ.பி&க்கள் பேசும்போதே பரவசத்தில் குரல் உடைஞ்சு பேசுறாங்க.

ஓர் ஆன்மிகவாதிக்கு இவ்ளோ செல்வாக்கு இருக்குதேன்னு வியந்தேன். அவ்ளோதான்! ‘உடனே கனிமொழிக்குக் கடவுள் நம்பிக்கை வந்தாச்சு’னு யாரும் நினைச்சுட வேண்டாம். அப்படி வந்தா, ஒளிக்காம ஊரைக் கூட்டி அதையும் சொல்வேன். கவலையேபடாதீங்க!’’ என்று வெளிப்படையான வார்த்தைகளில் பேசுகிறார் கனிமொழி.

பாபாவுக்கான பாராட்டு விழாவில் நன்றியுரை நிகழ்த்தியவர் இயக்குநர் கே.பாலசந்தர்.

‘‘நான் பாபாவை முதன்முறையாகப் பார்த்ததே அந்த விழாவில்தான். சௌகார் ஜானகி மூலமாகத்தான் பாபாவின் அற்பு தங்கள் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். என் மருமகன் உட்பட பல நெருங்கிய உறவினர்கள் பாபாவின் தீவிர பக்தர்கள். நேர்ல போய்ப் பார்த்ததில்லைன்னாலும் பாபாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சென்னை மக்களின் நன்மைக்கு அருள்கரம் நீட்டிய பாபாவுக்கு நன்றி தெரிவிக்கிற நிகழ்ச்சியில் நன்றியுரை சொல்ல முடியுமான்னு என்னிடம் வந்து கேட்டதும், ரொம்ப சந்தோஷத்தோட ஒப்புக்கிட்டேன். அவரை நெருக்கமா பார்த்த பிரமிப்பு இன்னும் தீரலை’’ என்று உருக்கமாகப் பேசினார் பாலசந்தர்.

அதிருத்ர யக்ஞம்!

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்திருக்கும் பாபாவைத் தரிசிக்க 40 ஆயிரத் துக்கும் அதிகமான மக்கள் குவிந்தார்கள். சென்னை, திருவான்மியூரில் உள்ள இராமச் சந்திரா மெடிக்கல் சயின்ஸ் மைதானத்தில் உலக நன்மைக்காக ‘அதிருத்ர யக்ஞம்’ என்கிற யாகம் வளர்க்கிறார் சாய்பாபா.

‘‘காலையில் 4 மணிக்குத் தொடங்குகிற யக்ஞத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கிறோம். அதற்காக இரவு 12 மணிக்கே குழந்தைகளுடன் வந்து, கொட்டுகிற பனியில் காத்துக்கிடக்கிறார்கள் மக்கள். 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 11 நாள் நடைபெறுகிற இந்த யக்ஞத்தில் கலந்துகொள்கிற எல்லா பக்தர்களும் பசியாற வேண்டும் என்பதற்காக ஏழை முதல் பணக்காரர் வரை அனைவருக் கும் இரண்டு ரூபாய்க்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது’’ என்கிறார்கள் விழா ஏற்பாடுளைக் கவனிக்கும் பாபாவின் ‘சேவாதள’ அமைப்பினர்!

அப்போதே முன்வந்தார்! ஆனால்...

ஆந்திராவில் அனந்தப்பூர் மாவட்டத்தில் குடிநீர், குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தது. அதனால் அந்தப் பகுதி மக்கள் பல்வேறு வகை யிலும் பாதிக்கப்பட்டனர். அதைக் கேள்விப்பட்ட சாய்பாபா, உடனே அந்த மாநில முதல்வருடன் பேசி அந்த மாவட்ட மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதாகச் சொல்லியிருக்கிறார்.

சுமார் 60 கி.மீ. தூர பரப்பளவில் தற்போது பாபாவின் குடிநீர் சப்ளை நடக்கிறது. அதை முன்னுதாரணம் காட்டித்தான், சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஏதேனும் பங்களிப்பு செய்ய விரும்புவதாக முன்பு முதல்வ ராக இருந்த ஜெயலலிதாவிடம் சாய்பாபா தரப்பில் சொல்லப்பட்டதாம். நோ ரியாக்ஷன்! அதோடு அந்த எண்ணத்தை அப்போதைக்குக் கைவிட்டார் பாபா. பிறகு, ஆட்சி மாறியவுடன் உதவி செய்ய மறுபடி முன்வந்தாராம்!

பெருமிதத்தில் துரைராஜ்!

மாநகர போலீஸ் இணை கமிஷனர் துரைராஜ் மீது பாபாவுக்குத் தனி அன்பு!

சாய்பாபா முன்பெல்லாம் வருடா வருடம் கொடைக்கானலில் ஒய்வெடுக்க வருவார். அப்போது திண்டுக்கல் எஸ்.பி&யாக இருந் தவர் துரைராஜ். அந்த வகையில், பாபா வுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்து கொடுத்திருக்கிறார். அப் போதிலிருந்தே துரைராஜை சாய்பாபாவுக்கு தெரியும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஜனவரி 19&ம் தேதியன்று சென்னை விசிட்டுக்காக விமானத்தில் வந்தார் சாய்பாபா. அப்போது துரைராஜ், விமான நிலையப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சாய்பாபா விமானத்திலிருந்து இறங்கியதும், அவருக்கு மிக அருகில் போய் துரைராஜ் நிற்க... அருகில் அழைத்து, அவர் கையைப் பற்றியபடி நடந்திருக்கிறார் சாய்பாபா. சிலிர்ப்பும் சந்தோஷமும் பெருமிதமுமாக இருக்கிறார் துரைராஜ்.

சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சென்னை சாலிகிராம சிறுவன் அரவிந்த்தின் கொலையைத் துப்பறிந்து, குற்றவாளிகளை உடனடியாக மடக்கியவர் இவர்தான்!

vitatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.