“திணை” செப்டம்பர் 2016 இதழில் எனது கவிதைகள்
-
Tell a friend
-
Similar Content
-
By seyon yazhvaendhan
ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நகரத்தின் புதிய தந்தை
எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து
நாற்காலியைக் கைப்பற்றிய
நகரத்தின் புதிய தந்தைக்கு
அவர் பராமரிக்கவேண்டிய
பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது.
சாதுவானவர்கள், அடங்காதவர்கள்,
ஊதாரிகள், அயோக்கியர்களென
அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது.
அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார்.
ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார்.
சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார்.
அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார்
நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி
ஒருவரும் வாய்திறக்கவில்லை
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 15.2.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின்
நள்ளிரவில் வீடு சேர்பவன்
சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.
தன்னை மலடாக்கிய உணவை
இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.
ஆடு மாடுகளின் மேவு
ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை
அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான்.
டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு
போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு
உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.
தலைமுறை இடைவேளை
“கோழி கூப்புட நாலுமணிக்கு
நாலு தூத்தல் போட்டுச்சு
மண்வாசமும் வெக்கையும் கிளம்ப
வெளிய வந்து பார்த்தா
கீகாத்து மழையக் கலச்சுடுச்சு”
என்று சொன்ன அப்பத்தாதான்,
இன்று பிற்பகல் நாலுமணிக்கு
விளம்பர இடைவேளையில் வெளியே வந்து
“மழையா பேஞ்சுச்சு?” என்கிறாள்
ஈரவாசல் பார்த்து.
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 18.1.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
30.11.16 ஆனந்த விகடன் இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
மாநகரத்தின் அகதிகள்
தேசத்தின் வல்லசுரக் கனவினால்
தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட
ஒரு மாநகரத்தின் அகதிகள்
அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட
தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள்
வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட
சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு.
அங்குள்ள வங்கிக் கணக்கையும்
அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள்.
கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு
அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும்
அதில் ஜீவிக்கிறார்கள்
பண்டிகைகள் நிமித்தம் தம் சொந்தநிலங்களுக்கு
பிதுங்கி வழியும் பேருந்துகளிலும்
ரயில்களின் கழிவறை அருகிலும்
பயணிக்க முடியும் என்பது
இம்மாநகரத்தின் அகதிகளுக்கு
இம்மாபெரும் தேசம் வழங்கியிருக்கும் சகாயம்.
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 30.11.16)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
ஒரு வழிப் போக்குவரத்து
-----------------------------------------------
நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு.
உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில்
ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி
நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார்.
சிவப்பு விளக்கு கண்டல்ல,
சீருடைக் காவலர் சீறுவாரென்றே
விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம்.
அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும்,
கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும்.
அவரின் மழைக்கவிதைகள்
பாதாளச் சாக்கடையில் ஓடிக் கலந்திருக்கும்.
கோடையில் ஓர் இளநீரோ தர்பூசணிக்கீற்றோ
இடி மின்னலுக்கு இடையில் நிற்கையில் இதமாக ஒரு தேநீரோ
ஒருநாளும் நாம் அவருக்கு வாங்கிக்கொடுத்ததில்லை.
பரிவும் நேசமும்
ஒருவழிப் போக்குவரத்தாகவே இருக்கும் வாழ்வுக்குத்தான்
நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
(கள நிர்வாகிகள் இணைக்கப்பட்டுள்ள படத்தை upload செய்து உதவவும்)
-
By seyon yazhvaendhan
2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நானிலம் போற்றும் நீதி
காடு இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் முல்லை நகரில்
கழனி இருந்த இடத்தில்
வீடுகட்டிக் கொண்டவர்கள்
கால்வாய் இருந்த இடத்தில்
சாலை அமைப்பதை எதிர்த்து
வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
குளம் இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் உயர்மன்றத்தில்
நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது!
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 2.11.16)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
-
-
Topics
-
14
By உடையார்
தொடங்கப்பட்டது -
14
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
கந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.! சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர். கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. https://thamilkural.net/newskural/news/116127/ -
By தமிழ் சிறி · Posted
இந்தப் படம்... மிகவம் வருருந்தத் தக்கது, அதற்குப் பதில் கூற, வேண்டிய பொறுப்பு... முன்நாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கும்.. இந் நாள்... இளிச்ச வாயன், சுமந்திரனுக்கும் சமர்ப்பணம். உங்கள்.... குறிகோள் அற்ற, அரசியலால்.. பசு, மாடு... கழுத்தில் வெட்டு, வாங்கி அழுகுது. இதே.. வெட்டு... உங்கள், கழுத்தில் விழுந்து இருந்தால்... என்ன செய்வீர்கள்? லூஸு... வேலைகள் பார்த்துக் கொண்டிருக்காமல், உருப்படியான வேலைகளை பாருங்களேன். முக்கிய; செய்தி... இங்கு சரியான குளிர் என்ற படியால்... கிழட்டு சம்பந்தன் ஊரில்.. இருந்து, "குறட்டை" விடுவது நல்லது. ஐநா பக்கம்... எட்டியும், பாரக்கக் கூடாது. நீங்கள்... இது, வரை... கிழிச்சது போதும், ஐயா.. அடுத்த... பிறவியில்.. நீங்கள், தமிழ் இனத்தில் வந்து, பிறந்து விடாதீர்கள். இப்படி... ஒரு, கேவலம் கெட்ட... பிச்சைக் கார, எதிர்க் கட்சி தலைவர்.... வேண்டவே... வேண்டாம் -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
தமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ?” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/ -
By தமிழ் சிறி · Posted
கவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச... இரத்தக் காட்டேரி என்பதை... அழகாக... வரைந்து உள்ளமையை, ரசித்தேன். 👍
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.